Showing posts with label சாரணன். Show all posts
Showing posts with label சாரணன். Show all posts

Monday, 9 September 2024

மீண்டும் சார்தூலன் | யுத்த காண்டம் சர்க்கம் - 029 (30)

Shardula again | Yuddha-Kanda-Sarga-029 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரப் படையைப் புகழ்ந்ததற்காக சுகனையும், சாரணனையும் கண்டித்து, மற்றொரு ஒற்றனான சார்தூலனை அனுப்பிவைத்த ராவணன்...

Ravana sending spies


சுகனால் சொல்லப்பட்ட ஹரியூதபர்களை {குரங்குக் குழுத் தலைவர்களைக்} கண்டும், ராமனின் தக்ஷிணபுஜமாக {வலது கையாகத்} திகழ்பவனும், மஹாவீரியம் கொண்டவனுமான லக்ஷ்மணனையும்,{1} ராமனின் சமீபத்திலிருப்பவனும், தன்னுடன் பிறந்தவனுமான விபீஷணனையும், பீமவிக்கிரமனும், சர்வ வானரர்களின் ராஜாவுமான சுக்ரீவனையும்,{2} வஜ்ரஹஸ்தாத்மஜாத்மஜனுமான {கையில் வஜ்ரத்துடன் கூடிய இந்திரனுடைய மகனான வாலியின் மகன்} அங்கதனையும், விக்ராந்தனான ஹனூமந்தனையும், வெல்வதற்கரிய ஜாம்பவந்தனையும்,{3} சுஷேணன், குமுதன், நீலன், பிலவகரிஷபனான {தாவிச் செல்பவர்களில் காளையான} நளன் ஆகியோரையும், கஜன், கவாக்ஷன், சரபன், மைந்தன், துவிவிதன் ஆகியோரையும் கண்டும்,{4} சற்றே கலங்கிய ஹிருதயத்துடன் கூடிய ராவணன் குரோதம் அடைந்து, மேற்படி சொல்லிமுடித்த வீரர்களான அந்த சுகசாரணர்கள் இருவரையும் கண்டித்தான்.(1-5)

Friday, 30 August 2024

வானர சேனையைக் கண்ட ராவணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 026 (48)

Ravana looks at the vanara army | Yuddha-Kanda-Sarga-026 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மாளிகையின் உச்சிக்குச் சென்று ராமனின் படையைப் பார்த்த ராவணன்; படையில் உள்ள முக்கிய வானரர்களை ராவணனுக்குச் சுட்டிக்காட்டிய சாரணன்...

Ravana watching Vanaras from his palace terrace


சாரணன் தயக்கமில்லாமல் சொன்ன அந்த பத்தியமான {நலம்பயக்கும்} சொற்களைக் கேட்ட ராஜா ராவணன், சாரணனிடம் {பின்வருமாறு} பதிலளித்தான்:(1) "தேவ, கந்தர்வ, தானவர்களே என்னுடன் யுத்தம் செய்தாலும், சர்வலோகமும் எனக்கு பயத்தை விளைவித்தாலும் சீதையை நான் கொடுக்க மாட்டேன்[1].(2)  சௌம்யா, ஹரிக்களால் {குரங்குகளால்} அதிகம் பீடிக்கப்பட்டதால் பயத்தில் இவ்வாறு, 'சீதையைத் திருப்பித் தருவது நல்லது' என்று நீ நினைக்கிறாய்.(3) சமரில் என்னை வெல்லத்தகுந்த பகைவன் எவன்?"  என்ற கடும் வாக்கியத்தைச் சொன்னான் ராக்ஷசாதிபன் ராவணன்.{4}

Wednesday, 28 August 2024

மீண்டும் ஒற்றர்கள் | யுத்த காண்டம் சர்க்கம் - 025 (34)

Spies again | Yuddha-Kanda-Sarga-025 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுகனையும், சாரணனையும் ஒற்றர்களாக அனுப்பிய ராவணன்; வானர வடிவை ஏற்று வானரப்படைக்குள் அவர்கள் நுழைந்தது; விபீஷணன் அடையாளம் கண்டது; அவர்களை விடுவித்த ராமன்...

Vibheeshana pointing out the spies to Rama


தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} ராமன், தன் படையுடன் சாகரத்தைக் கடந்ததும், ஸ்ரீமானான ராவணன் தன் அமைச்சர்களான சுக, சாரணர்களிடம் {பின்வருமாறு} கூறினான்:(1) "சர்வ வானரப் படையும், கடப்பதற்கரிய சாகரத்தைக் கடந்திருக்கிறது. இதுவரையில்லாத சேதுபந்தனத்தை சாகரத்தில் ராமன் செய்திருக்கிறான்.(2) சாகரத்தில் அந்த சேதுபந்தனத்தை எச்சூழ்நிலையிலும் நம்பியிருக்கமாட்டேன். அவசியம் அந்த வானரப் படையை நான் கணக்கில் கொள்ள வேண்டும்.(3) 

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை