Saturday, 27 May 2023

இராமனைத் தேற்றிய சுக்ரீவன் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 07 (25)

Sugriva consoled Rama | Kishkindha-Kanda-Sarga-07 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை மீட்டு வருவதாக உறுதியளித்து ராமனைத் தேற்றிய சுக்ரீவன்; வாலியைக் கொல்வதாக உறுதியளித்த ராமன்...

Rama consoled by Sugreeva

இராமன் வருத்தத்துடன் {இவ்வாறு} சொன்னதும், வானரனான சுக்ரீவன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடனும், கண்ணீரால் தழுதழுக்கும் குரலுடனும் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(1) "துஷ்ட குலத்தைச் சேர்ந்தவனும், பாபியுமான அந்த ராக்ஷசனின் நிலயம் {வசிப்பிடம்}, சாமர்த்தியம், விக்கிரமம், குலம் ஆகியன எதையும் நான் அறிவேனில்லை.(2) அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். மைதிலியை எவ்வாறு மீட்க முடியுமோ அவ்வாறு யத்னம் {முயற்சி} செய்வேன். சோகத்தைக் கைவிடுவீராக.(3) இராவணனையும், அவனது கணங்களையும் {தொண்டர்களையும்} கொன்று, ஆத்ம பௌருஷத்திற்கு {என் ஆற்றலுக்கு} நிறைவளிக்கும் வகையிலும்,  நீர் மகிழ்ச்சியடையும் வகையிலும் விரைவிலேயே நான் செயல்படுவேன்[1].(4) 

கிஷ்கிந்தா காண்டம் 07ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே கிஷ்கிந்த⁴ காண்டே³ ஷஷ்ட꞉ ஸர்க³꞉

Rama consoled by Sugreeva

ஏவம் உக்த꞉ து ஸுக்³ரீவ꞉ ராமேண ஆர்தேன வானர꞉ |
அப்³ரவீத் ப்ராஞ்ஜலி꞉ வாக்யம் ஸபா³ஷ்பம் பா³ஷ்ப க³த்³க³த³꞉ || 4-7-1

ந ஜானே நிலயம் தஸ்ய ஸர்வதா² பாப ரக்ஷஸ꞉ |
ஸாமர்த்²யம் விக்ரமம் வா அபி தௌ³ஷ்குலேயஸ்ய வா குலம் || 4-7-2

ஸத்யம் து ப்ரதிஜாநாமி த்யஜ ஷோ²கம் அரிந்த³ம |
கரிஷ்யாமி ததா² யத்னம் யதா² ப்ராப்ஸ்யஸி மைதி²லீம் || 4-7-3

ராவணம் ஸக³ணம் ஹத்வா பரிதோஷ்ய ஆத்ம பௌருஷம் |
ததா² அஸ்மி கர்தா நசிராத்³ யதா² ப்ரீதோ ப⁴விஷ்யஸி || 4-7-4

அலம் வைக்லவ்யம் ஆலம்ப்³ய தை⁴ர்யம் ஆத்மக³தம் ஸ்மர |
த்வத் விதா⁴னாம் ந ஸத்³ருʼஷ²ம் ஈத்³ருʼஷ²ம் பு³த்³தி⁴ லாக⁴வம் || 4-7-5

Friday, 26 May 2023

இழைபொதிந்து இட்டனள் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 06 (27)

She dropped the ornament pack down | Kishkindha-Kanda-Sarga-06 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை ராவணன் அபகரித்தது குறித்துச் சொல்லி, சீதை வீசியெறிந்த மேலாடையையும், ஆபரணங்களையும் காட்டிய சுக்ரீவன்; அவற்றை அடையாளங்கண்டு அழுத ராமன்...

Rama seeing Sitas jewellery presented by Sugreeva

பிரீதியுடன் கூடிய சுக்ரீவன், மீண்டும் ரகுநந்தனனான ராகவனிடம் {பின்வருமாறு} பேசினான், "இராமரே, நீரும், உம்முடன் பிறந்த லக்ஷ்மணரும், எதன் நிமித்தம் ஜனங்களற்ற வனத்திற்கு வந்தீர்கள் என்பதை, உமது சேவகனும், என் மந்திரிசத்தமனும் {சிறந்த மந்திரியுமான} இந்த ஹனுமான் சொன்னான். வனத்தில் வசித்து வருகையில், உமது பாரியையின் {மனைவியான சீதையின்} அருகில் நீரும், மதிமிக்கவரான லக்ஷ்மணரும் இல்லாதபோது, அழுது கொண்டிருந்தவளும், ஜனகாத்மஜையுமான மைதிலியை ஒரு ராக்ஷசன் அபகரித்தான்.(1-3) அவன் {ராக்ஷசன்}, சரியான நேரத்திற்காகக் காத்திருந்து, கிருத்ரனான {கழுகான} ஜடாயுவைக் கொன்றான். பாரியையை {மனைவியான சீதையை உம்மிடமிருந்து} பிரித்து, அந்த ராக்ஷசன் உம்மை துக்கமடையச் செய்தான்.(4) 

கிஷ்கிந்தா காண்டம் 06ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே கிஷ்கிந்த⁴ காண்டே³ ஷஷ்ட꞉ ஸர்க³꞉

Rama seeing Sitas jewellery presented by Sugreeva

புனரேவ அப்³ரவீத் ப்ரீத꞉ ராக⁴வம் ரகு⁴நந்த³னம் |
அயம் ஆக்²யாதி தே ராம ஸேவக꞉ மந்த்ரி ஸத்தம꞉ || 4-6-1

ஹனுமான் யன் நிமித்தம் த்வம் நிர்ஜனம் வனம் ஆக³த꞉ |
லக்ஷ்மணேன ஸஹ ப்⁴ராத்ரா வஸத꞉ ச வனே தவ ||4-6-2

ரக்ஷஸா அபஹ்ருʼதா பா⁴ர்யா மைதி²லீ ஜனக ஆத்மஜா |
த்வயா வியுக்தா ருத³தீ லக்ஷ்மணேன ச தீ⁴மதா || 4-6-3

அந்தரம் ப்ரேப்ஸுனா தேன ஹத்வா க்³ருʼத்⁴ரம் ஜடாயுஷம் |
பா⁴ர்யா வியோக³ஜம் து³꞉க²ம் ப்ராபித꞉ தேன ரக்ஷ்ஸா || 4-6-4

ப⁴ர்யா வியோக³ஜம் து³꞉க²ம் ந சிராத் த்வம் விமோக்ஷ்யஸே |
அஹம் தாம் ஆனயிஷ்யாமி நஷ்டாம் வேத³ஷ்²ருதீம் இவ || 4-6-5

Thursday, 25 May 2023

நட்பு | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 05 (31)

Friendship | Kishkindha-Kanda-Sarga-05 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனும், லக்ஷ்மணனும் சுக்ரீவனைச் சந்தித்து நட்பை ஏற்படுத்திக் கொள்வது; வாலியின் அதர்மத்தைச் சொன்ன சுக்ரீவன்; இராமன் உதவி செய்வதாக உறுதி அளித்தது...

Pact of friendship between Rama and Sugreeva

ஹனுமான், ரிச்யமூகத்திலிருந்து அந்த மலய கிரிக்குச் சென்று[1], கபி ராஜனிடம் {குரங்கு மன்னன் சுக்ரீவனிடம்} வீரர்களான ராகவர்களைப் பற்றி {பின்வருமாறு} கூறினான்:(1) "மஹாபிராஜ்ஞரே {பெரும் பகுத்தறிவாளரே}, இவர் ராமர். திட விக்கிரமரே {உறுதியும், வீரமும் கொண்டவரே}, உடன்பிறந்த லக்ஷ்மணனுடன், சத்திய விக்கிரமரான இந்த ராமர் வந்திருக்கிறார்.(2) இக்ஷ்வாகுக்களின் குலத்தில் பிறந்தவரும், தசரதாத்மஜருமான இத்தகைய ராமர், பிதாவின் ஆணைகளைப் பின்பற்றி தர்மத்தில் வல்லவராகத் திகழ்கிறார்.(3)

கிஷ்கிந்தா காண்டம் 05ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே கிஷ்கிந்த⁴ காண்டே³ பஞ்சம꞉ ஸர்க³꞉

Pact of friendship between Rama and Sugreeva

ருʼஷ்²யமூகாத் து ஹனுமான் க³த்வா தம் மலயம் கி³ரிம் |
ஆசசக்ஷே ததா³ வீரௌ கபி ராஜாய ராக⁴வௌ || 4-5-1

அயம் ராமோ மஹாப்ராஜ்ஞ ஸம்ப்ராப்தோ த்³ருʼட⁴ விக்ரம꞉ |
லக்ஷ்மணேன ஸஹ ப்⁴ராத்ரா ராமோ(அ)யம் ஸத்ய விக்ரம꞉ || 4-5-2

இக்ஷ்வாகூணாம் குலே ஜாதோ ராமோ த³ஷ²ரதா²த்மஜ꞉ |
த⁴ர்மே நிக³தி³த꞉ ச ஏவ பிதுர் நிர்தே³ஷ² காரக꞉ || 4-5-3

ராஜஸூய அஷ்²வமேதை⁴꞉ ச வஹ்னி꞉ யேன அபி⁴தர்பித꞉ |
த³க்ஷிணா꞉ ச ததா² உத்ஸ்ருʼஷ்டா கா³வ꞉ ஷ²த ஸஹஸ்ரஷ²꞉ || 4-5-4

தபஸா ஸத்ய வாக்யேன வஸுதா⁴ யேன பாலிதா |
ஸ்த்ரீ ஹேதோ꞉ தஸ்ய புத்ரோ(அ)யம் ராம꞉ அரணயம் ஸமாக³த꞉ || 4-5-5

Tuesday, 23 May 2023

காரணமென்ன? | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 04 (35)

What is the reason? | Kishkindha-Kanda-Sarga-04 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரிச்யமூகத்திற்குத் தாங்கள் வந்த நோக்கத்தை ஹனுமானிடம் சொன்ன லக்ஷ்மணன்; இராமனையும், லக்ஷ்மணனையும் சுக்ரீவன் இருக்கும் இடத்திற்குச் சுமந்து சென்ற ஹனுமான்...

Hanuman carries Rama and Lakshmana to Sugreeva

கடமையைச் செய்பவனான ஹனுமான், {லக்ஷ்மணனால்} இவ்வாறு சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு, {அந்தப் பேச்சின்} மதுர பாவத்தால் மகிழ்ச்சியடைந்து, மனத்தால் சுக்ரீவனை அடைந்தான் {சுக்ரீவனை நினைத்துப் பார்த்தான்}:(1) "கடமையைச் செய்பவரான இவர் {ராமர்} வந்திருப்பதாலும், இந்தக் காரியம் வேண்டி வந்திருப்பதாலும், மஹாத்மாவான அந்த சுக்ரீவர் ராஜ்ஜியத்தை அடையக்கூடும்" {என்று நினைத்தான் ஹனுமான்}.(2)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்