Showing posts with label இலக்ஷ்மணன். Show all posts
Showing posts with label இலக்ஷ்மணன். Show all posts

Sunday, 12 October 2025

இராமனின் இங்கிதங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் – 114 (36)

The gestures of Rama | Yuddha-Kanda-Sarga-114 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனால் பணிக்கப்பட்ட விபீஷணன் சீதையை ராமன் முன்பு அழைத்து வந்தது; லக்ஷ்மணன், சுக்ரீவன், ஹனுமான் ஆகியோர் ராமனின் இங்கிதங்களைக் கண்டு வருந்துவது...

Sita Rama Vibheeshana and Lakshmana

மஹாபிராஜ்ஞனான பிலவங்கம் {பெரும் புத்திசாலியும், தாவிச் செல்பவனுமான ஹனுமான்}, சர்வதனுஷ்மதர்களில் {வில்லாளிகள் அனைவரிலும்} சிறந்தவனும், வசனமர்த்தஜ்ஞனுமான {வசனங்களின் பொருளை அறிந்தவனுமான} அந்த ராமனை அணுகி {பின்வருமாறு} சொன்னான்:(1) "எவளின் நிமித்தம் இந்தக் கர்மங்களை ஆரம்பித்தீரோ, எவளுக்கான பலன் கிடைத்திருக்கிறதோ, அந்த மைதிலி தேவியின் சோகசந்தாபத்தை நீர் காண்பதே தகும்.(2) கண்ணீர் நிறைந்த கண்களுடன் சோகத்தில் மூழ்கியிருக்கும் அந்த மைதிலி, உமது விஜயத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள்.(3) பூர்வத்தில் என் மீது கொண்ட பற்றுறுதியில் விளைந்த விசுவாசத்தால் அவள் என்னிடம், "கிருதார்த்தரும் {காரியம் நிறைவேறியவரும்}, லக்ஷ்மணருடன் கூடியவருமான என் பர்த்தாவை {கணவரை} நான் காண விரும்புகிறேன்" என்று கூறினாள்" {என்றான் ஹனுமான்}.(4)

Friday, 10 October 2025

மீண்டும் விபீஷணப் பட்டாபிஷேகம் | யுத்த காண்டம் சர்க்கம் – 112 (27)

Vibheeshana's coronation yet again | Yuddha-Kanda-Sarga-112 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேவலோகம் திரும்பிய மாதலி; இலங்கையின் மன்னனாக நிறுவப்பட்ட விபீஷணன்; ஹனுமான் மூலம் சீதைக்கு செய்தி அனுப்பிய ராமன்...

Lakshmana consecrating Vibheeshana

அதே வேளையில் ராவண வதத்தைக் கண்ட அந்த தேவ, கந்தர்வ, தானவர்கள், சுப கதைகளைக் கதைத்துக் கொண்டே {மங்கல பேச்சுக்களைத் தங்களுக்குள் பேசிக் கொண்டே} தங்கள் தங்கள் விமானங்களில் சென்றனர்.(1) இராவணனின் வதத்தையும், ராகவனின் பராக்கிரமத்தையும், வானரர்களின் நல்ல யுத்தத்தையும், சுக்ரீவனின் மந்திரத்தையும் {ஆலோசனைகளையும்},{2} சௌமித்ரியான லக்ஷ்மணனின் பற்றையும், வீரியத்தையும், சீதையின் பதிவிரதாத்வத்தையும் {பதிவிரதா தன்மையையும்}, ஹனூமதனின் பராக்கிரமத்தையும்{3} மகிழ்ச்சியுடனும், பெரும் மதிப்புடனும் பேசிக் கொண்டே வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்றனர்.(2-4அ) 

Tuesday, 23 September 2025

உயிர் மீண்ட லக்ஷ்மணன் | யுத்த காண்டம் சர்க்கம் – 101 (57)

The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் புலம்பல்; ஹனுமானை மூலிகை மலைக்கு அனுப்பி வைத்த சுஷேணன்; ஹனுமான் கொண்டு வந்த மூலிகைகளை முகர்ந்து நலமடைந்த லக்ஷ்மணன்...

Hanuman Uproots the Mighty Herbal Mountain

சூரனான லக்ஷ்மணன், பலவானான ராவணனின் சக்தியால் {வேலாயுதத்தால்} சமரில் வீழ்த்தப்பட்டு, சோணிதத்தில் {குருதியில்} நனைந்திருப்பதைக் கண்டு,{1} துராத்மாவான ராவணனுக்கு கொந்தளிப்பான யுத்தத்தை தத்தம் செய்த அவன் {ராமன்}, பாண ஓகங்களை ஏவுகையில் சுஷேணனிடம் இதைச் சொன்னான்:(1,2) "இராவணனின் வீரியத்தால் புவியில் விழுந்திருக்கும் வீரனான இந்த லக்ஷ்மணன், சர்ப்பத்தைப் போல பூமியில் புரள்வது என் சோகத்தை அதிகரிக்கிறது.(3) என் பிராணனைவிடப் பிரியமான இந்த வீரனை சோணிதத்தில் நனைந்தவனாகப் பார்த்து, மனஞ்சிதறும் எனக்குள், யுத்தம் செய்ய இருக்கும் சக்தி என்ன?(4) 

Saturday, 20 September 2025

இலக்ஷ்மணனின் வீழ்ச்சி | யுத்த காண்டம் சர்க்கம் – 100 (63)

The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கூரிய வேல் ஆயுதத்தால் லக்ஷ்மணனைத் தாக்கிய ராவணன்; ராமனும், ராவணனும் போரைத் தொடர்ந்தது; ராவணன் பயந்தோடியது...

Hanuman Rama and Lakshmana fighting against Ravana

இராக்ஷசாதிபனான ராவணன், அந்த அஸ்திரம் முறியடிக்கப்பட்டதால் குரோதமடைந்து, குரோதத்தை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து ஒரு அஸ்திரத்தை எடுத்தான்.(1) பேரொளியுடன் கூடிய ராவணன், ரௌத்திரமானதும், பயங்கரமானதும், மயனால் வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த மற்றொரு அஸ்திரத்தை ராகவன் மீது ஏவத் தொடங்கினான்.(2) பிறகு, கார்முகத்திலிருந்து {வில்லிலிருந்து} ஒளிமயமானவையும், வஜ்ரத்திற்கு நிகரானவையுமான சூலங்களும், கதைகளும், முசலங்களும் எங்கும் வெளிப்பட்டன.(3) விதவிதமான கூரிய முத்கரங்களும், கூடபாசங்களும், ஒளிரும் அசனிகளும் {இடிகளும்} யுகக்ஷயத்தில் வாதத்தைப் போல வெளிப்பட்டன {யுக முடிவில் தோன்றும் வாயுவைப் போல அந்த வில்லில் இருந்து வெளிப்பட்டன}.(4) பேரொளி கொண்டவனும், மிகச் சிறந்த உத்தம அஸ்திரங்களை அறிந்தவனுமான ஸ்ரீமான் ராகவன், கந்தர்வர்களின் பரமாஸ்திரத்தைக் கொண்டு அந்த அஸ்திரத்தை வீழ்த்தினான்.(5) 

Tuesday, 16 September 2025

இராமராவண மோதல் | யுத்த காண்டம் சர்க்கம் – 099 (51)

Fight between Rama and Ravana | Yuddha-Kanda-Sarga-099 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மிகச்சிறந்த விற்கள், பெரும் வலிமைமிக்க ஆயுதங்களுடன் கூடிய ராம ராவணர்கள் தங்களுக்குள் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்...

Ravana urging his charioteer to drive his chariot

இராக்ஷசர்களான மஹோதர, மஹாபார்ஷ்வர்கள் கொல்லப்பட்டதையும், மஹாபலவானான அந்த வீரன் விரூபாக்ஷன் கொல்லப்பட்டதையும் கண்டு,{1} பெருங்குரோதமடைந்த ராவணன், சூதனை {தேரோட்டியைத்} தூண்டிவிட்டு, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1,2) "அமாத்யர்கள் {அமைச்சர்கள்} கொல்லப்பட்டதாலும், நகரம் முற்றுகையிடப்பட்டதாலும் உண்டான துக்கத்தை ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கொல்வதன் மூலம் போக்குவேன்" {என்று தேரோட்டியிடம் சொல்லி, தேரை எடுக்கும்படி அவனைத் தூண்டிவிட்டு, ராக்ஷசப் போர்வீரர்கள் பிறரிடம்},(3) "எந்த ராம விருக்ஷத்தில் சீதா புஷ்ப பலனை {ராமன் என்ற மரத்தின் கனியான சீதை என்ற மலரை நான்} அடைவேனோ, அதில் உள்ள சாகைகளான {ராமனெனும் அந்த மரத்தின் கிளைகளான} சுக்ரீவன், ஜாம்பவான், குமுதன் ஆகியோரை ரணத்தில் வெட்டுவீராக,{4} துவிவிதன், மைந்தன் ஆகியோரையும், அங்கதன், கந்தமாதனன், ஹனுமான் ஆகியோரையும், சர்வ ஹரியூதபர்களையும் {குரங்குக் குழுத் தலைவர்கள் அனைவரையும்} அவ்வாறே செய்வீராக" {என்றான் ராவணன்}.(4,5)

Friday, 15 August 2025

நலமடைந்த லக்ஷ்மணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 091 (28)

Lakshmana healed | Yuddha-Kanda-Sarga-091 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தைக் கொன்றதற்காக லக்ஷ்மணனைப் பாராட்டிய ராமன்; இலக்ஷ்மணனின் காயங்களுக்கு சிகிச்சை அளித்து, அவனை குணப்படுத்திய சுஷேணன்...

Rama embracing wounded Lakshmana

சுப லக்ஷணங்களைக் கொண்டவனும், உதிரத்தால் நனைந்த காத்திரங்களுடன் {உடல் உறுப்புகளுடன்} கூடியவனுமான லக்ஷ்மணன், போரில் அந்த இந்திரஜித்தைக் கொன்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(1)  பிறகு ஜாம்பவந்தன், ஹனூமந்தன், சர்வ வனௌகசர்களையும் அழைத்த அந்த வீரியவான்{2} லக்ஷ்மணன், விபீஷணனையும், ஹனூமந்தனையும் ஊன்றிக் கொண்டு {அவர்களின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு}, ஸுக்ரீவனும், ராகவனும் {ராமனும்} எங்கிருந்தனரோ அங்கே சென்றான்.(2,3) இராமனை அணுகி வணங்கியவன் {லக்ஷ்மணன்}, சக்ரனிடம் இந்திரானுஜன் எப்படியோ {இந்திரனின் அருகில் இந்திரனின் தம்பியான உபேந்திரன் எப்படி நிற்பானோ}[1], அப்படியே தன் பிராதாவின் சமீபத்தில் நின்றான்.(4) மஹாத்மாவான ராகவனை அடைந்தபிறகு, அந்த வீரன், இந்திரஜித்தின் கோர வதத்தைக் குறித்து சோர்வுடன் சொன்னான்.(5) அப்போது, மகிழ்ச்சியுடன் கூடிய விபீஷணன், மஹாத்மாவான லக்ஷ்மணனால் ராவணியின் சிரம் {இந்திரஜித்தின் தலை} துண்டிக்கப்பட்டதைத் தெரிவித்தான்[2].(6)

Thursday, 14 August 2025

இந்திரஜித் வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 090 (97)

Indrajith killed | Yuddha-Kanda-Sarga-090 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையில் இருந்து வேறொரு தேரில் வந்த இந்திரஜித்; விபீஷணனைத் தாக்கியது; அவனது குதிரைகளைக் கொன்ற விபீஷணன்; இலக்ஷ்மணனிடம் வீழ்ந்த இந்திரஜித்...

Lakshmana kills Indrajith

அஷ்வங்கள் {குதிரைகள்} கொல்லப்பட்டதால், மஹாதேஜஸ்வியான அந்த நிசாசரன் {வலிமைமிக்க இரவுலாவியான இந்திரஜித்} பூமியில் நின்றான். பரம குரோதத்தில் எரிந்த இந்திரஜித் தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(1) தனு தரித்தவர்களான அவ்விருவரும், விஜயத்திற்காக வனத்தைவிட்டு வெளிப்படும் இரு கஜங்களை {யானைகளைப்} போல, அன்யோன்யம் கொல்லும் நோக்கம் அதிகம் கொண்டவர்களாக தங்கள் கணைகளை ஏவினர்.(2) எங்குமிருந்து விரையும் அந்த ராக்ஷசவனௌகசர்கள் {ராக்ஷசர்களும், வனத்தில் வசிப்பவர்களான வானரர்களும்}, அன்யோன்யம் {ஒருவரையொருவர்} கொன்று, யுத்தத்தில் தங்கள் தலைவர்களைக் கைவிடாதிருந்தனர்.(3) 

Saturday, 9 August 2025

இந்திரஜித் செய்த அற்புதப்போர் | யுத்த காண்டம் சர்க்கம் - 089 (54)

Wonderful battle fought by Indrajith | Yuddha-Kanda-Sarga-089 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களைப் போரிடத் தூண்டிய விபீஷணன்; இந்திரஜித்தின் சாரதியைக் கொன்ற லக்ஷ்மணன்; அவனுடைய குதிரைகளைக் கொன்ற வானரர்கள்; நம்பிக்கையிழந்த இந்திரஜித்...

Battle between Indrajith and Lakshmana

பிறகு,[1] பரஸ்பரம் ஜயத்தில் விருப்பங்கொண்டு, மதங்கொண்ட மாதங்கங்களை {யானைகளைப்} போல யுத்தத்தில் ஈடுபட்டுவரும் நரராக்ஷசர்கள் இருவரையும் {இலக்ஷ்மணனையும், இந்திரஜித்தையும்} கண்டு,{1} பலவானும், சூரனுமான அந்த ராவணபிராதா {ராவணனுடன் பிறந்தவனான அந்த விபீஷணன்}, அவர்களுக்கிடையிலான யுத்தத்தைக் காணும் விருப்பத்தில், தன் சிறந்த சாபத்தை {வில்லைத்} தரித்துக் கொண்டு, போர்க்களத்தின் முன்னணியில் நின்று கொண்டிருந்தான்[2].(1,2) அங்கே நின்று கொண்டு, மஹாதனுவை வளைத்து, கூர்முனைகளைக் கொண்ட மஹா சரங்களை ராக்ஷசர்கள் மீது ஏவினான்.(3) நெருப்பின் தீண்டலைக் கொண்ட அந்த சரங்கள், மஹாகிரிகளில் வஜ்ரத்தை {பெரும் மலைகளில் விழும் இந்திரனின் வஜ்ராயுதத்தைப்} போல் இலக்குத் தவறாமல் பாய்ந்து, ராக்ஷசர்களைப் பிளந்தன.(4) 

Thursday, 7 August 2025

கடும்போர் | யுத்த காண்டம் சர்க்கம் - 088 (79)

Fierce Battle | Yuddha-Kanda-Sarga-088 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்துக்கும் லக்ஷ்மணனுக்கும் இடையில் நடந்த கடும் விற்போர்; கவசங்கள் நொறுங்கின; இலக்ஷ்மணனின் களைப்பு...

Indrajith's Armour Shattered

விபீஷணனின் சொற்களைக் கேட்ட ராவணி {இந்திரஜித்}, குரோதத்தில் மூர்ச்சித்துக் கடும் வாக்கியங்களைக் கூறிவிட்டு, வேகமாகத் துள்ளி எழுந்தான்.(1), நன்கு அலங்கரிக்கப்பட்டதும்,  கரிய அஷ்வங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த வாளையும், ஆயுதங்களையும் கொண்டதுமான மஹத்தான ரதத்தில் காலாந்தகனுக்கு {பிரளய கால யமனுக்கு} ஒப்பானவனாக அமர்ந்திருந்தவன் {இந்திரஜித்},{2} பயங்கரமானதும், மஹாபிரமாணத்தைக் கொண்டதும் {பேரளவிலானதும்}, நீண்டதும், வேகமானதுமான தனுவை உயர்த்தி, அமித்ரர்களைக் கொல்லும் சரங்களை எடுத்தான்.(2,3) பலவானும், மஹேஷ்வாஸனும் {பெரும் வில்லைத் தரித்தவனும்}, நன்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அமர்ந்திருந்தவனுமான அந்த அமித்ரக்னன் {பகைவரை அழிப்பவனான இந்திரஜித்}, நன்கு அலங்கரிக்கப்பட்ட ராகவனின் அனுஜனை {ராமனின் தம்பியான லக்ஷ்மணனைக்} கண்டான்.(4)

Thursday, 31 July 2025

ஹனுமானின் அறைகூவல் | யுத்த காண்டம் சர்க்கம் - 086 (35)

Hanuman's Challenge | Yuddha-Kanda-Sarga-086 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வேள்வியைத் தொடராமல் கைவிட்ட இந்திரஜித்; இந்திரஜித்தைப் போருக்கு அழைத்த ஹனுமான்; இந்திரஜித் தேரில் வருவதைக் கண்ட லக்ஷ்மணன்...

Hanuman and Indrajith

அந்த அவஸ்தையில் {அந்நிலையில்} அப்போது ராவணானுஜன் {ராவணனின் தம்பியான விபீஷணன்}, அர்த்த சாதகத்திற்கானதும், பிறருக்கு ஹிதமற்றதுமான {காரிய நிறைவேற்றத்திற்கானதும், பகைவருக்குக் கெடுதியை விளைவிப்பதுமான பின்வரும்} வாக்கியத்தை லக்ஷ்மணனிடம் கூறினான்:(1)"எந்த ராக்ஷச அனீகம் {படை}, இங்கே கரிய மேகத்தைப் போலக் காணப்படுகிறதோ, அது பாறைகளை ஆயுதமாகக் கொண்ட கபிக்களால் {குரங்குகளால்} சீக்கிரமே தாக்கப்படட்டும்.(2) இலக்ஷ்மணரே, இந்த மஹத்தான அனீகத்தை {படையைப்} பிளக்க யத்னம் செய்வீராக {முயற்சிப்பீராக}. இஃது உடைந்தால் ராக்ஷச சுதனும் {ராக்ஷசர் ராவணரின் மகனான இந்திரஜித்தும்} புலப்படுவான்.(3) அத்தகைய வகையில், எதுவரை கர்மம் {இந்திரஜித்தின் ஹோமம்} நிறைவேறாமல் இருக்குமோ, அதற்குள் பிறர் {பகைவர்} மீது இந்திர அசனிக்கு {இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு} நிகரான சரங்களை ஏவியபடியே நீர் உடனே விரைந்து செல்வீராக.(4) வீரரே, மாயையில் விருப்பமுள்ளவனும், அதர்மிகனும், குரூர கர்மங்களைச் செய்பவனும், சர்வலோகத்திற்கும் பயத்தை விளைவிக்கும் துராத்மாவுமான ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தைக்} கொல்வீராக" {என்றான் விபீஷணன்}.(5)

நிகும்பிலையை அடைதல் | யுத்த காண்டம் சர்க்கம் - 085 (36)

Arriving at Nihumbhila | Yuddha-Kanda-Sarga-085 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தைக் கொல்ல லக்ஷ்மணனை நிகும்பிலைக்கு அனுப்பிய ராமன்; அங்கதன், ஹனுமான், ஜாம்பவான் ஆகியோரும் லக்ஷ்மணனுடன் சென்றது...

Vibheeshana speaking to Rama in the presence of Lakshmana in Battlefront

சோகத்தில் மூழ்கியிருந்த ராகவன் {ராமன்}, அவனது அந்த வசனத்தைக் கேட்டும், அந்த ராக்ஷசன் {விபீஷணன்} சொன்னதென்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.(1) பிறகு, பரபுரஞ்ஜயனான {பகைவரின் நகரங்களை வெற்றி கொள்பவனான} ராமன், தைரியத்தை அடைந்து, கபிக்களின் {குரங்குகளின்} முன்னிலையில், அருகில் அமர்ந்திருந்த விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "நைர்ருதாதிபதே {தென்மேற்குத் திசையின் தலைவனுடைய வழித்தோன்றல்களான ராக்ஷசர்களின் தலைவா}, விபீஷணா, நீ எந்த வாக்கியத்தைச் சொன்னாயோ, அதை மீண்டும் கேட்க விரும்புகிறேன். நீ எதைச் சொல்ல வருகிறாயோ, அதை மீண்டும் கேட்க விரும்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(3)

Tuesday, 29 July 2025

விபீஷணனின் வேண்டுகோள் | யுத்த காண்டம் சர்க்கம் - 084 (23)

The request of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-084 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மாயா சீதையைக் கொன்ற இந்திரஜித்தின் தந்திரத்தை ராமனிடம் சொன்ன விபீஷணன்; நிகும்பிலைக்குச் செல்லும்படி லக்ஷ்மணனை வற்புறுத்தியது...

Vibheeshana clarifies the Maya of Indrajith to Rama

பிராதாவிடம் {தன்னுடன் பிறந்த ராமனிடம்} அன்பு கொண்ட லக்ஷ்மணன் ராமனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது, விபீஷணன் குல்மங்களை {படைப்பிரிவுகளை} அவற்றுக்குரிய இடங்களில் விட்டு அங்கே வந்தான்.(1) நானாவித ஆயுதங்களைத் தரித்தவர்களும், கரிய அஞ்சன மைக் குவியல்களைப் போலத் தெரிந்தவர்களும், யூதபனுடன் கூடிய மாதங்கங்களை {தலைமை யானையைச் சூழ்ந்த யானைகளைப்} போன்றவர்களுமான நான்கு வீரர்களால் சூழப்பட்ட அவன் {விபீஷணன்},{2} சோகத்தில் மூழ்கியிருக்கும் மஹாத்மாவான ராகவனை {லக்ஷ்மணனை} அணுகி, வானரர்களும் கண்கள் நிறைந்த கண்ணீருடன் இருப்பதைக் கண்டான்.(2,3) லக்ஷ்மணனின் அங்கத்தில் சாய்ந்து, மயக்க நிலையில் கிடக்கும் இக்ஷ்வாகுகுலநந்தனனான மஹாத்மாவையும் {ராமனையும் விபீஷணன்} கண்டான்.(4) சோக சந்தாபத்தில் வெட்கமடைந்து ராமனைக் கண்ட அந்த விபீஷணன், தீனமடைந்தவனாக உள்ளார்ந்த துக்கத்துடன், "இஃது என்ன?" என்று கேட்டான்.(5)

Thursday, 17 July 2025

அயன் படை தடுத்தல் | யுத்த காண்டம் சர்க்கம் - 080 (43)

Rama objects to the use of Brahmastra | Yuddha-Kanda-Sarga-080 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மீண்டும் போரிடத் தொடங்கிய இந்திரஜித்; ; போரிடும் முன் நெருப்பு வேள்வியைச் செய்த இந்திரஜித்; பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த விரும்பிய லக்ஷ்மணன்; அதைத் தடுத்த ராமன்...

Rama advising Lakshmana not to use Brahmastra

ஸமிதிஞ்ஜயனான {எப்போதும் போரில் வெற்றி கொள்பவனான} ராவணன், மகராக்ஷன் கொல்லப்பட்டதைக் கேட்டு, மஹத்தான ரோஷத்தை அடைந்து, கடகடவெனப் பற்களைக் கடித்தான்.{1} பிறகு, கோபத்துடன், "காரியம் என்ன? {என்ன செய்வது?}" என்பதைச் சிந்தித்து, குரோதத்துடன் தன் மகன் இந்திரஜித்தை ரணத்திற்கு {போர்க்களத்திற்குச்} செல்ல {பின்வருமாறு} ஆணையிட்டான்:(1,2) "வீரா, புலப்படாமல் மறைந்தோ, புலப்படும் நிலையிலோ மஹாவீரியர்களும், பிராதாக்களுமான {உடன்பிறந்தாருமான} ராக்ஷமலக்ஷ்மணர்கள் இருவரையும் கொல்வாயாக. எல்லாவகையிலும் நீயே பலாதிகன் {அதிக பலம் வாய்ந்தவன்}.(3) போரில் ஒப்பற்ற கர்மங்களைச் செய்த இந்திரனையே நீ வென்றிருக்கிறாய். மானுஷர்களான இவர்களைக் கண்டதும் உன்னால் வதைக்க முடியாதா என்ன?" {என்று கேட்டான் ராவணன்}.(4)

Tuesday, 17 June 2025

பிரம்மாஸ்திர பந்தனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 073 (75)

Bound by Brahmastra | Yuddha-Kanda-Sarga-073 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை ஆறுதல்படுத்தி, வேள்வி செய்து, புலப்படா நிலை அடைந்த இந்திரஜித்; இராமலக்ஷ்மணர்களும், வானரப் படையும் இந்திரஜித்தின் தாக்குதலில் மயக்கமடைந்தது...

Indrajit

பிறகு, கொல்லப்படாமல் எஞ்சிய ராக்ஷச கணங்கள் {ராக்ஷசக்கூட்டத்தார்}, அங்கே துரிதமாகச் சென்று, தேவாந்தகன், திரிசிரன், அதிகாயன் உள்ளிட்ட ராக்ஷசபுங்கவர்கள் கொல்லப்பட்டதைச் சொன்னார்கள்.(1) அவர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட உடனேயே ராஜா {ராவணன்}, கண்ணீர் நிறைந்த கண்களுடன் மூர்ச்சித்தான். பிறகு, கோரமான புத்திர இழப்பையும், பிராதாக்களின் வதத்தையும் {தன்னுடன் பிறந்தோர் கொல்லப்பட்டதையும்} குறித்து நீண்ட நேரம் சிந்தித்தான்[1].(2)

[1] ஏற்கனவே அதிகாயனின் மரணத்தைக் கேட்டு, அழுது புலம்பிய ராவணன், இப்போது புதிதாக அச்செய்திகளைக் கேட்பது போல் இங்கே வருகிறது. 72ம் சர்க்கத்தில் உள்ள செய்தி, செம்பதிப்பில் இல்லாததற்கான காரணம் இதுவாகத் தான் இருக்கும்.

Tuesday, 27 May 2025

அதிகாயனின் வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 071 (116)

Atikaya killed | Yuddha-Kanda-Sarga-071 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் தோற்றம் கண்டு பயந்த வானரர்கள்; ராமனை நோக்கிச் சென்று தற்புகழ்ச்சி செய்த அதிகாயன்; பயங்கர யுத்தம் செய்து அதிகாயனைக் கொன்ற லக்ஷ்மணன்...

Atikaya Rama Vibheeshana, digital art made by copilot inspired by a Chandamama image

உரோமஹர்ஷணம் கொள்ளும் {மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும்} வகையில் தன் பலம் {படை} கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டும், சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான பராக்கிரமத்தைக் கொண்ட தன் பிராதாக்கள் {தன்னுடன் பிறந்தோர்} கொல்லப்படுவதைக் கண்டும்,{1} தன் பித்ருவ்யர்களும் {சிற்றப்பன்மாரும்}, ராக்ஷசரிஷப பிராதாக்களுமான {ராக்ஷசர்களில் உடன்பிறந்த காளைகளுமான} யுத்தோன்மத்தனும், மத்தனும் {மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்} போரில் வீழ்ந்ததைக் கண்டும்,{2} மஹாதேஜஸ்வியும், பிரம்மனால் வரங்கள் தத்தம் செய்யப்பட்டவனும், அத்ரிக்கு {மலைக்கு} ஒப்பானவனும், போரில் தேவதானவர்களின் செருக்கை அழிப்பவனுமான அதிகாயன் கோபமடைந்தான்.(1-3) சக்ராரியான அவன் {இந்திரனின் பகைவனான அதிகாயன்}, ஆயிரம் பாஸ்கரர்களின் {சூரியர்களின்} சங்கமத்தைப் போல் ஒளிரும் ஒரு ரதத்தில் ஏறி, வானரர்களை நோக்கி விரைந்தான்.(4) கிரீடியும் {கிரீடம் தரித்தவனும்}, தூய குண்டலங்களை அணிந்தவனுமான அவன் {அதிகாயன்}, சாபத்தை {வில்லை} வளைத்து, தன் நாமத்தை {பெயரை} உரக்க அறிவித்தபடியே மஹாஸ்வனத்துடன் நாதம் செய்தான்.(5) அவன், அந்த சிம்மநாதத்தாலும், உரக்க அறிவிக்கும் தன் பெயராலும், பயங்கரமான  நாணொலியாலும் பயத்தை விளைவித்தபடியே வானரர்களை அச்சுறுத்தினான்.(6)

Tuesday, 8 April 2025

கும்பகர்ண வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 067 (179)

Kumbhakarna killed | Yuddha-Kanda-Sarga-067 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனுடன் துவிவிதன், ஹனுமான், அங்கதன், சுக்ரீவன், லக்ஷ்மணன் ஆகியோர் போரிட்டது; கடும் மோதலில் ராமனால் கொல்லப்பட்ட கும்பகர்ணன்...

Kumbhakarna fighting a fierce battle

அங்கதனின் சொற்களைக் கேட்டுத் திரும்பி வந்த அந்த சர்வ மஹாகாயர்களும் {பேருடல்களைக் கொண்ட அனைவரும்} நைஷ்டிக புத்தியை {நம்பிக்கையுடன் கூடிய மனத்தை} அடைந்து போரிடக் காத்திருந்தனர்.(1) பலவானான அங்கதனின் வாக்கியத்தைக் கேட்டு நம்பிக்கையடைந்தவர்களும், வீரியம் நினைவூட்டப்பட்டவர்களும், போரில் விக்ரமர்களுமான அந்த வானரர்கள்,{2} ஜீவிதத்தைத் தியாகம் செய்யத் துணிந்து, மரணத்தை நிச்சயித்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டனர்.(2,3) மஹாகாயம் {பேருடல்} படைத்த வானரர்கள், விருக்ஷங்களையும், மஹத்தான மலையுச்சிகளையும் பெயர்த்துக் கொண்டு, துரிதமாக ஓடிச் சென்று கும்பகர்ணனைத் தாக்கினர்.(4)

Saturday, 22 February 2025

இன்று போய் நாளை வாராய் | யுத்த காண்டம் சர்க்கம் - 059 (146)

Go today, and come tomorrow | Yuddha-Kanda-Sarga-059 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தானே நேரடியாகப் போர்க்களத்திற்கு வந்து, சுக்ரீவன், ஹனுமான், நீலன், லக்ஷ்மணன் ஆகியோரை எதிர்கொண்ட ராவணன்; போர்க்களத்தில் ராமனால் கிரீடம் முறிந்து, லங்கை திரும்பியது...

Rama in the shoulder of Hanuman in the war against Ravana

அந்த ராக்ஷச சைனியபாலன் {ராக்ஷசப் படையின் காவலனான பிரஹஸ்தன்}, பிலவங்கமரிஷபனால் {தாவிச் செல்லும் வானரர்களில் காளையான நீலனால்} யுத்தத்தில் கொல்லப்பட்டதும், பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ராக்ஷசராஜ சைனியம் சாகர வேகத்திற்குத் துல்லியமாக ஓடிப் போனது.(1) அப்படிச் சென்றவர்கள், சேனாபதி {பிரஹஸ்தன்}, பாவகனின் மகனால் {அக்னியின் மகனான நீலனால்} கொல்லப்பட்டதை ரக்ஷோதிபதியிடம் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனிடம்} சொன்னதும், அந்த வசனத்தைக் கேட்ட ரக்ஷோதிபன் {ராவணன்} குரோதவசம் அடைந்தான்.(2) போரில் பிரஹஸ்தன் கொல்லப்பட்டதைக் கேட்டுக் குரோதத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்தால் நிறைந்து, நிர்ஜரயூதமுக்கியர்களிடம் {மூப்பற்றவர்களான தேவர்களின் குழுத் தலைவர்களிடம்} இந்திரனைப் போல, அந்த ராக்ஷசயூத முக்கியர்களிடம் {ராக்ஷச குழுத் தலைவர்களிடம், ராவணன் பின்வருமாறு} சொன்னான்:(3) “எவரது தாக்குதலால் இந்திரபலம் {இந்திரனின் படை} அழிந்ததோ, அத்தகைய என் சைனியபாலரை {படைத்தலைவரான பிரஹஸ்தரைப்} பின்தொடர்ந்தோருடனும், குஞ்சரங்களுடனும் {யானைகளுடனும்} அழித்த பகைவரை இழிவாகக் கருதுவது {அலட்சியம் செய்வது} தகாது.(4) அப்படியிருக்கையில், சிந்தித்துக் கொண்டிராமல் பகைவரை நாசம் செய்து, விஜயமடைவதற்காக நான் ஸ்வயமாக {நேரடியாக} அந்த அற்புதப் போர்முனைக்குச் செல்ல விரும்புகிறேன்.(5) அக்னியால் எரியும் வனத்தைப் போல, ராமனுடனும், லக்ஷ்மணனுடன் கூடிய அந்த வானர அனீகத்தை {படையை} பாண வெள்ளத்தால் இதோ எரிக்கப் போகிறேன். இன்று பிருத்வியை கபிசோணிதத்தால் {பூமியை குரங்கு ரத்தத்தால்} திருப்தியடையச் செய்யப் போகிறேன்” {என்றான் ராவணன்}.(6)

Friday, 8 November 2024

கண்ணீரைத் துடைத்தல் | யுத்த காண்டம் சர்க்கம் - 046 (50)

Tears wiped | Yuddha-Kanda-Sarga-046 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித் மறைந்திருப்பதைக் கண்ட விபீஷணன்; சுக்ரீவனைத் தேற்றியது; இராமலக்ஷ்மணர்களைக் கொன்றுவிட்டதாக ராவனிடம் அறிவித்த இந்திரஜித்...

Vibheeshana wiping the tears from Sugreevas face
பிறகு வானத்தையும், பிருத்வியையும் பார்த்துக் கொண்டிருந்த வனௌகசர்கள் {வனத்தை வசிப்பிடமாகக் கொண்ட வானரர்கள்}, உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் பாணங்களால் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.(1) அப்போது, மழை பொழியும் தேவனை {இந்திரனைப்} போலத் தன் கர்மத்தைச் செய்துவிட்டு ராக்ஷசன் {இந்திரஜித்} ஓய்ந்ததும், அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} சுக்ரீவனுடன் சேர்ந்து விபீஷணனும் வந்தான்.(2) நீலன், துவிவிதன், மைந்தன், சுஷேணன், குமுதன், அங்கதன் ஆகியோரும் ஹனுமதனுடன் சேர்ந்து விரைவில் கூடி ராகவர்களுக்காக {ராமலக்ஷ்மணர்களுக்காக} வருந்திக் கொண்டிருந்தனர்.(3)

Saturday, 26 October 2024

சரபந்தனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 045 (28)

Bound by arrows | Yuddha-Kanda-Sarga-045 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: துளைத்த அம்புகளால் துன்புற்ற ராமலக்ஷ்மணர்கள்; விரக்தியடைந்த வானரர்கள்...

Rama and Lakshmana fighting the rakshasas

இராஜபுத்திரனும், பிரதாபவானும், அதிபலவானுமான அந்த ராமன், அவனது கதியை {இந்திரஜித்தின் போக்கைக்} கண்டுபிடிக்குமாறு பத்து வானர யூதபர்களிடம் {குரங்குக் குழுத் தலைவர்களிடம்} சொன்னான்.(1) சுஷேணனின் மகன்கள் இருவரிடமும், பிலவகரிஷபனான நீலன், வாலிபுத்ரன் அங்கதன், வலிமைமிக்க சரபன்,{2} வினதன், ஜாம்பவந்தன், மஹாபலவானான சானுபிரஸ்தன், ரிஷபன், ரிஷபஸ்கந்தன் ஆகியோரிடமும் அந்தப் பரந்தபன் {ஆகிய பத்து பேரிடம் பகைவரை அழிப்பவனான அந்த ராமன்} ஆணையிட்டான்.(2,3) பெரும் மகிழ்ச்சியடைந்த அந்த ஹரயர்கள் அனைவரும், பெரும் மரங்களைக் கையிலேந்திக் கொண்டு, பத்துத் திசைகளிலும் {இந்திரஜித்தைத்} தேடியபடியே ஆகாசத்தில் எழுந்தனர்.(4) 

Friday, 25 October 2024

நிசாயுத்தம் | யுத்த காண்டம் சர்க்கம் - 044 (39)

Nocturnal war | Yuddha-Kanda-Sarga-044 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரவிலும் தொடர்ந்த போர்; இந்திரஜித்தை வென்ற அங்கதன்; ராமலக்ஷ்மணர்களை சர்ப்பபாசத்தில் கட்டிய இந்திரஜித்...

Angada attacking a chariot

வானர ராக்ஷசர்களான அவர்கள் இப்படி யுத்தம் செய்து கொண்டிருந்தபோதே ரவி அஸ்தமடைந்து {சூரியன் மறைந்து}, பிராணஹாரிணியான {உயிரைப் பறிக்கும்} ராத்திரி தொடங்கியது.(1) பிறகு அன்யோன்யம் கடும் வைரம் கொண்டவர்களும், கோரர்களும், ஜயத்தை இச்சிப்பவர்களுமான வானர ராக்ஷசர்களுக்கிடையில் நிசாயுத்தம் {இரவுப் போர்} தொடங்கியது.(2) அந்தக் காரிருளில், "நீ ராக்ஷசன்" என்று ஹரயர்களும் {குரங்குகளும்}, "நீ ஹரி" என்று ராக்ஷசர்களும் சொல்லிக் கொண்டே அன்யோன்யம் தாக்கிக் கொண்டு போரிட்டனர்.(3) அந்த சைனியத்தில், "தாக்கு", "வெட்டு", "வா" என்றும், "ஏன் ஓடுகிறாய்" என்றும் ஆரவார சப்தம் கேட்டது.(4) அந்த இருளில், காஞ்சனப் போரணிகள் பூண்ட கரிய ராக்ஷசர்கள், ஒளிரும் ஔஷதிகளை {மூலிகைகளைக்} கொண்ட வனங்களுடன் கூடிய சைலேந்திரங்களை {பெரும் மலைகளைப்} போலத் தெரிந்தனர்.(5) 

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை