Sagara | Bala-Kanda-Sarga-38 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் முப்பாட்டன் சகரன்; அறுபதாயிரம் பிள்ளைகளைப் பெற்ற சகரன்...
கௌசிகர் {விசுவாமித்ரர்}, இந்தக் கதையை {கார்த்திகேயனின் கதையை} ராமனிடம் சொல்லிவிட்டு, மேலும் இந்த மதுர அக்ஷரங்களை {இனிய சொற்களை} அந்தக் காகுத்ஸ்தனிடம் சொன்னார்:(1) "பூர்வத்தில் வீரனாகவும், தர்மாத்மாவாகவும் புகழ்பெற்றவனும், அயோத்யாபதியும், ஸகரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு நராதிபதி {மனிதர்களின் தலைவன்} இருந்தான்.(2) இராமா, விதர்ப்பனின் மகளும், கேசினி என்ற பெயர் படைத்தவளுமான சகரனின் ஜேஷ்ட பத்தினி {மூத்த மனைவி}, தர்மிஷ்டையாகவும், சத்தியவாதினியாகவும் இருந்தாள்.(3) அரிஷ்டநேமியின் {கசியபரின்} மகளும், கருடனுடன் பிறந்தவளும், சுமதி என்ற பெயரில் குறிப்பிடப்படுபவளுமான ஒருத்தி ஸகரனின் இரண்டாம் பத்தினியாக இருந்தாள்.(4) பத்தினிகள் இருவருடன் கூடிய அந்த மஹாராஜா {ஸகரன்}, ஹிமவந்தத்தை {இமய மலைத் தொடரை} அடைந்து, பிருகுப்ரஸ்ரவணம்[1] என்ற மலையில் சந்ததிக்காகத் தவமிருந்தான்.(5)
