One more identity | Sundara-Kanda-Sarga-40 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனிடம் தன் அவலநிலையை நினைவூட்டுமாறு ஹனுமானிடம் சொல்லிவிட்டு, அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிய சீதை...
மஹாத்மாவான வாயுமைந்தனின் அந்த வசனத்தைக் கேட்டதும், ஸுரஸுதைக்கு {தேவர்களின் மகளுக்கு} ஒப்பான சீதை, ஆத்மஹிதந்தரும் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள்:(1) “வானரா, பிரியமான சொற்களைப் பேசும் உன்னைக் கண்டதும், மழையைப் பெற்றதால் {செழிப்படையும்} பாதி வளர்ந்த பயிரைக் கொண்ட வசுந்தரையை {பூமியைப்} போல, நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.(2) சோகத்தால் மெலிந்த அங்கங்களுடன் கூடிய நான், புருஷவியாகரரை {மனித்ரகளில் புலியான ராமரை} எப்படி ஸ்பரிசிக்க முடியுமோ, அப்படி {அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து} என்னிடம் தயை கொள்வாயாக.(3) ஹரிகணோத்தமா {குரங்குக் கூட்டத்தில் உத்தமனே}, கோபத்தால் காகத்தின் ஒரு கண்ணை அழிக்க ஏவிய துரும்பை {புல்லை} ராமரிடம் அடையாளமாகச் சொல்வாயாக[1].(4)