Sunday, 19 January 2025

அகம்பன வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 056 (39)

Akampana killed | Yuddha-Kanda-Sarga-056 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அகம்பனனுக்கும், ஹனுமானுக்கும் இடையில் நடந்த பெரும்போர்; அகம்பனனைக் கொன்ற ஹனுமான்...

Hanuman killing Akampana

அகம்பனன், யுத்தத்தில் வானரசத்தமர்களால் {வலிமைமிக்க வானரர்களால்} செய்யப்பட்ட அந்த மஹத்தான கர்மத்தைக் கண்டு, தீவிரமான கோபத்தால் பீடிக்கப்பட்டான்.(1) சத்ருக்களின் கர்மத்தைக் கண்டு, குரோதத்தில் மூர்ச்சித்த ரூபத்துடன், தன் பரம கார்முகத்தை {கோபத்தில் மெய்மறந்த வடிவத்துடன், தன் பெரும் வில்லை} அசைத்தபடி சாரதியிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(2) “சாரதியே, பலவான்களான இவர்கள், ரணத்தில் {வானரர்கள், போரில்} ஏராளமான ராக்ஷசர்களைக் கொல்வதெங்கேயோ, அங்கே ரதத்தைத் துரிதமாகச் செலுத்துவாயாக.(3) பலவான்களும், பயங்கரக் கோபம் கொண்டவர்களுமான இந்த வானரர்கள், மரங்கள், சைலங்கள் {மலைகள்}, ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டு, அதோ என் முன் நிற்கின்றனர்.(4) சமரில் சிலாகித்துக் கொள்ளும் {தற்புகழ்ச்சி செய்யும்} இவர்களைக் கொல்ல நான் இச்சிக்கிறேன். இவர்கள் சர்வ ராக்ஷச பலத்தையும் {படையையும்} சிதைப்பதாகத் தெரிகிறது” {என்றான் அகம்பனன்}.(5)

யுத்த காண்டம் 056ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்பஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

Hanuman killing Akampana
தத்³ த்³ருஷ்ட்வா ஸுமஹத் கர்ம க்ருதம் வானர ஸத்தமை꞉ |
க்ரோத⁴ம் ஆஹாரயாம் ஆஸ யுதி⁴ தீவ்ரம் அகம்பன꞉ || 6-56-1

க்ரோத⁴ மூர்சித ரூபஸ் து த்⁴னுவன் பரம கார்முகம் |
த்³ருஷ்ட்வா து கர்ம ஷ²த்ரூணாம் ஸாரதி²ம் வாக்யம் அப்³ரவீத் || 6-56-2

தத்ர ஏவ தாவத் த்வரிதம் ரத²ம் ப்ராபய ஸாரதே² |
ஏதே அத்ர ப³ஹவோ க்⁴னந்தி ஸுப³ஹூன் ராக்ஷஸான் ரணே || 6-56-3

ஏதே அத்ர ப³லவந்தோ ஹி பீ⁴ம காயாஷ்² ச வானரா꞉ |
த்³ரும ஷை²ல ப்ரஹரணாஸ் திஷ்ட²ந்தி ப்ரமுகே² மம || 6-56-4

ஏதான் நிஹந்தும் இச்சாமி ஸமர ஷ்²லாகி⁴னோ ஹ்ய் அஹம் |
ஏதை꞉ ப்ரமதி²தம் ஸர்வம் த்³ருஷ்²யதே ராக்ஷஸம் ப³லம் || 6-56-5

Wednesday, 1 January 2025

மீண்டும் அகம்பனன் | யுத்த காண்டம் சர்க்கம் - 055 (32)

Akampana again | Yuddha-Kanda-Sarga-055 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரிடச் செல்லுமாறு அகம்பனனிடம் சொன்ன ராவணன்; தீய சகுனங்களைக் கண்டும் கலங்காமல் போரிடச் சென்ற அகம்பனன்...

A war between Vanaras and Rakshasas

வஜ்ரதம்ஷ்ட்ரன் வாலிபுத்திரனால் {அங்கதனால்} கொல்லப்பட்டதைக் கேட்ட ராக்ஷசேஷ்வரன் ராவணன், {தன் அருகில்} கைகளைக் கூப்பி நின்றிருந்த பலாதியக்ஷனிடம் {படைத் தலைவனிடம்} இதைச் சொன்னான்:(1) “வெல்லப்பட முடியாத பீமவிக்கிரமர்களான ராக்ஷசர்கள், சர்வ சஸ்திர, அஸ்திர கோவிதரான அகம்பனரை[1] முன்னிட்டுக் கொண்டு சீக்கிரம் புறப்பட்டுச் செல்லட்டும்.(2) யுத்தத்தில் சாஸ்தரும், கோப்தரும், நேதாவுமான இந்த சத்தமர் {போரில் தண்டிப்பவரும், பாதுகாக்கிறவரும், தலைவரும், ஆளுமைகளில் சிறந்தவருமான இந்த அகம்பனர்}, நித்யம் எனக்கு நன்மையை விரும்புகிறவர்; நித்யம் சமரில் {போரில்} பிரியங் கொண்டவர்.(3) இவர் காகுத்ஸ்தர்கள் {ராமலக்ஷ்மணர்கள்}, மஹாபலம் பொருந்திய சுக்ரீவன் ஆகியோரை வென்று,  கோரமான வானரர்கள் பிறரையும் கொல்வார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை” {என்றான் ராவணன்}.(4)

யுத்த காண்டம் 055ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ பஞ்சபஞ்சஷ²꞉ ஸர்க³꞉

A war between Vanaras and Rakshasas

வஜ்ரத³ம்ர அக்ஷம் நிஹதம் ஷ்²ருத்வா ராவணோ ராக்ஷஸ ஈஷ்²வர꞉ |
ப³ல அத்⁴யக்ஷம் உவாச இத³ம் க்ருத அன்ஜலிம் உபஸ்தி²தம் || 6-55-1

ஷீ²க்⁴ரம் நிர்யாந்து து³ர்த⁴ர்ஷா ராக்ஷஸா பீ⁴ம விக்ரமா꞉ |
அகம்பனம் புரஸ் க்ருத்ய ஸர்வ ஷ²ஸ்த்ர ப்ரகோவித³ம் || 6-55-2

ஏஷ ஷா²ஸ்தா ச கோ³ப்தா ச நேதா ச யுதி⁴ ஸத்தம꞉ |
பூ⁴திகாமஷ்²ச மே நித்யம் நித்யம் ச ஸமரப்ரிய꞉ || 6-55-3

ஏஷ ஜேஷ்யதி காகத்த்²ஸௌ ஸுக்³ரீவம் ச மஹாப³லம் |
வானராம்ஷ்²சாபரான் கோ⁴ரான் ஹநிஷ்யதி ந ஸம்ஷ²ய꞉ || 6-55-4

பரிக்³ருஹ்ய ஸ தாமாஜ்ஞாம் ராவணஸ்ய மஹாப³ல꞉ |
ப³லம் ஸம்ப்ரேரயாமாஸ ததா³ லகு⁴பராக்ரம꞉ || 6-55-5

Tuesday, 31 December 2024

வஜ்ரதம்ஷ்ட்ர வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 054 (38)

Vajradamshtra killed | Yuddha-Kanda-Sarga-054 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வஜ்ரதம்ஷ்டிரனுடன் போரிட்டு வாளால் அவனது தலையை வெட்டிக் கொன்ற அங்கதன்...

Fight between Angadha and Vajradamshtra

மஹாபலவானான ராக்ஷசன் வஜ்ரதம்ஷ்ட்ரன், தன் பலத்தின் {படையின்} அழிவாலும், அங்கதனின் வெற்றியாலும் குரோதம் அடைந்தான்.(1) அவன், சக்ரனின் அசனியை {இந்திரனின் இடியைப் போல} ஒலிக்கும் கோரமான தன் தனுவை {பயங்கரமான வில்லை} வளைத்து, வானரர்களின் அனீகத்தை {படையை} சரமாரியால் {கணைமழையால்} சிதறடித்தான்.(2) அப்போது, முக்கியர்களும், சூரர்களுமான அந்த ராக்ஷசர்கள், ரதங்களில் அமர்ந்து, நானாவித ஆயுதங்களை ஏந்தியபடியே ரணத்தில் {போர்க்களத்தில்} யுத்தம் புரிந்தனர்.(3) வானரர்களில் சூரர்களான அந்த சர்வ பிலவக உத்தமர்களும், அப்போது பாறைகளைக் கைகளில் ஏந்தியபடியே அனைத்துப் பக்கங்களிலும் ஒன்று கூடியவர்களாக யுத்தம் புரிந்தனர்.(4)

யுத்த காண்டம் 054ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ சது꞉பசாஷ²꞉ ஸர்க³꞉

Fight between Angadha and Vajradamshtra

ஸ்வப³லஸ்ய ச கா⁴தேன அங்க³த³ஸ்ய ப³லேன ச |
ராஷஸ꞉ க்ரோத⁴மாவிஷ்டோ வஜ்ரத³ம்ஷ்ட்ரோ மஹாப³ல꞉ || 6-54-1

விஸ்பா²ர்ய ச த⁴னுர்கோ⁴ரம் ஷ²க்ராஷ²நிஸமப்ரப⁴ம் |
வானராணாமனீகானி ப்ராகிரச்ச²ரவ்ருஷ்டிபி⁴꞉ || 6-54-2

ராக்ஷஸாஷ்²சாபி முக்²யாஸ்தே ரதை²ஷ்²ச ஸமவஸ்தி²தா꞉ |
நானாப்ரஹரணா꞉ ஷூ²ரா꞉ ப்ராயுத்⁴யந்த ததா³ ரணே || 6-54-3

வானராணாம் ச ஷூ²ராஸ்து தே ஸர்வே ப்லவக³ர்ஷபா⁴꞉ |
ஆயுத்⁴யந்த ஷி²லாஹஸ்த꞉ ஸமவேதா꞉ ஸமந்தத꞉ || 6-54-4

தத்ராயுத⁴ஸஹஸ்ராணி தஸ்மின்னாயோத⁴னே ப்⁴ருஷ²ம் |
ராக்ஷஸா꞉ கபிமுக்²யேஷு பாதயாஞ்சக்ரிரே ததா³ || 6-54-5

Saturday, 28 December 2024

வஜ்ரதம்ஷ்டிரன் | யுத்த காண்டம் சர்க்கம் - 053 (33)

Vajradamshtra | Yuddha-Kanda-Sarga-053 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போருக்கு வஜ்ரதம்ஷ்டிரனை அனுப்பிய ராவணன்; வானரர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் இடையில் நடந்த கடும்போர்...

Vajradamshtra marching for war

இராக்ஷசேஷ்வரன் ராவணன், தூம்ராக்ஷன் ஹதம் செய்யப்பட்டதை {கொல்லப்பட்டதைக்} கேட்டு உரகத்தை {பாம்பைப்} போலப் பெருமூச்சு விட்டு மஹா குரோதத்தில் ஆழ்ந்தான்.{1} தீர்க்கமாகவும், உஷ்ணமாகவும் பெருமூச்சுவிட்டுக் குரோதத்தில் மதிமயங்கிய அவன் {ராவணன்}, குரூரனும், மஹாபலவானுமான வஜ்ரதம்ஷ்ட்ரன்[1] என்ற ராக்ஷசனிடம் {பின்வருமாறு} பேசினான்:(1,2) “வீரா, ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாக நீ புறப்பட்டுச் செல்வாயாக. சென்று, வானரர்களுடன் சேர்த்து தாசரதியான ராமனையும், சுக்ரீவனையும் கொல்வாயாக” {என்றான் ராவணன்}.(3)

[1] கம்பராமாயணத்தில், இந்த வஜ்ரதம்ஷ்ட்ரன், “வச்சிரத்து எயிற்றவன்” என்று குறிப்பிடப்படுகிறான். வால்மீகியில் வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்படுகிறான். கம்பனில் வச்சிரத்து எயிற்றவன் ஹனுமானால் கொல்லப்படுகிறான். கம்பனில் புகைநிறக் கண்ணன் {தூம்ராக்ஷன்} ஹனுமானால் கொல்லப்பட்ட பிறகு, மாபக்கன் என்ற ராக்ஷசனை அங்கதன் கொல்கிறான்.

“அப்படியே ஆகட்டும்” என்று ராக்ஷசேஷ்வரனிடம் சொன்ன அந்த மாயாவி {வஜ்ரதம்ஷ்ட்ரன்}, பரிவாரத்தைச் சேர்ந்த ஏராளமானோரால் சூழப்பட்டவனாகப் புறப்பட்டுச் சென்றான்[2].{4} நாகங்கள், அஷ்வங்கள் {யானைகள், குதிரைகள், கோவேறு} கழுதைகள், ஒட்டகங்கள், பதாகைகள், துவஜங்களுடன் கூடிய ரதங்கள் ஆகியவற்றால் சூழப்பெற்று ஒளிர்பவனாக அவன் இருந்தான்.(4,5) அப்படியே, விசித்திரமான கேயூரங்கள், மகுடம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், கவசந்தரித்து, தனுசை ஏந்தியவனாகவும் புறப்பட்டுச் சென்றான்.(6) சம்முபதியான அவன் {படைத்தலைவனான வஜ்ரதம்ஷ்ட்ரன்}, பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டதும், தப்த காஞ்சனத்தால் {புடம்போட்ட பொன்னால்} ஜொலிப்பதுமான ரதத்தை பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து} அதில் ஏறினான்.(7)


யஷ்டிகள் {தடிகள்}, சித்திரமான தோமரங்கள், சூலங்கள், முசலங்கள், பிண்டிபாலங்கள், பாசங்கள், சக்திகள்,{8} பட்டிசங்கள், கட்கங்கள் {வாள்கள்}, சக்திகள், கதைகள், கூரிய பரசுகள், ஆகிய விதவிதமான சஸ்திரங்களுடன் காலாட்படையினர் அணிவகுத்துச் சென்றனர்.(8,9) விசித்திரமான ஆடைகளை அணிந்து ஒளிர்பவர்களும், மதங்கொண்ட கஜங்களில் இருக்கும் சூரர்களுமான சர்வ ராக்ஷச புங்கவர்களும், அசையும் பர்வதங்களைப் போல அணிவகுத்துச் சென்றனர்.(10) யுத்தகுசலர்களான {போரில் தேர்ந்தவர்களான} அவர்களும், தோமரங்கள், அங்குசங்கள் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவர்களும், மஹாபலவான்களுக்குரிய லக்ஷணங்கள் பொருந்திய வேறு சிலரும் {அவ்வாறே யானைகளில்} ஏறினர்.(11) 

அப்படிப் புறப்பட்டுச் சென்ற அந்த சர்வ ராக்ஷச பலமும் {படையும்}, மழைக்காலத்தில் மின்னலுடன் நாதம் செய்யும் மேகத்தைப் போல சோபித்தபடியே,{12} யூதபன் {குழுத் தலைவன்} அங்கதன் எங்கிருந்தானோ, அந்த தக்ஷிண துவாரத்தில் {தென்வாயிலில்} வெளிப்பட்டது.(12,13அ) அவர்கள் அப்படி வெளிப்பட்ட போது, அசுபங்கள் {தீய சகுனங்கள்} தோன்றின.{13ஆ} அப்போது, மேகமற்ற ஆகாசத்திலிருந்து தீவிரமான உல்முகங்கள் {விண்கற்கள்} விழுந்தன. கோரமான நரிகள், பாவக ஜுவாலைகளை {நெருப்புச் சுடர்களைக்} கக்கியபடியே பயங்கரமாக ஊளையிட்டன.(13ஆ,14) பிறகு, கோரமான மிருகங்கள், ராக்ஷசப் போர்வீரர்களின் மரணத்தை முன்னறிவித்தன. {அவ்வாறே} புறப்பட்டுச் சென்ற போர்வீரர்களும் அச்சமடைந்து கால் இடறி விழுந்தனர்.(15)

மஹாபலவானும், தேஜஸ்வியுமான வஜ்ரதம்ஷ்டிரன் இந்த உத்பாதங்களை {அபசகுனங்களைக்} கண்டு, தைரியத்தை நம்பி ரண உற்சாகத்துடன் {போரிடும் ஆவலுடன்} புறப்பட்டுச் சென்றான்.(16) வெற்றியை விரும்புகிறவர்களான வானரர்கள், அவர்கள் {ராக்ஷசர்கள்} புறப்பட்டு வருவதைக் கண்டு, பத்துத் திசைகளையும் தங்கள் மஹாநாதத்தால் நிறைத்தனர்.(17) பிறகு, அன்யோன்யம் வதம் செய்ய {ஒருவரையொருவர் கொல்ல} விரும்பும் ஹரிக்களுக்கும் {குரங்குகளுக்கும்}, கோரர்களும், பயங்கர ரூபம் கொண்டவர்களுமான அந்த ராக்ஷசர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் மூண்டது.(18) மஹா உற்சாகத்துடன் புறப்பட்டு வந்த அவர்கள், தேகங்களும், சிரங்களும் வெட்டப்பட்டு, சர்வாங்கங்களும் உதிரத்தால் நனைந்தவர்களாக தரணீதலத்தில் {தரையில்} விழுந்தனர்.(19) சமரில் புறமுதுகிடாத சில சூரர்கள், பரிகங்களைக் கையில் ஏந்திக் கொண்டு அன்யோன்யம் {ஒருவரையொருவர்} அணுகி விதவிதமான சஸ்திரங்களை ஏவினர்.(20)  

அங்கே மரங்கள், பாறைகள், சஸ்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு கோரமாக ஹிருதயங்களைப் பிளக்கும் உரத்த ஒலி போர்க்களத்தில் கேட்டது.(21) அங்கே வெளிப்பட்ட ரதங்களின் நேமிஸ்வனம் {சக்கரவொலி}, தனுசின் {வில்லின்} ஒலி கேட்டது. சங்கு, பேரிகை, மிருதங்கங்களின் ஆரவார ஸ்வனமும் கேட்டது.(22,23அ) சிலர் அஸ்திரங்களைக் கைவிட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு போர் செய்யாதிருந்தனர்.{23ஆ} உள்ளங்கைகள், சரணங்கள் {கால்கள்}, முஷ்டிகள் {கைமுட்டிகள்}, மரங்கள், முழங்கால்கள் {கால்முட்டிகள்} ஆகியவற்றைக் கொண்டு வானரர்களால் ஹதம் செய்யப்பட்ட {கொல்லப்பட்ட} சில ராக்ஷசர்களின் சிதைந்த தேகங்கள் பாறைகளால் நசுக்கப்பட்டன.(23ஆ-25அ) 

உலக சம்ஹாரத்தின் போது பாச ஹஸ்தனான அந்தகனை {பிரளய காலத்தில் கையில் பாசக்கயிற்றைக் கொண்ட யமனைப்} போல வஜ்ரதம்ஷ்ட்ரன், ரணத்தில் {போரில்} தன் பாணங்களால் ஹரிக்களை {குரங்குகளை} அச்சுறுத்தியபடியே திரிந்தான்.(25ஆ,26அ) நானாவித அஸ்திரங்களைக் கொண்டவர்களும், அஸ்திரவித்துகளும், பலவான்களுமான ராக்ஷசர்கள், குரோதத்தில் மூர்ச்சித்தவர்களாக ரணத்தில் {போரில்} வானர சைனியத்தை எதிர்த்துச் சென்றனர்.(26ஆ,27அ) 

அதைக் கண்ட வாலிசுதன் {வாலி மைந்தன் அங்கதன்}, சம்வர்த்தக அனலனை {பிரளய கால அக்னியைப்} போல இரு மடங்கு குரோதத்துடன், ரணத்தில் {போரில்} அந்த ராக்ஷசர்கள் அனைவரையும் கொன்றான்.(27ஆ,28அ) குரோதத்தால் கண்கள் சிவந்தவனும், வீரியவானுமான அங்கதன், ஒரு விருக்ஷத்தைப் பிடுங்கி, இழிந்த மிருகங்களை {கொல்லும்} சிம்ஹம் போல, ராக்ஷச கணத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரையும், சக்ரனுக்குத் துல்லியமான பராக்கிரமத்துடன் கோரமாகக் கொன்றான்.(28ஆ,29) பீம விக்கிரமர்களான ராக்ஷசர்கள், அங்கே அங்கதனால் தாக்கப்பட்டு, சிதைந்த சிரசுகளுடன் {தலைகளுடன்}, வெட்டப்பட்ட மரங்களைப் போல விழுந்தனர்[3].(30)

[3] மாபக்கனும் அங்கதனும் மலைவார்
தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார்
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால்

- கம்பராமாயணம் 7374ம் பாடல், யுத்த காண்டம், படைத் தலைவர் வதைப் படலம்

பொருள்:  போரிடுபவர்களான மாபக்கனும் {வஜ்ரதம்ஷ்ட்ரனும்}, அங்கதனும் விளக்கைப் போல் எரிந்து எழும் சிவந்த கண்களையும், சினத்தையும், தூபத்தைப் போல் புகை வெளிப்படும் பெருமூச்சினையும் உடையவர்களாக ஒருவரையொருவர் கொல்ல நினைத்து {எதிரிகளை} அழித்துக் கொல்வதைத் தொடர்ந்தனர்.

அப்போது ரதங்கள், சித்திரமான துவஜங்கள் {கொடிமரங்கள்}, அஷ்வங்கள் {குதிரைகள்}, உதிரத்தில் நனைந்த ஹரிராக்ஷசர்களின் சரீரங்கள் {ரத்தத்தில் நனைந்த குரங்குகள், ராக்ஷசர்களின் உடல்கள்} ஆகியவற்றுடன் பூமியானது பயங்கரமாகத் தெரிந்தது.(31) இரணத்தில் {போர்க்களத்தில்} பூமியானது, ஹாரங்கள், கேயூரங்கள் {கைவளைகள்}, வஸ்திரங்கள், சத்ரங்கள் {குடைகள்} ஆகியவற்றுடன் சரத்கால நிசியை {கூதிர்கால இரவைப்} போல அலங்கரிக்கப்பட்டது.(32) பவனனின் {வாயுவின்} வேகத்தால் மேகம் எப்படியோ, அப்படியே அங்கே அந்த மஹத்தான ராக்ஷச பலம் {படை} அங்கதனின் வேகத்தால் நடுக்கம் அடைந்தது.(33)

யுத்த காண்டம் சர்க்கம் – 053ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை