Showing posts with label மஹாபார்ஷ்வன். Show all posts
Showing posts with label மஹாபார்ஷ்வன். Show all posts

Friday, 12 September 2025

மஹாபார்ஷ்வ வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 098 (26)

Mahaparshva killed | Yuddha-Kanda-Sarga-098 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மஹாபார்ஷ்வனைத் தாக்கிய அங்கதனும், ஜாம்பவானும்; மஹாபார்ஷ்வனின் குதிரைகளைக் கொன்று, ரதத்தை பங்கம் செய்த ஜாம்பவான்; அங்கதனின் முஷ்டியால் கொல்லப்பட்ட மஹாபார்ஷ்வன்...

Angada fights with Mahaparshva

மஹாபலவானான மஹாபார்ஷ்வன்[1], சுக்ரீவனால் மஹோதரன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, குரோதத்தில் கண்கள் சிவந்து, அங்கதனின் சம்முவை {படையைத்} தன் பயங்கரக் கணைகளால் கலங்கடித்தான்.(1,2அ) காம்பிலிருந்து பழங்களை {வீழ்த்தும்} அநிலனை {காற்றைப்} போல அவன் {மஹாபார்ஷ்வன்}, சர்வ வானர முக்கியர்களின் உத்தம அங்கங்களை காயங்களிலிருந்து வீழ்த்தினான் {தலைகளை அவர்களின் உடல்களிலிருந்து வீழ்த்தினான்}.(2ஆ,3அ) பிறகு விரைவாக அந்த ராக்ஷசன், தன் கணைகளைக் கொண்டு சில வானரர்களின் கைகளைத் துண்டித்தான், மேலும் சிலரின் பக்கவாட்டுகளை வெட்டினான்.(3ஆ,4அ) மஹாபார்ஷ்வனின் பாணவேகத்தால் வேதனையடைந்த அந்த சர்வ வானரர்களும், வேதனையை எதிர்கொள்ள முடியாமல் நனவிழந்தவர்கள் ஆனார்கள்.(4ஆ,5அ)

Monday, 25 August 2025

இராவணன் புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் - 095 (49)

Ravana sets off to battle | Yuddha-Kanda-Sarga-095 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கோபத்தில் மூர்ச்சித்து, வானரப்படையைப் பழிவாங்கக் கட்டளையிட்டு, போர்க்களத்தில் தன் வீரத்தை வெளிப்படுத்தி ராக்ஷசர்களைப் பின்தொடரச் செய்த ராவணன்...

Ravana setout for battle

இலங்கையில் குலாகுலத்தில் {ஒவ்வொரு வீட்டிலும்} துயருற்று, பரிதாபத்திற்குரிய வகையிலும், கருணையை ஏற்படுத்தும் வகையிலும் அழுத ராக்ஷசிகளின் சப்தத்தை ராவணன் கேட்டான்.(1) தீர்க்கமாக மூச்சுவிட்டு, ஒரு முஹூர்த்தம் தியானத்தில் நிலைத்த அந்த ராவணன், பரமகுரோதத்துடன் பயங்கரத் தோற்றத்தை அடைந்தான்.(2) குரோதத்தால் கண்கள் சிவந்தவன், பற்களால் உதடுகளைக் கடித்தபடியே, ராக்ஷசர்களாலும் பார்க்கமுடியாத வகையில் காலாக்னியைப் போல மூண்டான் {குரோதத்தில் வளர்ந்தான்}.(3) இராக்ஷசேஷ்வரன், தன் சமீபத்தில் இருந்த ராக்ஷசர்களிடம் பேசினான். கண்களால் எரித்துவிடுபவனைப் போலிருந்த அவன், பயம் வெளிப்படும் குழறிய சொற்களில்,{4} மஹோதரன், மஹாபார்ஷ்வன்[1], விரூபாக்ஷன்[2] ஆகிய ராக்ஷசர்களிடம் "என் ஆணையின் பேரில் சைனியங்களை சீக்கிரம் புறப்படச் சொல்வீராக" {என்று சொன்னான் ராவணன்}[3].(4,5)

Monday, 19 May 2025

வந்தவரில் எஞ்சியோரின் நிலை | யுத்த காண்டம் சர்க்கம் - 070 (67)

The situation of the rest who came | Yuddha-Kanda-Sarga-070 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனைத் தவிர்த்து, தேவாந்தகன், மஹோதரன், திரிசிரன், மஹாபார்ஷ்வன் ஆகியோர் ஹனுமான், நீலன், ரிஷபன் ஆகியோரால் கொல்லப்படுவது...

Rishabha's final blow to Mahaparshva

A digital art made by CopilotAI, inspired by a Chandamama Image

நராந்தகன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், நைர்ருதரிஷபர்களுமான {ராக்ஷசர்களில் காளைகளுமான} தேவாந்தகன், திரிமூர்த்தன் {திரிசிரஸ்},  பௌலஸ்தியன் {புலஸ்தியர் வழி வந்தவனான} மஹோதரன் ஆகியோர் அழுது கூச்சலிட்டனர்.(1) மஹோதரன், மேகத்திற்கு ஒப்பான வாரணேந்திரத்தில் {தலைமை யானையின் மீது} ஏறிச் சென்று, மஹாவீரியனான வாலிபுத்திரனை {அங்கதனை} வேகமாகத் தாக்கினான்.(2) பிறகு, பலவானான தேவாந்தகன், பிராதாவுக்கான விசனத்துடன் {உடன் பிறந்தவனுக்கான வேதனையுடன்}, ஒளிரும் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டு, அங்கதனை நோக்கி விரைந்தான்.(3) பிறகு, வீரனான திரிசிரன், ஆதித்யனுக்கு ஒப்பானதும், பரம வாஜிகள் {மிகச் சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதுமான ரதத்தில் ஏறிச் சென்று வாலிபுத்திரனை {அங்கதனை} எதிர்த்தான்.(4)

Wednesday, 31 July 2024

புஞ்சிகஸ்தலை | யுத்த காண்டம் சர்க்கம் - 013 (21)

Punjikasthala | Yuddha-Kanda-Sarga-013 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை பலவந்தமாக அடையுமாறு ராவணனுக்கு அறிவுறுத்திய மஹாபார்ஷ்வன்; பிரம்மன் கொடுத்த சாபத்தால் தன்னால் அப்படிச் செயல்பட இயலாது என்று சொன்ன ராவணன்...

Ravana and Punjikasthala

மஹாபலவானான மஹாபார்ஷ்வன், {கும்பகர்ணனின் பேச்சால்} ராவணன் குரோதமடைந்திருப்பதை அறிந்து, ஒரு முஹூர்த்தம் சிந்தித்துவிட்டு, கைகளைக் கூப்பியபடியே {பின்வரும் வாக்கியத்தைக்} கூறினான்:(1) "எந்த நரன், மதுவுக்காக {தேனுக்காக} மிருகங்களும் {மான்களும்}, வியாலங்களும் {பாம்புகளும் / துஷ்ட விலங்குகளும்} சேவிக்கும் வனத்தை அடைந்து, அதை {தேனைப்} பெற்ற பிறகும் பருகாதிருக்கிறானோ, அவன் நிச்சயம் பாலிஷனே {சிற்றறிவு கொண்டவனே / மூடனே} ஆவான்.(2) சத்ருக்களை அழிப்பவரே, ஈஷ்வரனான உமக்கு எவன் ஈஷ்வரன்? சத்ருக்களின் தலைகளில் கால்பதித்து, வைதேஹியுடன் இன்புற்றிருப்பீராக.(3) மஹாபலவானே, குக்குடத்தின் விருத்தத்தில் {சேவலின் நடைமுறையில்} நடந்து கொண்டு, பலவந்தமாக அந்த சீதையை ஆக்கிரமித்து, அனுபவித்து, இன்புற்றிருப்பீராக.(4) காமத்தை {விருப்பத்தை} நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்ன பயம் {ஆபத்து} வரப்போகிறது? வருவது, வரப்போவது என அனைத்தையும் {அனைத்து ஆபத்துகளையும் நீர்} எதிர்த்துத் தடுக்கவல்லவராவீர்.(5) நம்முடன் கூடிய கும்பகர்ணர், மஹாபலவானான இந்திரஜித் ஆகியோர் {இருவரும்}, வஜ்ரம் தரித்த வஜ்ரியையே {இந்திரனையே} எதிர்க்கவல்லவராவர்.(6)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை