Showing posts with label யூபாக்ஷன். Show all posts
Showing posts with label யூபாக்ஷன். Show all posts

Wednesday, 2 July 2025

கும்ப வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 076 (95)

Kumbha killed | Yuddha-Kanda-Sarga-076 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கம்பனன், பிரஜங்கன் ஆகியோரை அங்கதனும், சோணிதாக்ஷனை துவிவிதனும், யூபாக்ஷனை மைந்தனும், கும்பனை சுக்ரீவனும் கொன்றது...

Monkey king Sugreeva grabing the bow of rakshasa Kumbha

வீரஜனங்களுக்கு அழிவைத் தந்த அந்த கோரமான போர் நடந்து கொண்டிருந்த போது, போரில் உற்சாகம் கொண்ட அங்கதன், வீரம் மிக்க கம்பனனைத் தாக்கினான்.(1) அங்கதனை {அறைகூவி} அழைத்த அந்த கம்பனன், கதையைக் கொண்டு கோபத்துடன் வேகமாகத் தாக்கினான். கடுமையாகத் தாக்கப்பட்ட அவன் {அங்கதன்} கலக்கமடைந்தான்.(2) தேஜஸ்வியான அவன் {அங்கதன்}, நனவு மீண்டு, கிரி சிகரம் ஒன்றை வீசினான். அந்த அடியால் பீடிக்கப்பட்ட கம்பனன் புவியில் விழுந்தான்.(3) 

Wednesday, 26 February 2025

கும்பகர்ண நித்திரை | யுத்த காண்டம் சர்க்கம் - 060 (97)

Slumber of Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-060 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனை எழுப்பச் சொல்லி ராக்ஷசர்களிடம் கேட்ட ராவணன்; இராட்சசர்களின் பெரும்முயற்சியால், உறக்கத்திலிருந்து எழுந்த கும்பகர்ணன்...

Kumbakarna sleeping

இராமபாணங்களால் பீடிக்கப்பட்ட அந்த ராஜா {ராவணன்}, லங்காம்புரீக்குள் பிரவேசித்த பிறகு, தன் செருக்கு பங்கமடைந்து, இந்திரியங்கள் கலங்கியவனானான்.(1) சிம்ஹத்தால் மாதங்கத்தை {யானையைப்} போலவும், கருடனால் பன்னகத்தை {பாம்பைப் போலவும்} மஹாத்மாவான ராகவனால் அந்த ராஜா சிறுமையை அடைந்தான் {வெற்றிகொள்ளப்பட்டான்}.(2) இராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவையும், பிரம்ம தண்டத்திற்கு ஒப்பானவையுமான ராகவ பாணங்களை நினைத்து வேதனையடைந்தான்.(3) 

Thursday, 11 April 2024

சேனாபதிகள் வதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 46 (39)

Generals killed | Sundara-Kanda-Sarga-46 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரில் ராவணனின் சேனாதிபதிகள் ஐவரைக் கொன்ற ஹனுமான்...

Ravana commanding his five generals

மஹாத்மாவான வானரனால் {ஹனுமனால்} மந்திரிமகன்கள் கொல்லப்பட்டதை அறிந்த ராவணன், தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு, உத்தம மதியை அமைத்துக் கொண்டான் {நல்ல தீர்மானத்திற்கு வந்தான்}.(1) சேனையின் ஐந்து முன்னணி நாயகர்களான விரூபாக்ஷன், யூபாக்ஷன், ராக்ஷசன் துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன்{2} என்ற நயவிசாரதர்களும் {உத்திகளைக் கையாள்வதில் திறம்பெற்றவர்களும்}, ஹனூமனைக் கைப்பற்றும் ஆவலுள்ளவர்களும், யுத்தத்தில் வாயுவுக்கு சமமான வேகம் கொண்டவர்களுமான அந்த வீரர்களுக்கு அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன், பின்வருமாறு} ஆணையிட்டான்:(2,3) "சேனாக்ரகர்களே {படையின் முன்னணியில் உள்ள தலைவர்களே}, நீங்கள் அனைவரும் வாஜிகள், ரதங்கள், மாதங்கங்களுடன் கூடிய மஹாபலத்தை {குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும்படையை} அழைத்துச் சென்று அந்த கபியை {குரங்கை} தண்டிப்பீராக" என்றான் {ராவணன்}.(4) 

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை