Aksha killed | Sundara-Kanda-Sarga-47 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானுடன் போரிட தன் மகன் அக்ஷனை அனுப்பிய ராவணன்; ஹனுமானுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட அக்ஷன்...
சேனாபதிகள் ஐவரும், தங்களைப் பின்தொடர்ந்தவர்களுடனும், வாஹனங்களுடனும் சேர்த்து ஹனூமதனால் கொல்லப்பட்டதைக் கேட்டறிந்த ராஜா {ராவணன்}, சமர் புரிவதற்குச் செருக்குடன் ஆயத்தமாக முன் வந்து நிற்கும் தன் குமாரன்[1] அக்ஷனைப் பார்த்தான்.(1) அவனது {ராவணனின்} பார்வையால் தூண்டப்பட்ட அந்தப் பிரதாபவான் {அக்ஷன்}, ஹவிஸ்ஸை இட்டு துவிஜாதிமுக்கியர்களால் தூண்டப்படும் பாவகனை {நெய் விட்டு இருபிறப்பாளர்களால் தூண்டப்படும் அக்னியைப்} போல சதஸ்ஸில் காஞ்சனச் சித்திர கார்முகத்துடன் {அந்த அரசவையில் இருந்து பொன்னாலான விசித்திர வில்லுடன்} விரைவாக எழுந்தான்[2].(2) பிறகு, வீரியவானான அந்த நைர்ருதரிஷபன் {ராக்ஷசர்களில் காளையான அக்ஷன்}, பால திவாகரனின் பிரபையைக் கொண்டதும், தப்த ஜாம்பூநத ஜாலத்தால் {புடம்போட்ட பொன்வலைகளால்} அலங்கரிக்கப்பட்டதுமான மஹத்தான ரதத்தில் ஏறி, அந்த மஹாஹரியை {பெருங்குரங்கான ஹனுமானை} நோக்கிச் சென்றான்.(3)
