Friday 26 July 2024

விபீஷணன் அறிவுரை | யுத்த காண்டம் சர்க்கம் - 009 (23)

Advice of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-009 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களுக்கும், ராவணனுக்கும் அறிவுரை வழங்கிய விபீஷணன்...

Vibheeshana advising Ravana

பிறகு நிகும்பன், ரபசன், மஹாபலன், சூரியசத்ரு, சுப்தக்னன், யஜ்ஞகோபன், மஹாபார்ஷ்வன், மஹோதரன்,{1} வெல்வதற்கரிய ராக்ஷசர்களான அக்னிகேது, ரஷ்மிகேது, மஹாதேஜஸ்வியும், பலவானும், ராவணாத்மஜனுமான {ராவணனின் மகனுமான} இந்திரஜித்,{2} மஹாபலவானான பிரஹஸ்தன், விரூபாக்ஷன், மஹாபலவானான வஜ்ரதம்ஷ்டிரன், தூம்ராக்ஷன், அதிகாயன், துர்முகன் என்ற ராக்ஷசன் ஆகியோர்,{3} பரிகங்கள், பட்டசங்கள், பராசங்கள் {முள்ளாயுதங்கள்}, சக்திகள் {வேல்கள்}, சூலங்கள், பரசுகள் {கோடரிகள்}, சாபங்கள் {விற்கள்}, பாணங்கள் {கணைகள்}, கூர்மையான பெருங்கட்கங்கள் {கத்திகள்} ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.{4} தேஜஸ்ஸால் ஒளிர்ந்த சர்வ ராக்ஷசர்களும், பரமகுரோதத்துடன் துள்ளிக் குதித்து, ராவணனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள்:(1-5) "ராமனையும், சுக்ரீவனையும், லக்ஷ்மணனையும், லங்கைக்குத் தீங்கிழைத்தவனும், கிருபைக்குரியவனுமான ஹனூமதனையும் கொல்வோம்" {என்றனர்}.(6)

யுத்த காண்டம் 009ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ நவம꞉ ஸர்க³꞉

Vibheeshana advising Ravana

ததோ நிகும்போ⁴ ரப⁴ஸ꞉ ஸூர்ய ஷ²த்ருர் மஹாப³ல꞉ |
ஸுப்தக்⁴நோ யஜ்ஞ கோப꞉ ச மஹாபார்ஷ்²வோ மஹாஉஅர꞉ || 6-9-1
அக்³நி கேது꞉ ச து³ர்த⁴ர்ஷோ ரஷ்²மி கேது꞉ ச ராக்ஷஸ꞉ |
இந்த்³ரஜிச் ச மஹாதேஜா ப³லவான் ராவண ஆத்மஜ꞉ || 6-9-2
ப்ரஹஸ்தோ அத² விரூப அக்ஷோ வஜ்ர த³ம்ஷ்ட்ரோ மஹாப³ல꞉ |
தூ⁴ம்ர அக்ஷ꞉ ச அதிகாய꞉ ச து³ர்முக²꞉ சைவ ராக்ஷஸ꞉ || 6-9-3
பரிகா⁴ன் பட்டஸான் ப்ராஸான் ஷ²க்தி ஷூ²ல பரஷ்²வதா⁴ன் |
சாபாநி ச ஸபா³ணாநி க²ட்³கா³ம꞉ ச விபுலான் ஷி²தான் || 6-9-4
ப்ரக்³ருஹ்ய பரம க்ருத்³தா⁴꞉ ஸமுத்பத்ய ச ராக்ஷஸா꞉ |
அப்³ருவன் ராவணம் ஸர்வே ப்ரதீ³ப்தா இவ தேஜஸா || 6-9-5

Wednesday 24 July 2024

இராக்ஷசர்களின் உறுதிமொழி | யுத்த காண்டம் சர்க்கம் - 008 (24)

Assurance of Rakshasas | Yuddha-Kanda-Sarga-008 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தன், துர்முகன், வஜ்ரதம்ஷ்டிரன், நிகும்பன், வஜ்ரஹனு ஆகியோர் ராமனையும், பிறரையும் கொல்வதாக ராவணனிடம் உறுதியளித்தது...

Rakshasa assuring victory to Ravana

பிறகு, அப்போது, சூரனும், சேனாபதியும், நீலமேகம் போல் தெரிந்தவனும், பிரஹஸ்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், கூப்பிய கைகளுடன் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "சர்வ தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், பதகர்கள், உரகர்கள் {பறவைகள், பாம்புகள்} ஆகியோரும் போரில் உம்மைத் தாக்கவல்லவர்களல்லர்.  வானரர்களை {குரங்குகளைக்} குறித்து என்ன சொல்வது?(2) அனைவரும் கவனக்குறைவாக விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} இருந்தபோது, ஹனூமதனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். நான் ஜீவித்திருக்கையில் அந்த வனகோசரன் ஜீவனுடன் {திரும்பிச்} செல்லமாட்டான்.(3) சாகரம் வரை பரந்ததும், சைலங்கள், வனங்கள், கானனங்களுடன் {சோலைகளுடன்} கூடியதுமான சர்வ பூமியையும் வானரரற்றதாகச் செய்வேன். நீர் எனக்கு ஆணையிடுவீராக.(4) இரஜனீசரரே {இரவுலாவியான ராவணரே}, வானரங்களிடம் இருந்து {லங்கையை} ரக்ஷிக்கும் ஏற்பாட்டைச் செய்கிறேன். நீர் செய்த அபராதத்தால்[1] உண்டான துக்கம் உம்மைக் கொஞ்சமும் அண்டாது" {என்றான் பிரஹஸ்தன்}.(5)

யுத்த காண்டம் 008ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ அஷ்டம꞉ ஸர்க³꞉

Rakshasa assuring victory to Ravana

ததோ நீல அம்பு³த³ நிப⁴꞉ ப்ரஹஸ்தோ நாம ராக்ஷஸ꞉ |
அப்³ரவீத் ப்ராஞ்ஜலிர் வாக்யம் ஷூ²ர꞉ ஸேநா பதிஸ்ததா³ || 6-8-1

தே³வ தா³நவ க³ந்த⁴ர்வா꞉ பிஷா²சபதகௌ³ரகா³꞉ |
ந த்வாம் த⁴ர்ஷயிதும் ஷ²க்தா꞉ கிம் புநர் வாநரா ரணே || 6-8-2

ஸர்வே ப்ரமத்தா விஷ்²வஸ்தா வந்சிதா꞉ ஸ்ம ஹநூமதா |
ந ஹி மே ஜீவதோ க³ச்சேஜ் ஜீவன் ஸ வந கோ³சர꞉ || 6-8-3

ஸர்வாம் ஸாக³ர பர்யந்தாம் ஸஷை²ல வந காநநாம் |
கரோமி அவாநராம் பூ⁴மிம் ஆஜ்ஞாபயது மாம் ப⁴வான் || 6-8-4

ரக்ஷாம் சைவ விதா⁴ஸ்யாமி வாநராத்³ ரஜநீ சர |
ந ஆக³மிஷ்யதி தே து³ஹ்க²ம் கிஞ்சித்³ ஆத்ம அபராத⁴ஜம் || 6-8-5

Tuesday 23 July 2024

இராவணன், இந்திரஜித் சாகசங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் - 007 (25)

Feats of Ravana and Indrajith | Yuddha-Kanda-Sarga-007 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்கள் அனைவரும், ராவணனின் வலிமையைப் புகழ்ந்து அவனுக்கு நம்பிக்கை ஊட்டி, வானரர்களின் படையை அழிப்பதற்கும், ராமனைக் கொல்வதற்கும் இந்திரஜித் ஒருவனே போதுமானவன் என்றது...

Rakshasas praising Ravana

இராக்ஷசேந்திரன் {ராவணன்} இவ்வாறு சொன்னதும், மஹாபலவான்களான ராக்ஷசர்கள் அனைவரும், ராக்ஷசேஷ்வரனான ராவணனிடம் கைக்கூப்பியபடியே பேசினார்கள்.{1} நீதிக்குப் புறம்பானவர்களும், புத்தியில்லாதவர்களும், பகைவரின் தரப்பை அறியாதவர்களுமான அவர்கள்,(1,2அ) "இராஜரே, பரிகங்கள் {இரும்பு முள் பதித்த கதாயுதங்கள்}, சக்திகள் {வேல்கள்}, ரிஷ்டிகள் {கத்திகள்}, சூலங்கள், பட்டசங்கள் {குறுக்குக் கத்திகள்} நிறைந்த நம் பலம் {படை} மகத்தானது. நீர் ஏன் வருந்துகிறீர்?(2ஆ,3அ) போகவதியை {பாதாளத்திலுள்ள போகவதி நகரை} அடைந்து பன்னகர்களுடனான யுத்தத்தில் நீர் வென்றீர்.{3ஆ} கைலாச சிகரவாசியும், யக்ஷர்கள் பலரால் சூழப்பட்டவனுமான தனதன் {குபேரன்}, மஹத்தான போரைச் செய்த உமக்கு வசப்பட்டான்.(3ஆ,4) விபுவே {தலைவரே}, மஹேஷ்வரனிடம் {சிவனிடம்} கொண்ட நட்பினால், லோகபாலன் என்றும், மஹாபலவான் என்றும் செருக்கிலிருந்த அவன் {குபேரன்}, உம்மால் போரில் வீழ்த்தபட்டான்.(5) யக்ஷர்களைக் கூட்டங்கூட்டமாகக் கொன்றும், நடுங்கச் செய்தும், சிறையில் வைத்தும், கைலாச சிகரத்தில் இருந்து இந்த {புஷ்பக} விமானத்தை நீர் அபகரித்தீர்.(6) 

யுத்த காண்டம் 007ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தம꞉ ஸர்க³꞉

Rakshasas praising Ravana

இதி உக்தா ராக்ஷஸ இந்த்³ரேண ராக்ஷஸாஸ்தே மஹாப³லா꞉ |
ஊசு꞉ ப்ராந்ஜலய꞉ ஸர்வே ராவணம் ராக்ஷஸ ஈஷ்²வரம் || 6-7-1
த்³விஷ்த்பக்ஷ்ஹ்மவிஜ்ஞாய நீதிபா³ஹ்யாஸ்த்வபு³த்³த⁴ய꞉ |

ராஜன் பரிக⁴ ஷ²க்தி ருஷ்டி ஷூ²ல பட்டஸ ஸம்குலம் || 6-7-2
ஸுமஹன் நோ ப³லம் கஸ்மாத்³ விஷாத³ம் ப⁴ஜதே ப⁴வான் |

த்வயா போ⁴க³வதீம் க³த்வா நிர்ஜதா꞉ பந்நகா³ யுதி⁴ || 6-7-3
கைலாஸ ஷி²க²ர ஆவாஸீ யக்ஷைர் ப³ஹுபி⁴ர் ஆவ்ருத꞉ |
ஸுமஹத் கத³நம் க்ருத்வா வஷ்²யஸ் தே த⁴நத³꞉ க்ருத꞉ || 6-7-4

ஸ மஹாஈஷ்²வர ஸக்²யேந ஷ்²லாக⁴மாநஸ் த்வயா விபோ⁴ |
நிர்ஜித꞉ ஸமரே ரோஷால் லோக பாலோ மஹாப³ல꞉ || 6-7-5

Monday 22 July 2024

இராவணன் ஆலோசனை | யுத்த காண்டம் சர்க்கம் - 006 (19)

Ravana's counsel | Yuddha-Kanda-Sarga-006 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை வெல்வது குறித்து ராக்ஷசர்களுடன் லங்கையில் ஆலோசித்த ராவணன்...

Ravana having a counsel meet

சக்ரனை {இந்திரனைப்} போலவே பயத்தை உண்டாக்கும் வகையில், மஹாத்மாவான ஹனுமதனால் லங்கையில் செய்யப்பட்ட கோரமான கர்மத்தைக் கண்ட ராக்ஷசேந்திரன் {ராவணன்},[1]{1} சற்றே வெட்கி முகத்தைத் தாழ்த்திக் கொண்டு, சர்வ ராக்ஷசர்களிடமும் {பின்வருமாறு} பேசினான்:(1,2அ) "வானரன் மாத்திரமே ஆன அவன் {ஹனுமான்}, எதிர்க்கவொண்ணா லங்காபுரீக்குள் பிரவேசித்துத் தாக்கியிருக்கிறான்[2]. ஜானகியான சீதையையும் கண்டுவிட்டான்.(2ஆ,3அ) சைத்ய பிராசாதத்தை {வேள்விச் சாலையை} ஹனுமதன் தாக்கியிருக்கிறான். மிகச்சிறந்த ராக்ஷசர்களைக் கொன்றிருக்கிறான். சர்வ லங்காபுரீயையும் கலங்கச் செய்திருக்கிறான்.(3ஆ,4அ) இனி பத்ரமாக {மங்கலமாக} இருக்க என்ன செய்வது? அடுத்து எது நமக்குப் பொருத்தமானதோ, செய்வதற்கு சமர்த்தமானதோ, நன்மையைப் பயப்பதோ, அதைச் சொல்வீராக.(4ஆ,5அ)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை