Friday, 31 March 2023

காகதாலீய நியாயம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 41 (20)

Crow and Palm Tree syndrome | Aranya-Kanda-Sarga-41 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு மாரீசனின் அறிவுரைகளும், எச்சரிக்கைகளும்...

Crow palm tree syndrome - kaaka taaleeya Nyayam

இராவணன் இவ்வாறு ராஜாவாகப் பிரதிகூலமாக {சாதகமில்லாமல்} ஆணையிட்டதும், {மாரீசன்} ராக்ஷசாதிபனிடம் {பின்வரும்} கடும் வாக்கியங்களைத் தயக்கமின்றி பேசினான்:(1) "நிசாசரா {இரவுலாவியே}, புத்திரர்களுடனும், ராஜ்ஜியத்துடனும், அமைச்சர்களுடனும் நாசத்தை அடைவதற்குரிய இந்தப் பாப கர்மத்தை உனக்குக் கற்பித்தவன் எவன்?(2) இராஜாவே, உன் சுகத்தில் ஆனந்திக்காத பாபி எவன்? இந்த மிருத்யு துவாரமே {மரண வாயிலே} உனக்கு உபாயமெனக் கற்பித்தவன் எவன்?(3)  நிசாசரா, வீரியமற்ற உன் சத்ருக்களில் எவரோ, நீ பலமிக்க ஒருவனுடன் மோதி நாசமடைய வேண்டுமென விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.(4) நிசாரசா, எவன் உன் செயலாலேயே நீ நாசமடைய வேண்டுமென விரும்புகிறானோ அவன் ஹித புத்தி {நற்புத்தி} இல்லாத க்ஷுத்ரனாவான் {இழிந்தவனாவான்}. எவன் இதை உனக்கு உபதேசித்தான்?(5) 

Thursday, 30 March 2023

ஆரண்ய காண்டம் 41ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ ஏக சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Crow palm tree syndrome - kaaka taaleeya Nyayam

ஆஜ்ஞப்தோ ராவணேந இத்த²ம் ப்ரதிகூலம் ச ராஜவத் |
அப்³ரவீத் பருஷம் வாக்யம் நி꞉ஷ²ந்கோ ராக்ஷஸாதி⁴பம் || 3-41-1

கேந அயம் உபதி³ஷ்ட꞉ தே விநாஷ²꞉ பாப கர்மணா |
ஸ புத்ரஸ்ய ஸ ராஜ்யஸ்ய ஸ அமாத்யஸ்ய நிஷா²சர || 3-41-2

க꞉ த்வயா ஸுகி²நா ராஜன் ந அபி⁴நந்த³தி பாபக்ருʼத் |
கேந இத³ம் உபதி³ஷ்டம் தே ம்ருʼத்யு த்³வாரம் உபாயத꞉ || 3-41-3

ஷ²த்ரவ꞉ தவ ஸுவ்யக்தம் ஹீந வீர்யா நிஷா² சர |
இச்ச²ந்தி த்வாம் விநஷ்²யந்தம் உபருத்³த⁴ம் ப³லீயஸா || 3-41-4

கேந இத³ம் உபதி³ஷ்டம் தே க்ஷுத்³ரேண அஹித பு³த்³தி⁴நா |
ய꞉ த்வாம் இச்ச²தி நஷ்²யந்தம் ஸ்வ க்ருʼதேந நிஷா²சர || 3-41-5

நின்னை ஒறுப்பேன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 40 (27)

I will kill you | Aranya-Kanda-Sarga-40 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மாரீசன் கீழ்ப்படியாவிட்டால் கொன்றுவிடப் போவதாக மிரட்டிய ராவணன்; பொன் மானாகும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தீர்மானமடைந்தது...

Ravana threatens to kill Mareecha

மாரீசன், தகுந்தவையும், பொருத்தமானவையுமான வாக்கியங்களை ராவணனிடம் பேசியபோது, மரிக்க விரும்புகிறவன் ஔஷதத்தை {சாகப் போகிறவன் விரும்பாத மூலிகை மருந்தைப்} போல அவன் அவற்றை ஏற்றுக் கொண்டானில்லை.(1) காலனால் தூண்டப்பட்ட ராக்ஷசாதிபன் {ராவணன்}, பத்தியமானவற்றையும் {தகுந்தவற்றையும்}, ஹிதமானவற்றையும் {நல்லவற்றையும்} பேசிக் கொண்டிருந்த அந்த மாரீசனிடம், தகாத, நயமற்ற வாக்கியங்களை {பின்வருமாறு} சொன்னான்:(2) "என்னிடம் நீ சொன்ன வாக்கியங்கள் தரிசு நிலத்தில் {தூவப்படும்} விதையைப் போலவே அதி அர்த்தமுள்ள பழங்கள் {பலன்கள்} எதையும் விளைவிக்காது.(3) பாப சீலனும் {ஒழுக்கத்தில் பாபியும்}, மூர்க்கனும், விசேஷமாக {அதிலுங்குறிப்பாக} மானுஷனுமான ராமனுடனான போர் குறித்த உன் வாக்கியங்கள் என்னை அச்சுறுத்தும்[1] சக்திகொண்டவையல்ல.(4)

ஆரண்ய காண்டம் 40ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Ravana threatens to kill Mareecha

மாரீசஸ்ய து தத் வாக்யம் க்ஷமம் யுக்தம் ச ராவண꞉ |
உக்தோ ந ப்ரதிஜக்³ராஹ மர்து காம இவ ஔஷத⁴ம் || 3-40-1

தம் பத்²ய ஹித வக்தாரம் மாரீசம் ராக்ஷஸாதி⁴ப꞉ |
அப்³ரவீத் பருஷம் வாக்யம் அயுக்தம் கால சோதி³த꞉ || 3-40-2

யத் கில ஏதத் அயுக்தார்த²ம் மாரீச மயி கத்²யதே |
வாக்யம் நிஷ்ப²லம் அத்யர்த²ம் பீ³ஜம் உப்தம் இவ ஊஷரே || 3-40-3

த்வத் வாக்யை꞉ ந து மாம் ஷ²க்யம் - பே⁴தும் - பே⁴த்தும் ராமஸ்ய ஸம்ʼயுகே³ |
பாப ஷீ²லஸ்ய மூர்க²ஸ்ய மாநுஷஸ்ய விஷே²ஷத꞉ || 3-40-4

ய꞉ த்யக்த்வா ஸுஹ்ருʼதோ³ ராஜ்யம் மாதரம் பிதரம் ததா² |
ஸ்த்ரீ வாக்யம் ப்ராக்ருʼதம் ஷ்²ருத்வா வநம் ஏக பதே³ க³த꞉ || 3-40-5

Tuesday, 28 March 2023

மாரீசன் தப்பிய இரண்டாம் முறை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 39 (25)

The second escape of Mareecha | Aranya-Kanda-Sarga-39 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரண்டாம் முறை தண்டக வனத்தில் தப்பியதை விவரித்த மாரீசன்; இராமனுடன் மோதும் கருத்துக்கு எதிராக ஆலோசனை கூறியது...

Second Escape of Mareecha

{மாரீசன் ராவணனிடம்}, "அப்போது அந்தப் போரில் எப்படியோ நான் அவனால் {ராமனால்}  விடுவிக்கப்பட்டேன். அதன்பிறகு சமீபத்தில் என்ன நடந்தது என்பதை பதிலுக்கு ஏதும் சொல்லாமல் கேட்பாயாக.(1) இவ்வாறு நடந்த பிறகும், வெட்கமில்லாமல் மிருக ரூபம் {மானின் வடிவம்} ஏற்று இரு ராக்ஷசர்களுடன் சேர்ந்து தண்டகவனத்திற்குள் நான் பிரவேசித்தேன்.(2) 

ஆரண்ய காண்டம் 39ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ ஏகோந சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Second Escape of Mareecha

ஏவம் அஸ்மி ததா³ முக்த꞉ கத²ம்ʼசித் தேந ஸம்ʼயுகே³ |
இதா³நீம் அபி யத் வ்ருʼத்தம் தத் ஷ்²ருʼஉணுஷ்வ யத் உத்தரம் || 3-39-1

ராக்ஷாப்⁴யாம் அஹம் த்³வாப்⁴யாம் அநிர்விண்ண꞉ ததா² க்ருʼத꞉ |
ஸஹிதோ ம்ருʼக³ ரூபாப்⁴யாம் ப்ரவிஷ்டோ த³ம்ˮட³கா வநே || 3-39-2

தீ³ப்த ஜிஹ்வோ மஹாத³ம்ʼஷ்ட்ர꞉ தீக்ஷ்ண ஷ்²ருʼம்ʼகோ³ மஹாப³ல꞉ |
வ்யசரன் த³ம்ˮடா³காரண்யம் மாம்ʼஸ ப⁴க்ஷோ மஹாம்ருʼக³꞉ || 3-39-3

அக்³நிஹோத்ரேஷு தீர்தே²ஷு சைத்ய வ்ருʼக்ஷேஷு ராவண |
அத்யந்த கோ⁴ரோ வ்யசரன் தாபஸான் ஸம்ʼப்ரத⁴ர்ஷயன் || 3-39-4

நிஹத்ய த³ம்ˮட³காரண்யே தாபஸான் த⁴ர்மசரிண꞉ |
ருதி⁴ராணி பிப³ந்த꞉ தேஷாம் தன் மாம்ʼஸாநி ச ப⁴க்ஷயன் || 3-39-5

மரபின் முந்தை மாதுலன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 38 (33)

Born before in clan as your uncle | Aranya-Kanda-Sarga-38 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் பலம் குறித்த தன் அனுபவத்தைச் சொன்ன மாரீசன்; இராமனுடன் போரிடுவதன் விளைவுகளை ராவணனுக்கு விளக்கிச் சொன்னது...

Mareecha &  Ravana

{மாரீசன் இராவணனிடம்}, "ஒரு காலத்தில், பர்வதத்திற்கு ஒப்பானவனான நானும், ஆயிரம் நாகங்களின் {யானைகளின்} பலத்துடனும், வீரியத்துடனும், பரிகாயுதத்தால் உலகத்தாரை அச்சுறுத்திக் கொண்டும் இந்தப் பிருத்வியில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும் {தங்கக் காதணிகளுடனும்}, கிரீடங்களுடனும் கூடிய நான், நீல மேகத்தைப் போல ஒளிர்ந்தபடியே, தண்டகாரண்யத்தில் ரிஷிகளின் மாமிசங்களை பக்ஷித்துத் திரிந்து வந்தேன்.(1-3அ) 

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்