Thursday 11 April 2024

சேனாபதிகள் வதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 46 (39)

Generals killed | Sundara-Kanda-Sarga-46 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரில் ராவணனின் சேனாதிபதிகள் ஐவரைக் கொன்ற ஹனுமான்...

Ravana commanding his five generals

மஹாத்மாவான வானரனால் மந்திரிமகன்கள் கொல்லப்பட்டதை அறிந்த ராவணன், தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு, உத்தம மதியை அமைத்துக் கொண்டான் {நல்ல தீர்மானத்திற்கு வந்தான்}.(1) சேனையின் ஐந்து முன்னணி நாயகர்களான விரூபாக்ஷன், யூபாக்ஷன், ராக்ஷசன் துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன்{2} என்ற நயவிசாரதர்களும் {உத்திகளைக் கையாள்வதில் திறம்பெற்றவர்களும்}, ஹனூமனைப் பிடிக்கும் ஆவலுள்ளவர்களும், யுத்தத்தில் வாயுவுக்கு சமமான வேகம் கொண்டவர்களுமான அந்த வீரர்களுக்கு அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன், பின்வருமாறு} ஆணையிட்டான்:(2,3) "சேனாக்ரகர்களே {படையின் முன்னணியில் உள்ள தலைவர்களே}, நீங்கள் அனைவரும் வாஜிகள், ரதங்கள், மாதங்கங்களுடன் கூடிய மஹாபலத்தை {குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும்படையை} அழைத்துச் சென்று அந்த கபியை {குரங்கை} தண்டிப்பீராக" என்றான் {ராவணன்}.(4) 

சுந்தர காண்டம் 46ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே ஸுந்த³ரகாண்டே³ ஷ்ட்சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Ravana commanding his five generals

ஹதான் மந்த்ரி ஸுதான் பு³த்³த்⁴வா வானரேண மஹாத்மனா |
ராவண꞉ ஸம்வ்ருʼத ஆகார꞉ சகார மதிம் உத்தமாம் || 5-46-1

ஸ விரூப அக்ஷ யூப அக்ஷௌ து³ர்த⁴ரம் சைவ ராக்ஷஸம் |
ப்ரக⁴ஸம் பா⁴ஸ கர்ணம் ச பன்ச ஸேனா அக்³ர நாயகான் || 5-46-2
ஸந்தி³தே³ஷ² த³ஷ²க்³ரீவோ வீரான் நய விஷா²ரதா³ன் |
ஹனூமத் க்³ரஹணே வ்யக்³ரான் வாயு வேக³ ஸமான் யுதி⁴ || 5-46-3

யாத ஸேனா அக்³ரகா³꞉ ஸர்வே மஹாப³ல பரிக்³ரஹா꞉ |
ஸவாஜி ரத² மாதன்கா³꞉ ஸ கபி꞉ ஷா²ஸ்யதாம் இதி || 5-46-4

யத் தை꞉ ச க²லு பா⁴வ்யம் ஸ்யாத் தம் ஆஸாத்³ய வன ஆலயம் |
கர்ம ச அபி ஸமாதே⁴யம் தே³ஷ² கால விரோதி⁴தம் || 5-46-5

Thursday 4 April 2024

மந்திரி குமாரர்கள் வதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 45 (17)

Sons of ministers killed | Sundara-Kanda-Sarga-45 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் அமைச்சர்களுடைய ஏழு மகன்களைக் கொன்ற ஹனுமான்...

Hanuman fighting with ministers sons of Ravanas

பிறகு, ஏழு தழல்களைக் கொண்டவனின் {அக்னியின்} ஒளியுடன் கூடியவர்களும், ராக்ஷசேந்திரனின் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின்} ஆணையின் பேரில் அனுப்பப்பட்டவர்களும், மந்திரிமார் மகன்களுமான அந்த எழுவரும் {ஏழு பேரும்}, அந்த பவனத்தில் இருந்து வெளியே வந்தனர்.{1} மஹாபலவான்களும், பெரும்படையால் சூழப்பட்டவர்களும், தனுக்களை {விற்களைத்} தரித்தவர்களும், அஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்களும், அஸ்திரவித்தையை அறிந்தவர்களில் சிரேஷ்டர்களுமான {சிறந்தவர்களுமான} அவர்கள், பரஸ்பரம் ஜயம்பெறும் விருப்பத்துடன் கூடியவர்களாக,{2} ஹேமஜால {பொன்வலை} கவசத்துடனும், துவஜங்களுடனும், பதாகைகளுடனும் கூடியவையும், மின்னல்களுடன் கூடிய அம்புதங்களை {மேகங்களைப்} போன்ற ஒலி கொண்டவையும், வாஜிகள் பூட்டப்பட்டவையுமான மஹாரதங்களில்,{3} அமித விக்ரமத்துடன் {அளவில்லா ஆற்றலுடன்} கூடியவர்களாக, தப்தகாஞ்சனத்தாலானவையும் {புடம்போட்ட பொன்னாலானவையும்}, சித்திரமானவையுமான சாபங்களை {விற்களை},  கூதிர் கால மேகத்திற்கு ஒப்பான ஒலியுடன் வளைத்தபடியே பேராரவாரம் செய்தனர்.(1-4) 

சுந்தர காண்டம் 45ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே ஸுந்த³ரகாண்டே³ பஞ்சசத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Hanuman fighting with ministers sons of Ravanas

தத꞉ தே ராக்ஷஸ இந்த்³ரேண சோதி³தா மந்த்ரிண꞉ ஸுதா꞉ |
நிர்யயு꞉ ப⁴வனாத் தஸ்மாத் ஸப்த ஸப்த அர்சி வர்சஸ꞉ || 5-45-1
மஹாப³ல பரீவாரா த⁴னுஷ்மந்தோ மஹாப³லா꞉ |
க்ருʼத அஸ்த்ரா அஸ்த்ரவிதா³ம் ஷ்²ரேஷ்டா²꞉ பரஸ்பர ஜய ஏஷிண꞉ || 5-45-2
ஹேம ஜால பரிக்ஷிப்தை꞉ த்⁴வஜவத்³பி⁴꞉ பதாகிபி⁴꞉ |
தோயத³ ஸ்வன நிர்கோ⁴ஷை꞉ வாஜி யுக்தை꞉ மஹாரதை²꞉ || 5-45-3
தப்த கான்சன சித்ராணி சாபானி அமித விக்ரமா꞉ |
விஸ்பா²ரயந்த꞉ ஸம்ஹ்ருʼஷ்டா꞉ தடி³த்³வந்த இவ அம்பு³தா³꞉ || 5-45-4

ஜனன்ய꞉ தா꞉ தத꞉ தேஷாம் விதி³த்வா கிம்கரான் ஹதான் |
ப³பூ⁴வு꞉ ஷோ²க ஸம்ப்⁴ராந்தா꞉ ஸபா³ந்த⁴வ ஸுஹ்ருʼத் ஜனா꞉ || 5-45-5

Wednesday 3 April 2024

ஜம்புமாலி வதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 44 (20)

Jambumali killed | Sundara-Kanda-Sarga-44 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானைக் கணைகளால் துளைத்த ஜம்புமாலி; பெரும் பாறையையும், பெரும் சால மரத்தையும், பரிகத்தையும் வீசி ஜம்புமாலியைக் கொன்ற ஹனுமான்...

Hanuman fights with Jambumali

இராக்ஷசேந்திரனால் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனால்} ஆணையிடப்பட்டவனும், பலவானும், பெரும்கோரைப்பற்களைக் கொண்டவனும், பிரஹஸ்தனின் மகனுமான ஜம்புமாலி, தனுவை {வில்லை} எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.{1} செந்நிற மாலைகளையும், ஆடைகளையும் தரித்தவனும், காதுகளில் அழகிய குண்டலத்தை அணிந்தவனும், பேருடல் படைத்தவனும், உருண்டையான நயனங்கள் {கண்கள்} அமையப்பெற்றவனும், சண்டனும் {கடுமை நிறைந்தவனும்}, சமரில் துர்ஜயனுமான அவன் {போரில் வெல்லப்பட முடியாதவனுமான ஜம்புமாலி}{2}, சக்ரனின் தனுவுக்கு {இந்திரனின் வில்லுக்கு} ஒப்பானதும், வஜ்ரத்திற்கும், அசனிக்கும் சமமான ஸ்வனமுடைய அழகிய சாயகத்துடன் {கணையுடன்} கூடியதுமான மஹத்தான தனுவை {வில்லை} வேகமாக வளைத்தான்.(1-3) அந்த தனுசை வளைத்ததால் உண்டான மஹத்தான கோஷமானது {நாணொலியானது}, திசைகளையும், பிரதிசைகளையும் {திசைகளின் மூலைகளையும்}, ஏன் நபத்தையும் {வானத்தையும்} கூட திடீரென நிறைத்தது[1].(4) 

சுந்தர காண்டம் 44ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே ஸுந்த³ரகாண்டே³ சதுஷ்²சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Hanuman fights with Jambumali

ஸந்தி³ஷ்டோ ராக்ஷஸ இந்த்³ரேண ப்ரஹஸ்தஸ்ய ஸுதோ ப³லீ |
ஜம்பு³ மாலீ மஹாத³ம்ஷ்ட்ரோ நிர்ஜகா³ம த⁴னு꞉ த⁴ர꞉ || 5-44-1
ரக்த மால்ய அம்ப³ர த⁴ர꞉ ஸ்ரக்³வீ ருசிர குண்ட³ல꞉ |
மஹான் விவ்ருʼத்த நயன꞉ சண்ட³꞉ ஸமர து³ர்ஜய꞉ || 5-44-2
த⁴னு꞉ ஷ²க்ர த⁴னு꞉ ப்ரக்²யம் மஹத் ருசிர ஸாயகம் |
விஸ்பா²ரயாணோ வேகே³ன வஜ்ர அஷ²னி ஸம ஸ்வனம் || 5-44-3

தஸ்ய விஸ்பா²ர கோ⁴ஷேண த⁴னுஷோ மஹதா தி³ஷ²꞉ |
ப்ரதி³ஷ²꞉ ச நப⁴꞉ சைவ ஸஹஸா ஸமபூர்யத || 5-44-4

ரதே²ன க²ர யுக்தேன தம் ஆக³தம் உதீ³க்ஷ்ய ஸ꞉ |
ஹனூமான் வேக³ ஸம்பன்னோ ஜஹர்ஷ ச நநாத³ ச || 5-44-5

Tuesday 2 April 2024

சைத்திய பிராசாதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 43 (26)

Sacred Sanctuary | Sundara-Kanda-Sarga-43 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வேள்வி மண்டபத்தை அழிக்க நினைத்து, அதை எரித்த ஹனுமான்; ராக்ஷசர்களை எச்சரித்தது...

Hanuman attacking Rakshasas with a pillar

கிங்கரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அந்த ஹனுமான் {பின்வருமாறு} தியானத்தில் ஆழ்ந்தான், "வனம் என்னால் பங்கமடைந்தது. சைத்திய பிராசாதம்  {வேள்வி மண்டபம்} நாசமடையவில்லை.{1} எனவே, இப்போதே நான் இந்த பிராசாதத்தை அழிக்கப்போகிறேன்[1]" என்று இவ்வாறு மனத்திற்குள் சிந்தித்த ஹனுமான், தன் பலத்தைக் காட்டினான்.{2} ஹரிசிரேஷ்டனும், மாருதாத்மஜனுமான ஹனுமான், குதித்தெழுந்து, மேரு சிருங்கத்தைப் போல் உன்னதமான {உயரமான} சைத்திய பிராசாதத்தின் மீது ஏறினான்.(1-3) மஹாதேஜஸ்வியான அந்த ஹரியூதபன் {குரங்குக்குழுத் தலைவனான ஹனுமான்}, கிரிக்கு ஒப்பான பிராசாதத்தில் ஏறி உதிக்கும் மற்றொரு சூரியனைப் போல ஒளிர்ந்தான்.(4)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை