Showing posts with label இராவணன். Show all posts
Showing posts with label இராவணன். Show all posts

Thursday, 9 October 2025

மந்தோதரியின் புலம்பலும், இறுதிச் சடங்கும் | யுத்த காண்டம் சர்க்கம் – 111 (128)

Lament of Mandodari and the funeral rite | Yuddha-Kanda-Sarga-111 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணன் இறப்புக்காக அழுது புலம்பிய மந்தோதரி; இராமனின் வேண்டுகோளுக்கிணங்க ராவணனுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்த விபீஷணன்...

The lament of Mandodari

இராக்ஷசயோசிதைகளான {ராக்ஷச மகளிரான} அவர்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தபோது, பிரியையான ஜேஷ்டபத்னி தீனமாகப் பர்த்தாவை உற்று நோக்கினாள் {ராவணனின் அன்புக்குரிய மூத்த மனைவி மண்டோதரி பரிதாபத்திற்குரியவளாகத் தன் கணவனைப் பார்த்தாள்}.(1) மந்தோதரி, சிந்தனைக்கப்பாற்பட்ட கர்மங்களைச் செய்பவனான ராமனால் கொல்லப்பட்ட தன் பதியான தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளைக் கொண்ட தன் கணவன் ராவணனைக்} கண்டு, அங்கே கிருபைக்குரிய வகையில் {பின்வருமாறு} பரிதபித்தாள்[1]:(2) "மஹோபாஹோ, வைஷ்ரவணானுஜரே {குபேரனின் தம்பியே}, புரந்தரனும் கூட குரோதம் கொண்ட உமது முன்னால் நிற்க நிச்சயம் அஞ்சுவானே.(3) உமது உத்வேகத்தால் {உம்மிடம் கொண்ட அச்சத்தால்} மஹான்களான ரிஷிகளும், புகழ்பெற்ற கந்தர்வர்களும், சாரணர்களும் திசைகளெங்கும் ஓடினார்களே.(4) 

Monday, 6 October 2025

இராவணன் மனைவியரின் புலம்பல் | யுத்த காண்டம் சர்க்கம் – 110 (26)

Lament of the wives of Ravana | Yuddha-Kanda-Sarga-110 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் சடலத்தைக் கண்டு அழுது புலம்பிய அவனது மனைவியர்...

The lament of Ravana's wives

மஹாத்மாவான ராகவனால் ராவணன் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசிகள் சோகத்தால் வேதனையடைந்து அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்தனர்[1].(1) அடிக்கடி அவர்கள் தடுக்கப்பட்டும், பூமியின் புழுதியில் புரண்டு, கேசம் அவிழ்ந்து, கன்றிழந்த பசுக்களைப் போல சோகத்தில் தவித்தனர்.(2) உத்தர துவாரத்தில் {வடக்கு வாயிலில்} ராக்ஷசர்களுடன் வெளிப்பட்டு, கோரமான போர்க்களத்திற்குள் பிரவேசித்து கொல்லப்பட்ட தங்கள் பதியை {கணவனை} அழுது கொண்டே தேடினர்.{3} "ஆரியபுத்திரரே", "ஹா, நாதரே" என்று புலம்பிக் கொண்டு, சோணிதச் சேற்றுடன் கூடியதும், கபந்தங்களால் நிறைந்ததுமான மஹீயெங்கும் {தலையற்ற உடல்களால் நிறைந்ததுமான பூமியெங்கும்} அவர்கள் திரிந்தனர்.(3,4) கண்ணீர் நிறைந்த கண்களுடன், பர்த்தாவை {கணவனைக்} குறித்த சோகத்தில் மூழ்கிய அவர்கள், யூதபன் {கூட்டத்தலைவன்} கொல்லப்பட்ட கரேணுக்களை {பெண் யானைகளைப்} போல உரக்கக் கதறினர்.(5) 

Saturday, 4 October 2025

இராவண வதம் | யுத்த காண்டம் சர்க்கம் – 108 (34)

Ravana killed | Yuddha-Kanda-Sarga-108 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனைக் கொல்ல ராமனைத் தூண்டிய மாதலி; ராவணனின் இதயத்தைத் துளைத்த பிரம்மாஸ்திரம்; தேரில் இருந்து இறந்து விழுந்த ராவணன்...

Ravana killed by Rama

அப்போது மாதலி, ராகவனுக்கு {பின்வருமாறு} நினைவூட்டினான், "வீரா, அறியாதவனைப் போல, நீ ஏன் இவனைப் பின்தொடர்கிறாய்?(1) பிரபோ, இவனை வதம் செய்ய பிதாமகனின் {பிரம்மனின்} அஸ்திரத்தை நீ ஏவுவாயாக. எது ஸுரர்களால் முன்னறிவிக்கப்பட்டதோ, அந்த விநாசகாலம் {அழிவுக்காலம்} இதோ வாய்த்திருக்கிறது" {என்றான் மாதலி}.(2)

Friday, 3 October 2025

நூறு சிரங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் – 107 (67)

Hundred heads | Yuddha-Kanda-Sarga-107 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்கும், ராவணனுக்கும் இடையில் தொடர்ந்த போர்; இராவணனின் கொடிமரத்தை வெட்டிய ராமன்; வெட்டப்பட்டதும் மீண்டும் முளைத்த ராவணனின் தலை...

Ravana's head sprounting as when it was cut

பிறகு, இராம ராவணர்கள் இருவருக்குமிடையில் சர்வ லோகங்களுக்கும் பயத்தை உண்டாக்கும் குரூரமான மஹத்தான துவைரத யுத்தம் {இரண்டு தேர்களுடன் கூடிய போர்} அங்கே நடந்தது.(1) அப்போது ராக்ஷச சைனியமும், ஹரீக்களின் மஹத்தான பலமும் {குரங்குகளின் பெரும்படையும்}, தங்கள் ஆயுதங்களைப் பற்றிக் கொண்டு அசைவற்று நின்றன.(2) பிறகு, போரில் ஈடுபடும் பலம்வாய்ந்த நரராக்ஷசர்களான அவ்விருவரையும் கண்ட யாவரும் ஹிருதயம் கலங்கி பரம ஆச்சரியத்தை அடைந்தனர்.(3) கைகளில் நானாவித ஆயுதங்களைக் கொண்ட அவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆச்சரியமடைந்த புத்தியுடன் பரஸ்பரம் மோதாதிருந்தனர்.(4) இராவணனை ராக்ஷசர்களும், ராமனை வானரங்களும் என ஆச்சரியமடைந்த பார்வையுடன் கண்ட அந்த சைனியங்கள் சித்திரம் போல் தெரிந்தன.(5) 

Thursday, 2 October 2025

நிமித்தங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் – 106 (36)

Protents | Yuddha-Kanda-Sarga-106 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தீய சகுனங்களைக் கண்ட ராவணன்; இராமனின் வெற்றியை முன்னறிவிக்கும் வகையில் தோன்றிய நற்சகுனங்கள்...

Rama on Indra's chariot with Matali as his charioteer

பகைவரின் சைனியத்தை அழிக்கக்கூடியதும், கந்தர்வ நகரத்தைப் போன்ற வடிவம் கொண்டதும், சிறந்த பதாகைகளை {கொடிகளை} வரிசையாகக் கொண்டதுமான அந்த ரதம் சாரதிக்கு மகிழ்ச்சியை அளித்தது.{1} ஹேம மாலைகளுடன் கூடிய மிகச் சிறந்த வாஜிகள் {பொன்மாலைகளுடன் கூடிய மிகச் சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதும், யுத்த உபகரணங்களால் பூரணமடைந்ததும், பதாகைகள் {கொடிகள்}, துவஜங்களால் {கொடிமரங்களால்} அலங்கரிக்கப்பட்டதும்,{2} ஆகாசத்தை விழுங்கிவிடுவதைப் போல் செல்வதும், வசுந்தரையை நாதம் செய்ய வைத்ததும் {பூமியை முழங்க வைத்ததும்}, பகைவரின் சைனியங்களை அழிக்ககூடியதும், சொந்த சைனியத்திற்கு மகிழ்ச்சி அழிப்பதுமான{3} ராவணனின் ரதத்தை சாரதி சீக்கிரமாகச் செலுத்தினான். (1-4அ)

Friday, 26 September 2025

ஆதித்ய ஹிருதயம் | யுத்த காண்டம் சர்க்கம் – 105 (31)

The heart of Athiti's son, the sun-god Surya | Yuddha-Kanda-Sarga-105 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வெற்றியை அடைவதற்கு, சூரிய தேவனைத் துதிக்கும் ஆதித்ய ஹிருதய சுலோகங்களை உரைக்கும்படி ராமனை அறிவுறுத்திய அகஸ்தியர்...

Rama and Surya

அப்போது, யுத்தத்தில் சோர்வடைந்து, சமர்க்களத்தில் சிந்தனையுடன் நின்றிருந்த ராவணனைத் தன் முன்னால் கண்டு, யுத்தத்திற்கு ஆயத்தமானான் {ராமன்}.{1}  தைவதங்களுடன் சேர்ந்து, ரணத்தை {போரைக்} காண வந்திருந்த பகவான் {வணக்கத்திற்குரிய} அகஸ்திய ரிஷி, ராமனை அணுகி {பின்வருமாறு} கூறினார்:(1,2) "வத்ஸா {குழந்தாய்}, ராமராமா {விருப்பத்திற்குரிய ராமா}, மஹாபாஹோ, சமரில் எதனால் சர்வ அரீக்களையும் அழித்து, விஜயமடைவாயோ, அந்த ஸநாதனமான குஹ்யத்தைக் கேட்பாயாக {பகைவர் அனைவரையும் அழித்து, வெற்றியை அளிக்கும் தொன்மையான ரகசியத்தைக் கேட்பாயாக}[1].(3) ஆதித்யஹ்ருதயம் புண்ணியமானது; சர்வசத்ருக்களை நாசமடையச் செய்வது; ஜயத்தை விளைவிப்பது; நித்யம் ஜபிக்க வேண்டியது; அக்ஷயமானது {வற்றாமல் தருவது}; பரமமானது {மேன்மையானது}; சிவமானது {மங்கலமானது};{4} சர்வ மங்கல மாங்கல்யமானது {மங்கலங்கள் அனைத்திலும் மங்கலமானது}; சர்வ பாபங்களையும் நாசம் செய்வது; சிந்தனை, சோகங்களை {கவலையையும், துக்கத்தையும்} போக்கவல்லது; ஆயுள் வளர்ப்பதில் உத்தமமானது.(4,5)

Thursday, 25 September 2025

மீண்டும் திரும்பிய தேர் | யுத்த காண்டம் சர்க்கம் – 104 (27)

The return of the chariot | Yuddha-Kanda-Sarga-104 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சாரதியைக் கண்டித்த ராவணன்; இராவணனை நிறைவடையச் செய்து மீண்டும் போர்க்களத்திற்குத் தேரைச் செலுத்திய சாரதி...

Ravana reproaches his charioteer

கிருதாந்த பலத்தால் {வினைப்பயனின் / விதியின் சக்தியால் தூண்டப்பட்ட} அந்த ராவணன், குரோதத்தால் நயனங்கள் {கண்கள்} சிவந்து, மோஹத்தால் சூதனிடம் {அறியாமையால் தேரோட்டியிடம் பின்வருமாறு} கூறினான்:(1) "பௌருஷமற்று {ஆண்மையற்று}, சக்தியற்று, வீரியம் குறைந்து, தேஜஸ்ஸை இழந்து, பயந்த லகுவானவனை {எளிமையானவனைப்} போலவும்,{2} மாயை கைக்கூடாமல், அஸ்திரங்களுக்கு விலக்கானவனைப் போலவும் என்னைப் புறக்கணித்துவிட்டு, துர்புத்தியைக் கொண்டவனே, உன் சொந்த புத்திக்கிணங்க நீ செயல்படுகிறாய்.(2,3) என் விருப்பத்தைப் புறக்கணித்து, சத்ருக்களின் முன் என்னை அவமதித்து, என்னுடைய இந்த ரதத்தை என்ன அர்த்தத்திற்காக அப்புறம் கொண்டு வந்தாய்?(4) அநாரியா {இழிந்தவனே}, நீண்ட காலமாக நான் ஈட்டிய புகழ், தேஜஸ் {வலிமை}, நம்பிக்கை ஆகியவை இதோ உன்னால் அழிக்கப்பட்டன.(5)

பின்வாங்கிய ராவணனின் தேர் | யுத்த காண்டம் சர்க்கம் – 103 (31)

The retreat of Ravana's chariot | Yuddha-Kanda-Sarga-103 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை அபகரித்ததற்கு ராவணனை நிந்தித்த ராமன்; கணைமழையால் குழப்பமடைந்த ராவணன்; போர்க்களத்தில் இருந்து ராவணனைக் கொண்டு சென்ற சாரதி...

Rama reproaching Ravana in battle front

சமரசிலாகியான {போரைப் போற்றுகிறவனான} அந்த ராவணன், குரோதத்துடன் கூடிய காகுத்ஸ்தனால் அதிகம் துன்புறுத்தப்பட்டபோது, மஹாகுரோதமடைந்தான்.(1) ஒளிரும் நயனங்களுடன் {கண்களுடன்} கூடிய அந்த வீரியவான் {ராவணன்}, சீற்றத்துடன் சாபத்தை {வில்லை} உயர்த்தி, பெரும்போரில் ராகவனைத் தாக்கினான்.{2} அந்த ராவணன், அம்பரத்தின் மேகத்தால் {வானத்தின் மேகத்தால் நிறைக்கப்படும்} ஒரு தடாகத்தைப் போல, ஆயிரக்கணக்கான பாணத் தாரைகளால் ராமனை மறைத்தான்.(2,3) போரில் தனுவில் இருந்து ஏவப்பட்ட சரஜாலங்களால் மறைக்கப்பட்ட காகுத்ஸ்தன் {ராமன்}, அசைக்கப்பட முடியாத மஹாகிரியை {பெரும் மலையைப்} போல கலங்காதிருந்தான்.(4) சமரில் நின்ற அந்த வீரியவான், சூரியனின் கதிர்களைப் போன்ற சரஜாலங்களைத் தன் சரங்களால் தடுத்தபடியே அவற்றைப் பொறுத்துக் கொண்டான்.(5)

Wednesday, 24 September 2025

தேர் தந்த இந்திரன் | யுத்த காண்டம் சர்க்கம் – 102 (71)

Indra sends a chariot | Yuddha-Kanda-Sarga-102 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்குத் தேரை அனுப்பிய இந்திரன்; இராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; கடுமையாகத் தாக்கப்பட்ட ராவணன்...

Rama fighting with Ravana

பகைவீரர்களை அழிப்பவனான ராகவன் {ராமன்}, லக்ஷ்மணனால் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு[1], தன் தனுவை எடுத்து {கணையைப்} பொருத்தினான்.(1) சம்மு முகத்தில் {போர்முனையில்} ராவணனை நோக்கி கோரமான சரங்களை ஏவினான். பிறகு, மற்றொரு ரதத்தில் ஏறிய ராக்ஷசாதிபன் ராவணன்,{2} பாஸ்கரனிடம் ஸ்வர்பானுவைப் போல {சூரியனை நோக்கிச் செல்லும் ராகுவைப் போல}, காகுத்ஸ்தனிடம் விரைந்து சென்றான்.(2,3அ) இரதத்தில் இருந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, மஹாசைலத்தில் தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல, வஜ்ரத்திற்கு ஒப்பான சரங்களால் ராமனைத் தாக்கினான்.(3ஆ,4அ) சமாஹிதத்துடன் {ஒருமுகப்படுத்திய மனத்துடன்} கூடிய ராமன், ஒளிரும் பாவகனை {அக்னியைப்} போலத் தெரிந்தவையும், காஞ்சன பூஷணங்களுடன் கூடியவையுமான {பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையுமான} சரங்களை ரணத்தில் {போரில்} தசக்ரீவன் மீது பொழிந்தான்.(4ஆ,5அ)

Saturday, 20 September 2025

இலக்ஷ்மணனின் வீழ்ச்சி | யுத்த காண்டம் சர்க்கம் – 100 (63)

The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கூரிய வேல் ஆயுதத்தால் லக்ஷ்மணனைத் தாக்கிய ராவணன்; ராமனும், ராவணனும் போரைத் தொடர்ந்தது; ராவணன் பயந்தோடியது...

Hanuman Rama and Lakshmana fighting against Ravana

இராக்ஷசாதிபனான ராவணன், அந்த அஸ்திரம் முறியடிக்கப்பட்டதால் குரோதமடைந்து, குரோதத்தை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து ஒரு அஸ்திரத்தை எடுத்தான்.(1) பேரொளியுடன் கூடிய ராவணன், ரௌத்திரமானதும், பயங்கரமானதும், மயனால் வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த மற்றொரு அஸ்திரத்தை ராகவன் மீது ஏவத் தொடங்கினான்.(2) பிறகு, கார்முகத்திலிருந்து {வில்லிலிருந்து} ஒளிமயமானவையும், வஜ்ரத்திற்கு நிகரானவையுமான சூலங்களும், கதைகளும், முசலங்களும் எங்கும் வெளிப்பட்டன.(3) விதவிதமான கூரிய முத்கரங்களும், கூடபாசங்களும், ஒளிரும் அசனிகளும் {இடிகளும்} யுகக்ஷயத்தில் வாதத்தைப் போல வெளிப்பட்டன {யுக முடிவில் தோன்றும் வாயுவைப் போல அந்த வில்லில் இருந்து வெளிப்பட்டன}.(4) பேரொளி கொண்டவனும், மிகச் சிறந்த உத்தம அஸ்திரங்களை அறிந்தவனுமான ஸ்ரீமான் ராகவன், கந்தர்வர்களின் பரமாஸ்திரத்தைக் கொண்டு அந்த அஸ்திரத்தை வீழ்த்தினான்.(5) 

Tuesday, 16 September 2025

இராமராவண மோதல் | யுத்த காண்டம் சர்க்கம் – 099 (51)

Fight between Rama and Ravana | Yuddha-Kanda-Sarga-099 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மிகச்சிறந்த விற்கள், பெரும் வலிமைமிக்க ஆயுதங்களுடன் கூடிய ராம ராவணர்கள் தங்களுக்குள் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்...

Ravana urging his charioteer to drive his chariot

இராக்ஷசர்களான மஹோதர, மஹாபார்ஷ்வர்கள் கொல்லப்பட்டதையும், மஹாபலவானான அந்த வீரன் விரூபாக்ஷன் கொல்லப்பட்டதையும் கண்டு,{1} பெருங்குரோதமடைந்த ராவணன், சூதனை {தேரோட்டியைத்} தூண்டிவிட்டு, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1,2) "அமாத்யர்கள் {அமைச்சர்கள்} கொல்லப்பட்டதாலும், நகரம் முற்றுகையிடப்பட்டதாலும் உண்டான துக்கத்தை ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கொல்வதன் மூலம் போக்குவேன்" {என்று தேரோட்டியிடம் சொல்லி, தேரை எடுக்கும்படி அவனைத் தூண்டிவிட்டு, ராக்ஷசப் போர்வீரர்கள் பிறரிடம்},(3) "எந்த ராம விருக்ஷத்தில் சீதா புஷ்ப பலனை {ராமன் என்ற மரத்தின் கனியான சீதை என்ற மலரை நான்} அடைவேனோ, அதில் உள்ள சாகைகளான {ராமனெனும் அந்த மரத்தின் கிளைகளான} சுக்ரீவன், ஜாம்பவான், குமுதன் ஆகியோரை ரணத்தில் வெட்டுவீராக,{4} துவிவிதன், மைந்தன் ஆகியோரையும், அங்கதன், கந்தமாதனன், ஹனுமான் ஆகியோரையும், சர்வ ஹரியூதபர்களையும் {குரங்குக் குழுத் தலைவர்கள் அனைவரையும்} அவ்வாறே செய்வீராக" {என்றான் ராவணன்}.(4,5)

Monday, 25 August 2025

இராவணன் புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் - 095 (49)

Ravana sets off to battle | Yuddha-Kanda-Sarga-095 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கோபத்தில் மூர்ச்சித்து, வானரப்படையைப் பழிவாங்கக் கட்டளையிட்டு, போர்க்களத்தில் தன் வீரத்தை வெளிப்படுத்தி ராக்ஷசர்களைப் பின்தொடரச் செய்த ராவணன்...

Ravana setout for battle

இலங்கையில் குலாகுலத்தில் {ஒவ்வொரு வீட்டிலும்} துயருற்று, பரிதாபத்திற்குரிய வகையிலும், கருணையை ஏற்படுத்தும் வகையிலும் அழுத ராக்ஷசிகளின் சப்தத்தை ராவணன் கேட்டான்.(1) தீர்க்கமாக மூச்சுவிட்டு, ஒரு முஹூர்த்தம் தியானத்தில் நிலைத்த அந்த ராவணன், பரமகுரோதத்துடன் பயங்கரத் தோற்றத்தை அடைந்தான்.(2) குரோதத்தால் கண்கள் சிவந்தவன், பற்களால் உதடுகளைக் கடித்தபடியே, ராக்ஷசர்களாலும் பார்க்கமுடியாத வகையில் காலாக்னியைப் போல மூண்டான் {குரோதத்தில் வளர்ந்தான்}.(3) இராக்ஷசேஷ்வரன், தன் சமீபத்தில் இருந்த ராக்ஷசர்களிடம் பேசினான். கண்களால் எரித்துவிடுபவனைப் போலிருந்த அவன், பயம் வெளிப்படும் குழறிய சொற்களில்,{4} மஹோதரன், மஹாபார்ஷ்வன்[1], விரூபாக்ஷன்[2] ஆகிய ராக்ஷசர்களிடம் "என் ஆணையின் பேரில் சைனியங்களை சீக்கிரம் புறப்படச் சொல்வீராக" {என்று சொன்னான் ராவணன்}[3].(4,5)

Saturday, 23 August 2025

இராக்ஷசிகளின் புலம்பல் | யுத்த காண்டம் சர்க்கம் - 094 (41)

The lament of Rakshasis | Yuddha-Kanda-Sarga-094 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரில் இறந்து போன தங்கள் மகன்கள், சகோதரர்கள், கணவர்கள் ஆகியோருக்காக அழுத ராக்ஷசிகளின் புலம்பல்...

Rakshasis crying for their deceased relatives

ஆரோஹணம் செய்தவர்களுடன் கூடிய {தங்கள் மீது ஏறியிருந்தவர்களுடன் கூடிய} அந்த ஆயிரக்கணக்கான நாகங்களுடனும், வாஜிகளுடனும் {யானைகளுடனும், குதிரைகளுடனும்}, அக்னி வர்ணங்கொண்டவையும், துவஜங்களுடன் கூடியவையுமான ஆயிரக்கணக்கான ரதங்களுடனும்,{1} கதை, பரிகங்களைக் கொண்டு போரிடுபவர்களும், சித்திரமான காஞ்சன துவஜங்களுடன் கூடியவர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்க வல்லவர்களும்}, சூரர்களுமான ஆயிரக்கணக்கான  ராக்ஷசர்களும்,{2} ராவணனால் அனுப்பி வைக்கப்பட்டவர்களும், சிரமமின்றி கர்மங்களைச் செய்யக்கூடிய ராமனின், தப்த காஞ்சன பூஷணத்துடன் கூடிய {புடம்போட்ட பொன்னால் அலங்கரிக்கப்பட்ட} கூரிய சரங்களால் கொல்லப்பட்டனர்.(1-3) 

Thursday, 21 August 2025

மூல பல யுத்தம் | யுத்த காண்டம் சர்க்கம் - 093 (39)

The battle of the primary army | Yuddha-Kanda-Sarga-093 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுடைய ஆணையின் பேரில் போர்க்களம் சென்ற ராக்ஷசப் படை; இராமனின் வலிமைமிக்க கணைகளால் அழிவை அடைந்தது...

Ravana orders the rakshasa army and a terribe war between Vanaras and Rakshasa break

தீனனும், பரம துக்கத்தில் இருந்தவனுமான அந்த ராஜா {ராவணன்}, சபைக்குள் பிரவேசித்து, சிம்ஹத்தைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே முக்கிய ஆசனத்தில் அமர்ந்தான்.(1) மஹாபலவானான அந்த ராவணன், புத்திர விசனத்தால் உண்டான  வேதனையுடன் கைகளைக் கூப்பிக் கொண்டு, அந்த சர்வ பலமுக்கியர்களிடமும் {படைத்தலைவர்களான அவர்கள் அனைவரிடமும், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(2) "சர்வ ஹஸ்த அஷ்வங்களால் {யானைகள், குதிரைகள் அனைத்தாலும்} சூழப்பட்ட, ரத சங்கங்களும், பதாதிகளுமான {தேர்ப்படையையும், காலாட்படையையும் சேர்ந்தவர்களான} நீங்கள் அனைவரும் புறப்படுவீராக.(3) இராமனைத் தனியாகச் சுற்றி வளைத்து, மழைக்காலத்து மேகங்களைப் போல, சர வர்ஷங்களை வர்ஷித்து {கணை மழைகளைப் பொழிந்து}, அவனைக் கொல்வீராக.(4) அல்லது, நான், நாளைய பெரும்போரில், உலகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் கூரிய சரங்களால் காத்திரங்கள் {கணைகளால் உடல் உறுப்புகள்} பிளக்கப்பட்ட ராமனைக் கொல்வேன்" {என்றான் ராவணன்}.(5)

Tuesday, 19 August 2025

சீதையின் பயம் | யுத்த காண்டம் சர்க்கம் - 092 (68)

The fear of Sita | Yuddha-Kanda-Sarga-092 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தின் மரணத்தால் துக்கமடைந்து, சீதையைக் கொல்லப் புறப்பட்ட ராவணன்; அந்தக் கொடுஞ்செயலைச் செய்வதிலிருந்து ராவணனை தடுத்த சுபார்ஷ்வன்...

Ravana comes to kill Sita

பௌலஸ்தியனின் {புலஸ்தியர் வழிவந்த ராவணனின்} அமைச்சர்கள், இந்திரஜித்தின் வதத்தைக் கேட்டபோது, அதை உறுதி செய்து கொண்டு தசக்ரீவனிடம் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனிடம் பின்வருமாறு} தெரிவித்தனர்:(1) "மஹாராஜாவே, பெரும் மகிமை பொருந்திய உமது மகன் {இந்திரஜித்}, யுத்தத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விபீஷணரின் சகாயத்துடன் கூடிய லக்ஷ்மணனால் கொல்லப்பட்டார்.(2) சூரரும், போர்களில் அபராஜிதரும், விபுதேந்த்ரஜித்துமான உமது புத்திரர் {போர்களில் வெல்லப்பட முடியாதவரும், தேவர்களின் தலைவனை வென்றவருமான உமது மகன் இந்திரஜித்}, சூரனான லக்ஷ்மணனுடன் போரிட்டதில் கொல்லப்பட்டார்.{3} தன் சரங்களால் லக்ஷ்மணனைத் துன்புறுத்திய அவர், பரமலோகத்தை அடைந்துவிட்டார்" {என்றனர்}.(3,4அ)

Tuesday, 8 July 2025

மகராக்ஷன் | யுத்த காண்டம் சர்க்கம் - 078 (21)

Makaraksha | Yuddha-Kanda-Sarga-078 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போர்க்களம் செல்ல மகராக்ஷனைப் பணித்த ராவணன்; மகராக்ஷன் போர்க்களம் நோக்கிச் சென்றது...

Makarasha commanding other rakshasas

நிகும்பன் ஹதம் செய்யப்பட்டதையும் {கொல்லப்பட்டதையும்}, கும்பன் வீழ்த்தப்பட்டதையும் கேட்ட ராவணன், பெரிதும் கோபமடைந்து, அனலனை {நெருப்பைப்} போல எரிந்தான்.(1) குரோதம், சோகம் ஆகிய இரண்டிலும் நீக்கமற நிறைந்த நைர்ருதன் {ராக்ஷசன் ராவணன்}, கரபுத்ரனும், விசாலாக்ஷனுமான {கரனின் மகனும், அகன்ற விழிகளைக் கொண்டவனுமான} மகராக்ஷனிடம்,(2) "புத்ரா {மகனே}, என் ஆஜ்ஞையின் {ஆணையின்} பேரில், பலத்தால் {படையால்} சூழப்பட்டவனாகச் செல்வாயாக. வனௌகசர்களுடன் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களுடன்} கூடிய ராகவன் {ராமன்}, லக்ஷ்மணன் ஆகிய இருவரையும் கொல்வாயாக" {என்றான் ராவணன்}.(3)

Tuesday, 17 June 2025

பிரம்மாஸ்திர பந்தனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 073 (75)

Bound by Brahmastra | Yuddha-Kanda-Sarga-073 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை ஆறுதல்படுத்தி, வேள்வி செய்து, புலப்படா நிலை அடைந்த இந்திரஜித்; இராமலக்ஷ்மணர்களும், வானரப் படையும் இந்திரஜித்தின் தாக்குதலில் மயக்கமடைந்தது...

Indrajit

பிறகு, கொல்லப்படாமல் எஞ்சிய ராக்ஷச கணங்கள் {ராக்ஷசக்கூட்டத்தார்}, அங்கே துரிதமாகச் சென்று, தேவாந்தகன், திரிசிரன், அதிகாயன் உள்ளிட்ட ராக்ஷசபுங்கவர்கள் கொல்லப்பட்டதைச் சொன்னார்கள்.(1) அவர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட உடனேயே ராஜா {ராவணன்}, கண்ணீர் நிறைந்த கண்களுடன் மூர்ச்சித்தான். பிறகு, கோரமான புத்திர இழப்பையும், பிராதாக்களின் வதத்தையும் {தன்னுடன் பிறந்தோர் கொல்லப்பட்டதையும்} குறித்து நீண்ட நேரம் சிந்தித்தான்[1].(2)

[1] ஏற்கனவே அதிகாயனின் மரணத்தைக் கேட்டு, அழுது புலம்பிய ராவணன், இப்போது புதிதாக அச்செய்திகளைக் கேட்பது போல் இங்கே வருகிறது. 72ம் சர்க்கத்தில் உள்ள செய்தி, செம்பதிப்பில் இல்லாததற்கான காரணம் இதுவாகத் தான் இருக்கும்.

Sunday, 13 April 2025

மயங்கி விழுந்த ராவணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 068 (24)

Ravana faints | Yuddha-Kanda-Sarga-068 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் கும்பகர்ணனைக் கொன்றானென்பதைக் கேட்டு மயங்கி விழுந்த ராவணன்; நனவு மீண்டதும், விபீஷணனின் ஆலோசனைகளைக் கேட்காததற்காக வருந்தியது...

Ravana crying

கும்பகர்ணன், மஹாத்மாவான ராகவனால் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசர்கள், ராக்ஷசேந்திரனான ராவணனிடம் {பின்வருமாறு} அறிவித்தனர்:(1) “இராஜரே, காலனுக்கு ஒப்பாக வானர சேனையை விரட்டி, வானரர்களை பக்ஷித்தவர் {கும்பகர்ணர்}, காலனின் கர்மத்தை எதிர்கொண்டார் {யமனின் செயல்பாட்டால் உண்டாகும் மரணத்தை அடைந்தார்}.(2) ஒரு முஹூர்த்தத்திற்கு தன் பிரபாவத்தைக் காட்டிவிட்டு, ராமனின் தேஜஸ்ஸில் அவர் சாந்தமடைந்தார். அவரது காயம் {உடல்} சமுத்திரத்திற்குள் பாதி பிரவேசித்த நிலையில் பயங்கரமாகத் தெரிந்தது.{3} நாசியும், காதுகளும் துண்டிக்கப்பட்டு, உதிரம் சொட்டச் சொட்ட பர்வதத்திற்கு ஒப்பான சரீரத்துடன் லங்கையின் துவாரத்தை {வாயிலை} அடைத்துக் கொண்டார்.{4} உமது பிராதாவான {உம்முடன் பிறந்தவரான} கும்பகர்ணர், காகுத்ஸ்தனின் சரத்தால் பீடிக்கப்பட்டுக் காட்டுத் தீயால் எரிக்கப்படும் மரத்தைப் போலச் சிதைந்து விகாரமான லகண்டபூதமானார் {கழுத்தும், தாடையும் அடங்கிய சதைக் குவியலானார்” என்றனர்}.(3-5)

Thursday, 20 March 2025

கும்பகர்ணன் புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் - 065 (57)

Kumbhakarna set out | Yuddha-Kanda-Sarga-065 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மஹோதரனின் திட்டங்களைக் கண்டித்து, தீய சகுனங்களைப் பொருட்படுத்தாமல் போருக்குப் புறப்பட்ட கும்பகர்ணன்; அவனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்...

Kumbhakarna Ravana Mahodhara from right to left

இவ்வாறு சொன்ன மஹோதரனை {அவ்வாறு சொல்லக்கூடாது என்று} கண்டித்த கும்பகர்ணன், தன்னுடன் பிறந்தவனும், ராக்ஷசசிரேஷ்டனுமான ராவணனிடம் {ராக்ஷசர்களில் சிறந்தவனுமான ராவணனிடம் பின்வருமாறு} பேசினான்:(1) “துராத்மாவான அந்த ராமனை வதம் செய்வதன் மூலம், கோரமான உமது பயத்தை இன்று போக்குவேன். வைரம் {பகைமை} இன்றி சுகமாக இருப்பீராக.(2) ஜலமற்ற மேகத்தைப் போல, சூரர்கள் வீணாக கர்ஜிப்பதில்லை. யுத்தத்தில் கர்மத்தை நிறைவேற்றும்போது என் கர்ஜனையைப் பார்ப்பீர்.(3) தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொள்வதில் சூரர்கள் ஈடுபடமாட்டார்கள்; அதைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். எதையும் காட்டிக் கொள்ளாமல் செய்வதற்கரிய கர்மத்தை அவர்கள் செய்வார்கள்.(4) 

Tuesday, 18 March 2025

மஹோதரன் | யுத்த காண்டம் சர்க்கம் - 064 (36)

Mahodhara | Yuddha-Kanda-Sarga-064 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரிடாமல் ராமனை வெல்வதற்கான ஓர் உத்தியை ராவணனிடம் சொன்ன மஹோதரன்...

Mahodhara Kumbhakarna Ravana

மஹோதரன்[1], அதிகாயனும், பாஹுசாலியும் {பேருடல் படைத்தவனும், பெருங்கரங்களைக் கொண்டவனும்}, பலம்வாய்ந்தவனுமான கும்பகர்ணன் சொன்ன அந்த வசனத்தைக் கேட்டு,  {பின்வருமாறு} சொன்னான்:(1) “கும்பகர்ணரே, நற்குலத்தில் பிறந்தும், சாதாரணத் தோற்றம் கொண்டவன் திமிருடன் பேசுவதைப் போலத் துடுக்காகப் பேசுகிறீர். எங்கும் செய்யப்படுவனவற்றை நீர் அறியவில்லை.(2) கும்பகர்ணரே, நியாயாநியாயங்களை ராஜர் அறியமாட்டாரா {நியாயங்களையும், அநியாயங்களையும் ராஜா ராவணர் அறியமாட்டாரா}? கேவலம் குழந்தைத்தனமான துடுக்குடன் பேச விரும்புகிறீர்[2].(3) தேசகாலங்களை {ஏற்ற இடம், நேரம் ஆகியவற்றை} அறிந்தவரான ராக்ஷசரிஷபர் {ராக்ஷசர்களில் காளை ராவணர்}, தன்னுடைய, பகைவருடைய விருத்தி {ஆதிக்கம்}, குறை, ஸ்தானங்களை {நிலை ஆகியவற்றைச் சரியாகப்} புரிந்து வைத்திருக்கிறார்.(4)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை