Shardula's commentary | Yuddha-Kanda-Sarga-030 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரப் படை குறித்து ராவணனிடம் விரிவாக விளக்கிச் சொன்ன சார்தூலன்...
அப்போது, சுவேல சைலத்தில் முகாமிட்டிருக்கும் கலங்கடிக்கப்பட முடியாத படையைக் குறித்தும், ராகவனை {ராமனைக்} குறித்தும் சாரர்கள் {ஒற்றர்கள்} லங்காதிபதியிடம் தெரிவித்தனர்.(1) பெரும்படையுடன் ராமன் முகாமிட்டிருப்பதை சாரர்களின் மூலம் கேட்ட ராவணன், கொஞ்சம் கலக்கமடைந்தவனாக, சார்தூலனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(2) "நிசாசரா, உன் வர்ணம் {முகவொளி} எப்படி இருக்குமோ, அப்படி இல்லை. நீ தீனனாக இருக்கிறாய். குரோதங்கொண்ட அமித்ரர்களின் {பகைவரின்} வசம் நீ அகப்படவில்லை அல்லவா?" {என்று கேட்டான் ராவணன்}.(3)


