Friday 18 October 2024

முதல் மோதல் | யுத்த காண்டம் சர்க்கம் - 042 (48)

First encounter | Yuddha-Kanda-Sarga-042 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையின் வடக்கு வாயிலில் நிலை கொண்ட ராமலக்ஷ்மணர்கள்; தன் படையைத் திரட்டிய ராவணன்; இராட்ச வானரப் படைகளுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல்...

War between Rakshasas and Vanaras

பிறகு, ராவணமந்திரத்திற்கு {ராவணனின் ஆலோசனை மண்டபத்திற்குச்} சென்ற அந்த ராக்ஷசர்கள், புரீயை {தங்கள் நகரத்தை} ராமனும், வானரர்களும் முற்றுகையிட்டிருப்பதைத் தெரிவித்தனர்.(1) நகரம் முற்றுகையிடப்பட்டதைக் கேட்டுப் பெருங்கோபமடைந்த நிசாசரன் {இரவுலாவியான ராவணன்}, பாதுகாப்பை இரண்டு மடங்காக்கிவிட்டு பிராசாதத்தின் {மதிலின்} மேல் ஏறி நின்றான்.(2) அவன், யுத்தத்தை விரும்புகிறவர்களும், எண்ணற்றவர்களுமான ஹரிகணங்களால் {குரங்குக் கூட்டத்தினரால்} சைலங்கள், வனங்கள் நிறைந்த லங்கை முழுவதும் முற்றுகையிடப்பட்டிருப்பதைக் கண்டான்.(3) அவன், வசுதை எங்கும் வானரர்கள் நிறைந்திருப்பதைக் கண்டு, அவர்களை எப்படி அழிப்பது என்ற எண்ணத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(4) நீண்ட நேரம் சிந்தித்த அந்த ராவணன், தைரியத்தைத் திரட்டிக் கொண்டு, ஆலோசனையை வெளிப்படுத்தும் கண்களுடன் ராகவனையும், ஹரியூதபர்களையும் {குரங்குக் குழுத் தலைவர்களையும்} கண்டான்.(5)

யுத்த காண்டம் 042ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³விசத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

War between Rakshasas and Vanaras

ததஸ் தே ராக்ஷஸாஸ் தத்ர க³த்வா ராவண மந்தி³ரம் |
ந்யவேத³யன் புரீம் ருத்³தா⁴ம் ராமேண ஸஹ வானரை꞉ || 6-42-1

ருத்³தா⁴ம் து நக³ரீம் ஃஜ்ருத்வா ஜாத க்ரோதோ⁴ நிஃஜா சர꞉ |
விதா⁴னம் த்³விகு³ணம் ஃஜ்ருத்வா ப்ராஸாத³ம் ஸோ அத்⁴யரோஹத || 6-42-2

ஸ த³த³ர்ஃஜ ஆவ்ருதாம் லன்காம் ஸஃஜைல வன கானனாம் |
அஸம்க்²யேயைர் ஹரி க³ணை꞉ ஸர்வதோ யுத்³த⁴ கான்க்ஷிபி⁴꞉ || 6-42-3

ஸ த்³ருஷ்ட்வா வானரைஹ் ஸர்வாம் வஸுதா⁴ம் கவலீ க்ருதாம் |
கத²ம் க்ஷபயிதவ்யாஹ் ஸ்யுர் இதி சிந்தா பரோ அப⁴வத் || 6-42-4

ஸ சிந்தயித்வா ஸுசிரம் தை⁴ர்யம் ஆலம்ப்³ய ராவண꞉ |
ராக⁴வம் ஹரி யூதா²ம்ஃஜ் ச த³த³ர்ஃஜ ஆயத லோசன꞉ || 6-42-5

Thursday 10 October 2024

அங்கதன் தூது | யுத்த காண்டம் சர்க்கம் - 041 (100)

Angada sent as a messenger | Yuddha-Kanda-Sarga-041 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் செயலைக் கண்டித்த ராமன்; தூதனுப்பப்பட்ட அங்கதன்; அவனைக் கைப்பற்ற ஆணையிட்ட ராவணன்; கோபுரத்தைச் சிதைத்து ராமனிடம் திரும்பிய அங்கதன்...

Angada and Ravana

அப்போது லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, சுக்ரீவனிடம் நிமித்தங்களை {போரில் ஏற்பட்ட அடையாளங்களைக்} கண்டு, அவனைத் தழுவிக் கொண்டு இந்த வசனத்தைச் சொன்னான்:(1) "என்னுடன் ஆலோசிக்காமல் இத்தகைய அந்த சாகசத்தைச் செய்திருக்கிறாய். ஜனேஷ்வரர்கள் {மக்கள் தலைவர்கள்} இவ்வாறான சாகசங்களைச் செய்ய மாட்டார்கள்.(2) சாகசப்பிரியா, வீரா, என்னையும், இந்தப் படையையும், விபீஷணனையும் சந்தேகத்தில் நிறுத்திவிட்டு, கஷ்டமான இந்த சாகசத்தைச் செய்திருக்கிறாய்.(3) அரிந்தமா {பகைவரைக் கொல்பவனே}, வீரா, இனிமேல் இவ்விதமாகச் செயல்படாதே. மஹாபாஹுவே, சத்ருக்னா {பகைவரை அழிப்பவனே}, உனக்குக் கொஞ்சம் கெடுதி விளைந்தாலும்,[1] எனக்கு, சீதையாலோ, பரதனாலோ, லக்ஷ்மணனாலோ, சத்ருக்னனாலோ, ஏன் என் சரீரத்தினாலோகூட ஆகப் போகும் காரியம் என்ன?(4,5) மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் சமமானவனே, உன் வீரியத்தை நான் அறிந்தவனாக இருந்தும், பூர்வத்தில் நீ வராதபோது என் மதியில் நான் ஒன்றை நிச்சயித்துக் கொண்டேன்.{6} யுத்தத்தில் புத்திரர்கள், படை, வாஹனங்களுடன் கூடிய ராவணனைக் கொன்று, லங்கையில் விபீஷணனை அபிஷேகித்து,{7} பரதனிடம் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டு என் தேஹத்தைக் கைவிடுவேன் {என்று என் மனத்தில் நிச்சயம் செய்து கொண்டேன்" என்றான் ராமன்}.(6-8அ)

யுத்த காண்டம் 041ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகசத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

Angada and Ravana

அத² தஸ்மின் நிமித்தானி த்³ருஷ்ட்வா லக்ஷ்மண பூர்வஜ꞉ |
ஸுக்³ரீவம் ஸம்பரிஷ்வஜ்ய ராமோ வசனமப்³ரவீத் || 6-41-1

அஸம்மந்த்ய்ர மயா ஸார்த²ம் ததி³த³ம் ஸாஹஸம் க்ருதம் |
ஏவம் ஸாஹஸயுக்தானி ந குர்வந்தி ஜனேஷ்²வரா꞉ || 6-41-2

ஸம்ஷ²யே ஸ்தா²ப்ய மாம் சேத³ம் ப³லம் சேமம் விபீ⁴ஷனம் |
கஷ்டம் க்ருதமித³ம் வீர ஸாஹஸம் ஸாஹஸப்ரிய || 6-41-3

இதா³னீம் மா க்ருதா² வீர ஏவம் வித⁴மரிந்த³ம |
த்வயி கிஞ்சித்ஸமாபன்னே கிம் கார்யம் ஸீதயா மம || 6-41-4
ப⁴ரதேன மஹாபா³ஹோ லக்ஷ்மணேன யவீயஸா |
ஷ²த்ருக்⁴னேன ச ஷ²த்ருக்⁴ன ஸ்வஷ²ரீரேண வா புன꞉ || 6-41-5

த்வயி சாநாக³தே பூர்வமிதி மே நிஷ்²சிதா மதி꞉ |
ஜானதஷ்²சாபி தே வீர்யம் மஹேந்த்³ரவருணோபனு || 6-41-6
ஹத்வாஹம் ராவணம் ராவணம் யுத்³தே⁴ ஸபுத்ரப³லவாஹன்ம் |
அபி⁴ஷிச்ய ச லங்காயாம் விபீ⁴ஷண மதா²பி ச || 6-41-7
ப⁴ரதே ராஜ்யமாரோப்ய த்யக்ஷ்யே தே³ஹம் மஹாப³ல |

தமேவம்வாதி³னம் ராமம் ஸுக்³ரீவ꞉ ப்ரத்யபா⁴ஷத || 6-41-8
தவ பா⁴ர்யாபஹர்தாரம் த்³ருஷ்ட்வா ராக⁴வ ராவணம் |
மர்ஷயாமி கத²ம் வீர ஜானன்விக்ரமமாத்மன꞉ || 6-41-9

இத்யேவம்வாதி³னம் வீரமபி⁴னந்த்³ய ச ராக⁴வ꞉ |
லக்ஷ்மணம் லக்ஷ்மி ஸம்பன்னம் இத³ம் வசனம் அப்³ரவீத் || 6-41-10

பரிக்³ருஹ்ய உத³கம் ஷீ²தம் வனானி ப²லவந்தி ச |
ப³ல ஓக⁴ம் ஸம்விப⁴ஜ்ய இமம் வ்யூஹ்ய திஷ்டே²ம லக்ஷ்மண || 6-41-11

லோக க்ஷய கரம் பீ⁴மம் ப⁴யம் பஷ்²யாம்ய் உபஸ்தி²தம் |
நிப³ர்ஹணம் ப்ரவீராணாம் ருக்ஷ வானர ரக்ஷஸாம் || 6-41-12

வாதாஷ்² ச பருஷம் வாந்தி கம்பதே ச வஸும் த⁴ரா |
பர்வத அக்³ராணி வேபந்தே பதந்தி த⁴ரணீ த⁴ரா꞉ || 6-41-13

மேகா⁴꞉ க்ரவ்யாத³ ஸம்காஷா²ஹ் பருஷாஹ் பருஷ ஸ்வனா꞉ |
க்ரூராஹ் க்ரூரம் ப்ரவர்ஷந்தி மிஷ்²ரம் ஷோ²ணித பி³ந்து³பி⁴꞉ || 6-41-14

ரக்த சந்த³ன ஸம்காஷா² ஸந்த்⁴யா பரம தா³ருணா |
ஜ்வலச் ச நிபதத்ய் ஏதத்³ ஆதி³த்யாத்³ அக்³னி மண்ட³லம் || 6-41-15

Wednesday 9 October 2024

மகுட பங்கம் | யுத்த காண்டம் சர்க்கம் - 040 (30)

Breaking the crown | Yuddha-Kanda-Sarga-040 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அரண்மனையின் உச்சியில் ராவணன் நிற்பதைக் கண்ட ராமன்; மலையில் இருந்து ராவணனிடம் குதித்து, அவனுடன் போரிட்டு, வெற்றிகரமாகத் திரும்பி வந்த சுக்ரீவன்...

Sugreeva topples the crown of Ravana


பிறகு, ஹரியூதபர்களால் {குரங்குக்குழுத் தலைவர்களால்} சூழப்பட்டவனும், சுக்ரீவனுடன் கூடியவனுமான ராமன், இரண்டு யோஜனை மண்டலம் {விட்டம்} கொண்ட சுவேலத்தின் {சுவேல மலையின்} உச்சியின் மேல் ஏறினான்[1].(1) ஒரு முஹூர்த்தம் அங்கேயே நின்று பத்து திசைகளையும் கண்டு, ரம்மியமான திரிகூட சிகரத்தில் விஷ்வகர்மனால் வலுவாக நிர்மிக்கப்பட்டதும் {கட்டப்பட்டதும்},{2} ரம்மியமான கானகங்களுடன் கூடியதுமான லங்கையைக் கண்டான்.(2,3அ)

யுத்த காண்டம் 040ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ சத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

Sugreeva topples the crown of Ravana

ததோ ராம꞉ ஸுவேலாக்³ரம் யோஜனத்³வயமண்ட³லம் |
உபாரோஹத்ஸஸுக்³ரீவோ ஹரியூதை²꞉ ஸமன்வித꞉ || 6-40-1

ஸ்தி²த்வா முஹூர்தம் தத்ரைவ தி³ஷோ² த³ஷ² விளோகயன் |
த்ரிஃகூ²டஷி²க²ரே ரம்யே நிர்மிதாம் விஷ்²வகர்மணா || 6-40-2
த³த³ர்ஷ² லங்காம் ஸுன்யஸ்தாம் ரம்யகானனஷோ²பி⁴தாம் |

தஸ்யாம் கோ³புரஷ்²ருங்க³ஸ்த²ம் ராக்ஷஸேந்த்³ரம் து³ராஸத³ம் || 6-40-3
ஷ்²வேதசாமரபர்யந்தம் விஜயச்சத்ரஷோ²பி⁴தம் |
ரக்தசந்த³னஸம்லிப்தம் ரக்தாப⁴ரணபூ⁴ஷிதம் || 6-40-4
வீலஜீமூதஸங்காஷ²ம் ஹேமஸஞ்சாதி³தாம்ப³ரம் |
ஐராவதவிஷாணாக்³ரைருத்க்ருஷ்டகிணவக்ஷஸம் || 6-40-5
ஷ²ஷ²லோஹிதராகே³ண ஸம்வீதம் ரக்தவாஸஸா |
ஸந்த்⁴யாதபேன ஸஞ்சன்னம் மேக⁴ராஷி²மிவாம்ப³ரே || 6-40-6

Saturday 5 October 2024

அழகிய லங்கை | யுத்த காண்டம் சர்க்கம் - 039 (29)

Beautiful Lanka | Yuddha-Kanda-Sarga-039 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரவில், சுவேல மலையின் உச்சியில் இருந்து லங்கையின் காடுகள், அழகிய தோட்டங்கள், பூங்காக்கள், அரண்மனைகள் ஆகியவற்றைக் கண்டது...

Rama seeing Lankapuri in the peak of Trikuta mountain from Suvela Mountain


வீர ஹரிபுங்கவர்கள் {குரங்குகளில் முதன்மையானவர்கள்}, அங்கே சுவேலத்தில் அந்த ராத்திரியில் விழித்திருந்து லங்கையின் வனங்களையும், உபவனங்களையும் கண்டனர்.(1) சமமான நிலப்பரப்பு, விசாலமாகவும், ரம்மியமாகவும், நீண்டு தொடரும் சரணாலயமாகவும் கண்களுக்கு விருந்தளிப்பதைக் கண்டு அவர்கள் வியப்படைந்தனர்.(2) சம்பகம் {செண்பகம்}, அசோகம், புன்னாகம் {புன்னை}, சாலம் {ஆச்சா / மராமரம்}, தாலம் {பனை} ஆகியவற்றால் நிறைந்ததும், தமால {பச்சிலை மர} வனங்களால் மறைக்கப்பட்டதும், நாகமாலை {நாகேசர} மரங்களால் சூழப்பட்டதும்,{3} ஹிந்தாலம் {சீதாள மரம்}, அர்ஜுனம் {மருத மரம்}, முழுமையாகப் புஷ்பித்த நீபம் {கடம்பு}, சப்தபர்ணம் {ஏழிலைப்பாலை}, திலகம் {மஞ்சாடி}, கர்ணிகாரம் {கோங்கு / சரக்கொன்றை}, பாடலம் {பாதிரி} ஆகியவற்றுடன் கூடியதும்,{4}  நுனிகள் புஷ்பித்த, கொடிகள் படர்ந்த, திவ்யமான, பலவிதமான மரங்களுடனும் கூடிய லங்கை இந்திரனின் அமராவதியைப் போலிருந்தது.{5} விசித்திர மலர்களும், சிவந்த இளந்தளிர்களும் நிறைந்த மரங்களுடனும், நீல வண்ணமிக்க பசும்புல் தரையுடனும் அது {லங்கை} ஒளிர்ந்து கொண்டிருந்தது.(3-6)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை