Khara, the demon | Ayodhya-Kanda-Sarga-116 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சித்திரகூடத்தில் வசிக்கும் துறவிகளின் அச்சம்; ராவணனின் தம்பி கரனிடம் கொண்ட அச்சம்; ராட்சசர்களின் அட்டூழியங்கள்; ராமனிடம் விடைபெற்றுச் சென்ற துறவிகள்...
பரதன் {அயோத்திக்குத்} திரும்பிச் சென்றதும், தபோவனத்தில் இருந்த ராமன், தபஸ்விகளிடம் கவலையையும், கலக்கத்தையும் கண்டான்.(1) முன்பு சித்திரகூடத்தின் தாபஸாசிரமங்களில் {தபம் மேற்கொள்ளும் தங்கள் ஆசிரமங்களில்} தன்னை அண்டி நிறைவுடன் இருந்த அவர்கள், இப்போது கவலையுடன் இருப்பதை ராமன் உணர்ந்தான்.(2) அவர்கள் சந்தேக நயனங்களினால் {கண்களினால்} ராமனைக் கண்டும், புருவங்களை நெறித்தும், அன்யோன்யம் {ஒருவருக்கொருவர்} கதைகளை அமைத்து ரகசியமாகவும், மெதுவாகவும் கிசுகிசுத்தனர்[1].(3)