Showing posts with label பிரகஸை. Show all posts
Showing posts with label பிரகஸை. Show all posts

Friday, 16 February 2024

கொல்மின், தின்மின் | சுந்தர காண்டம் சர்க்கம் - 24 (48)

Kill and eat | Sundara-Kanda-Sarga-24 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சசி, அருந்ததி, ரோஹிணி முதலியோர் தங்கள் தங்கள் கணவனிடம் கொண்ட அர்ப்பணிப்பைக் குறிப்பிட்ட சீதை; ராக்ஷசிகள் சீதையைக் கொன்று உண்ணப்போவதாக அச்சுறுத்தியது...

Rakshasis threatening Seetha to kill and eat her

பிறகு, கொடிய முகங்களையும், கடும் இயல்பையும் கொண்ட ராக்ஷஸ நாரியைகள் {ராக்ஷசப் பெண்கள்}, அந்த சீதையை நெருங்கி, கடுமைமிக்க, பிரியமற்ற வாக்கியத்தைப் பேசினார்கள்:(1) “சீதே, பெருஞ்சிறப்புடைய மஹத்தான சயனங்களுடன் {படுக்கைகளுடன்} கூடியதும், சர்வபூதங்களுக்கும் மனோஹரமானதுமான {அனைத்து உயிரினங்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதுமான} அந்தப்புரத்தில் வசிப்பதை நீ ஏற்க மறுப்பதேன்?(2) மானுஷியான நீ, ஒரு மானுஷ்யனின் பார்யத்வத்தை பஹுமானிக்கிறாய் {மனிதப்பெண்ணான நீ, மனிதனின் மனைவி என்ற நிலையை உயர்வாக மதிக்கிறாய்}. இராமனிடம் இருந்து மனத்தை விலக்குவாயாக. இல்லையெனில் நீ இல்லாமல் போவாய்.(3) மூவுலகங்களின் சுபமான செல்வங்களை அனுபவிக்கும் ராக்ஷசேஷ்வரர் ராவணரை ஏற்று, பர்த்தாவாக்கி {கணவராக்கிக்} கொண்டு விரும்பியபடி சுகமாக இருப்பாயாக.(4) சோபனே {அழகிய பெண்ணே}, அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, நீ மானுஷியாக இருப்பதால், ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டவனும், வெற்றியடையாததால் வருந்தும் மானுஷனுமான அந்த ராமனை இச்சிக்கிறாய் {விரும்புகிறாய்}” {என்றனர் அந்த ராக்ஷசிகள்}.(5)

Wednesday, 14 February 2024

இராக்ஷசிகளின் மிரட்டல் | சுந்தர காண்டம் சர்க்கம் - 23 (22)

Intimidation of Rakshasis | Sundara-Kanda-Sarga-23 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை மணந்து கொள்வது தொடர்பாக சீதையிடம் பேசிய ராக்ஷசிகள்...

Seetha threatened by rakshasis in Ashoka garden

சத்ருக்களை ராவணஞ்செய்ய {கதற} வைக்கும் இராஜா ராவணன், மைதிலியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, சர்வ ராக்ஷசிகளுக்கும் ஆணையிட்ட பிறகு புறப்பட்டுச் சென்றான்.(1) இராக்ஷசேந்திரன் சென்று, மீண்டும் அந்தப்புரத்தை அடைந்ததும், பீமரூபங்கொண்ட {பயங்கரத் தோற்றமுடைய} அந்த ராக்ஷசிகள் சீதையை நோக்கி விரைந்தனர்.(2)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை