Showing posts with label விரூபாக்ஷன். Show all posts
Showing posts with label விரூபாக்ஷன். Show all posts

Thursday, 28 August 2025

விரூபாக்ஷ வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 096 (36)

Virupaksha killed | Yuddha-Kanda-Sarga-096 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை அணுக முயற்சித்த ராவணன்; ராக்ஷசர்கள் சிலரைக் கொன்ற சுக்ரீவன்; சுக்ரீவனைத் தாக்கிய விரூபாக்ஷன்; விரூபாக்ஷனைக் கொன்ற சுக்ரீவன்...

Sugreeva fighting with Virupaksha

தசக்ரீவனின் கணைகளால் காத்திரங்கள் பிளக்கப்பட்ட அந்த ஹரீக்கள் அப்போது அங்கே வசுதையில் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனின் கணைகளால் உடல் உறுப்புகள் பிளக்கப்பட்ட அந்தக் குரங்குகள் அப்போது அங்கே பூமியில்} சிதறிக் கிடந்தனர்.(1) சுடர்மிக்க நெருப்பில் பதங்கங்களை {விட்டிற்பூச்சிகளைப்} போல, ராவணன் ஒருவனால் ஏவப்பட்ட அந்தத் தடுக்கப்பட முடியாத சரங்களின் பாய்ச்சலை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.(2) கூரிய பாணங்களால் துன்புற்ற அவர்கள் {வானரர்கள்}, பாவகனின் {அக்னியின்} சுடர்களால் சூழப்பட்டு, எரிக்கப்படும் கஜங்கள் {யானைகள்} எப்படியோ, அப்படியே அலறியபடி ஓடிச் சென்றனர்.(3) அந்தச் சமரில் ராவணன், பெரும் மேகங்களை {விரட்டும்} மாருதம் {காற்று} போல, பிலவங்கமர்களின் அனீகத்தை {தாவிச் செல்பவர்களான குரங்குகளின் படையை} விரட்டியபடி விரைந்து சென்றான்.(4) அந்த யுத்தத்தில் ராக்ஷசேந்திரன், வனௌகசர்களை கதனம் செய்தவாறே {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களை அழித்தவாறே}, ரணத்தில் ராகவனைத் துரிதமாக அணுகினான்.(5)

Monday, 25 August 2025

இராவணன் புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் - 095 (49)

Ravana sets off to battle | Yuddha-Kanda-Sarga-095 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கோபத்தில் மூர்ச்சித்து, வானரப்படையைப் பழிவாங்கக் கட்டளையிட்டு, போர்க்களத்தில் தன் வீரத்தை வெளிப்படுத்தி ராக்ஷசர்களைப் பின்தொடரச் செய்த ராவணன்...

Ravana setout for battle

இலங்கையில் குலாகுலத்தில் {ஒவ்வொரு வீட்டிலும்} துயருற்று, பரிதாபத்திற்குரிய வகையிலும், கருணையை ஏற்படுத்தும் வகையிலும் அழுத ராக்ஷசிகளின் சப்தத்தை ராவணன் கேட்டான்.(1) தீர்க்கமாக மூச்சுவிட்டு, ஒரு முஹூர்த்தம் தியானத்தில் நிலைத்த அந்த ராவணன், பரமகுரோதத்துடன் பயங்கரத் தோற்றத்தை அடைந்தான்.(2) குரோதத்தால் கண்கள் சிவந்தவன், பற்களால் உதடுகளைக் கடித்தபடியே, ராக்ஷசர்களாலும் பார்க்கமுடியாத வகையில் காலாக்னியைப் போல மூண்டான் {குரோதத்தில் வளர்ந்தான்}.(3) இராக்ஷசேஷ்வரன், தன் சமீபத்தில் இருந்த ராக்ஷசர்களிடம் பேசினான். கண்களால் எரித்துவிடுபவனைப் போலிருந்த அவன், பயம் வெளிப்படும் குழறிய சொற்களில்,{4} மஹோதரன், மஹாபார்ஷ்வன்[1], விரூபாக்ஷன்[2] ஆகிய ராக்ஷசர்களிடம் "என் ஆணையின் பேரில் சைனியங்களை சீக்கிரம் புறப்படச் சொல்வீராக" {என்று சொன்னான் ராவணன்}[3].(4,5)

Thursday, 11 April 2024

சேனாபதிகள் வதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 46 (39)

Generals killed | Sundara-Kanda-Sarga-46 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரில் ராவணனின் சேனாதிபதிகள் ஐவரைக் கொன்ற ஹனுமான்...

Ravana commanding his five generals

மஹாத்மாவான வானரனால் {ஹனுமனால்} மந்திரிமகன்கள் கொல்லப்பட்டதை அறிந்த ராவணன், தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு, உத்தம மதியை அமைத்துக் கொண்டான் {நல்ல தீர்மானத்திற்கு வந்தான்}.(1) சேனையின் ஐந்து முன்னணி நாயகர்களான விரூபாக்ஷன், யூபாக்ஷன், ராக்ஷசன் துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன்{2} என்ற நயவிசாரதர்களும் {உத்திகளைக் கையாள்வதில் திறம்பெற்றவர்களும்}, ஹனூமனைக் கைப்பற்றும் ஆவலுள்ளவர்களும், யுத்தத்தில் வாயுவுக்கு சமமான வேகம் கொண்டவர்களுமான அந்த வீரர்களுக்கு அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன், பின்வருமாறு} ஆணையிட்டான்:(2,3) "சேனாக்ரகர்களே {படையின் முன்னணியில் உள்ள தலைவர்களே}, நீங்கள் அனைவரும் வாஜிகள், ரதங்கள், மாதங்கங்களுடன் கூடிய மஹாபலத்தை {குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும்படையை} அழைத்துச் சென்று அந்த கபியை {குரங்கை} தண்டிப்பீராக" என்றான் {ராவணன்}.(4) 

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை