Friday, 20 June 2025

ஔஷதி பர்வதமும், கந்தவஹாத்மஜனும் | யுத்த காண்டம் சர்க்கம் - 074 (77)

Mountain of herbs and the son of the carrier of fragrance | Yuddha-Kanda-Sarga-074 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இமய மலைக்குச் சென்று, மூலிகைகளுடன் கூடிய மலைச்சிகரத்தை எடுத்து வந்த ஹனுமான்; மூலிகையின் மகிமையால் உணர்வு மீண்ட வானரர்களும், ராமலக்ஷ்மணர்களும்...

Hanuman and Vibheeshan speaking to Jambhavan

போர்க்களத்தில் அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்} விழுந்துகிடந்தபோது, ஹரியூதபர்களின் சைனியம் திகைத்திருந்தது. சுக்ரீவன், நீலன், அங்கதன், ஜாம்பவந்தன் ஆகியோரும் ஏது செய்வதெனக் கொஞ்சமும் அறியாதிருந்தனர்.(1) புத்திமான்களில் சிறந்தவனான விபீஷணன், அனைத்தையும் கண்டு விசனமடைந்தான். பிறகு, ஒப்பற்ற சொற்களால், சாகை மிருக ராஜ வீரர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பயம் வேண்டாம். மனச்சோர்வடைவதற்கான காலம் இதுவல்ல. ஸ்வயம்பூவின் {பிரம்மாவின்} வாக்கியத்தை மதிக்கும் வகையிலேயே ஆரியபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் இந்திரஜித்தின் அஸ்திரஜாலங்களால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். அதன்காரணமாக, சுதந்திரத்தை இழந்து உணர்விழந்துள்ளனர்.(3) அமோக {வீண்போகாத} வீரியம் கொண்ட பிரம்மம் என்ற இந்தப் பரமாஸ்திரம், ஸ்வயம்பூவால் அவனுக்கு {பிரம்மனால் இந்திரஜித்துக்கு} தத்தம் செய்யப்பட்டது. அதற்கு மதிப்பளிக்கவே ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் யுத்தத்தில் விழுந்தனர். இங்கே விஷாதகாலம் ஏது? {இது வருந்துவதற்கான காலமல்ல)" {என்றான் விபீஷணன்}.(4)

யுத்த காண்டம் 074ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்ததிதம꞉ ஸர்க³꞉

Hanuman carrying Oushadi parvata

தயோஸ்ததா³ ஸாதி³தயோ ரணாக்³ரே |
முமோஹ ஸைன்யம் ஹரியூத²பானாம் |
ஸுக்³ரீவநீலாங்க³த³ஜாம்ப³வந்தோ |
ந சாபி கிம் சித்ப்ரதிபேதி³ரே தே || 6-74-1

ததோ விஷண்ணம் ஸமவேக்ஷ்ய ஸைன்யம் |
விபீ⁴ஷணோ பு³த்³தி⁴மதாம் வரிஷ்ட²꞉ |
உவாச ஷா²கா²ம்ருக³ராஜவீரான் |
நாஷ்²வாஸயன்னப்ரதிமைர்வசோபி⁴꞉ || 6-74-2

Tuesday, 17 June 2025

பிரம்மாஸ்திர பந்தனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 073 (75)

Bound by Brahmastra | Yuddha-Kanda-Sarga-073 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை ஆறுதல்படுத்தி, வேள்வி செய்து, புலப்படா நிலை அடைந்த இந்திரஜித்; இராமலக்ஷ்மணர்களும், வானரப் படையும் இந்திரஜித்தின் தாக்குதலில் மயக்கமடைந்தது...

Indrajit

பிறகு, கொல்லப்படாமல் எஞ்சிய ராக்ஷச கணங்கள் {ராக்ஷசக்கூட்டத்தார்}, அங்கே துரிதமாகச் சென்று, தேவாந்தகன், திரிசிரன், அதிகாயன் உள்ளிட்ட ராக்ஷசபுங்கவர்கள் கொல்லப்பட்டதைச் சொன்னார்கள்.(1) அவர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட உடனேயே ராஜா {ராவணன்}, கண்ணீர் நிறைந்த கண்களுடன் மூர்ச்சித்தான். பிறகு, கோரமான புத்திர இழப்பையும், பிராதாக்களின் வதத்தையும் {தன்னுடன் பிறந்தோர் கொல்லப்பட்டதையும்} குறித்து நீண்ட நேரம் சிந்தித்தான்[1].(2)

[1] ஏற்கனவே அதிகாயனின் மரணத்தைக் கேட்டு, அழுது புலம்பிய ராவணன், இப்போது புதிதாக அச்செய்திகளைக் கேட்பது போல் இங்கே வருகிறது. 72ம் சர்க்கத்தில் உள்ள செய்தி, செம்பதிப்பில் இல்லாததற்கான காரணம் இதுவாகத் தான் இருக்கும்.

யுத்த காண்டம் 073ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்ரிஸப்ததிதம꞉ ஸர்க³꞉

Indrajit

ததோ ஹதான்ராக்ஷஸபுங்க³வாம்ஸ்தான் |
தே³வாந்தகாதி³த்ரிஷி²ரோ(அ)திகாயான் |
ரக்ஷோக³ணாஸ்தத்ர ஹதாவஷி²ஷ்டாஸ் |
தே ராவணாய த்வரிதம் ஷ²ஷ²ம்ஸு꞉ || 6-73-1

ததோ ஹதாம்ஸ்தான்ஸஹஸா நிஷ²ம்ய |
ராஜா முமோஹாஷ்²ருபரிப்லுதாக்ஷ꞉|
புத்ரக்ஷயம் ப்⁴ராத்ருவத⁴ம் ச கோ⁴ரம் |
விசிந்த்ய ராஜா விபுலம் ப்ரத³த்⁴யௌ || 6-73-2

ததஸ்து ராஜானமுதீ³க்ஷ்ய தீ³னம் |
ஷோ²கார்ணவே ஸம்பரிபுப்லுவானம்|
அத²ர்ஷபோ⁴ ராக்ஷஸராஜஸூனுர் |
அதே²ந்த்³ரஜித்³வாக்யமித³ம் ப³பா⁴ஷே || 6-73-3

Sunday, 8 June 2025

இராவணனின் புத்திர விசனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 072 (18)

Ravana's sorrow for his son | Yuddha-Kanda-Sarga-072 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டு சோகத்தில் மூழ்கிய ராவணன், லங்கையின் பாதுகாப்பு குறித்த கவலையில், ராட்சசர்களை கவனமாக இருக்குமாறு கட்டளையிட்டது...

Ravana in a sorrow

மஹாத்மாவான லக்ஷ்மணன்[1] அதிகாயனைக் கொன்றதைக் கேட்ட பதற்றத்தினால் ராஜா {ராவணன்} இந்த வசனத்தைக் கூறினான்:(1) "பொறுத்துக் கொள்ள முடியாதவரும் {கோபக்காரரும்}, தன்வியுமான {வில்லுடன் கூடியவருமான} தூம்ராக்ஷர், சஸ்திரங்களில் நிபுணர்களான அகம்பனர், பிரஹஸ்தர், அதேபோல கும்பகர்ணன்{2} ஆகிய இவர்கள் மஹாபலவான்கள்; யுத்தத்தை விரும்பும் வீர ராக்ஷசர்கள்; பரசைனியங்களை {பகைவரின் படைகளை} வெல்பவர்கள்; பகைவர்களால் ஒருபோதும் வெல்லப்படாதவர்கள்.{3} களைப்பின்றி ஏராளமான கர்மங்களைச் செய்யும் வீரனான ராமன், பேருடல் படைத்தவர்களும், நானாவித அஸ்திரங்களில் விசாரதர்களுமான {அந்த} ராக்ஷசர்களையுங்கூட கொன்றுவிட்டான்.{4} மஹாத்மாக்களும், சூரர்களுமான வேறு பலரையும் அழித்துவிட்டான்.{2-5அ) 

யுத்த காண்டம் 072ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³விபப்ததிதம꞉ ஸர்க³꞉

Ravana in a sorrow

அதிகாயம் ஹதம் ஷ்²ருத்வா லக்ஷ்மணேன மஹாத்மனா |
உத்³வேக³மக³மத்³ராஜா வசனம் சேத³மப்³ரவீத் || 6-72-1

தூ⁴ம்ராக்ஷ꞉ பரமாமர்ஷீ ஸர்வஷ²ஸ்த்ரப்⁴ருதாம் வர꞉ |
அகம்பன꞉ ப்ரஹஸ்தஷ்²ச கும்ப⁴கர்ணஸ்த்ததை²வ ச || 6-72-2
ஏதே மஹாப³லா வீரா ராக்ஷஸா யுத்³த⁴காஙிக்ஷண꞉ |
ஜேதார꞉ பரஸைன்யானாம் பரைர்நித்யாபராஜிதா꞉ || 6-72-3
ஸஸைந்யாஸ்தே ஹதா வீரா ராமேணாக்லிஷ்டகர்மணா |
ராக்ஷஸா꞉ ஸுமஹாகாயா நாநாஷ²ஸ்த்ரவிஷா²ரதா³꞉ || 6-72-4
அன்யே ச ப³ஹவ꞉ ஷூ²ரா மஹாத்மானோ நிபாதிதா꞉ |

Tuesday, 27 May 2025

அதிகாயனின் வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 071 (116)

Atikaya killed | Yuddha-Kanda-Sarga-071 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் தோற்றம் கண்டு பயந்த வானரர்கள்; ராமனை நோக்கிச் சென்று தற்புகழ்ச்சி செய்த அதிகாயன்; பயங்கர யுத்தம் செய்து அதிகாயனைக் கொன்ற லக்ஷ்மணன்...

Atikaya Rama Vibheeshana, digital art made by copilot inspired by a Chandamama image

உரோமஹர்ஷணம் கொள்ளும் {மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும்} வகையில் தன் பலம் {படை} கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டும், சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான பராக்கிரமத்தைக் கொண்ட தன் பிராதாக்கள் {தன்னுடன் பிறந்தோர்} கொல்லப்படுவதைக் கண்டும்,{1} தன் பித்ருவ்யர்களும் {சிற்றப்பன்மாரும்}, ராக்ஷசரிஷப பிராதாக்களுமான {ராக்ஷசர்களில் உடன்பிறந்த காளைகளுமான} யுத்தோன்மத்தனும், மத்தனும் {மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்} போரில் வீழ்ந்ததைக் கண்டும்,{2} மஹாதேஜஸ்வியும், பிரம்மனால் வரங்கள் தத்தம் செய்யப்பட்டவனும், அத்ரிக்கு {மலைக்கு} ஒப்பானவனும், போரில் தேவதானவர்களின் செருக்கை அழிப்பவனுமான அதிகாயன் கோபமடைந்தான்.(1-3) சக்ராரியான அவன் {இந்திரனின் பகைவனான அதிகாயன்}, ஆயிரம் பாஸ்கரர்களின் {சூரியர்களின்} சங்கமத்தைப் போல் ஒளிரும் ஒரு ரதத்தில் ஏறி, வானரர்களை நோக்கி விரைந்தான்.(4) கிரீடியும் {கிரீடம் தரித்தவனும்}, தூய குண்டலங்களை அணிந்தவனுமான அவன் {அதிகாயன்}, சாபத்தை {வில்லை} வளைத்து, தன் நாமத்தை {பெயரை} உரக்க அறிவித்தபடியே மஹாஸ்வனத்துடன் நாதம் செய்தான்.(5) அவன், அந்த சிம்மநாதத்தாலும், உரக்க அறிவிக்கும் தன் பெயராலும், பயங்கரமான  நாணொலியாலும் பயத்தை விளைவித்தபடியே வானரர்களை அச்சுறுத்தினான்.(6)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை