Karthikeya | Bala-Kanda-Sarga-37 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கார்த்திகேயனைப் பெற்ற கங்கை; ஸ்கந்தனுக்குப் பால் கொடுத்த கிருத்திகை நட்சத்திரங்கள்; தேவர்களின் படைத்தலைவனாக நியமிக்கப்பட்ட சண்முகன்...
{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "தேவன் {சிவன் அவ்வாறு} தவம் செய்து கொண்டிருந்தபோது, இந்திரனுடன் கூடியவர்கள் {தேவர்கள்} ஒரு சேனாபதியை {ஒரு படைத்தலைவனை} விரும்பியவர்களாக அக்னியை முன்னிட்டுக் கொண்டு பிதாமஹனை {பிரம்மனை} அடைந்தனர்.(1) இராமா, இந்திரனுடன் கூடியவர்களும், அக்னியை முன்னிட்டு வந்தவர்களுமான தேவர்கள் அனைவரும் பகவானான பிதாமஹனை வணங்கி இவ்வாறு பேசினார்கள்:(2) "தேவா, சேனாபதியாக முன்பிருந்த பகவான் {சிவன்} உமையுடன் பரம தவத்தில் மூழ்கி தவத்தில் லயித்திருக்கிறான்[1].(3) விதங்களை {நடைமுறைகளை} அறிந்தவனே, உலக நன்மைக்காக அடுத்துச் செய்ய வேண்டிய காரியத்தைத் தெளிவாகச் சொல்வாயாக. நீயே எங்கள் பரம கதியாக இருக்கிறாய்" {என்று பிரம்மனிடம் சொன்னார்கள் தேவர்கள்}.(4)
