The lament of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-059 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அயோத்தியில் படிந்த சோகநிழலை விளக்கிய சுமந்திரன்; இராமனை நினைத்து அழுத தசரதன் விரைவில் மயங்கி விழுந்தது...
{சுமந்திரன் தொடர்ந்தான்},[1] "இராமன் வனத்திற்குப் புறப்பட்டதும் திரும்பி வரும்போது என்னுடைய அச்வங்கள் {குதிரைகள்} உஷ்ணமான கண்ணீர் வடித்து மேலும் நகராமல் இருந்தன.(1) அதன்பிறகு நான் அந்த ராஜபுத்திரர்கள் இருவரையும் கைக்கூப்பி வணங்கி துக்கத்தைத் தாங்கிக் கொண்டு ரதத்தில் ஏறி புறப்பட்டேன்.(2) இராமன், என்னை மீண்டும் அழைப்பான் என்ற நம்பிக்கையில், குஹனுடன் அங்கேயே பல நாட்கள் {மூன்று நாட்கள்}[2] வசித்திருந்தேன்.(3)