Sarama secretly hears | Yuddha-Kanda-Sarga-034 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையின் வேண்டுகோளுக்கு இணங்க சென்று, ராவணன், தன் அமைச்சர்களுடன் ஆலோசிப்பதை ரகசியமாகக் கேட்டறிந்து, திரும்பி வந்து சீதையிடம் அறிவித்த சரமை...
அப்போது சந்தாபத்தில் மூழ்கியிருந்த அவள் {சீதை}, தஹிக்கும் மஹீயை {பூமியைக்} குளிர்விக்கும் மழைநீரைப் போன்ற சரமையின் அந்த வாக்கியத்தால் மகிழ்ச்சியடைந்தாள்.(1) பிறகு, காலஜ்ஞையும் {காலத்தை அறிந்தவளும்}, புன்னகைத்தவாறே பேசுபவளுமான சகி {தோழி சரமை}, தன் அன்புக்குரியவளின் {சீதையின்} ஹிதத்தை விரும்பி, காலத்திற்குத் தகுந்த {பின்வரும்} சொற்களைச் சொன்னாள்:(2) "கருவிழியாளே, நான் மறைவாகச் சென்று உன் வாக்கியத்தையும், குசலத்தையும் {நலத்தையும்} ராமரிடம் சொல்லிவிட்டுத் திரும்பிவர ஆவலாக உள்ளேன்.(3) ஆதரவின்றி ஆகாயத்தில் செல்லும் என் கதியைப் பின்பற்ற பவனனோ {வாயுதேவனோ}, கருடனோ கூட சமர்த்தர்களில்லை" {என்றாள் சரமை}.(4)
