Enter Garuda | Yuddha-Kanda-Sarga-050 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களுக்கு நம்பிக்கையளித்த ஜாம்பவான்; விபீஷணனின் அழுகை; சுக்ரீவன் சொன்ன ஆறுதல்; கருடன் வந்து, ராமலக்ஷ்மணர்களை நாகபாசத்தில் இருந்து விடுவித்தது...
அப்போது, மஹாதேஜஸ்வியும், மஹாபலவானுமான ஹரிராஜன் {சுக்ரீவன், பின்வருமாறு} சொன்னான் “ஏன் இந்த சேனை ஜலத்தில் காற்றால் நிலைதடுமாறும் நாவத்தை {ஓடத்தைப்} போலக் கலக்கமடைகிறது?” {என்றான் சுக்ரீவன்}.(1)
சுக்ரீவனின் சொற்களைக் கேட்ட வாலிபுத்ரன் அங்கதன், {பின்வருமாறு} கூறினான், “இராமரையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணரையும் நீர் பார்க்கவில்லையா?{2} மஹாத்மாக்களும், தசரதாத்மஜர்களுமான இந்த வீரர்கள் இருவரும், சரஜாலத்தால் {கணை வலையால்} மறைக்கப்பட்டு, உதிரத்தால் நனைந்து, சரதல்பத்தில் {கணைப்படுக்கையில்} சயனிக்கின்றனர்” {என்றான் அங்கதன்}.(2,3)
