Advice of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-009 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களுக்கும், ராவணனுக்கும் அறிவுரை வழங்கிய விபீஷணன்...
பிறகு நிகும்பன், ரபசன், மஹாபலன், சூரியசத்ரு, சுப்தக்னன், யஜ்ஞகோபன், மஹாபார்ஷ்வன், மஹோதரன்,{1} வெல்வதற்கரிய ராக்ஷசர்களான அக்னிகேது, ரஷ்மிகேது, மஹாதேஜஸ்வியும், பலவானும், ராவணாத்மஜனுமான {ராவணனின் மகனுமான} இந்திரஜித்,{2} மஹாபலவானான பிரஹஸ்தன், விரூபாக்ஷன், மஹாபலவானான வஜ்ரதம்ஷ்டிரன், தூம்ராக்ஷன், அதிகாயன், துர்முகன் என்ற ராக்ஷசன் ஆகியோர்,{3} பரிகங்கள், பட்டசங்கள், பராசங்கள் {முள்ளாயுதங்கள்}, சக்திகள் {வேல்கள்}, சூலங்கள், பரசுகள் {கோடரிகள்}, சாபங்கள் {விற்கள்}, பாணங்கள் {கணைகள்}, கூர்மையான பெருங்கட்கங்கள் {கத்திகள்} ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.{4} தேஜஸ்ஸால் ஒளிர்ந்த சர்வ ராக்ஷசர்களும், பரமகுரோதத்துடன் துள்ளிக் குதித்து, ராவணனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள்:(1-5) "ராமனையும், சுக்ரீவனையும், லக்ஷ்மணனையும், லங்கைக்குத் தீங்கிழைத்தவனும், கிருபைக்குரியவனுமான ஹனூமதனையும் கொல்வோம்" {என்றனர்}.(6)