வழியில் நடந்த உரையாடல் ஒன்றைச் சொல்லத் தவறிவிட்டேன். முன்னிருக்கையில் இருந்து 3ம் வரிசையில் அமர்ந்திருந்தேன் என்று சொன்னேனல்லவா? இடப்புறச் சாளரமருகில் க.சீனிவாசன் அவர்களும், அவருக்கு அருகில் நானும் அமர்ந்திருந்தோம். இடையில் உள்ள நடைபாதைக்கு அடுத்த இருக்கையில் ஆணும், பெண்ணுமாக இருவர் அமர்ந்திருந்தனர். இலக்கியம் குறித்து அவர்கள் பேசி வந்தனவனைத்தும் என் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தன. "பைபிளை நாம் மதப்புத்தகமாகப் பாக்கக்கூடாது. தத்துவச்செறிவு அதிகமுள்ளது அது" என்றார் சாளரமருகில் இருந்த ஆடவர். "அப்படியா?" என்றார் பெண்மணி. சில விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்பவரும் கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் உண்மை இலக்கியங்களையும் பேசத் தொடங்கினர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் என்று எனக்குப் பிடித்த தலைப்புகளிலேயே பேசி வந்தனர். அவர்கள் கவனிக்காவிட்டாலும் நானும் கேட்டுக் கொண்டே வந்தேன். பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும், பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் கல்கி குறித்தும் பேச்சு எழுந்தது. "அவர் ஓர் அஜண்டாவோடத்தான் எழுதினார். படத்துல அதெல்லாம் தவிர்த்துட்டாங்க. அதனாலதான் படம் நல்லா இருந்துச்சு" என்றார். "கல்கிதான் பெரிய ஆள்ன்னு அவங்க ஆளுங்கள வச்சே நிறுவப் பாத்தானுங்க. வேள்பாரி அதெல்லாத்தையும் தூக்கி சாப்பிடுடுச்சு. ஏற்கனவே சாண்டில்யன், கல்கியத் தூக்கி சாப்பிட்டார், அதெல்லாம் விட உசத்தியா இப்போ சு.வெ. கலக்கிட்டார்" என்றார்.
சம்ஸ்கிருத மூலத்திற்கு நெருக்கமாகத் தமிழாக்கப்பட்டது
முகப்பு | பொருளடக்கம் | உத்தர ராமாயணம் | மஹாபாரதம் | ஹரிவம்சம் |தொடர்புக்கு
Showing posts with label அயோத்தி. Show all posts
Showing posts with label அயோத்தி. Show all posts
Wednesday, 14 December 2022
காசி தமிழ் சங்கமம் - நினைவுகள் 6 - கங்கா ஆரத்தி
வழியில் நடந்த உரையாடல் ஒன்றைச் சொல்லத் தவறிவிட்டேன். முன்னிருக்கையில் இருந்து 3ம் வரிசையில் அமர்ந்திருந்தேன் என்று சொன்னேனல்லவா? இடப்புறச் சாளரமருகில் க.சீனிவாசன் அவர்களும், அவருக்கு அருகில் நானும் அமர்ந்திருந்தோம். இடையில் உள்ள நடைபாதைக்கு அடுத்த இருக்கையில் ஆணும், பெண்ணுமாக இருவர் அமர்ந்திருந்தனர். இலக்கியம் குறித்து அவர்கள் பேசி வந்தனவனைத்தும் என் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தன. "பைபிளை நாம் மதப்புத்தகமாகப் பாக்கக்கூடாது. தத்துவச்செறிவு அதிகமுள்ளது அது" என்றார் சாளரமருகில் இருந்த ஆடவர். "அப்படியா?" என்றார் பெண்மணி. சில விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்பவரும் கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் உண்மை இலக்கியங்களையும் பேசத் தொடங்கினர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் என்று எனக்குப் பிடித்த தலைப்புகளிலேயே பேசி வந்தனர். அவர்கள் கவனிக்காவிட்டாலும் நானும் கேட்டுக் கொண்டே வந்தேன். பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும், பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் கல்கி குறித்தும் பேச்சு எழுந்தது. "அவர் ஓர் அஜண்டாவோடத்தான் எழுதினார். படத்துல அதெல்லாம் தவிர்த்துட்டாங்க. அதனாலதான் படம் நல்லா இருந்துச்சு" என்றார். "கல்கிதான் பெரிய ஆள்ன்னு அவங்க ஆளுங்கள வச்சே நிறுவப் பாத்தானுங்க. வேள்பாரி அதெல்லாத்தையும் தூக்கி சாப்பிடுடுச்சு. ஏற்கனவே சாண்டில்யன், கல்கியத் தூக்கி சாப்பிட்டார், அதெல்லாம் விட உசத்தியா இப்போ சு.வெ. கலக்கிட்டார்" என்றார்.
Labels:
அயோத்தி,
காசி,
காசி தமிழ் சங்கமம்,
பனாரஸ்,
வாராணசி
Location:
Tiruvottiyur, Chennai, Tamil Nadu, India
Monday, 12 December 2022
காசி தமிழ் சங்கமம் - நினைவுகள் 5 - காலபைரவர்
மனமும், வயிறும் மட்டுமே ஆத்மசந்தோஷத்தைத் தந்துவிடுமா? நான் இங்கே வருவது மூன்றாம் முறை. இதற்கு முன் வந்த இரண்டு முறைகளையும்விட இந்த யாத்திரை என்னளவில் சிறப்புமிக்கது. 2014ல் முதல் முறை வந்தபோது நண்பர்களுடன் வந்ததால் ஒரு நபருக்கு ரூ.7,000/- (பயணம், உணவு, உறைவிடம் முழுமையும் சேர்த்து) ஆனது. அதே 2019ல் அப்பாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக வந்தபோது, ஒரு நபருக்கு ரூ.10,000/- (சில சடங்குகளையும் சேர்த்து) ஆனது. இப்போதோ, இதுவரை என் பர்ஸையோ, கைபேசி மூலம் செய்யப்படும் வங்கிப் பரிவர்த்தனையையோ எடுக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. ஆத்ம சந்தோஷத்தைத் தருவது பணம் மட்டுந்தானா?
Labels:
அயோத்தி,
காசி,
காசி தமிழ் சங்கமம்,
பனாரஸ்,
வாராணசி
Location:
Tiruvottiyur, Chennai, Tamil Nadu, India
Friday, 9 December 2022
காசி தமிழ் சங்கமம் - நினைவுகள் 4 - காசி விசாலாக்ஷியும் அன்னபூரணியும்
விசுவநாதனை தரிசித்த பெரும் நிறைவுடனும், மெய்ச்சிலிர்ப்புடனும் நாங்கள் அனைவரும் பார்வையாளர்கள் அமரும் வளாகத்தில் ஒன்றுகூடினோம். ஒருங்கிணைப்பாளர்களின் திட்டமிடலுக்கிணங்க பார்வையாளர்கள் அமர்வதற்காக வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் அமர்ந்தோம். கோவிலின் அமைப்பு பிரமாண்டமாகத் தெரிந்தது. விசுவநாதனின் தரிசனங்கிட்டி புனிதமடைந்த காசி தமிழ் சங்கம யாத்ரீகர்கள் அனைவரும் "நமசிவாய", "ஹர ஹர மஹாதேவா" என்று முழக்கமிட்டபடியே இருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு ருத்திராட்ச மாலையும், திரசூலம் பொறிக்கப்பட்ட ஒரு புனிதத்துண்டும் அணிவிக்கப்பட்டன.
Labels:
அயோத்தி,
காசி,
காசி தமிழ் சங்கமம்,
பனாரஸ்,
வாராணசி
Location:
Tiruvottiyur, Chennai, Tamil Nadu, India
Wednesday, 7 December 2022
காசி தமிழ் சங்கமம் - நினைவுகள் 3 - காசி விசுவநாத தரிசனம்
காலை 5 மணிக்கெல்லாம் நானும், க.சீனிவாசன், ஆறுமுகம், செல்வா ஆகியோரும் மெதுவாக எங்கள் அறைகளில் இருந்து கீழே இறங்கி வந்தோம். வரவேற்பறையில் பணியாட்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பாமல் மெதுவாக வெளியே சென்றோம். காலை பனி சில்லென்றிருந்தது. கைகளில் மாற்றுத்துணிகளுடன் கூடிய பையை மட்டும் எடுத்துக் கொண்டு எங்கள் அறை இருந்த ஓட்டலின் சந்துகளைத் தாண்டி ரோட்டில் இறங்கி நடந்தோம். ஆறுமுகம் சொன்னது போல கங்கை செல்வதற்கு கூகிள் மேப்ஸ் அதிக தூரத்தைத் தான் காட்டியது. நடந்து சென்ற சிறிது தூரத்திற்குள் ஆட்டோக்கள் இரண்டு நிற்பதைக் கண்டோம். எங்கள் நால்வரில் மற்ற மூவருக்கும் இந்தி தெரியும்.
Labels:
அயோத்தி,
காசி,
காசி தமிழ் சங்கமம்,
பனாரஸ்,
வாராணசி
Sunday, 4 December 2022
காசி தமிழ் சங்கமம் - நினைவுகள் 2 - கயா எக்ஸ்பிரஸ்
நான் அமர்ந்திருந்த இருக்கையின் வலப்பக்க சாளரமருகில், திண்டிவனத்தைச் சேர்ந்தவரும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரும் (VAO), சிற்றிதழ் ஆசிரியருமான திரு.ஏ.சீனிவாசன் அவர்களும், எதிர் இருக்கையின் வலப்பக்க சாளரமருகில் அரசூரைச் சேர்ந்த அர்ச்சகர் திரு.ஆசைத்தம்பி அவர்களும் அமர்ந்திருந்தனர். எனக்கு நேரெதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். எதிர் இருக்கையின் இடப்பக்கம் காலியாக இருந்தது. பெட்டியின் நடைபாதையைத் தாண்டிய எதிர் இருக்கையில், பல்வேறு வணிக நிறுவனங்களில் பணியாற்றியும், தனியாக வணிக நிறுவனம் நடத்தியும் ஓய்வுபெற்ற திரு.குணசேகர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஐஐடியைச் சேர்ந்த திரு.செல்வா அமர்ந்திருந்தார். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் பேராளுமைகளாகத் திகழ்ந்தனர். அந்நேரத்தில் எங்கள் கேபினில் இரண்டு இருக்கைகள் காலியாக இருப்பதாகத் தெரிந்தது. செல்வாவின் அருகில் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஆறுமுகம் என் இடப்பக்க இருக்கைக்கு உரியவர் என்பது பின்னர் தெரிந்தது. இரண்டு ஒன்றாகிவிட்டது. "ஒருவேளை அந்த இருக்கைக்குரிய நபரும் வேறு இடத்தில் இருக்கலாம்; பின்னர் வந்து சேர்ந்து கொள்ளலாம்" என்று தோன்றியது.
Labels:
அயோத்தி,
காசி,
காசி தமிழ் சங்கமம்,
பனாரஸ்,
வாராணசி
Location:
Tiruvottiyur, Chennai, Tamil Nadu, India
Friday, 2 December 2022
காசி தமிழ் சங்கமம் - நினைவுகள் 1 - புறப்பாடு
இவ்வருடம் ஏப்ரல் முதல், நண்பர்களிடம், "திருப்பியும் ஒரு தடவ காசிக்குப் போகணும்" என்று அப்போதைக்கப்போது சொல்லிக் கொண்டிருந்தேன். நாட்கள்தான் நகர்ந்து கொண்டிருந்தனவேயொழிய அதற்கான வழியும், நேரமும் கிட்டாதிருந்தன. விஸ்வநாதன் அருள்கூர வேண்டுமே. ஏற்கனவே இரண்டு முறை காசி சென்றிருக்கிறேன்[1] என்றாலும் மீண்டும் செல்ல வேண்டுமென்று ஏதோவொன்று மனத்தைத் தூண்டிக் கொண்டே இருந்தது. அடுத்த சுற்றுலா என்று யார் பேசினாலும், "காசிக்குப் போலாமே?" என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
Labels:
அயோத்தி,
காசி,
காசி தமிழ் சங்கமம்,
பனாரஸ்,
வாராணசி
Sunday, 25 July 2021
தசரதன் | பால காண்டம் சர்க்கம் - 06 (28)
Dasharata | Bala-Kanda-Sarga-06 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : தசரதனின் ஆட்சியில் குடிமக்கள் அனுபவித்த வளமும், இன்பமும்; நகர வடிவமைப்பு குறித்த வர்ணனை...
அயோத்தியெனும் இந்நகரத்தில் இருந்தே, வேதங்களை நன்கறிந்தவனும், {வளங்கள், படைகள், கல்விமான்கள் முதலிய} அனைத்தையும் திரட்டுபவனும், தீர்க்கதரிசனம் கொண்டவனும், பேரொளிபடைத்தவனும், குடிமக்கள், நகரவாசிகள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவனும்,(1) இக்ஷ்வாகுக்களில் அதிரதனும், வேதச் சடங்குகளைச் செய்பவனும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், அனைத்தையும் கட்டுப்படுத்துபவனும், மஹரிஷி போன்ற ராஜரிஷியும், மூவுலகங்களிலும் புகழ்பெற்றவனும்,(2) பலவானும், பகைவரை அழிப்பவனும், நண்பர்கள் பலரைக் கொண்டவனும், புலன்களை வென்றவனும், தனமும், திரண்டிருக்கும் பிற பொருள்களும் கொண்டவனும், சக்ரனையும் {இந்திரனையும்}, வைஷ்ரவணனையும் {குபேரனையும்} போன்றவனும்,(3) உலகைக் காத்த மனுவைப் போலப் பேரொளி படைத்தவனுமான அந்தத் தசரத ராஜா இந்த உலகைப் பாதுகாத்து வந்தான்[1].(4)
[1] 'தசரதன்'' - தசம் - பத்து; ரதம் - தேர்; தசரதன் - ''ஏககாலத்தில் பத்துத் தேர்களை நடத்த வல்லவன்'' என்று பொருள்.
சத்தியத்தில் உறுதியாக இருப்பவனும், திரிவர்க்கமெனும் மூவகை குணங்களைச் சரியாகக் கடைப்பிடிப்பவனுமான அவன் {தசரதன்}, இந்திரன் அமராவதியை ஆள்வது போல அந்தச் சிறந்த நகரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்தான்.(5) அந்த நகரத்தில் வாழும் மக்கள், செல்வப்பகட்டுள்ளவர்களாகவும், தர்மாத்மாக்களாகவும், கல்விமான்களாகவும், தங்கள் தங்கள் தனத்தில் நிறைவடைந்தவர்களாகவும், பேராசை கொள்ளாதவர்களாகவும், சத்தியவாதிகளாகவும் இருந்தனர்.(6) அந்த உத்தம நகரத்தில் அற்ப வருமானம் உள்ள எவரும் இல்லை, அதேபோல மாடுகள், குதிரைகள், தனம், தானியங்கள் இல்லாமல், {அறம், பொருள், இன்பத்தில்} நிறைவில்லாத குடும்பி[2] ஒருவரும் அங்கே இல்லை.(7) காமாந்தகனாகவோ, கஞ்சனாகவோ, கொடூரனாகவோ, கல்வி கற்காதவனாகவோ, நாஸ்திகனாகவோ புருஷர் எவரையும் அயோத்தியில் காண முடியாது.(8)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு சாதாரண குடும்பம் என்பது மனைவி, பெற்றோர் இருவர், மகன்கள் இருவர், மருமகள்கள் இருவர், மகள் ஒருத்தி, விருந்தினர் ஒருவர் என எண்ணிக்கையில் பத்து உறவினரைக் கொண்ட ஓர் இல்லற அமைப்பாகும்" என்றிருக்கிறது.
நரர்களிலும், நாரியைகளிலும் {ஆடவரிலும், பெண்டிரிலும்} அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப் போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர்.(9) அங்கே காதுகுண்டலங்கள் இல்லாதவர்களும், தலைப்பாகையும், மாலைகளும் அற்றவர்களும், அற்ப போகம் கொள்பவர்களும் எண்ணெய் நீராடல் செய்யாதவர்களும், மேனியில் சந்தனம் பூசாதவர்களும், நறுமணப் பொருள் பூசாதவர்களும் என எவரும் கிடையாது[3].(10) முழு நிறைவின்றி உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும், இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படுவதில்லை.(11) வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும், யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான எவனும் அந்த அயோத்தியில் காணப்படுவதில்லை.(12)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "காதுகுண்டலங்கள் புலமையின் குறியீடுகளாகும். ஒருவன் பெறும் கல்விக்கும் தகுந்த அமைப்பில் அவற்றில் வகைகள் உள்ளன. தலைப்பாகைகள் சமூக அந்தஸ்தைக் குறிக்கும், மற்ற அலங்காரங்கள் அவர்களின் ஆடம்பரத்தைக் குறிக்கும்" என்றிருக்கிறது.
புலன்களை வென்றவர்களான பிராமணர்கள், {வேத கல்வியை} தானமளிப்பவர்களாகவும், {வேதம் பயிலும்} தியான சீலர்களாகவும் இருந்து கொண்டு, அவற்றுக்குப் பிரதி பெறுவதில் கோட்பாட்டுடன்[4] கூடியவர்களாகத் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.(13) அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ, கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படுவதில்லை.(14) வேதாங்கங்களை அறியாதவர்களோ, விரதங்களைத் தவிர்ப்பவர்களோ, ஆயிரங்களில் கொடையளிக்காதவர்களோ, யாதொன்றிலும் இளைத்தவர்களோ, மனக்கலக்கமுற்றவர்களோ, வியாதியில் பீடிக்கப்பட்டவர்களோ ஒருவரும் காணப்படுவதில்லை.(15) அயோத்தியின் நரரிலோ {ஆடவரோ}, நாரீகளிலோ {பெண்டிரிலோ}, ஒருவரும் செல்வமற்றவராகவோ, சிறப்பற்றவராகவோ, ராஜனிடம் பக்தியற்றவராகவோ காணப்படுவது சாத்தியமில்லை.(16)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அறிஞர்கள் பெறும் கொடைகள், பிச்சைக்காரர்கள் பெறும் பிச்சையைப் போன்றதோ, வறுமையில் உள்ளோர் பெறும் ஈகை போன்றதோ கிடையாது. அவர்கள் அனைவரிடமும் அவற்றைப் பெறுவதில்லை. தகுந்தோரிடம் இருந்து மட்டுமே பசுக்கள், தங்க நாணயங்கள், கிராமங்கள், கோவில்களைப் போன்ற நன்கொடைகளை ஏற்பதற்குச் சில விதிமுறைகள் இருக்கின்றன" என்றும், இன்னும் அதிகமும் இருக்கின்றன.
வர்ணங்கள் நான்கில் யாவரும், தேவதைகளையும், அதிதிகளையும் {விருந்தினர்களையும்} பூஜிப்பவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும், சிறப்புமிக்கவர்களாகவும், துணிவுமிக்கச் சூரர்களாகவும் இருந்தார்கள்.(17) அந்த உத்தம புரியில் {அயோத்தியில்}, நரர்கள் {மக்கள்} அனைவரும் தீர்க்காயுள், தர்மம், சத்தியம் ஆகியவற்றுடன் கூடியவர்களாக, புத்திரர்கள் {பிள்ளைகள்}, பௌத்திரர்கள் {பேரப்பிள்ளைகள்}, ஸ்திரீகள் ஆகியோருடன் வாழ்ந்தனர்.(18) க்ஷத்திரியர்கள் பிராமணர்களை மட்டுமே நாடியிருந்தனர், வைசியர்கள் க்ஷத்திரியர்களைப் பின்பற்றினர், சூத்திரர்கள் தங்கள் ஸ்வதர்மத்தை {தங்கள் கடமைகளைச்} செய்தபடியே மூன்று வர்ணங்களையும் உபசரித்து வந்தனர்.(19) முற்காலத்தில் இருந்த விவேகமிக்க மானவேந்திரனான மனுவைப் போலவே இந்த இக்ஷ்வாகுநாதனும் {தசரதனும்} அந்த நகரத்தை நன்றாகப் பாதுகாத்து வந்தான்.(20) எரிகொள்ளியைப் போல் திறன் மிக்கவர்களும், அவமதிப்பைப் பொறுக்காதவர்களும், கல்வி பயின்றவர்களுமான போர்வீரர்கள் கூடிய அந்த நகரமானது, சிங்கங்களுடன் கூடிய ஒரு குகையைப் போல இருந்தது.(21)
காம்போஜம், பாஹ்லீகம், வனாயு ஆகியவற்றிலும் {ஆகிய நாடுகளிலும்}, நதிகளிலும் {சிந்து நதிகளுக்கிடையில் உள்ள நிலங்களிலும்} பிறந்தவையும், இந்திரனின் குதிரையை {உச்சைஷ்ரவத்தைப்} போன்று சிறந்தவையுமான குதிரைகள் அங்கு நிறைந்திருந்தன.(22) விந்திய பர்வதத்தில் பிறந்தவையும், மதங்கொண்டவையும், இமயத்தில் பிறந்தவையும், பருத்தவையும், அதிபலம் கொண்டவையும், பெரும் பர்வதங்களைப் போன்றவையுமான யானைகள் அந்த நகரத்தில் நிறைந்திருந்தன.(23) ஐராவத குலத்தையும், மஹாபத்ம குலத்தையும் சார்ந்தவையும், அஞ்சநாம், வாமனாம் ஆகியவற்றைச் சார்ந்தவையும்,(24) பத்திரம், மந்திரம், மிருகம் போன்ற வகைகளைச் சார்ந்தவையும், பத்திர மந்திர மிருகக் கலப்பு, பத்திர மந்திரக் கலப்பு, பத்திர மிருகக் கலப்பு, மிருக மந்திரக் கலப்பு சார்ந்தவையும், சீற்றமிக்கவையுமான யானைகள் அங்கே மலைகளைப் போல நடந்து கொண்டிருந்தன[5].(25)
[5] பாலகாப்பிய முனிவர் எழுதிய "கஜ சாஸ்திரம்" என்ற நூலில், "பத்திரம், மந்தம், மிருகம் என்ற மூன்று ஜாதிகளில் இரண்டு ஜாதிகுணங்களும், லக்ஷணங்களும் உடையவை மிச்சிர ஜாதி என்றும், மூன்று ஜாதிகளின் குணங்களும் லக்ஷணங்களும் உள்ளவை ஸங்கீர்ண ஜாதி என்றும் கூறப்படுகின்றன. இத்தகைய ஜாதிகள் நான்கு யுகங்களில் உருவானதாகக் கூறப்படுகிறது. பத்திர ஜாதி கிருத யுகத்தைச் சேர்ந்தது. இஃது அழகும், கம்பீரமும் கூடிய சகல லக்ஷணங்களும் உடையது. அடுத்தடுத்த யுகங்களில் அதன் குணங்கள் குறைவுபட்டன. மந்த ஜாதி திரேத யுகத்தைச் சேர்ந்தது. மிருக ஜாதி துவாபர யுகத்தைச் சேர்ந்தது. கலப்பு ஜாதி கலியுகத்தைச் சேர்ந்தது" என்றிருக்கிறது. இது தமிழில் கே.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி மொழிபெயர்ப்பில், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலக வெளியீடாக 1958ல் வெளிவந்திருக்கிறது.
தசரதன் என்ற பெயரைக் கொண்ட அந்த ராஜா, அங்கே வசித்தபடி ஜகத்தை {உலகை} ஆண்டுக் கொண்டிருந்தபோது, அதன் {அந்த நகரத்தின்} பெயரை மெய்ப்பிக்கும் வகையில், அதன் வெளியேயும் இரண்டு யோஜனைகள் தொலைவுக்கு {நல்ல கோட்டைச் சுவர்களுடன்} அது பிரகாசித்துக் கொண்டிருந்தது.(26) பேரொளி படைத்தவனும், மஹானுமான அந்தத் தசரத ராஜன், நட்சத்திரங்களை ஆளும் சந்திரனைப் போலவே பகைவரை அடக்கி அந்த நகரத்தில் இருந்து ஆண்டு வந்தான்.(27) வலிமையான வாயில்களுடனும், உழல் தடிகளுடனும் கூடிய விசித்திரமான வீடுகளுடன் கூடியதும், மகத்தானதும், மங்கலமானதும், ஆயிரக்கணக்கான மக்களால் நிறைந்ததும், பெயருக்குப் பொருந்தும் வகையில் இருந்ததுமான அந்த அயோத்திபுரியில் உண்மையில் சக்ரனுக்கு இணையான மஹீபதியாக அவன் {மண்ணின் தலைவனாக அந்த தசரதன்} ஆட்சி செய்து வந்தான்.(28)
பாலகாண்டம் சர்க்கம் – 06ல் உள்ள சுலோகங்கள்: 28
| Previous | | Sanskrit | | English | | Next |
Labels:
அயோத்தி,
தசரதன்,
பாலகாண்டம்,
வால்மீகி
Location:
Tiruvottiyur, Chennai, Tamil Nadu, India
Thursday, 22 July 2021
அயோத்தி மாநகரம் | பால காண்டம் சர்க்கம் - 05 (23)
Ayodhya described | Bala-Kanda-Sarga-05 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம் : தசரத மன்னனின் மாநகரம்; அதன் ஆடம்பரமும், மகிமையும், குடிமக்களும்...
ஒரு காலத்தில், தீவுகளுடன் கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்} ஆண்டனர்,{1} {அவர்களில்} சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப் புறப்பட்டு சாகரத்தை {பெருங்கடலை} ஆழமாக்கினான்[1].{2} இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும், இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம் தோன்றியது.{3}(1-3) இத்தகைய ஒன்றையே தர்மம், காமம், அர்த்தம் ஆகியவற்றுடன் முழுமையாக {குசனும், லவனுமாகிய} நாங்கள் உரைக்கப் போகிறோம். குதர்க்கமின்றி தொடக்கத்திலிருந்து இது கேட்கப்படட்டும்.(4)
[1] ஸகரனின் {சகரனின்} அறுபதாயிரம் புத்திரர்களால் வெட்டப்பட்டதால் (ஆழமாக்கப்பட்டதால்) சமஸ்கிருதத்தில் கடலுக்கு ''ஸாகரம்'' என்று பெயர் ஏற்பட்டது.
தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருக்கிறது.(5) அங்கே மானவேந்திரனான {மனிதர்களின் மன்னனான} மனுவால் கட்டப்பட்டதும், அயோத்தி என்ற பெயரில் உலகங்களில் புகழ்பெற்றதுமான ஒரு நகரம் இருக்கிறது[2].(6) செழிப்பு நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி {பெருநகரம்}, பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்தது[3].(7) நன்கு அமைக்கப்பட்ட பெரும் ராஜமார்க்கங்கள், பூக்கள் தூவப்பட்டவையாகவும் எப்போதும் நீரில் நனைந்தவையாகவும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(8) மஹாராஷ்டிர விவர்தனனான {பேரரசைச் செழிக்கச் செய்பவனான} ராஜா தசரதன், தேவபதி {இந்திரன்} தேவலோகத்தில் வசிப்பதைப் போல, அந்த நகரத்தையே {அயோத்தியையே} தன் வசிப்பிடமாக்கிக் கொண்டான்.(9)
[2] அயோத்தி - ''அயோத்யா'' எனும் சொல்லுக்கு ''யுத்தத்தில் அசைக்க முடியாதது'' என்று பொருள்.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "1 அங்குலம் என்பது ¾ இன்ச் கொண்டது; 4 அங்குலங்கள் 1 தனுகிரகம் {வில்லின் கைப்பிடி அளவு}; 8 அங்குலங்கள் 1 தனுமுஷ்டி {உயர்த்தப்பட்ட கட்டைவிரலுடன் கூடிய முஷ்டியின் அளவு}; 12 அங்குலங்கள் 1 விதஸ்டி {உள்ளங்கையை விரித்தால் கட்டை விரலின் நுனி முதல், சுண்டு விரலின் நுனி வரையுள்ள அளவு}; 2 விதஸ்டிகள் 1 அரத்னி {அல்லது ஒரு முழம்}; 4 அரத்னிகள் 1 தண்டம் / தனுஸ் {ஒரு வில்லின் அளவு - 6 அடி}; 10 தண்டங்கள் 1 ரஜ்ஜு {60 அடி}; 2 ரஜ்ஜுக்கள் 1 பரிதேசம் {120 அடி}; 2000 தனுஸ்கள் 1 குரோசம் {2000 x 6 = 12,000 அடி} [இது கோரடம் என்றும் அழைக்கப்படுகிறது - இது 4000 யார்டுகள் அளவைக் கொண்டது]; 4 குரோசங்கள் 1 யோஜனை {12,000 x 4 = 48,000 அடி = 14,630 மீட்டர் = 14.63 கி.மீ. = 9.09 மைல்கள்}. ஆனால் பிரிட்டிஷ் வருவாய் துறை 5 மைல்கள் என்ற கணக்கில் ஒரு யோஜனையைக் கொள்கிறது. அகராதிகள் பலவும் அவ்வாறே சொல்கின்றன. இந்த அளவீடுகள் குறித்து கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் இன்னும் அதிக தகவல்கள் கிடைக்கின்றன" என்றிருக்கிறது.
கோட்டை தோரணங்களால் {நுழைவாயில்களால்} சூழப்பட்ட அது, நன்கு அமைக்கப்பட்ட முற்றங்களுடனும், இயந்திரங்கள், ஆயுதங்கள் ஆகிய அனைத்துடனும், சிற்பிகள் அனைவருடனும் கூடியதாக இருந்தது.(10) {துதிக்கும்} சூதர்கள், {விடியலில் எழுப்பும்} மாகதர்கள் ஆகியோரால் நிறைந்ததாகவும், செழிப்பானதாகவும், பெரும்பிரகாசம் கொண்டதாகவும், கொடிக்கம்பங்களுடன் கூடிய மாடி வீடுகளுடனும், நூற்றுக்கணக்கான சதக்னிகளுடன்[4] கூடியதாகவும் அஃது இருந்தது.(11) பெண்களுக்கு நடனங்கற்றுத் தரும் நட்டுவர் கூட்டத்துடன் கூடிய அஃது, அனைத்துப் புறங்களிலும் மாந்தோட்டங்களால் சூழப்பட்டும், கோட்டைச் சுவர்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(12) அந்நியர்கள் கடக்க முடியாத கம்பீரமான அகழிகளைக் கொண்ட அது, குதிரைகளாலும், யானைகளாலும், எருதுகளாலும், ஒட்டகங்களாலும், கழுதைகளாலும் {கோவேறு கழுதைகளாலும்} நிறைந்திருந்தது.(13) கப்பங்கட்டுவதற்காக வந்திருக்கும் அக்கம்பக்கத்து ராஜாக்களின் கூட்டத்தாலும், பல்வேறு தேசங்களில் வசிப்பவர்களான வணிகர்களாலும் அது நிறைந்திருந்தது.(14)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதைக் கொண்டு நூற்றுக் கணக்கானோரைக் கொல்லலாம். இது முட்களுடன் கூடிய ஆயுதம் என்றும் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. கிசாரி மோகன் கங்குலி, மஹாபாரதம் கர்ண பர்வம் பகுதி 97ல் உள்ள அடிக்குறிப்பொன்றில், "சதக்னி {சதம்+அக்னி} என்றால் நூறு கொல்லிகள் என்று பொருள்; ஏவுகணைகளில் {ராக்கெட்டுகளில்} ஒருவகையாக இருக்க வேண்டும்" என்று விளக்குகிறார்.
விலைமதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பர்வங்களை {மலைகளைப்} போன்றவையும், பல அடுக்கு மாடிகளைக் கொண்டவையுமான மாளிகைகளால் நிறைந்திருந்த அஃது {அந்த அயோத்தி} இந்திரனின் அமராவதியைப் போன்றிருந்தது.(15) அஷ்டபதி {சொக்கட்டான் என்றுமழைக்கப்படும் விளையாட்டுப் பலகை} போன்று ஆச்சரியமான வகையில் அமைக்கப்பட்டிருக்குமதில், பெண்களின் கூட்டங்களும் {நாரீகணங்களும்}, விலைமதிப்புமிக்க அனைத்து வகை ரத்தினக் குவியல்களும் நிறைந்த ஏழடுக்கு மாளிகைகள் காட்சிக்கு இனியவையாக இருந்தன.(16) பயன்படுத்தாத இடமென்றேதும் இல்லாமல் சமமான நிலங்களில் நெருக்கமாகவும், நன்றாகவும் கட்டப்பட்டிருக்கும் அவற்றில் {அந்த மாளிகைகளில்} நெல்தானியங்கள் நிறைந்திருந்தன, அங்குள்ள நீர் கரும்புச்சாற்றைப் போன்றிருந்தது.(17) துந்துபி {பேரிகைகள்}, மிருதங்கங்கள், வீணை, பணவம் {உடுக்கைகள்} ஆகியவற்றால் ஒலிக்கப்படும் அது {நகரம்} பூமியில் மிகச் சிறந்ததாகத் திகழ்ந்தது.(18)
சித்தர்களின் தவத்தால் அடையப்பட்ட தெய்வீக விமானம் போல அஃது இருந்தது, நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த அதன் மாடக்கூடங்கள் உத்தம மக்களால் நிறைந்திருந்தது.(19) கரநளினம் கொண்ட அந்த விசாரதர்கள் {திறன்மிக்கவர்கள்}, முன்னும் {தந்தை, பாட்டன்}, பின்னும் {பிள்ளை, பேரப்பிள்ளை என} யாருமில்லாமல் தனித்திருப்பவர்களைக் கொல்லாதவர்களாகவும், தப்பி ஓடுபவர்கள் {அவர்கள் தப்பி ஓடும்} ஒலியைக் கொண்டுக் கணைகளால் கொல்லக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.(20) வனத்தில் முழங்கும் பருத்த சிங்கங்கள், புலிகள், காட்டுப்பன்றிகள் ஆகியவற்றைத் தங்கள் கை பலத்தைப் பயன்படுத்தியும், கூர்முனை ஆயுதங்களைப் பயன்படுத்தியும் அவர்கள் கொல்கிறார்கள்.(21) இவ்வகையிலானோரும், ஆயிரக்கணக்கான பெருந்தேர் வீரர்களும் நிறைந்த அந்த நகரத்தில் ராஜா தசரதன் வசிக்கிறான்.(22) அக்னி வழிபாட்டாளர்களும், நற்குணங்கள் அனைத்தும் பொருந்தியவர்களும், வேதவேதாங்கங்களை நன்கறிந்தவர்களும், ஆயிரக்கணக்கில் கொடையளிப்பவர்களும், சத்தியத்தில் நிலைநிற்பவர்களும், மஹாத்மாக்களும், ஒப்பற்ற மஹரிஷிகளும், சாதாரண ரிஷிகளும், உத்தம பிராமணர்களும் அதை {தசரதனின் வசிப்பிடத்தை / அயோத்தி மாநகரைச்} சூழ்ந்திருக்கின்றனர்.(23)
பாலகாண்டம் சர்க்கம் – 05ல் உள்ள சுலோகங்கள்: 23
| Previous | | Sanskrit | | English | | Next |
Labels:
அயோத்தி,
இராமன்,
குசன்,
பாலகாண்டம்,
லவன்
Location:
Tiruvottiyur, Chennai, Tamil Nadu, India
Subscribe to:
Posts (Atom)
Labels
அகம்பனன்
அகஸ்தியர்
அக்னி
அக்ஷன்
அங்கதன்
அசுவபதி
அஜாமுகீ
அஞ்சனை
அதிகாயன்
அத்ரி
அனசூயை
அனலை
அம்சுமான்
அம்பரீசன்
அயோமுகி
அவித்தர்
அவிந்தியன்
அஸமஞ்சன்
அஹல்யை
ஆதூர்த்தரஜஸ்
இந்திரஜித்
இந்திரன்
இராமன்
இராவணன்
இலக்ஷ்மணன்
இலங்கினி
இல்வலன்
உமை
ஏகஜடை
கங்கை
கசியபர்
கந்தமாதனன்
கந்து
கபந்தன்
கபிலர்
கரன்
கருடன்
காகாசுரன்
காதி
கிருத்திகை
குசத்வஜன்
குசநாபன்
குசன்
குசன்1
குசாம்பன்
கும்பகர்ணன்
கும்பன்
குஹன்
கேசரி
கேசினி
கைகசி
கைகேயி
கோலபன்
கௌசல்யை
கௌசிகி
கௌதமர்
சண்டோதரி
சதபலி
சதாநந்தர்
சத்தியவதி
சத்ருக்னன்
சபரி
சபளை
சமுத்திரன்
சம்பாதி
சரபங்கர்
சரபன்
சரமை
சாகரன்
சாந்தை
சாரணன்
சார்தூலன்
சித்தார்த்தர்
சித்ரரதன்
சிம்ஹிகை
சிவன்
சீதை
சுகன்
சுக்ரீவன்
சுதர்சனர்
சுதாமன்
சுதீக்ஷ்ணர்
சுனசேபன்
சுபார்ஷ்வன்
சுமதி
சுமந்திரன்
சுமித்திரை
சுயஜ்ஞர்
சுஷேணன்
சுஹோத்ரன்
சூரியன்
சூர்ப்பணகை
சூளி
சோணிதாக்ஷன்
ஜடாயு
ஜனகன்
ஜம்புமாலி
ஜஹ்னு
ஜாபாலி
ஜாம்பவான்
தசரதன்
ததிமுகன்
தனு
தர்ம்பிருதர்
தாடகை
தான்யமாலினி
தாரன்
தாரை
திதி
திரிசங்கு
திரிசிரஸ்
திரிஜடர்
திரிஜடை
திலீபன்
துந்துபி
துர்த்தரன்
துர்முகன்
துர்முகி
துவிவிதன்
தூம்ராக்ஷன்
தூஷணன்
தேவாந்தகன்
நந்தி
நராந்தகன்
நளன்
நாரதர்
நிகும்பன்
நிசாகரர்
நீலன்
பகீரதன்
பனஸன்
பரசுராமர்
பரதன்
பரத்வாஜர்
பலி
பாஸகர்ணன்
பிரகஸன்
பிரகஸை
பிரஜங்கன்
பிரபாவன்
பிரம்மதத்தன்
பிரம்மன்
பிரஹஸ்தன்
பிருகு
பிலக்ஷன்
புஞ்சிகஸ்தலை
புஞ்ஜிகஸ்தலை
மகராக்ஷன்
மண்டோதரி
மதங்கர்
மது
மந்தரை
மயன்
மருத்துக்கள்
மஹாபார்ஷ்வன்
மஹோதயர்
மஹோதரன்
மாண்டகர்ணி
மாதலி
மாயாவி
மாரீசன்
மால்யவான்
மைந்தன்
மைனாகன்
மோஹினி
யுதாஜித்
யூபாக்ஷன்
ரம்பை
ரிக்ஷரஜஸ்
ரிசீகர்
ரிஷபன்
ரிஷ்யசிருங்கர்
ருமை
ரோமபாதன்
லவன்
வசிஷ்டர்
வஜ்ரதம்ஷ்டிரன்
வஜ்ரஹனு
வருணன்
வஸு
வாதாபி
வாமதேவர்
வாமனன்
வாலி
வால்மீகி
விகடை
வித்யுஜ்ஜிஹ்வன்
வினதன்
வினதை
விபாண்டகர்
விபீஷணன்
விராதன்
விரூபாக்ஷன்
விஷ்ணு
விஷ்வகர்மன்
விஷ்வாமித்ரர்
விஸ்ரவஸ்
ஸகரன்
ஸுபாஹு
ஸுரஸை
ஸோமதை
ஸ்கந்தன்
ஸ்தூலசிரஸ்
ஸ்வயம்பிரபை
ஹனுமான்
ஹரிஜடை
ஹிமவான்
ஹேமை







