Sunday, 21 August 2022

கௌசல்யையின் வருத்தம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 062 (21)

Kaushalya repents | Ayodhya-Kanda-Sarga-062 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் தவறுக்கு வருந்தி மன்னனைத் தேற்றிய கௌசல்யை; துன்புற்ற தசரதன் உறக்கத்தில் ஆழ்ந்தது...

Kausalya Dasaratha Sumitra

சோகத்தில் பீடிக்கப்பட்ட ராமனின் மாதாவால் {கௌசல்யையால்} இவ்வாறு கோபத்துடன் சொல்லப்பட்ட கடும் வாக்கியங்களைக் கேட்ட ராஜா {தசரதன்} துக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(1) இவ்வாறு சிந்தித்த  அந்த நிருபன் {மனிதர்களின் தலைவனான தசரதன்}, இந்திரியங்கள் கலங்கியவனாக மோஹமடைந்தான் {பொறிகள் கலங்கி மூர்ச்சித்தான்}. அந்தப் பரந்தபன் {பகைவரை எரிப்பவனான தசரதன்}, நீண்ட நேரத்திற்குப் பிறகே தன் நினைவை அடைந்தான்.(2) 

அவன் {தசரதன்}, தன் நினைவு மீண்டதும், தீர்க்க உஷ்ண {நீண்ட வெப்பப்} பெருமூச்சைவிட்டான். தன் அருகில் நிற்கும் கௌசலையைக் கண்டு மீண்டும் {வருந்தி} சிந்திக்கத் தொடங்கினான்.(3) அவ்வாறு அவன் சிந்தித்த போது, சப்தத்தைக் கொண்டு துளைப்பவனாக {ஒலியைக் கொண்டே குறியை எய்பவனாகப்} பூர்வத்தில் அஞ்ஞானத்தால் {அறியாமையால்} தான் செய்த தீச்செயலை நினைத்தான்.(4) பிரபுவான அந்த மஹாராஜா {தசரதன்}, இந்த சோகத்தாலும், ராமனைக் குறித்த சோகத்தினாலும் பீடிக்கப்பட்டவனாக இரட்டை சோகங்களால் மனம் தளர்ந்தான்.(5)

இந்த சோகங்களால் பீடிக்கப்பட்ட அந்த பூபதி {நிலத்தலைவன் தசரதன்}, மெய்நடுங்கி, தலை கவிழ்ந்து கைக்கூப்பிக் கொண்டு, கௌசல்யையின் அருள் வேண்டி இதைச் சொன்னான்:(6) "கௌசல்யா, உன் அருளை வேண்டியே நான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன் {கைக்கூப்பிக் கெஞ்சுகிறேன். என்னை மன்னித்துக் கொள்வாயாக}. பிறரிடம் கூட நீ நித்தியம் வாத்சல்யத்துடனும் {பாசத்துடனும்}, அன்புடனும் இருந்து வருகிறாய்.(7) தேவி, தர்மத்தை உள்ளபடியே அறியும் நாரீகளுக்கு {பெண்களுக்கு}, பர்த்தா {கணவன்} குணவானாகவோ, நிர்குணனாகவோ {குணமற்றவனாகவோ} இருந்தாலும், உண்மையில் அவனே அவர்களுக்குப் பிரத்யக்ஷ தைவதமாவான் {கண்கண்ட தெய்வமாவான்}.(8) உலகத்திலுள்ள நன்மை தீமைகளைப் புரிந்து, நித்தியம் தர்மத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கும் நீ துக்கமடைந்திருந்தாலும், துக்கத்திலிருக்கும் என்னிடம் பிரியமற்ற {விரும்பத்தகாத} சொற்களைப் பேசக்கூடாது" {என்றான் தசரதன்}.(9)

கௌசல்யை, தீனனான ராஜனால் பரிதாபமாகச் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, வாய்க்காலில் பெருகி ஓடும் புது மழைநீரைப் போலக் கண்ணீர் வடித்தாள்.(10) தாமரை மலர் போலக் கூப்பியிருந்த ராஜனின் கைகளைக் குவித்துத் தன் தலையைப் பற்றிக் கொண்டவள் {கௌசல்யை}, அழுது கொண்டே, பயத்துடன் கூடிய அவசரமான சொற்களைக் குழப்பத்துடன் சொன்னாள்:(11) "தேவா, சிரம்பணிந்து உம்மை யாசிக்கிறேன். பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறேன். என்னைக் கேடு பீடித்தது. என்னிடம் நீர் பொறுமை காக்க வேண்டியதில்லை.(12) வீரரே, போற்றத்தகுந்தவனும், புத்திசாலியுமான கணவனால் எந்தப் பெண் வேண்டப்படுவாளோ, அவளுக்கு இரு உலகங்களும் இல்லை {இம்மையையும், மறுமையையும் இல்லை. இவ்வுலகத்திலுள்ளவர்களும் அவளை நிந்திப்பார்கள், பரலோகத்திலும் அவள் தண்டிக்கப்படுவாள்}.(13) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, நான் தர்மங்களை அறிவேன். நீர் சத்தியவாதி என்பதையும் அறிவேன். ஆயினும் புத்திரசோகத்தில் தவித்த நான் மொழிதற்கரிய மொழிகளை மொழிந்தேன்.(14) 

சோகம் தைரியத்தை நாசம் செய்யும், சோகம் கேள்வியை {கல்வியை} நாசம் செய்யும், சோகம் அனைத்தையும் நாசம் செய்யும். சோகத்துக்கு இணையான ரிபு {எதிரி} வேறேதும் இல்லை.(15) எதிரியின் கையிலிருந்து விழும் அடியைத் தாங்கிக் கொள்ள முடியும். திடீரென நேரும் சூக்ஷ்ம {சிறு} சோகத்தையுந் தாங்கிக் கொள்ளவே முடியாது.(16) வீரரே, தர்மத்தை அறிந்தவர்களும், சுருதிகளைக் கற்றவர்களும், தர்மார்த்தங்களில் {அறம், பொருள்களில்} உள்ள சிறு ஐயங்களிலும் தெளிவடைந்தவர்களுமான யதிகளுங் கூட சோகத்தால் மனம் பீடிக்கப்படும்போது வழிதவறுகிறார்கள்.(17) இராமன் வனவாசம் சென்று இன்றோடு பஞ்சராத்திரிகள் {ஐந்து இரவுகள்} ஆகின்றன. சோகத்தால் மகிழ்ச்சி அழிந்த எனக்கு, அது பஞ்ச வருஷங்களை {ஐந்து ஆண்டுகளைப்} போன்றது.(18) நான் அவனை {ராமனைக்} குறித்து சிந்திக்கையில், வேகமான நதிகளால் பெருகும் மஹத்தான சமுத்திர நீரைப் போல என் ஹிருதய சோகம் வளர்கிறது {என்றாள் கௌசல்யை}.(19)

கௌசல்யை இந்த சுபச் சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சூரியன் மந்தமடைந்தான் {ஒளிமங்கினான் / மறைந்தான்}; இரவும் ஆனது.(20) இவ்வாறு கௌசல்யா தேவியால் மகிழ்ந்த அந்த நிருபன், சோகத்தைக் கடந்து நித்திரையின் வசமடைந்தான்.(21)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 062ல் உள்ள சுலோகங்கள் : 21

Previous | Sanskrit | English | Next

அயோத்யா காண்டம் 062ம் ஸர்கம்

வால்மீகிராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ த்³விஷஷ்டிதம꞉ ஸர்க³꞉


Kausalya Dasaratha Sumitra

ஏவம் து க்ருத்³த⁴யா ராஜா ராம மாத்ரா ஸஷோ²கயா |
ஷ்²ராவித꞉ பருஷம் வாக்யம் சிந்தயாம் ஆஸ து³ஹ்கி²த꞉ || 2-62-1

சிந்தயித்வா ஸ ச ந்ருபோ முமோஹ வ்யாகுலேந்த்³ரிய꞉ |
அத² தீ³ர்கே⁴ண காலேந ஸம்ஜ்ஞாமாப பரதப꞉ || 2-62-2

ஸ ஸம்ஜ்ஞாஅமுபலப்³யைவ தீ³ர்க⁴முஷ்ணம் ச நி꞉ஸஸன் |
கௌஸல்யாம் பார்ஷ்²வதோ த்³ருஷ்ட்வா ததஷ்²சிந்தாமுபாக³மத் || 2-62-3

தஸ்ய சிந்தயமாநஸ்ய ப்ரத்யபா⁴த் கர்ம து³ஷ்க்ருதம் |
யத்³ அநேந க்ருதம் பூர்வம் அஜ்ஞாநாத் ஷ²ப்³த³ வேதி⁴நா || 2-62-4

அமநா꞉ தேந ஷோ²கேந ராம ஷோ²கேந ச ப்ரபு⁴꞉ |
த்³வாப்⁴யாமபி மஹாராஜ꞉ ஷோ²காப்³யாமபி⁴தப்யதோ || 2-62-5

த³ஹ்யமாந꞉ து ஷோ²காப்⁴யாம் கௌஸல்யாம் ஆஹ பூ⁴ பதி꞉ |
வேபமாநோ(அ)ஞ்ஜலிம் க்ருத்வா ப்ரஸாத³ர்தமவாங்முக²꞉ || 2-62-6

ப்ரஸாத³யே த்வாம் கௌஸல்யே ரசித꞉ அயம் மயா அந்ஜலி꞉ |
வத்ஸலா ச ஆந்ருஷ²ம்ஸா ச த்வம் ஹி நித்யம் பரேஷ்வ் அபி || 2-62-7

ப⁴ர்தா து க²லு நாரீணாம் கு³ணவான் நிர்கு³ணோ அபி வா |
த⁴ர்மம் விம்ருஷ²மாநாநாம் ப்ரத்யக்ஷம் தே³வி தை³வதம் || 2-62-8

ஸா த்வம் த⁴ர்ம பரா நித்யம் த்³ருஷ்ட லோக பர அவர |
ந அர்ஹஸே விப்ரியம் வக்தும் து³ஹ்கி²தா அபி ஸுது³ஹ்கி²தம் || 2-62-9

தத் வாக்யம் கருணம் ராஜ்ஞ꞉ ஷ்²ருத்வா தீ³நஸ்ய பா⁴ஷிதம் |
கௌஸல்யா வ்யஸ்ருஜத்³ பா³ஷ்பம் ப்ரணாலீ இவ நவ உத³கம் || 2-62-10

ஸ மூத்³ர்ஹ்நி ப³த்³த்⁴வா ருத³தீ ராஜ்ஞ꞉ பத்³மம் இவ அந்ஜலிம் |
ஸம்ப்⁴ரமாத் அப்³ரவீத் த்ரஸ்தா த்வரமாண அக்ஷரம் வச꞉ || 2-62-11

ப்ரஸீத³ ஷி²ரஸா யாசே பூ⁴மௌ நிததிதா அஸ்மி தே |
யாசிதா அஸ்மி ஹதா தே³வ ஹந்தவ்யா அஹம் ந ஹி த்வயா || 2-62-12

ந ஏஷா ஹி ஸா ஸ்த்ரீ ப⁴வதி ஷ்²லாக⁴நீயேந தீ⁴மதா |
உப⁴யோ꞉ லோகயோ꞉ வீர பத்யா யா ஸம்ப்ரஸாத்³யதே || 2-62-13

ஜாநாமி த⁴ர்மம் த⁴ர்மஜ்ஞ த்வாம் ஜாநே ஸத்யவாதி³நம் |
புத்ர ஷோ²க ஆர்தயா தத் து மயா கிம் அபி பா⁴ஷிதம் || 2-62-14

ஷோ²கோ நாஷ²யதே தை⁴ர்யம் ஷோ²கோ நாஷ²யதே ஷ்²ருதம் |
ஷோ²கோ நாஷ²யதே ஸர்வம் ந அஸ்தி ஷோ²க ஸம꞉ ரிபு꞉ || 2-62-15

ஷ²க்யம் ஆபதித꞉ ஸோடு⁴ம் ப்ரஹர꞉ ரிபு ஹஸ்தத꞉ |
ஸோடு⁴ம் ஆபதித꞉ ஷோ²க꞉ ஸுஸூக்ஷ்ம꞉ அபி ந ஷ²க்யதே || 2-62-16

த³ர்மஜ்ஞா꞉ ஷ்²ருதிமந்தோ(அ)பி சிந்நத⁴ர்மார்த²ஸம்ஷ²யா꞉ |
யதயோ வீர முஹ்யந்தி ஷோ²கஸம்மூட⁴சேதஸ꞉ || 2-62-17

வந வாஸாய ராமஸ்ய பந்ச ராத்ர꞉ அத்³ய க³ண்யதே |
ய꞉ ஷோ²க ஹத ஹர்ஷாயா꞉ பந்ச வர்ஷ உபம꞉ மம || 2-62-18

தம் ஹி சிந்தயமாநாயா꞉ ஷோ²கோ அயம் ஹ்ருதி³ வர்த⁴தே |
அதீ³நாம் இவ வேகே³ந ஸமுத்³ர ஸலிலம் மஹத் || 2-62-19

ஏவம் ஹி கத²யந்த்யா꞉ து கௌஸல்யாயா꞉ ஷு²ப⁴ம் வச꞉ |
மந்த³ ரஷ்²மிர் அபூ⁴த் ஸுர்யோ ரஜநீ ச அப்⁴யவர்தத || 2-62-20

தத² ப்ரஹ்லாதி³த꞉ வாக்யை꞉ தே³வ்யா கௌஸல்யயா ந்ருப꞉ |
ஷோ²கேந ச ஸமாக்ராந்த꞉ நித்³ராயா வஷ²ம் ஏயிவான் || 2-62-21

இத்யார்ஷே ஷ்²ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ த்³விஷஷ்டிதம꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Saturday, 20 August 2022

கௌசல்யை நிந்தனை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 061 (27)

The censure of Kausalya | Ayodhya-Kanda-Sarga-061 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை நாடு கடத்தும் தசரதனின் தீச்செயலை நிந்தித்த கௌசல்யை; பெருந்துயரில் மூர்ச்சித்து விழுந்த தசரதன்...

Kausalya Dasaratha Sumitra

தர்மத்திற் சிறந்தவனும், மகிழ்ச்சியளிப்பவர்களில் சிறந்தவனுமான ராமன் வனத்திற்குச் சென்றதால் வேதனையடைந்த கௌசல்யை, அழுது கொண்டே தன் பர்த்தாவிடம் {கணவன் தசரதனிடம்} இதைச் சொன்னாள்:(1) "இராகவர் {தசரதர்} கருணையுள்ளவர், தாராள மனம் படைத்தவர், பிரியவாதி {அன்புடன் பேசுபவர்} என்று மூவுலகங்களிலும் உமது மகத்தான புகழ் பரவியிருந்தாலும் {என்ன பயன்?},(2) நரவரசிரேஷ்டரே {முதன்மையான மனிதர்களில் சிறந்தவரே}, சுகமாக வளர்ந்து, துக்கத்தில் பீடிக்கப்பட்டவர்களான உமது புத்திரர்கள் இருவரும், சீதையும் எவ்வாறு வன துக்கத்தை சகிப்பார்கள்?(3) சியாம தாருணியும் {இளமையின் உச்சத்தில் இருப்பவளும்}[1], சுகுமாரியும், சுகத்திற்கே தகுந்தவளுமான அந்த மைதிலி உஷ்ணத்தையும், சீதத்தையும் {வெப்பத்தையும், குளிரையும்} உண்மையில் எவ்வாறு சகித்துக் கொள்வாள்?(4) சுவைமிக்க குழம்புடன் கூடிய சுப உணவை உண்டவளும், விசாலாக்ஷியுமான {நீள்விழியாளுமான} சீதை, வன அரிசியில் உண்டான ஆஹாரத்தை எவ்வாறு உண்பாள்?(5) சுபமான கீத வாத்திய மென் கோஷங்களை {நல்ல பாடல், இசைக்கருவிகளின் மெல்லிசையைக்} கேட்ட அந்த நிந்திக்கத்தகாதவள், ஊனுண்ணும் விலங்குகள், சிங்கங்கள் ஆகியவற்றின் கொடுஞ்சத்தத்தை எவ்வாறு கேட்பாள்?(6)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சியாமம் என்ற சொல்லை நாம் தெரிந்தே மொழிபெயர்க்காமல் விட்டிருக்கிறோம். இதன் வழக்கமான பொருள் கருமை என்பதாகும். ஆனால் சியாமம் என்பது பிள்ளை பெறாத பெண்ணையும் குறிக்கும். இந்த இரண்டாம் பொருளே இங்கே பொருந்தும்" என்றிருக்கிறது.

மஹாபுஜனும், மஹேந்திரனின் துவஜத்தை {இந்திரனின் கொடியைப்} போல மிளிர்பவனுமான அந்த மஹாபலன் {வலிமைமிக்கவனான ராமன்}, பரிகத்தைப் போன்ற தன் புஜங்களையே தலையணையாகக் கொண்டு எங்கே படுத்திருக்கிறானோ?(7) பத்ம வர்ணத்தையும் {தாமரையின் நிறத்தையும்}, அழகிய கேசத்தையும் {தலைமுடியையும்}, பத்ம நறுமண சுவாசத்தையும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும் கொண்டதும், உத்தமமானதுமான ராமனின் வதனத்தை {முகத்தை} நான் எப்போது காண்பேன்?(8) அவனைக் காணாமலும் ஆயிரம் துண்டுகளாக பிளக்காமலிருக்கும் என் ஹிருதயம் நிச்சயம் வஜ்ரசாரமயமானதே {வஜ்ரத்தாலானதே}. இதில் ஐயமேதுமில்லை.(9) சுகத்திற்குத் தகுந்தவர்களும், என் ஆப்த பந்துக்களுமான அவர்கள், உம்மால் கருணையின்றி விரட்டப்பட்டுப் பரிதாபத்திற்குரியவர்களாக வனத்தில் திரிகிறார்கள்.(10) 

பஞ்சதச வருஷத்தில் {பதினைந்தாம் ஆண்டில்} ராகவன் திரும்பிவந்தாலும், பரதன் ராஜ்ஜியத்தையும், கோஷத்தையும் {கருவூலத்தையும்} கைவிடுவானென நினைக்கலாகாது.(11) சிலர் சிராத்தங்களிலும் தங்கள் பந்துக்களுக்கே போஜனம் {உணவு} அளிப்பார்கள், காரியம் முடிந்த பின்னரே துவிஜரிஷபர்களை {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்களைத்} தேடுவார்கள்.(12) குணவான்களும், வித்வாம்சம் கொண்டவர்களும் {கல்விமான்களும்}, ஸுரர்களுக்கு {தேவர்களுக்கு} ஒப்பானவர்களுமான  துவிஜர்கள் {தேவர்களுக்கு ஒப்பான இருபிறப்பாளர்கள்}, அமுதமாகவே இருப்பினும் பிறருக்கு {பிறர் உண்ட} பிறகு அதை ஏற்க மாட்டார்கள்.(13) {அவ்வாறு உண்டது} நிறைவடைந்தது பிராமணர்களாகவே இருப்பினும், கொம்புகள் ஒடிக்கப் பொறாத ரிஷபங்களைப் போன்ற ஞானமுள்ள துவிஜரிஷபர்கள் அதை உண்ண மாட்டார்கள்.(14) விஷாம்பதியே {உலகத் தலைவரே}, உடன்பிறந்தவர்களில் சிறந்த ஜேஷ்டன் {சகோதரர்களில் சிறந்தவனான மூத்தவன்}, உடன்பிறந்தவர்களில் இளையவனால் அனுபவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை ஏன் மறுக்க மாட்டான்?(15) வேறொன்றால் உண்ணப்பட்ட பக்ஷியத்தை உண்ண விரும்பாத வியாகரத்தை {புலியைப்} போலவே, அந்த நரவியாகரனும் {மனிதர்களில் புலியான ராமனும்}, ஏற்கனவே அனுபவிக்கப்பட்டதை ஏற்க மாட்டான்.(16) {வேள்வியில்} ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ஹவிஸ், நெய், புரோடசம் {பிண்டம்}, குசம் {தர்ப்பை}, காதிரை {கருங்காலி} மரத்தால் செய்யப்பட்ட யூபஸ்தம்பங்கள் ஆகியவற்றை மறுமுறை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.(17) அவ்வாறே ராமனும், சாரம் போன சுராபானத்தைப் போலவோ, சோமம் இல்லாத வேள்வியைப் போலவோ, பிறரால் அபகரிக்கப்பட்ட இந்த ராஜ்ஜியத்தை ஏற்கமாட்டான்[2].(18) 

[2] சில பதிப்புகளில் இதன்பிறகு இன்னும் மூன்று சுலோகங்கள் இருக்கின்றன. நரசிம்மாசாரியர் பதிப்பில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவாறு அவற்றின் பொருளைப் பின்வருமாறு கொள்ளலாம்: "ராமன் மிகவும் கோபித்துக் கொண்டிருப்பானாயின், இப்படிப்பட்ட அவமானத்தை அவன் அடைந்தேயிருக்கமாட்டான். அவன் கோபித்துக் கொள்வானாயின், தீக்ஷ்ணங்களாகிய தனது பாணங்களால் மந்தரபர்வதத்தையும் இரு பிளவாகப் பிளந்துவிடுவான்.{19} தான் இப்படிப்பட்ட மஹானுபாவனாயினும், அவன் உன்னை மாத்ரம் தந்தையென்கிற கௌரவத்தைப் பற்றி அடிக்க முயலான். ராமன் கோபமுறுவானாயின், சந்த்ர ஸூர்யர்களோடும் நக்ஷத்ரங்களோடுங் கூடிய ஆகாயத்தையாயினும் ஸ்வர்க்கத்தையாயினும் அறுத்துத் தள்ளிவிடுவான்.{20} நூறு நூறாகப் பர்வதங்கள் நிரம்பிய பூமண்டலம் முழுவதையும் கலங்கடித்து வெல்லவும் வல்லமையுள்ளவன். அப்படிப்பட்ட ஸமர்த்தனாயினும் அவன் உன்னை மாத்ரம் உல்லங்கனஞ் செய்யாதிருக்கின்றனன்.{21}" என்றிருக்கிறது. இவற்றையுஞ் சேர்த்தால் இந்த சர்க்கத்தில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கை 30 ஆகும். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பு, தாதாசாரியர் பதிப்பு ஆகிய தமிழ்ப்பதிப்புகளிலும், கே.எம்.கே.மூர்த்தி, பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் ஆங்கிலப்பதிப்புகளிலும் இந்த மூன்று சுலோகங்களும் விடுபட்டிருக்கின்றன. தமிழில் நரசிம்மாசாரியரின் பதிப்பில் அடைப்புக்குறிக்குள்ளும், ஆங்கிலத்தில் வி.வி.சுப்பாராவ் பதிப்பிலும் இவை இருக்கின்றன.

வாலைத் தீண்டவும் பொறுக்காத பலமிக்க சார்தூலத்தை {புலியைப்} போலவே, ராகவனும் {ராமனும்} அவ்விதமான அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள மாட்டான்.(19) உலகங்கள் ஒன்றுகூடி பெரும்போரில் ஈடுபட்டாலும், அவற்றால் அவனிடம் பயத்தை உண்டாக்க முடியாது. அந்த தர்மாத்மா, அதர்மமான இந்த உலகத்திற்கு தர்மத்தைச் செய்வான்.(20) மஹாபுஜங்களைக் கொண்ட அந்த மஹாவீரன் {ராமன்}, யுகாந்தத்தில் {யுகமுடிவில்} போலவே, தன் காஞ்சனபாணங்களால் {பொற்கணைகளால்} பூதங்கள் அனைத்தையும், சாகரத்தையும் {கடலையுங்கூட} நிச்சயம் எரித்துவிடுவான்.(21) அத்தகைய சிம்மபலங்கொண்டவனும், ரிஷபத்தின் கண்களைக் கொண்டவனுமான அந்த நரரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்}, ஜலஜேனத்தால் {மீனால்} கொல்லப்படும் {மீன்}குஞ்சுகளைப் போலத் தன் பிதாவாலேயே கொல்லப்பட்டான்.(22) தர்மத்தைப் பின்பற்றும் புத்திரன் உம்மால் நாடுகடத்தப்பட்டான். இஃது உமக்கு சாஸ்திரங்களில் காணப்படும் தர்மமா? அல்லது துவிஜர்களால் பின்பற்றப்படும் சனாதனமா {தொன்மையான, அழிவில்லாத நித்திய நடைமுறையா}?[3](23) 

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "துவிஜன் என்பது, ஒரு வகை இரண்டாம் பிறப்பாகும், அதாவது அவன் கல்வி முடித்து உபநயன சடங்கைச் செய்து இரு பிறப்பாளன் ஆனவன். துவிஜன் என்பது பிராமணரைக் குறிப்பதாக அடிக்கடி பொருள் கொள்ளப்பட்டாலும், முதல் மூன்று வர்ணத்தாரும் பூணூல் அணியும் துவிஜர்களே" என்றிருக்கிறது.

ராஜரே, ஒரு நாரியைக்கு {பெண்ணுக்கு} பதியே முதன்மையான கதியாவான், ஆத்மஜன் {மகன்} இரண்டாம் கதி, ஞாதிகள் {நெருக்கமான உறவினர்கள்} மூன்றாம் கதி, இங்கே {இவ்வுலகில்} நான்காவது கதியேதும் கிடையாது.(24) இவற்றில் {இந்த மூன்றில்} நீர் இல்லை, ராமனும் வனத்தில் தஞ்சம் புகுந்தான். நான் வனத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அனைத்து வழிகளிலும் உம்மால் நான் அழிந்தேன்.(25) இந்த ராஜ்ஜியமும், ராஷ்டிரங்களும் உம்மால் அழிக்கப்பட்டன. நீரும், மந்திரிகளும் அழிந்துவிட்டீர்கள். புத்திரனுடன் நானும் அழிந்தேன். நகரவாசிகளும் அழிந்தனர். உமது சுதனும் {உமது மகன் பரதனும்}, பாரியையும் {உமது மனைவியான கைகேயியும்} மகிழ்ச்சியாக இருக்கட்டும்" {என்றாள் கௌசல்யை}.(26)

கொடுஞ்சொற்களுடன் கூடிய இந்தக் ஒலியைக் கேட்ட ராஜா, துக்கத்தில் மோஹமடைந்தான் {மூர்ச்சை அடைந்தான்}. அதன்பிறகு அந்தப் பார்த்திபன் {மண்ணின் தலைவன்}, தன் தீச்செயலை மீண்டும் நினைத்து சோகத்தில் விழுந்தான்.(27)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 061ல் உள்ள சுலோகங்கள் : 27

Previous | Sanskrit | English | Next

அயோத்யா காண்டம் 061ம் ஸர்கம்

வால்மீகிராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ ஏகஷஷ்டிதம꞉ ஸர்க³꞉


Kausalya Dasaratha Sumitra

வநம் க³தே த⁴ர்ம பரே ராமே ரமயதாம் வரே |
கௌஸல்யா ருத³தீ ஸ்வார்தா ப⁴ர்தாரம் இத³ம் அப்³ரவீத் || 2-61-1

யத்³யபி த்ரிஷு லோகேஷு ப்ரதி²தம் தே மயத்³ யஷ²꞉ |
ஸாநுக்ரோஷோ² வதா³ந்ய꞉ ச ப்ரிய வாதீ³ ச ராக⁴வ꞉ || 2-61-2

கத²ம் நர வர ஷ்²ரேஷ்ட² புத்ரௌ தௌ ஸஹ ஸீதயா |
து³ஹ்கி²தௌ ஸுக² ஸம்வ்ருத்³தௌ⁴ வநே து³ஹ்க²ம் ஸஹிஷ்யத꞉ || 2-61-3

ஸா நூநம் தருணீ ஷ்²யாமா ஸுகுமாரீ ஸுக² உசிதா |
கத²ம் உஷ்ணம் ச ஷீ²தம் ச மைதி²லீ ப்ரஸஹிஷ்யதே || 2-61-4

பு⁴க்த்வா அஷ²நம் விஷா²ல அக்ஷீ ஸூப த³ம்ஷ² அந்விதம் ஷு²ப⁴ம் |
வந்யம் நைவாரம் ஆஹாரம் கத²ம் ஸீதா உபபோ⁴க்ஷ்யதே || 2-61-5

கீ³த வாதி³த்ர நிர்கோ⁴ஷம் ஷ்²ருத்வா ஷு²ப⁴ம் அநிந்தி³தா |
கத²ம் க்ரவ்ய அத³ ஸிம்ஹாநாம் ஷ²ப்³த³ம் ஷ்²ரோஷ்யதி அஷோ²ப⁴நம் || 2-61-6

மஹா இந்த்³ர த்⁴வஜ ஸம்காஷ²꞉ க்வ நு ஷே²தே மஹா பு⁴ஜ꞉ |
பு⁴ஜம் பரிக⁴ ஸம்காஷ²ம் உபதா⁴ய மஹா ப³ல꞉ || 2-61-7

பத்³ம வர்ணம் ஸுகேஷ² அந்தம் பத்³ம நிஹ்ஷ்²வாஸம் உத்தமம் |
கதா³ த்³ரக்ஷ்யாமி ராமஸ்ய வத³நம் புஷ்கர ஈக்ஷணம் || 2-61-8

வஜ்ர ஸாரமயம் நூநம் ஹ்ருத³யம் மே ந ஸம்ஷ²ய꞉ |
அபஷ்²யந்த்யா ந தம் யத்³ வை ப²லதி இத³ம் ஸஹஸ்ரதா⁴ || 2-61-9

யத்த்வயா கருணம் கர்ம வ்யபோஹ்ய மம பா³ந்த⁴வா꞉ |
நிரஸ்தா பரிதா⁴வந்தி ஸுகா²ர்ஹ꞉ க்ருபணா வநே || 2-61-10

யதி³ பஞ்சத³ஷே² வர்ஷே ராக⁴வ꞉ புநரேஷ்யதி |
ஜஹ்யாத்³ராஜ்யம் ச கோஷ²ம் ச ப⁴ரதோ நோபல்ஸ்க்²யதே || 2-61-11

போ⁴ஜயந்தி கில ஷ்²ராத்³தே⁴ கேசித்ஸ்வநேவ பா³ந்த⁴வான் |
தத꞉ பஷ்²சாத்ஸமீக்ஷந்தே க்ருதகார்யா த்³விஜர்ஷபா⁴ன் || 2-61-12

தத்ர யே கு³ணவந்தஷ்²ச வித்³வாம்ஸஷ்²ச த்³விஜாதய꞉ |
ந பஷ்²சாத்தே(அ)பி⁴மந்யந்தே ஸுதா⁴மபி ஸுரோபமா꞉ || 2-61-13

ப்³ராஹ்மணேஷ்வபி த்ருப்தேஷு பஷ்²சாத்³போ⁴க்தும் த்³விஜர்ஷபா⁴꞉ |
நாப்⁴யுபைதுமலம் ப்ராஜ்ஞா꞉ ஷ்²ருங்க³ச்சேத³மிவர்ஷ்பா⁴꞉ || 2-61-14

ஏவம் கநீயஸா ப்⁴ராத்ரா பு⁴க்தம் ராஜ்யம் விஷா²ம் பதே |
ப்⁴ராதா ஜ்யேஷ்டா² வரிஷ்டா²꞉ ச கிம் அர்த²ம் ந அவமம்ஸ்யதே || 2-61-15

ந பரேண ஆஹ்ருதம் ப⁴க்ஷ்யம் வ்யாக்⁴ர꞉ கா²தி³தும் இச்சதி |
ஏவம் ஏவ நர வ்யாக்⁴ர꞉ பர லீட⁴ம் ந மம்ஸ்யதே || 2-61-16

ஹவிர் ஆஜ்யம் புரோடா³ஷா²꞉ குஷா² யூபா꞉ ச கா²தி³ரா꞉ |
ந ஏதாநி யாத யாமாநி குர்வந்தி புநர் அத்⁴வரே || 2-61-17

ததா² ஹி ஆத்தம் இத³ம் ராஜ்யம் ஹ்ருத ஸாராம் ஸுராம் இவ |
ந அபி⁴மந்தும் அலம் ராம꞉ நஷ்ட ஸோமம் இவ அத்⁴வரம் || 2-61-18

{ந சேமாம் த⁴ர்ஷணாம் ராம ஸங்க³ச்சே²த³த்யமர்ஷண꞉ |
தா³ரயேந்மந்த³ரமபி ஸ ஹி க்ருத்³த⁴ஷ்²ஷி²தைஷ்²ஷ²ரை꞉ || 2-61-19

த்வாம் து நோத்ஸஹதே ஹந்தும் மஹாத்மா பித்ருகௌ³ரவாத் |
ஸஸோமார்கக்³ரஹக³ணம் நப⁴ஸ்தாராவிசித்ரிதம் || 2-61-20

பாதயேத்³யோதி³வம் க்ருத்³த⁴ஸ்ஸத்வாம் ந வ்யதிவர்ததே |
ப்ரக்ஷோப⁴யேத்³வாரயே த்³வா மஹீம் ஷை²லஷ²தாசிதாம் || 2-61-21}

ந ஏவம் வித⁴ம் அஸத்காரம் ராக⁴வோ மர்ஷயிஷ்யதி |
ப³லவான் இவ ஷா²ர்தூ³லோ பா³லதே⁴ர் அபி⁴மர்ஷ²நம் || 2-61-19

நைதஸ்ய ஸஹிதா லோகா ப⁴யம் குர்யுர்மஹாம்ருதே⁴ |
அத⁴ர்மம் த்விஹ த⁴ர்மாத்மா லோகம் த⁴ர்மேண யோஜயேத் || 2-61-20

நந்வஸௌ காஞ்சநைர்பா³ணைர்மஹாவீர்யோ மஹாபு⁴ஜ꞉ |
யுகா³ந்த இவ பூ⁴தாநி ஸாக³ராநபி நிர்த³ஹேத் || 2-61-21

ஸ தாத்³ருஷ²꞉ ஸிம்ஹ ப³லோ வ்ருஷப⁴ அக்ஷோ நர ருஷப⁴꞉ |
ஸ்வயம் ஏவ ஹத꞉ பித்ரா ஜலஜேந ஆத்மஜோ யதா² || 2-61-22

த்³விஜாதி சரித꞉ த⁴ர்ம꞉ ஷா²ஸ்த்ர த்³ருஷ்ட꞉ ஸநாதந꞉ |
யதி³ தே த⁴ர்ம நிரதே த்வயா புத்ரே விவாஸிதே || 2-61-23

க³திர் ஏவாக் பதிர் நார்யா த்³விதீயா க³திர் ஆத்மஜ꞉ |
த்ருதீயா ஜ்ஞாதயோ ராஜம꞉ சதுர்தீ² ந இஹ வித்³யதே || 2-61-24

தத்ர த்வம் சைவ மே ந அஸ்தி ராம꞉ ச வநம் ஆஷ்²ரித꞉ |
ந வநம் க³ந்தும் இச்சாமி ஸர்வதா² ஹி ஹதா த்வயா || 2-61-25

ஹதம் த்வயா ராஜ்யம் இத³ம் ஸராஷ்ட்ரம் |
ஹத꞉ ததா² ஆத்மா ஸஹ மந்த்ரிபி⁴꞉ ச |
ஹதா ஸபுத்ரா அஸ்மி ஹதா꞉ ச பௌரா꞉ |
ஸுத꞉ ச பா⁴ர்யா ச தவ ப்ரஹ்ருஷ்டௌ || 2-61-26

இமாம் கி³ரம் தா³ருண ஷ²ப்³த³ ஸம்ஷ்²ரிதாம் |
நிஷ²ம்ய ராஜா அபி முமோஹ து³ஹ்கி²த꞉ |
தத꞉ ஸ ஷோ²கம் ப்ரவிவேஷ² பார்தி²வ꞉ |
ஸ்வது³ஷ்க்ருதம் ச அபி புந꞉ ததா³ அஸ்மரத் || 2-61-27

இத்யார்ஷே ஷ்²ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ ஏகஷஷ்டிதம꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Thursday, 18 August 2022

கௌசல்யை புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 060 (23)

The lament of Kaushalya | Ayodhya-Kanda-Sarga-060 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அழுது புலம்பிய கௌசல்யை; ஆறுதல் கூறிய சுமந்திரன்...

Kaushalya and Sumantra

அப்போது தெளிவான மனநிலையின்றி, பூதத்தால் பீடிக்கப்பட்டவளைப் போலத் தரையில் கிடந்து தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த கௌசல்யை, அந்த சூதனிடம் {சுமந்திரனிடம், பின்வருமாறு} பேசினாள்:(1) "காகுத்ஸ்தனும் {ராமனும்}, சீதையும் எங்கேயிருக்கின்றனரோ, லக்ஷ்மணன் எங்கே இருக்கின்றானோ அங்கே என்னை அழைத்துச் செல்வீராக. அவர்கள் இல்லாமல் ஒரு க்ஷணமும் இங்கே ஜீவித்திருக்க எனக்கு விருப்பமில்லை.(2) இரதத்தை சீக்கிரம் திருப்புவீராக. என்னையும் தண்டகத்திற்கு {தண்டகவனத்திற்கு} அழைத்துச் செல்வீராக. இனியும் அவர்களைப் பின்தொடராமல் இருந்தால் யம க்ஷயத்தையே {யமனின் வசிப்பிடத்தையே} நான் அடைவேன்" {என்றாள் கௌசல்யை}.(3)

கண்ணீர் பெருக்கினால் தடைபட்டுக் குரலுடைந்த அந்த சூதன், கூப்பிய கைகளுடனும், மெல்லிய தொனியுடனும் அந்த தேவியை {கௌசலையை} ஆசுவாசப்படுத்துவதற்காக இதைச்சொன்னான்:(4) "சோகத்தையும், மோஹத்தையும், துக்கத்தில் பிறந்த குழப்பத்தையும் கைவிடுவாயாக. சந்தாபத்தை {மனத்துன்பத்தைக்} கைவிட்டு வனத்தில் வசிக்க ராமனால் இயலும்.(5) ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, வனத்தில் ராமனின் பாதங்களில் பரிசரணமடைந்தவனுமான லக்ஷ்மணனும், பரலோகத்தையே ஆராதித்து {தொழுது} கொண்டிருக்கிறான்.(6) 

சீதையின் மனத்தில் ராமனே நிலைத்திருப்பதால், ஜனங்களற்ற வனத்திலும் கிருஹத்திற்கு ஒப்பான வசிப்பிடத்தை அடைந்ததைப் போன்ற தன்னம்பிக்கையுடன் நிம்மதியாக இருக்கிறாள்.(7) சூக்ஷ்மமாகவோ, மிகச் சிறிய அளவிலோ கூட அவளிடம் {சீதையிடம்} தைன்யத்தை {மனத்தளர்ச்சியை} நான் காணவில்லை. அந்த வைதேஹி, பிரவாசானங்களுக்கு உசிதமானவள் {நாடுகள் பல கடந்து பயணிக்கத் தகுந்தவள்} போல எனக்குத் தோன்றுகிறது.(8) பூர்வத்தில் நகர உபவனத்தை எவ்வாறு ரசித்தாளோ, அவ்வாறே ஜனங்களற்ற வனத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(9) பால சந்திரனுக்கு ஒப்பான முகத்தைக் கொண்ட அழகியும், ராமனிடம் மனத்தை நிலைக்கச் செய்தவளுமான சீதை, ஜனங்களற்ற வனத்தில் இருந்தாலும், ஒரு சிறுமியைப் போல மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(10) அவளது ஹிருதயம் அவனிடம் செல்கிறது, அவளது ஜீவிதமும் அவனிடம் நிலைத்திருக்கிறது. இராமன் இல்லாத அயோத்தியே அவளுக்கு வனமாகும்.(11) அயோத்தியிலிருந்து ஒரு குரோசம் மாத்திரமே அகன்றிருப்பதைப் போலவும், ஏதோ அதன் {அயோத்தியின்} தோட்டத்தில் இருப்பதைப் போலவும் அந்த வைதேஹி, கிராமங்களையும், நகரங்களையும், நதிகளின் வழிகளையும் {பிரவாஹங்களையும்}, விதவிதமான மரங்களையும் கண்டு ராமனிடமோ, லக்ஷ்மணனிடமோ விசாரித்து அவற்றைக் குறித்து அறிந்து கொள்கிறாள்.(12,13) அவளைக் குறித்து இவற்றை மட்டுமே நான் நினைவில் கொண்டிருக்கிறேன். கைகேயி குறித்து அவள் திடீரெனச் சொன்ன வாக்கியம் என் நினைவுக்கு வர மறுக்கிறது" {என்றான் சுமந்திரன்}.(14) 

அந்த சூதன் {சுமந்திரன்}, கவனமின்றி தன் உதட்டருகே வந்த அந்த வாக்கியங்களை விலக்கிவிட்டு, மகிழ்ச்சியான, மதுரமான சொற்களையே அந்த தேவியிடம் {கௌசல்யையிடம்} சொன்னான்:(15) "சந்திரக்கதிர்களுக்கு நிகரான சீதையின் பிரபையானது {உடற்பிரகாசமானது}, பயணத்தினாலோ, வாயு வேகத்தினாலோ, வனத்தின் திகைப்பினாலோ, சூரிய வெப்பத்தினாலோ வதங்கவில்லை.(16) பொதுநலத்தில் அக்கறையுடன் கூடியதும், பூர்ண சந்திரனுக்கு ஒப்பானதுமான பிரபையை {பிரகாசத்தைக்} கொண்ட வைதேஹியின் வதனம் {முகம்} வாட்டமேதும் அடையாமலிருந்தது.(17) அவளது சரணங்கள் {பாதங்கள்}, அலக்தம் {செம்பஞ்சுக் குழம்பு / மருதாணி} பூசப்படாவிட்டாலும், அந்த அலக்தம் போலவே சிவப்பாகவும், செந்தாமரை மொட்டுகளுக்கு இணையான காந்தியுடனும் இருந்தன.(18) சிணுங்கும் நூபுரங்களுடன் {சிலம்புகளுடன்} விளையாடியபடியே நடந்து செல்லும் பாமினியான அந்த வைதேஹி, அவனிடம் {ராமனிடம்} கொண்ட அன்பினால் இப்போதும் பூஷணங்களை {ஆபரணங்களைக்} கைவிட்டிருக்கிறாள்.(19) இராமனின் கரங்களில் தஞ்சம்புகுந்து, வனத்தில் வசித்திருக்கும் அவள், கஜத்தையோ, சிம்மத்தையோ, வியாகரத்தையோ {யானை, சிங்கம், புலி ஆகியவற்றைக்} கண்டு அச்சமடையாமல் இருக்கிறாள்.(20) அவர்களுக்காகவோ, நமக்காகவோ, மன்னருக்காகவோ நாம் பரிதாபப்பட வேண்டியதில்லை. இந்தக் கதை எப்போதும் உலகில் விருத்தியடைந்து கொண்டிருக்கும்.(21) அவர்கள் சோகத்தைக் கைவிட்டு, மகிழ்ச்சியான மனத்துடன், மஹாரிஷிகளின் பாதையைப் பின்பற்றி, வனத்தின் பழங்களை உண்டு, வனவாழ்வில் மகிழ்ந்து, தங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காத்து வருகின்றனர்" {என்றான் சுமந்திரன்}.(22)

நன்றாகப் பேசிக்கொண்டிருந்த அந்த சூதனால் இவ்வாறு தடுக்கப்பட்டாலும், அந்த தேவி தன் மகன் நிமித்தமாக உண்டான சோகத்தில் மெலிந்து, "இராகவா" என்றும், "பிரியமான புத்திரா" என்றும், நிறுத்தாமல் {ஓயாமல்} அழுது கொண்டிருந்தாள்.(23)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 060ல் உள்ள சுலோகங்கள் : 23

Previous | Sanskrit | English | Next

அயோத்யா காண்டம் 060ம் ஸர்கம்

வால்மீகிராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ ஷ்ஷ்டிதம꞉ ஸர்க³꞉


Kaushalya and Sumantra

தத꞉ பூ⁴த உபஸ்ருஷ்டா இவ வேபமாநா புந꞉ புந꞉ |
த⁴ரண்யாம் க³த ஸத்த்வா இவ கௌஸல்யா ஸூதம் அப்³ரவீத் || 2-60-1

நய மாம் யத்ர காகுத்ஸ்த²꞉ ஸீதா யத்ர ச லக்ஷ்மண꞉ |
தான் விநா க்ஷணம் அபி அத்ர ஜீவிதும் ந உத்ஸஹே ஹி அஹம் || 2-60-2

நிவர்தய ரத²ம் ஷீ²க்⁴ரம் த³ண்ட³கான் நய மாம் அபி |
அத² தான் ந அநுக³ச்சாமி க³மிஷ்யாமி யம க்ஷயம் || 2-60-3

பா³ஷ்ப வேகௌ³பஹதயா ஸ வாசா ஸஜ்ஜமாநயா |
இத³ம் ஆஷ்²வாஸயன் தே³வீம் ஸூத꞉ ப்ராந்ஜலிர் அப்³ரவீத் || 2-60-4

த்யஜ ஷோ²கம் ச மோஹம் ச ஸம்ப்⁴ரமம் து³ஹ்க²ஜம் ததா² |
வ்யவதூ⁴ய ச ஸம்தாபம் வநே வத்ஸ்யதி ராக⁴வ꞉ || 2-60-5

லக்ஷ்மண꞉ ச அபி ராமஸ்ய பாதௌ³ பரிசரன் வநே |
ஆராத⁴யதி த⁴ர்மஜ்ஞ꞉ பர லோகம் ஜித இந்த்³ரிய꞉ || 2-60-6

விஜநே அபி வநே ஸீதா வாஸம் ப்ராப்ய க்³ருஹேஷ்வ் இவ |
விஸ்ரம்ப⁴ம் லப⁴தே அபீ⁴தா ராமே ஸம்ந்யஸ்த மாநஸா || 2-60-7

ந அஸ்யா தை³ந்யம் க்ருதம் கிஞ்சித் ஸுஸூக்ஷ்மம் அபி லக்ஷயே |
உசிதா இவ ப்ரவாஸாநாம் வைதே³ஹீ ப்ரதிபா⁴தி மா || 2-60-8

நக³ர உபவநம் க³த்வா யதா² ஸ்ம ரமதே புரா |
ததை²வ ரமதே ஸீதா நிர்ஜநேஷு வநேஷ்வ் அபி || 2-60-9

பா³லா இவ ரமதே ஸீதா பா³ல சந்த்³ர நிப⁴ ஆநநா |
ராமா ராமே ஹி அதீ³ந ஆத்மா விஜநே அபி வநே ஸதீ || 2-60-10

தத் க³தம் ஹ்ருத³யம் ஹி அஸ்யா꞉ தத் அதீ⁴நம் ச ஜீவிதம் |
அயோத்⁴யா அபி ப⁴வேத் தஸ்யா ராம ஹீநா ததா² வநம் || 2-60-11

பரி ப்ருச்சதி வைதே³ஹீ க்³ராமாம꞉ ச நக³ராணி ச |
க³திம் த்³ருஷ்ட்வா நதீ³நாம் ச பாத³பான் விவிதா⁴ன் அபி || 2-60-12

ராமம் ஹி லக்ஷ்மநம் வாபி ப்ருஷ்ட்வா ஜாநாதி ஜாநதீ |
அயோத்⁴யாக்ரோஷ²மாத்ரே து விஹாரமிவ ஸம்ஷ்²ரிதா || 2-60-13

இத³மேவ ஸ்மராம்யஸ்யா꞉ ஸஹஸைவோபஜல்பிதம் |
கைகேயீஸம்ஷ்²ரிதம் வாக்யம் நேதா³நீம் ப்ரதிபா⁴தி மாம் || 2-60-14

த்⁴வம்ஸயித்வா து தத்³வாக்யம் ப்ரமாதா³த்பர்யுபஸ்தி²தம் |
ஹ்லத³நம் வசநம் ஸூதோ தே³வ்யா மது⁴ரமப்³ரவீத் || 2-60-15

அத்⁴வநா வாத வேகே³ந ஸம்ப்⁴ரமேண ஆதபேந ச |
ந ஹி க³ச்சதி வைதே³ஹ்யா꞉ சந்த்³ர அம்ஷு² ஸத்³ருஷீ² ப்ரபா⁴ || 2-60-16

ஸத்³ருஷ²ம் ஷ²த பத்ரஸ்ய பூர்ண சந்த்³ர உபம ப்ரப⁴ம் |
வத³நம் தத் வதா³ந்யாயா வைதே³ஹ்யா ந விகம்பதே || 2-60-17

அலக்த ரஸ ரக்த அபா⁴வ் அலக்த ரஸ வர்ஜிதௌ |
அத்³ய அபி சரணௌ தஸ்யா꞉ பத்³ம கோஷ² ஸம ப்ரபௌ⁴ || 2-60-18

நூபுர உத்³கு⁴ஷ்ட ஹேலா இவ கே²லம் க³ச்சதி பா⁴மிநீ |
இதா³நீம் அபி வைதே³ஹீ தத் ராகா³ ந்யஸ்த பூ⁴ஷணா || 2-60-19

க³ஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்⁴ரம் வா வநம் ஆஷ்²ரிதா |
ந ஆஹாரயதி ஸம்த்ராஸம் பா³ஹூ ராமஸ்ய ஸம்ஷ்²ரிதா || 2-60-20

ந ஷோ²ச்யா꞉ தே ந ச ஆத்மா தே ஷோ²ச்யோ ந அபி ஜந அதி⁴ப꞉ |
இத³ம் ஹி சரிதம் லோகே ப்ரதிஷ்டா²ஸ்யதி ஷா²ஷ்²வதம் || 2-60-21

விதூ⁴ய ஷோ²கம் பரிஹ்ருஷ்ட மாநஸா |
மஹர்ஷி யாதே பதி² ஸுவ்யவஸ்தி²தா꞉ |
வநே ரதா வந்ய ப²ல அஷ²நா꞉ பிது꞉ |
ஷு²பா⁴ம் ப்ரதிஜ்ஞாம் பரிபாலயந்தி தே || 2-60-22

ததா² அபி ஸூதேந ஸுயுக்த வாதி³நா |
நிவார்யமாணா ஸுத ஷோ²க கர்ஷி²தா |
ந சைவ தே³வீ விரராம கூஜிதாத் |
ப்ரிய இதி புத்ர இதி ச ராக⁴வ இதி ச || 2-60-23

இத்யார்ஷே ஷ்²ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ ஷ்ஷ்டிதம꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Sunday, 14 August 2022

தசரதன் புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 059 (34)

The lament of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-059 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அயோத்தியில் படிந்த சோகநிழலை விளக்கிய சுமந்திரன்; இராமனை நினைத்து அழுத தசரதன் விரைவில் மயங்கி விழுந்தது...

Dasharatha's Lament

{சுமந்திரன் தொடர்ந்தான்},[1] "இராமன் வனத்திற்குப் புறப்பட்டதும் திரும்பி வரும்போது என்னுடைய அச்வங்கள் {குதிரைகள்} உஷ்ணமான கண்ணீர் வடித்து மேலும் நகராமல் இருந்தன.(1) அதன்பிறகு நான் அந்த ராஜபுத்திரர்கள் இருவரையும் கைக்கூப்பி வணங்கி துக்கத்தைத் தாங்கிக் கொண்டு ரதத்தில் ஏறி புறப்பட்டேன்.(2) இராமன், என்னை மீண்டும் அழைப்பான் என்ற நம்பிக்கையில், குஹனுடன் அங்கேயே பல நாட்கள் {மூன்று நாட்கள்}[2] வசித்திருந்தேன்.(3) 

[1] சில பதிப்புகளில் இதற்கு முன்பு 4 சுலோகங்கள் இருக்கின்றன. முக்கியமான பதிப்புகள் அனைத்திலும் இந்த நான்கு சுலோகங்களும் தவிர்க்கப்பட்டிருப்பதால் இங்கும் அவ்வாறே தவிர்க்கப்படுகிறது. இருப்பினும், அவற்றின் பொருள் பின்வருமாறு: "இவ்வாறு செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்த சுமந்திரனிடம், இன்னும் வேறு எதையும் உள்ளதை விடாமல் சொல்லுமாறு தசரதன் ஆணையிட்டான்.{1} சுமந்திரன் அந்த ஆணையைக் கேட்டு, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் ராமனைக் குறித்த செய்திகள் அனைத்தையும் சொல்லத் தொடங்கினான்.{2} "ராஜரே, மரவுரி உடுத்தியிருந்த அவ்விருவரும் சடைகளைத் தரித்துக் கொண்டனர். இராமனுக்கு வழிகாட்டிக் கொண்டு முதலில் லக்ஷ்மணன் சென்றான். அவன் பின்னால் சீதை சென்றாள். அவ்விருவருக்கும் பின்னால் ரகுகுல ராமன் சென்றான். அவ்வாறு செல்லும் அவர்களைக் கண்டு நான் அப்போது கவலையுடன் திரும்பினேன.{3,4}" அதற்குப் பிறகு பின்வரும் செய்திகள் அப்படியே தொடர்கின்றன. 

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாஸ்தவமாகப் பார்க்கில் - செடியின் கீழ் ஒரு நாள், பரத்வாஜாச்ரமத்தில் இரண்டாவது நாள், யமுனைக் கரையில் மூன்றாவது நாள், நான்காவது நாள் சித்ரகூட ப்ரவேசம், ஐந்தாவது நாள் குஹனுடைய சாரர்கள் ராமவ்ருத்தாந்தம் தெரிவித்தல், ஆறாவது நாள் ஸூதன் அயோத்யைக்குப் புறப்படுதல். ஆகையால் ஆறுதினங்கள் ஆயின. அல்லது இரண்டாவது நாள் பரத்வாஜாசிரமத்தில் ராமன் சித்ரகூடத்திற்குப் போவதாக நிச்சயிக்கையால், அது தெரிந்து சாரர்கள் மூன்றாவது நாள் வந்து ஸுமந்தரனுக்குத் தெரிவிக்க, நான்காவது நாள் ஸுமந்த்ரன் புறப்பட்டானென்று நினைக்கலாமாயின், கங்காதீரத்தில் மூன்று தினங்கள் இருந்ததாகத் தெரிய வருகின்றது. ஆகையால் பல தினங்கள் என்றால் மூன்று தினங்களென்று கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. மேலும், பின்வரும் அயோத்தியா காண்டம் 62:18ல் {அயோத்தியா காண்டம் 62ம் சர்க்கம், 18ம் சுலோகத்தில்} ராமன் சென்று ஐந்து இரவுகள் கழிந்துவிட்டன என்று கௌசல்யை தசரதனிடம் சொல்லும் செய்தியையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

மஹாராஜாவே, உமது ஆட்சிப்பகுதியில் உள்ள மரங்கள், ராமனின் பிரிவால், புஷ்பங்களும், தளிர்களும், மொட்டுகளும் மலராமல் வாடியிருந்தன.(4) நதிகளிலும், குளங்களிலும், சரஸ்களிலும் {தடாகங்களிலும் / குட்டைகளிலும்} நீர் கொதித்துக் கொண்டிருந்தது, வனங்களிலும், உபவனங்களிலும் மரங்கள் இலைகளின்றி இருந்தன.(5) இராமனின் பிரிவால் நேர்ந்த சோகத்தில் உயிரினங்கள் அசையாமலும், காட்டு விலங்குகள் திரியாமலும் வனங்கள் அமைதியடைந்திருந்தன.(6) நரேந்திரரே, தாமரை இலைகள் மறைந்திருக்கும் நீரைக் கொண்ட பத்மின்யங்கள் {தாமரையோடைகள்},  வாடிய பத்மங்களுடனும் {தாமரைகளுடனும்}, மீனங்களும், நீர்க்கோழிகளும் இன்றி புழுதி நிறைந்த நீருடன் இருந்தன.(7) ஜலத்தில் பிறக்கும் புஷ்பங்களும், ஸ்தலங்களில் {நிலங்களில்} பிறக்கும் மலர்களும் அற்ப கந்தத்தையே {குறைந்த மணத்தையே} பரப்பின. பழங்களும் முன்பு போல் சுவையாகத் தெரியவில்லை.(8) 

மனுஜரிஷபரே, இங்கேயுள்ள உத்யானங்களும் சூன்யமாக {தோட்டங்கள் வெறுமையாக} இருக்கின்றன. பறவைகள் இல்லாத தோட்டங்கள் அழகாகத் தெரியவில்லை.(9) அயோத்திக்குள் பிரவேசிக்கும்போது ஒருவரும் என்னை வரவேற்கவில்லை. இராமனைக் காணாத நரர்கள் {மனிதர்கள்} மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.(10) தேவரே, ராமனில்லாமல் ராஜரதம் இங்கே வந்திருப்பதைக் கண்டு, ராஜமார்க்கத்தில் சென்ற சர்வ ஜனங்களும் துக்கத்தில் உண்டான கண்ணீரால் முகம் நிறைந்தனர்.(11) மாடமாளிகைகளிலும், விமானங்களிலும் {ஏழடுக்கு மாளிகைகளிலும்}, அரண்மனைகளிலும் இருந்த நாரியைகள் {பெண்கள்}, இரதம் வருவதைக் கண்டு, ராமன் இல்லாததை உணர்ந்து, "ஹா, ஹா" என்று நொந்து கொண்டனர்.(12) அதிக வேதனையடைந்த ஸ்திரீகள், கண்ணீரில் பெருகி வழிந்து, பிரகாசிக்கும் தங்கள் நீள்விழிகளால் அன்யோன்யம் அவியக்தமாக {ஒருவரையொருவர் மறைமுகமாக} பார்த்துக் கொண்டனர்.(13) மித்ரர்களாகவோ {நண்பர்களாகவோ}, அமித்ரர்களாகவோ {நட்பில்லாதவர்களாகவோ}, உதாசீன ஜனங்களாகவோ {நடுத்தர மக்களாகவோ} இருந்தாலும் அவர்களின் துன்பத்தில் எந்த விசேஷத்தையும் {வேறுபாட்டையும்} நான் கவனிக்கவில்லை.(14) மகிழ்ச்சியற்ற மனிதர்களையும், களைப்பினால் உரக்கக் கதறி, பெருமூச்சு விட்டு தீனமடைந்த நாகங்களையும், துரங்கங்களையும் {யானைகளையும், குதிரைகளையும்} கொண்டதும், ஓலம் நிறைந்ததுமான அயோத்தியானது, மஹாராஜாவே, ராமனை நாடு கடத்தியதால் புத்திரனை இழந்த கௌசல்யையைப் போல ஆனந்தமற்றிருப்பதாக எனக்குத் தெரிகிறது" {என்றான் சுமந்திரன்}.(15,16)

இராஜா {தசரதன்}, அந்த சூதன் {சுமந்திரன்} சொன்னதைக் கேட்டு, கண்ணீரால் தடைபட்ட பரம தீனமான குரலில் அந்த சூதனிடம் இதைச் சொன்னான்:(17) "பாபப்பிறவியும், பாப நோக்கமும் கொண்ட கைகேயிக்கு இணங்கிய என்னால், ஆலோசனைகள் சொல்வதில் அனுபவமுள்ளவர்களிடமோ, விருத்தர்களிடமோ {பெரியோரிடமோ} முன்கூட்டியே கலந்தாலோசிக்க முடியவில்லை.(18) நண்பர்களிடம் ஆலோசிக்காமலும், அமாத்யர்களிடமோ, நைகமர்களிடமோ {அமைச்சர்களிடமோ, புனித உரைகளுக்கு விளக்கம் சொல்பவர்களிடமோ} ஆலோசிக்கமாலும்,  மோஹத்தினாலும், ஸ்திரீ ஹேதுவினாலும் {பெண்ணுக்காகவும்} அவசரகதியில் நான் இந்தச் செயலைச் செய்துவிட்டேன்.(19) 

சூதரே, இந்த மஹத்தான விசனம் இந்தக் குலத்தின் அழிவுக்காக எதேச்சையாகவோ {தற்செயலாகவோ} நிச்சயமாகவோ தவிர்க்க முடியாத விளைவாக நேர்ந்திருக்கிறது.(20) சூதரே, நான் ஏதோ ஒரு நன்மையையாவது உமக்குச் செய்திருந்தால் என்னை உடனே ராமனிடம் அழைத்துச் செல்வீராக. பிராணன் {உயிர் மூச்சு} என்னை துரிதப்படுத்துகிறது.(21) இப்போதும் எல்லையற்ற அதிகாரம் எனக்கிருந்தால் ராகவனைத் திரும்ப அழைத்து வருவீராக. இராமன் இல்லாமல் என்னால் ஒரு கணமும் ஜீவிக்க முடியாது.(22) ஒருவேளை அந்த மஹாபாஹு {வலிமைமிக்க கரங்களைக் கொண்ட ராமன்} வெகுதூரம் சென்றிருந்தால், ரதத்தில் ஏற்றிச் சென்று சீக்கிரமாக என்னை ராமனுக்குக் காட்டுவீராக.(23) உருண்ட பற்களைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்த லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்} எங்கே? அவனும், சீதையும் நன்றாக இருப்பதைக் கண்டால் நான் ஜீவித்திருப்பேன்.(24) சிவந்த கண்களையும், நெடுங்கைகளையும் கொண்டவனும், ஆமுக்த மணிகுண்டலங்களுடன் கூடியவனுமான ராமனைக் காணாவிட்டால் யமலோகத்திற்கே நான் செல்வேன்.(25) இந்த அவஸ்தையை அடைந்திருக்கும் எனக்கு, இக்ஷ்வாகு குலநந்தனனான ராகவனை இங்கே காண முடியாததைவிட என்ன துக்கம் ஏற்பட முடியும்?(26) ஹா ராமா, ஹா ராமானுஜா {ராமனின் தம்பியான லக்ஷ்மணா}, ஹா தபஸ்வினியான வைதேஹி, அநாதையைப் போல துக்கத்துடன் நான் சாகப்போவதை நீங்கள் அறியமாட்டீர்களே" {என்றான் தசரதன்}.(27)

துக்கத்தில் பெரிதும் விரக்தியடைந்தவனும், கடப்பதற்கு மிகக் கடினமான சோக சாகரத்தில் மூழ்கியவனுமான அந்த ராஜா {தசரதன், மீண்டும் பின்வருமாறு} சொன்னான்:(28)  "தேவி, கௌசலையே, நான் மூழ்கியிருக்கும் இந்த சோக சாகரத்தில் ராம சோகமே மஹாபாகமாகும் {பெரும்பகுதியாகும்}, சீதையைப் பிரிவதே மறுகரையாகும். துன்பப் பெருமூச்சுகளே இதன் அலைகளும், பெருஞ்சுழல்களுமாகும். கண்ணீரே இதில் நுரைகளுடன் கலங்கியிருக்கும் ஜலமாகும். கைகளின் வீச்சுகளே துள்ளும் மீன் கூட்டங்களாகும். பேரோலங்களே இதன் பெருங்கோஷமாகும். கலைந்த தலைமுடியே வேலம்பாசிகளாகும். கைகேயியே எனக்குக் கண்ணீரை வரவழைக்கும் வடவாக்னியாவாள் {நீறுபூத்த நெருப்பாவாள்}. குப்ஜையின் {கூனியின்} சொற்கள் பெரும் முதலைகளாகும். அந்தக் கொடூரி {கைகேயி} கேட்ட வரங்களே இதன் கரைகளாகும். இராமனை தொலைதூரம் அனுப்பியதன் மூலம் இது மிக விசாலமடைந்திருக்கிறது {நீண்டிருக்கிறது}. இராமன் இல்லாமல் என்னால் உயிருடன் இந்த சோக சாகரத்தைக் கடக்க முடியாது" {என்றான் தசரதன்}.(29-32)

பெரும்புகழ்படைத்தவனான அந்த ராஜா, "இராகவனையும், லக்ஷ்மணனையும் இப்போதே காண விரும்பினாலும், இங்கே என்னால் அவர்களைக் காண முடியவில்லை. அவர்களை இங்கே கொண்டு வரவும் முடியவில்லை. இது நல்லதல்ல" என்று புலம்பியவாறே, தன் சயனத்தில் மூர்ச்சித்து விழுந்தான்.(33) ராமனின் பொருட்டு புலம்பியதைவிட இரண்டு மடங்கு பரிதாபமாகப் புலம்பிய அவனது வசனங்களைக் கேட்டும், பார்த்திபன்  விழுந்ததைக் கண்டும் {கௌசல்யா} தேவி மீண்டும் பயமடைந்தாள்[3].(34)

[3] முதல் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டதைப் போல, அந்த நான்கு சுலோகங்களையும் சேர்த்தால் இந்த சர்க்கத்தின் சுலோக எண்ணிக்கை 38 ஆகும்.

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 059ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

அயோத்யா காண்டம் 059ம் ஸர்கம்

வால்மீகிராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ ஏகோநஷஷ்டிதம꞉ ஸர்க³꞉


Dasharatha's Lament

{இதி ப்³ருவந்தம் தம் ஸூதம் ஸுமந்த்ரம் மந்த்ரிஸத்தமம்.
ப்³ரூஹி ஷே²ஷம் புநரிதி ராஜா வசநமப்³ரவீத் || 2-59-1

தஸ்ய தத்³வசநம் ஷ்²ருத்வா ஸுமந்த்ரோ பா³ஷ்பவிக்லப³꞉.
கத²யாமாஸ பூ⁴யோ(அ)பி ராமஸந்தே³ஷ²விஸ்தரம் || 2-59-2

ஜடா꞉ க்ருத்வா மஹாராஜ சீரவல்கலதா⁴ரிணௌ.
க³ங்கா³முத்தீர்ய தௌ வீரௌ ப்ரயாகா³பி⁴முகௌ² க³தௌ || 2-59-3

அக்³ரதோ லக்ஷ்மணோ யாத꞉ பாலயந்ரகு⁴நந்த³நம்.
தாம்ஸ்ததா² க³ச்ச²தோ த்³ருஷ்ட்வா நிவ்ருத்தோ(அ)ஸ்ம்யவஷ²ஸ்ததா³ || 2-59-4}

மம து அஷ்²வா நிவ்ருத்தஸ்ய ந ப்ராவர்தந்த வர்த்மநி |
உஷ்ணம் அஷ்²ரு விமுந்சந்த꞉ ராமே ஸம்ப்ரஸ்தி²தே வநம் || 2-59-1

உபா⁴ப்⁴யாம் ராஜ புத்ராப்⁴யாம் அத² க்ருத்வா அஹம் ஜ்ஞலிம் |
ப்ரஸ்தி²த꞉ ரத²ம் ஆஸ்தா²ய தத் து³ஹ்க²ம் அபி தா⁴ரயன் || 2-59-2

கு³ஹா இவ ஸார்த⁴ம் தத்ர ஏவ ஸ்தி²த꞉ அஸ்மி தி³வஸான் ப³ஹூன் |
ஆஷ²யா யதி³ மாம் ராம꞉ புந꞉ ஷ²ப்³தா³பயேத்³ இதி || 2-59-3

விஷயே தே மஹா ராஜ மாம வ்யஸந கர்ஷி²தா꞉ |
அபி வ்ருக்ஷா꞉ பரிம்லாந꞉ ஸபுஷ்ப அந்குர கோரகா꞉ || 2-59-4

உபதப்தோத³கா நத்³ய꞉ பல்வலாநி ஸராம்ஸி ச |
பரிஷ்குபலாஷா²நி வநாந்யுபவநாநி ச || 2-59-5

ந ச ஸர்பந்தி ஸத்த்வாநி வ்யாலா ந ப்ரஸரந்தி ச |
ராம ஷோ²க அபி⁴பூ⁴தம் தன் நிஷ்கூஜம் அப⁴வத்³ வநம் || 2-59-6

லீந புஷ்கர பத்ரா꞉ ச நர இந்த்³ர கலுஷ உத³கா꞉ |
ஸம்தப்த பத்³மா꞉ பத்³மிந்யோ லீந மீந விஹம்க³மா꞉ || 2-59-7

ஜலஜாநி ச புஷ்பாணி மால்யாநி ஸ்த²லஜாநி ச |
ந அத்³ய பா⁴ந்தி அல்ப க³ந்தீ⁴நி ப²லாநி ச யதா² புரம் || 2-59-8

அத்ரோத்³யாநாநி ஷூ²ந்யாநி ப்ரலீநவிஹகா³நி ச |
ந சாபி⁴ராமாநாராமான் பஷ்²யாமி மநுஜர்ஷப⁴ || 2-59-9

ப்ரவிஷ²ந்தம் அயோத்⁴யாம் மாம் ந கஷ்²சித் அபி⁴நந்த³தி |
நரா ராமம் அபஷ்²யந்த꞉ நிஹ்ஷ்²வஸந்தி முஹுர் முஹு꞉ || 2-59-10

தே³வ ராஜரத²ம் த்³ருஷ்ட்வா விநா ராமமிஹாக³தம் |
து³꞉கா²த³ஷ்²ருமுக²꞉ ஸர்வோ ராஜமார்க³க³தோ ஜந꞉ || 2-59-11

ஹர்ம்யை꞉ விமாநை꞉ ப்ராஸாதை³꞉ அவேக்ஷ்ய ரத²ம் ஆக³தம் |
ஹாஹா கார க்ருதா நார்யோ ராம அத³ர்ஷ²ந கர்ஷி²தா꞉ || 2-59-12

ஆயதை꞉ விமலை꞉ நேத்ரை꞉ அஷ்²ரு வேக³ பரிப்லுதை꞉ |
அந்யோந்யம் அபி⁴வீக்ஷந்தே வ்யக்தம் ஆர்ததரா꞉ ஸ்த்ரிய꞉ || 2-59-13

ந அமித்ராணாம் ந மித்ராணாம் உதா³ஸீந ஜநஸ்ய ச |
அஹம் ஆர்ததயா கஞ்சித் விஷே²ஷம் ந உபலக்ஷயே || 2-59-14

அப்ரஹ்ருஷ்ட மநுஷ்யா ச தீ³ந நாக³ துரம்க³மா |
ஆர்த ஸ்வர பரிம்லாநா விநிஹ்ஷ்²வஸித நிஹ்ஸ்வநா || 2-59-15

நிராநந்தா³ மஹா ராஜ ராம ப்ரவ்ராஜந ஆதுலா |
கௌஸல்யா புத்ர ஹீநா இவாயோத்⁴யா ப்ரதிபா⁴தி மா மா || 2-59-16

ஸூதஸ்ய வசநம் ஷ்²ருத்வா வாசா பரம தீ³நயா |
பா³ஷ்ப உபஹதயா ராஜா தம் ஸூதம் இத³ம் அப்³ரவீத் || 2-59-17

கைகேய்யா விநியுக்தேந பாப அபி⁴ஜந பா⁴வயா |
மயா ந மந்த்ர குஷ²லை꞉ வ்ருத்³தை⁴꞉ ஸஹ ஸமர்தி²தம் || 2-59-18

ந ஸுஹ்ருத்³பி⁴ர் ந ச அமாத்யை꞉ மந்த்ரயித்வா ந நைக³மை꞉ |
மயா அயம் அர்த²꞉ ஸம்மோஹாத் ஸ்த்ரீ ஹேதோஹ் ஸஹஸா க்ருத꞉ || 2-59-19

ப⁴விதவ்யதயா நூநம் இத³ம் வா வ்யஸநம் மஹத் |
குலஸ்ய அஸ்ய விநாஷா²ய ப்ராப்தம் ஸூத யத்³ருச்சயா || 2-59-20

ஸூத யத்³ய் அஸ்தி தே கிஞ்சின் மயா அபி ஸுக்ருதம் க்ருதம் |
த்வம் ப்ராபய ஆஷு² மாம் ராமம் ப்ராணா꞉ ஸம்த்வரயந்தி மாம் || 2-59-21

யத்³ யத்³ யா அபி மம ஏவ ஆஜ்ஞா நிவர்தயது ராக⁴வம் |
ந ஷ²க்ஷ்யாமி விநா ராம முஹூர்தம் அபி ஜீவிதும் || 2-59-22

அத²வா அபி மஹா பா³ஹுர் க³த꞉ தூ³ரம் ப⁴விஷ்யதி |
மாம் ஏவ ரத²ம் ஆரோப்ய ஷீ²க்⁴ரம் ராமாய த³ர்ஷ²ய || 2-59-23

வ்ருத்த த³ம்ஷ்ட்ர꞉ மஹா இஷ்வாஸ꞉ க்வ அஸௌ லக்ஷ்மண பூர்வஜ꞉ |
யதி³ ஜீவாமி ஸாத்⁴வ் ஏநம் பஷ்²யேயம் ஸஹ ஸீதயா || 2-59-24

லோஹித அக்ஷம் மஹா பா³ஹும் ஆமுக்த மணி குண்ட³லம் |
ராமம் யதி³ ந பஷ்²யாமி க³மிஷ்யாமி யம க்ஷயம் || 2-59-25

அத꞉ நு கிம் து³ஹ்க²தரம் யோ அஹம் இக்ஷ்வாகு நந்த³நம் |
இமாம் அவஸ்தா²ம் ஆபந்நோ ந இஹ பஷ்²யாமி ராக⁴வம் || 2-59-26

ஹா ராம ராம அநுஜ ஹா ஹா வைதே³ஹி தபஸ்விநீ |
ந மாம் ஜாநீத து³ஹ்கே²ந ம்ரியமாணம் அநாத²வத் || 2-59-27

ஸ தேந ராஜா து³꞉கே²ந ப்⁴ருஷ²மர்பிதசேதந꞉ |
அவகா³ட⁴꞉ ஸுது³ஷ்பாரம் ஷோ²கஸாக³மப்³ரவீத் || 2-59-28

ராமஷோ²கமஹாபோ⁴க³꞉ ஸீதாவிரஹபாரக³꞉ |
ஷ்²வஸிதோர்மிமஹாவர்தோ பா³ஷ்பபே²நஜலாவில꞉ || 2-59-29

பா³ஹுவிக்ஷேபமீநௌகோ⁴ விக்ரந்தி³தமஹாஸ்வந꞉ |
ப்ரகீர்ணகேஷ²ஷை²வால꞉ கைகேயீப³ட³பா³முக²꞉ || 2-59-30

மமாஷ்²ருவேக³ப்ரப⁴வ꞉ குப்³ஜாவாக்யமஹாக்³ரஹ꞉ |
வரவேலோ ந்ருஷ²ம்ஸாயா ராமப்ரவ்ராஜநாயத꞉ || 2-59-31

யஸ்மின் ப³த நிமக்³நோ(அ)ஹம் கௌஸல்யே ராக⁴வம் விநா |
து³ஸ்தர꞉ ஜீவதா தே³வி மயா அயம் ஷோ²க ஸாக³ர꞉ || 2-59-32

அஷோ²ப⁴நம் யோ அஹம் இஹ அத்³ய ராக⁴வம் |
தி³த்³ருக்ஷமாணோ ந லபே⁴ ஸலக்ஷ்மணம்
இதி இவ ராஜா விலபன் மஹா யஹாஷ²꞉
பபாத தூர்ணம் ஷ²யநே ஸ மூர்சித꞉ || 2-59-33

இதி விலபதி பார்தி²வே ப்ரநஷ்டே |
கருணதரம் த்³விகு³ணம் ச ராம ஹேதோ꞉ |
வசநம் அநுநிஷ²ம்ய தஸ்ய தே³வீ |
ப⁴யம் அக³மத் புநர் ஏவ ராம மாதா || 2-59-34

இத்யார்ஷே ஷ்²ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ ஏகோநஷஷ்டிதம꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Tuesday, 9 August 2022

ஊழ்வினை வரும் துயர் நிலை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 058 (37)

State of suffering caused by fate | Ayodhya-Kanda-Sarga-058 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ராமனும், லக்ஷ்மணனும் சொல்லி அனுப்பிய செய்திகளைச் சொன்ன சுமந்திரன்...

Lakshmana Rama and Sita

அதன்பிறகு, {தசரத} ராஜன் மோஹத்திலிருந்து மீண்டு, மூச்சை மீண்டும் அடைந்ததும், அந்த சூதனை {சுமந்திரனை} அழைத்து ராம விருத்தாந்த காரணத்தை {ராமன் குறித்த செய்திகளைக்} கேட்டான்.(1) அப்போது தன் கைகளைக் கூப்பியபடியே அந்த சூதன், ராமனையே எண்ணி வருந்தி, துக்கத்தாலும், சோகத்தாலும் நிறைந்தவனும், புதிதாய் பிடிபட்ட துவிபத்தை {யானையைப்} போல பெருமூச்சுவிட்டு வேதனையடைந்தவனும், பிணி கொண்ட குஞ்சரத்தை {யானையைப்} போலச் சிந்தித்துக் கொண்டிருந்த விருத்தனுமான மஹாராஜனை {முதியவனுமான தசரதனை} அணுகினான்.(2,3) 

பரம வேதனையில் இருந்த அந்த ராஜா {தசரதன்}, புழுதியால் அங்கம் மறைந்தவனும், கண்ணீர் நிறைந்த முகத்துடன் கூடியவனும், தன்னை நெருங்கி வரும் தீனனுமான அந்த சூதனிடம் {பின்வருமாறு} பேசினான்:(4) "சூதரே, விருக்ஷத்தின் வேரடியை அண்டி வாழும் அந்த தர்மாத்மா {ராமன்} எங்கே வசித்திருக்கிறான்? சுகங்களை அனுபவித்தவனான அந்த ராமன் என்ன உண்கிறான்?(5) சுமந்திரரே, பூமிபாலனின் ஆத்மஜனாக {மகனாக} உசிதமான சயனங்களுக்குப் பழகியவன், துக்கத்துடன் ஓர் அநாதையைப் போல எவ்வாறு பூமியில் {வெறுந்தரையில்} கிடக்கிறான்?(6) எவன் பயணித்தால் பாதாதி ரத குஞ்சரங்களும் {காலாட்படையும், தேர்களும், யானைகளும்} பின்தொடருமோ அந்த ராமன், ஜனங்களற்ற வனத்தில் தஞ்சம்புகுந்து எப்படி வாழ்கிறான்?(7) 

காட்டு மிருகங்கள் திரிவதும், கிருஷ்ணசர்ப்பங்கள் {கரும்பாம்புகள்} வசிப்பதுமான வனத்தை குமாரர்களும், வைதேஹியும் எவ்வாறு அடைந்தனர்?(8) சுமந்திரரே, ராஜபுத்திரர்கள் இருவரும், பரிதபிப்பவளும், சுகுமாரியுமான சீதையும் ரதத்தில் இருந்து இறங்கி எவ்வாறு பாதநடையாகச் சென்றனர்?(9) சூதரே, மந்தர மலையில் நுழையும் அஸ்வினிகளைப் போல வனத்தின் எல்லைக்குள் பிரவேசிக்கும் என் ஆத்மஜர்களை நீர் கண்டிருப்பதால் சித்தார்த்தரானீர் {பலன்கள் அனைத்தையும் அடைந்தவரானீர்}.(10) சுமந்திரரே, வனத்தை அடைந்ததும் ராமன் சொன்ன சொற்களென்ன? இலக்ஷ்மணன் சொன்னவை என்ன? மைதிலி சொன்னவை என்ன?(11) சூதரே, ராமன் எங்கெங்கே அமர்ந்தான், உறங்கினான், உண்டான் என்பதைச் சொல்வீராக. அதன் மூலம், சாதுக்களின் மத்தியில் வாழ்ந்த யயாதிப் போல[1] நானும் ஜீவித்திருப்பேன்" {என்றான் தசரதன்}.(12)

[1] கே.எம்.கே. மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹாபாரதத்தின் ஆதிபர்வத்தில், மன்னன் யயாதி, சொர்க்கத்தில் இருந்து விழும் நிலை தனக்கு ஏற்பட்ட போது "சாதுக்களின் மத்தியில் நான் விழ வேண்டும்" என்று இந்திரனை வேண்டினான். அதன்படியே அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமான், சிபி ஆகிய நான்கு தவசிகளும் பூமியில் தவம்பயின்றுவந்த இடத்தில் விழுந்து அவர்களுடன் உரையாடினான்" என்றிருக்கிறது. ஆதிபர்வம் பகுதிகள் 87 முதல் 93 வரை சொர்க்கத்தில் இருந்து யயாதி விழுந்த கதை இருக்கிறது. மஹாபாரதத்தின் வன, உத்யோக, அநுசாஸன பர்வங்களிலும் மீண்டும் சொல்லப்படுகிறது. 

நரேந்திரனால் {தசரதனால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், அந்த சூதன் {சுமந்திரன்}, கண்ணீர் அடைக்கும் நடுங்கிய குரலில் அந்த ராஜனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(13) "மஹாராஜாவே, தர்மத்தையே பின்பற்றுபவனான ராகவன் {ராமன்}, தன் கைகளைக் கூப்பி, {உமக்குத்} தலை வணங்கி {உம்மிடம் சொல்லுமாறு} என்னிடம் {பின்வருமாறு} சொன்னான்:(14) "சூதரே, ஆத்மாவை அறிந்த மஹாத்மாவும், வணங்கப்படத் தகுந்தவருமான என் தாதையின் பாதங்களை என் சொற்களின் மூலம் தலையால் வணங்குகிறேன்.(15) சூதரே, எங்கள் ஆரோக்கியத்தையும், உரிய வணக்கத்தையும் வேற்றுமையின்றி மொத்த அந்தப்புரத்திற்கும் என் சொற்களில் நீர் சொல்வீராக.(16) 

என் மாதாவிடம் {கௌசல்யையிடம்} என் நலத்தையும், என் வணக்கத்தையும், ஊக்கத்தையும் என் சொற்களில் சொல்வீராக.(17) "தேவி, தர்மத்தில் நிலைத்திருந்து, உரிய காலங்களில் அக்னி யாகங்களைச் செய்து, தேவரைப் போன்ற தேவரின் {தசரதரின்} பாதங்களை பரிபாலிப்பாயாக {ஆராதிப்பாயாக}.(18) அம்ப, மற்ற மாதாக்களிடம் பெருமையையும், மதிப்பையும் விட்டுவிட்டுப் பழகுவாயாக. ஆரியையான கைகேயியை, ராஜருக்கு அனுசரணையாக நடந்து கொள்ளச் செய்வாயாக.(19) குமாரனான {இளையவனான} பரதனிடம், ராஜனிடம் நடந்து கொள்வது போல மதிப்புடன் நடந்து கொள்வாயாக. ராஜர்கள் அர்த்தத்தில் ஜேஷ்டர்கள் {செல்வத்தில் பெரியவர்கள்}. ராஜதர்மத்தை நினைவில் கொள்வாயாக" {என்று என் அன்னை கௌசல்யையிடம் சொல்வீராக}.(20) 

பரதனிடம் குசலம் {அவனது நலத்தை} விசாரித்துவிட்டு, "மாதாக்கள் அனைவரிடமும் நியாயப்படியான நன்னடத்தையைப் பின்பற்றுவாயாக" என்று என் சொற்களில் சொல்வீராக.(21) மேலும், இக்ஷ்வாகு குல நந்தனனான அந்த மஹாபாஹுவிடம் {வலிமைமிக்க கரங்களைக் கொண்ட பரதனிடம்}, "யௌவராஜ்ஜியத்தில் நிறுவப்பட்ட நீ, ராஜ்ஜியத்தில் நிறுவப்பட்டிருக்கும் நம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து ஆட்சி செய்வாயாக.(22) ராஜர் வயது முதிர்ந்தவர். எனவே நீ அவரைத் தடுக்காதே. அவரது ஆணைகளை ஏற்றுக் கொண்டு ராஜகுமாரனாக {இளவரசனாக} நீ வாழ்வாயாக" {என்று பரதனிடம் சொல்வீராக என [சுமந்திரனான] என்னிடம் சொன்னான் ராமன்}.(23)

மேலும் அவன் {ராமன்}, அதிக கண்ணீர் சிந்தியபடியே என்னிடம் {பின்வருமாறும்} சொன்னான்: "புத்திரனுக்காக ஏங்கும் என் மாதாவை உன் மாதாவாகவே நீ பார்த்துக் கொள்வாயாக" {என்றும் பரதனிடம் சொல்லச் சொன்னான்}.(24) மஹாராஜாவே, தாமரை போன்ற சிவந்த கண்களைக் கொண்டவனும், பெரும் புகழ் படைத்தவனுமான ராமன், இவ்வாறு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதிகமாகக் கண்ணீர் வடித்தான்.(25)

பெரும் கோபமடைந்த லக்ஷ்மணனோ, பெருமூச்சுவிட்டபடியே {இந்த} வாக்கியத்தைச் சொன்னான்: "இந்த ராஜபுத்திரர் என்ன அபராதத்துக்காக {ராமர் என்ன குற்றத்திற்காக} நாடு கடத்தப்பட்டார்?(26) ராஜரும், கைகேயியின் லகு சாசனத்தை ஆசரித்து ஓர் அகாரியத்தை காரியமாகச் செய்ததால் {தசரதரும், கைகேயியின் இழிந்த ஆணையைப் பின்பற்றி செய்யக்கூடாத காரியத்தைச் செய்ததால்} நாங்கள் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.(27) லோப காரணத்தாலோ {ராஜ்ஜியத்தின் மீது கொண்ட கைகேயியின் பேராசையினாலோ}, வரதான நிமித்தமாகவோ {தரசரதர் கொடுத்த வரத்தினாலோ} ராமர் நாடு கடத்தப்பட்டிருந்தாலும், முற்றிலும் தவறாகவே அது செய்யப்பட்டிருக்கிறது.(28) காமத்தினாலோ {அசையினாலோ}, ஈச்வர செயலாலோ இது செய்யப்பட்டிருந்தாலும், ராமரைக் கைவிடுவதற்கான எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை.(29) ஆலோசிக்காமலும், புத்தி லாகவத்தாலும் {அவசர புத்தியாலும்}, ராகவரை நாடு கடத்தியது ஜனங்களிடம் சீற்றத்தையே விளைவிக்கும்.(30) நான் மஹாராஜரைப் பிதாவாகக் காணவில்லை {தசரதரை நான் தந்தையாகக் கருதவில்லை}. ராகவரே எனக்கு அண்ணனும், தலைவரும், பந்துவும் {உறவினரும்}, பிதாவும் ஆவார் {என்று சொன்னான் லக்ஷ்மணன்}.(31) 

{பிறகு தசரதரான உமக்குச் சொல்லும் வகையில்}, சர்வலோகஹிதத்தில் விருப்பமுள்ளவரும், சர்வலோகபிரியருமான அவரை {அனைத்துலக நன்மையில் விருப்பமுள்ளவரும், மக்கள் அனைவராலும் விரும்பப்படுகிறவருமான ராமரைக்} கைவிட்ட இந்தக் கர்மத்தால் சர்வலோகமும் உம்மை எவ்வாறு அனுசரிக்கும்?(32) பிரஜைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் தார்மிகரான ராமரை நாடுகடத்தியும், இந்த சர்வ லோகத்தையும் எதிர்த்தும் எவ்வாறு நீர் ராஜராக இருப்பீர்?" {என்றான் லக்ஷம்ணன்}.(33)

மஹாராஜாவே,  பரிதாபத்திற்குரிய ஜானகி, பூதத்தால் பீடிக்கப்பட்டவளைப் போல பெருமூச்சுவிட்டபடியே, தன்னிருப்பை மறந்து, அசைவற்றவளாக நின்று கொண்டிருந்தாள்.(34) புகழ்பெற்றவளும், பூர்வத்தில் தீயூழேதும் காணாதவளுமான அந்த ராஜபுத்திரி {சீதை}, துக்கத்துடன் அழுது கொண்டே இருந்ததால் என்னிடம் எதையும் சொல்ல முடியாதவளாக இருந்தாள்[2].(35) 

[2] ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா
தாள்முதல் வணங்கிய தனித்திண் தேர்வலான்
ஊழ்வினை வரும் துயர் நிலை என்று உன்னுவான்
வாழ்வினை நோக்கியை வணங்கி நோக்கினான்

- கம்பராமாயணம் 1877ம் பாடல்

பொருள்: "பணியாளன் செய்ய வேண்டிய செயல் தலைவனின் கட்டளைக்கு மாறுபட்டு நடத்தலன்று" என்று கருதி {இராமனின்} பாதங்களில் வணங்கி எழுந்தவனும், வலிய தேரைச் செலுத்த வல்லவனுமான சுமந்திரன், "ஊழ்வினையால் வருகின்ற துன்பத்தின் நிலை இது" என்று கருதி உலக இன்ப வாழ்வுக்குக் காரணமானவளை {சீதையை} வணங்கி நோக்கினான்.

நான் புறப்படுவதைக் கண்டதும், வாடிய முகத்துடன் தன் பர்த்தாவை நிமிர்ந்து பார்த்து, திடீரெனக் கண்ணீர் வடித்தாள்.(36) இலக்ஷ்மணனுடைய கைகளின் பாதுகாப்பில் இருந்த ராமன் அவ்வாறே கண்ணீர் நிறைந்த முகத்துடன் கைகளைக் கூப்பினான். அதேபோல தபஸ்வினியான சீதை, ராஜரதத்தையும், என்னையும் கண்டு அழுதுகொண்டே இருந்தாள்" {என்றான் சுமந்திரன்}.(37)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 058ல் உள்ள சுலோகங்கள் : 37

Previous | Sanskrit | English | Next

அயோத்யா காண்டம் 058ம் ஸர்கம்

வால்மீகிராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ அஷ்டபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉


Lakshmana Rama and Sita

ப்ரத்யாஷ்²வஸ்த꞉ யதா³ ராஜா மோஹாத் ப்ரத்யாக³த꞉ புந꞉ |
தா²ஜுஹாவ தம் ஸூதம் ராம வ்ருத்த அந்த காரணாத் || 2-58-1

ததா³ ஸூதோ மஹாராஜ க்ருதாஞ்ஜலிருபஸ்தி²த꞉|
ராமமேவ அநுஷோ²சந்தம் து³꞉க²ஷோ²கஸமந்விதம் || 2-58-2

வ்ருத்³த⁴ம் பரம ஸம்தப்தம் நவ க்³ரஹம் இவ த்³விபம் |
விநி꞉ஷ்²வஸந்தம் த்⁴யாயந்தம் அஸ்வஸ்த²ம் இவ குந்ஜரம் || 2-58-3

ராஜா து ரஜஸா ஸூதம் த்⁴வஸ்த அங்க³ம் ஸமுபஸ்தி²தம் |
அஷ்²ரு பூர்ண முக²ம் தீ³நம் உவாச பரம ஆர்தவத் || 2-58-4

க்வ நு வத்ஸ்யதி த⁴ர்ம ஆத்மா வ்ருக்ஷ மூலம் உபாஷ்²ரித꞉ |
ஸோ அத்யந்த ஸுகி²த꞉ ஸூத கிம் அஷி²ஷ்யதி ராக⁴வ꞉ || 2-58-5

து³꞉க²ஸ்யாநுசிதோ து³꞉க²ம் ஸுமந்த்ர ஷ²யநோசித꞉ |
பூ⁴மி பால ஆத்மஜோ பூ⁴மௌ ஷே²தே கத²ம் அநாத²வத் || 2-58-6

யம் யாந்தம் அநுயாந்தி ஸ்ம பதா³தி ரத² குண்ஃஜ்ஜரா꞉ |
ஸ வத்ஸ்யதி கத²ம் ராம꞉ விஜநம் வநம் ஆஷ்²ரித꞉ || 2-58-7

வ்யாளை꞉ ம்ருகை³꞉ ஆசரிதம் க்ருஷ்ண ஸர்ப நிஷேவிதம் |
கத²ம் குமாரௌ வைதே³ஹ்யா ஸார்த⁴ம் வநம் உபஸ்தி²தௌ || 2-58-8

ஸுகுமார்யா தபஸ்விந்யா ஸுமந்த்ர ஸஹ ஸீதயா |
ராஜ புத்ரௌ கத²ம் பாதை³꞉ அவருஹ்ய ரதா²த் க³தௌ || 2-58-9

ஸித்³த⁴ அர்த²꞉ க²லு ஸூத த்வம் யேந த்³ருஷ்டௌ மம ஆத்மஜௌ |
வந அந்தம் ப்ரவிஷ²ந்தௌ தாவ் அஷ்²விநாவ் இவ மந்த³ரம் || 2-58-10

கிம் உவாச வசோ ராம꞉ கிம் உவாச ச லக்ஷ்மண꞉ |
ஸுமந்த்ர வநம் ஆஸாத்³ய கிம் உவாச ச மைதி²லீ || 2-58-11

ஆஸிதம் ஷ²யிதம் பு⁴க்தம் ஸூத ராமஸ்ய கீர்தய |
ஜீவிஷ்யாம்யஹமேதேந யயாதிரிவ ஸாது⁴ஷு || 2-58-12

இதி ஸூத꞉ நர இந்த்³ரேண சோதி³த꞉ ஸஜ்ஜமாநயா |
உவாச வாசா ராஜாநம் ஸ பா³ஷ்ப பரிர்ப³த்³த⁴யா || 2-58-13

அப்³ரவீன் மாம் மஹா ராஜ த⁴ர்மம் ஏவ அநுபாலயன் |
அந்ஜலிம் ராக⁴வ꞉ க்ருத்வா ஷி²ரஸா அபி⁴ப்ரணம்ய ச || 2-58-14

ஸூத மத்³வசநாத் தஸ்ய தாதஸ்ய விதி³த ஆத்மந꞉ |
ஷி²ரஸா வந்த³நீயஸ்ய வந்த்³யௌ பாதௌ³ மஹாத்மந꞉ || 2-58-15

ஸர்வம் அந்த꞉ புரம் வாச்யம் ஸூத மத்³வசநாத்த்வயா |
ஆரோக்³யம் அவிஷே²ஷேண யதா² அர்ஹம் ச அபி⁴வாத³நம் || 2-58-16

மாதா ச மம கௌஸல்யா குஷ²லம் ச அபி⁴வாத³நம் |
அப்ரமாத³ம் ச வக்தவ்யா ப்³ரூயாஷ்²சைமித³ம் வச꞉ || 2-58-17

த⁴ர்மநித்யா யதா²காலமக்³ந்யகா³ரபரா ப⁴வ |
தே³வி தே³வஸ்ய பாதௌ³ ச தே³வவத் பரிபாலய || 2-58-18

அபி⁴மாநம் ச மாநம் ச த்யக்த்வா வர்தஸ்வ மாத்ருஷு |
அநு ராஜாந மார்யாம் ச கைகேயீமம்ப³ காரய || 2-58-19

குமாரே ப⁴ரதே வ்ருத்திர்வர்திதவ்யாச ராஜவத் |
அர்த²ஜ்யேஷ்டா² ஹி ராஜாநோ ராஜத⁴ர்மமநுஸ்மர || 2-58-20

ப⁴ரத꞉ குஷ²லம் வாச்யோ வாச்யோ மத்³ வசநேந ச |
ஸர்வாஸ்வ ஏவ யதா² ந்யாயம் வ்ருத்திம் வர்தஸ்வ மாத்ருஷு || 2-58-21

வக்தவ்ய꞉ ச மஹா பா³ஹுர் இக்ஷ்வாகு குல நந்த³ந꞉ |
பிதரம் யௌவராஜ்யஸ்தோ² ராஜ்யஸ்த²ம் அநுபாலய || 2-58-22

அதிக்ராந்தவயா ராஜா மாஸ்மைநம் வ்யவரோருத⁴꞉ |
குமாரராஜ்யே ஜீவ த்வம் தஸ்யைவாஜ்ஞ்ப்ரவர்தநாம் || 2-58-23

அப்³ரவீச்சாபி மாம் பூ⁴யோ ப்⁴ருஷ²மஷ்²ரூணி வர்தயன் |
மாதேவ மம மாதா தே த்³ரஷ்டவ்யா புத்ரக³ர்தி⁴நீ || 2-58-24

இதி ஏவம் மாம் மஹாராஜ ப்³ருவந்ன் ஏவ மஹா யஷா²꞉ |
ராம꞉ ராஜீவ தாம்ர அக்ஷோ ப்⁴ருஷ²ம் அஷ்²ரூணி அவர்தயத் || 2-58-25

லக்ஷ்மண꞉ து ஸுஸம்க்ருத்³தோ⁴ நிஹ்ஷ்²வஸன் வாக்யம் அப்³ரவீத் |
கேந அயம் அபராதே⁴ந ராஜ புத்ர꞉ விவாஸித꞉ || 2-58-26

ராஜ்ஞா து க²லு கைகேய்யா லகு⁴ த்வாஷ்²ரித்ய ஷா²ஸநம் |
க்ருதம் கார்யமகார்யம் வா வயம் யேநாபி⁴பீடி³தா꞉ || 2-58-27

யதி³ ப்ரவ்ராஜித꞉ ராம꞉ லோப⁴ காரண காரிதம் |
வர தா³ந நிமித்தம் வா ஸர்வதா² து³ஷ்க்ருதம் க்ருதம் || 2-58-28

இத³ம் தாவத்³யதா²காமமீஷ்²வரஸ்ய க்ருதே க்ருதம் |
ராமஸ்ய து பரித்யாகே³ ந ஹேதும் உபலக்ஷயே || 2-58-29

அஸமீக்ஷ்ய ஸமாரப்³த⁴ம் விருத்³த⁴ம் பு³த்³தி⁴ லாக⁴வாத் |
ஜநயிஷ்யதி ஸம்க்ரோஷ²ம் ராக⁴வஸ்ய விவாஸநம் || 2-58-30

அஹம் தாவன் மஹா ராஜே பித்ருத்வம் ந உபலக்ஷயே |
ப்⁴ராதா ப⁴ர்தா ச ப³ந்து⁴꞉ ச பிதா ச மம ராக⁴வ꞉ || 2-58-31

ஸர்வ லோக ப்ரியம் த்யக்த்வா ஸர்வ லோக ஹிதே ரதம் |
ஸர்வ லோகோ அநுரஜ்யேத கத²ம் த்வா அநேந கர்மணா || 2-58-32

ஸர்வப்ரஜாபி⁴ராமம் ஹி ராமம் ப்ரவ்ராஜ்ய தா⁴ர்மிகம் |
ஸர்வலோகம் விருத்⁴யேமம் கத²ம் ராஜா ப⁴விஷ்யஸி || 2-58-33

ஜாநகீ து மஹா ராஜ நி꞉ஷ்²வஸந்தீ தபஸ்விநீ |
பூ⁴த உபஹத சித்தா இவ விஷ்டி²தா வ்ருஷ்ம்ருதா ஸ்தி²தா || 2-58-34

அத்³ருஷ்ட பூர்வ வ்யஸநா ராஜ புத்ரீ யஷ²ஸ்விநீ |
தேந து³ஹ்கே²ந ருத³தீ ந ஏவ மாம் கிஞ்சித் அப்³ரவீத் || 2-58-35

உத்³வீக்ஷமாணா ப⁴ர்தாரம் முகே²ந பரிஷு²ஷ்யதா |
முமோச ஸஹஸா பா³ஷ்பம் மாம் ப்ரயாந்தம் உதீ³க்ஷ்ய ஸா || 2-58-36

ததை²வ ராம꞉ அஷ்²ரு முக²꞉ க்ருத அந்ஜலி꞉ |
ஸ்தி²த꞉ அப⁴வல் லக்ஷ்மண பா³ஹு பாலித꞉ ஸ்தி²த꞉ |
ததை²வ ஸீதா ருத³தீ தபஸ்விநீ |
நிரீக்ஷதே ராஜ ரத²ம் ததை²வ மாம் || 2-58-37

இத்யார்ஷே ஷ்²ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ அஷ்டபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Wednesday, 3 August 2022

இரதம் வந்து உற்றது | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 057 (34)

The chariot returned | Ayodhya-Kanda-Sarga-057 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குகனிடம் விடைபெற்று, அயோத்திக்குத் திரும்பி தசரதனிடம் செய்தியைச் சொன்ன சுமந்திரன்; தசரதனும், கௌசல்யையும் மயங்கி விழுந்தது...

Kaushalya Dasharatha Sumitra Sumantra

இராமன் தென்கரையில் இறங்கியபோது, குஹன் சுமந்திரனிடம் நெடுநேரம் பேசிவிட்டு, பெருந்துக்கத்துடன் தன் கிருஹத்திற்கு {வீட்டிற்குச்} சென்றான்.(1) {இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர்} பரத்வாஜரைச் சந்தித்தது, பிரயாகையில் அவருடன் தங்கியது, கிரிக்கு {சித்திரகூட மலைக்குச்} சென்றது ஆகியவற்றை அங்கே இருந்தவர்கள் குறிப்பிட்டனர்[1].(2) 

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அவர்களுடைய பரத்வாஜ முனிவரின் தரிசனமும், பிரயாகையில் கூடி வசித்ததும், சித்திரகூட மலைக்கு எழுந்தருளியதும் அங்கு வாஸம் செய்பவர்களால் அறிந்து கொள்ளப்பட்டது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அந்த ஷ்ருங்கிபேரபுரத்திலுள்ள சாரர்கள், ராமதிகள் பரத்வாஜமுனிவரிடம் போவது, ப்ரயாகக்ஷேத்ரத்தில் அம்முனிவருடன் கூடியிருப்பது முதலாக சித்ரகூடபர்வதத்திற்குப் போகும் வரையிலும் நடந்த வ்ருத்தாந்தங்களெல்லாவற்றையும் ஸுமந்திரனுக்குத் தெரிவித்தனர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "காட்டிலடிக்கடி ஸஞ்சரிக்கின்றவர்கள் முகமாய்ப் பெருமாள் பரத்துவாஜாச்ரமத்துக் கெழுந்தருளியதையும், அங்கிருந்து பிரயாகக்ஷேத்திரஞ் சேர்ந்ததையும், அங்கிருந்து திருச்சித்திர கூடம் வரையி லெழுந்தருளி யதையுங் கேட்டுணர்ந்து, அல்லும் பகலும் ஸ்ரீராமச்சந்திரரையே நினைத்துக் கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது.

அதன் பிறகு {செல்வதற்கு} அனுமதிக்கப்பட்ட சுமந்திரன், உத்தம ஹயங்களை {சிறந்த குதிரைகளைத் தேரில்} பூட்டி, மனவேதனையுடன் அயோத்தி நகரை நோக்கிப் பிரயாணம் செய்தான்.(3) அவன் {சுமந்திரன்}, சுகந்தமான வனங்களையும் {நறுமணம் கமழும் காடுகளையும்}, சரிதங்களையும் {ஆறுகளையும்}, சரஸ்களையும் {தடாகங்களையும்}, கிராமங்களையும், நகரங்களையும்  கண்டு சீக்கிரமாக {அவற்றைக்} கடந்து சென்றான்.(4) அதன் பிறகு மூன்றாம் நாள் சாயுங்காலத்தில் {மாலை நேரத்தில்} அயோத்தியை அடைந்த அந்த சாரதி {சுமந்திரன்}, அஃது ஆனந்தமற்றிருப்பதைக் கண்டான்.(5)

அது சூனியமாகவும், நிசப்தமாகவும் இருப்பதைக் கண்ட சுமந்திரன், பரம துக்கத்தில் மூழ்கி, பெருஞ்சோகத்தால் பீடிக்கப்பட்டு {பின்வருமாறு} சிந்தித்தான்:(6) "கஜங்களுடனும், அச்வங்களுடனும், ஜனங்களுடனும், ஜனாதிபனுடனும் {யானைகளுடனும், குதிரைகளுடனும், மக்களுடனும், மக்கள் தலைவனுடனும்} இருந்த நகரம், ராமனை நினைத்து உண்டான துக்கத்தால் சோகாக்னியில் எரிந்து விட்டதோ?" {என்று நினைத்தான்}.(7)

இவ்வாறான சிந்தனையில் தொலைந்த அந்த சூதன், வேகமாகச் செல்லும் வாஜிகளில் {குதிரைகளில்} நகரதுவாரத்தை {நகரவாயிலை} அடைந்து, துரிதமாக அதற்குள் பிரவேசித்தான்.(8) சூதனான அந்த சுமந்திரன், அதன்பிறகு, "இராமன் எங்கே?" என்று கேட்டவாறே தன்னை நோக்கி ஓடிவந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நரர்களை {மனிதர்களை} நெருங்கினான்.(9) அவன் அவர்களிடம், "மஹாத்மாவும், தார்மீகனுமான ராகவனால் {ராமனால்} கங்கையில் அனுமதி கொடுக்கப்பட்டபிறகு, அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக் கொண்டு நான் திரும்பி வந்தேன்" என்று மறுமொழி கூறினான்.(10)

அவர்கள் {ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் கங்கையைக்} கடந்து விட்டனர் என்பதை அறிந்த அந்த ஜனங்களின் முகங்கள் கண்ணீரால் நிறைந்தன. அவர்கள், பெருமூச்சுவிட்டபடியே, "அஹோ"  என்றும், "சீ, சீ" என்றும், "ஹா, ராமா" என்றும் சொல்லி உரக்க அழுதனர்.(11) 

அவன் {சுமந்திரன்}, கூட்டங்கூட்டமாக நின்றிருந்த அவர்களின் {இவ்வாறான} சொற்களையும் கேட்டான், "இங்கே ராகவனைக் காணாத நாம் நிச்சயம் கெட்டொழிந்தோம்.(12) தானம், யாகம், விவாஹம், மஹத்தான சமாஜ {பெருங்கூட்டமாகக் கூடும்} நிகழ்ச்சிகளிலும் இனி ஒருபோதும் தார்மீகனான ராமனை நாம் காணமாட்டோம்.(13) சுகத்தை அளிக்கும் வகையில், இந்த ஜனங்களுக்குப் பிரியமானவற்றைத் தகுந்த முறையில் செய்து, பிதாவை {ஒரு தந்தையைப்} போல இந்நகரத்தை ராமன் பரிபாலித்தான்" {என்று சொல்லி அந்த மக்கள் அழுதனர்}.(14)

கடைகளின் வழியாகச் செல்லும்போது, ராமனை நினைத்து சோகமாக வருந்திக் கொண்டிருக்கும் ஸ்திரீகளின் புலம்பல்களை சாளரங்களின் {ஜன்னல்களின்} வழியாக இவ்வாறே அவன் {சுமந்திரன்} கேட்டுச் சென்றான்.(15) அந்த சுமந்திரன், தன் முகத்தை மறைத்துக் கொண்டு {முக்காடிட்டுக் கொண்டு} ராஜமார்க்கத்தின் மத்தியில் தசரத ராஜன் இருந்த கிருஹத்திற்குச் சென்றான்.(16) அவன் ரதத்தில் இருந்து இறங்கி, ராஜவேஷ்மத்திற்குள் {அரண்மனைக்குள்} சீக்கிரமாகப் பிரவேசித்து, மஹாஜனகுலங்களால் {பெரும் மக்கள் கூட்டத்தால்} நிறைந்திருந்த ஏழு உள்கட்டுகளையும் கடந்து சென்றான்.(17) 

அவன் {சுமந்திரன்} வருவதைக் கண்டு, மாளிகைகளிலும், விமானங்களிலும், பிராசாதங்களிலும் {அரண்மனைகளிலும்} இருந்த நாரியைகள் {பெண்கள்}, ராமனைக் காணாமல் சோர்ந்து, "ஹா", "ஹா" என்று அலறினர்.(18) கண்ணீரால் நிறைந்த பிரகாசமான கண்களுடன் கூடிய ஸ்திரீகள் வேதனையை வெளிக்காட்டாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(19) 

ராமனை நினைத்து சோகத்தில் தவித்த தசரதனின் ஸ்திரீகளுக்குரிய அந்தந்த பிராசாதங்களில் {அரண்மனைகளில்} இருந்து வெளிப்படும் மெல்லிய கிசுகிசுப்புகளையும் அவன் {சுமந்திரன்} கேட்டான்.(20) "இராமனுடன் சென்று, இங்கே அவனில்லாமல் திரும்பியிருக்கும் இந்த சூதன் {சுமந்திரன்}, அழுது கொண்டிருக்கும் கௌசல்யையிடம் என்ன சொல்லப் போகிறான்?(21) புத்திரன் வெளியே சென்றுவிட்ட பிறகும் தொடர்ந்து ஜீவித்திருக்கும் கௌசல்யையின் இந்த துர்ஜீவிதம் நிச்சயம் எளிதானதல்ல {வாழ்வது கடினம்}[2] என்றே நான் நினைக்கிறேன்" {என்று மக்கள் பேசுவதை சுமந்திரன் கேட்டான்}.(22) ராஜனின் ஸ்திரீகள் சொன்ன சத்திய ரூபமான அந்த வாக்கியங்களைக் கேட்டவாறு, சோகத்தில் எரிந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றிய அந்த கிருஹத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(23)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "கௌசல்யை பலவந்தமாகப் பிழைத்திருக்கிறாளென்பது மிகவும் கஷ்டமாயிருப்பது. இப்படி துக்கப் பிழைப்பாகப் பிழைத்திருப்பது மற்றொருவருக்கும் தரமன்றென்று நிஜமாக எனக்குத் தோன்றுகின்றது என்பது மஹேஸ்வரதீர்த்தர் உரை" என்றிருக்கிறது.

எட்டாவது கட்டுக்குள் நுழைந்த அவன் {சுமந்திரன்}, அந்த வெண்கிருஹத்திற்குள் தீனனாகவும், புத்திரசோகத்தில் வருந்தி முகம் வாடியவனாகவும் இருக்கும் {தசரத} ராஜனைக் கண்டான்.(24) சுமந்திரன், அங்கே அமர்ந்திருந்த அந்த நரேந்திரனை நெருங்கி வணங்கி, ராமன் சொல்லி அனுப்பியவற்றை உள்ளபடியே சொன்னான்.(25) அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த ராஜன், ராமன் இல்லாத துயரத்தில் மூழ்கி மனம் குழம்பியவனாக பூமியில் மூர்ச்சித்து விழுந்தான்.(26) அந்தப் பிருத்வீபதி மூர்ச்சித்ததும் அந்தப்புரவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அந்த நிருபதி தரையில் விழும்போதே தங்கள் கைகளை உயர்த்திக் கதறி அழுதனர்.(27)

சுமித்ரை சகிதம் வந்த கௌசல்யை, விழுந்து கிடக்கும் தன் பதியைத் தூக்கிவிட்டு, இந்த சொற்களையும் சொன்னாள்:(28) "மஹாபாக்யவானே, கடினமான காரியங்களைச் செய்து வனவாசமிருப்பவனிடமிருந்து {ராமனிடமிருந்து} வந்த தூதரிடம் ஏன் ஏதும் பேசாமலிருக்கிறீர்?[3](29) இராகவரே, நயமற்றதைச் செய்துவிட்டு இப்போது வெட்கப்படுகிறீர். எழுவீராக. அஃது உமக்கு நற்செயலாகவே ஆகட்டும். சோகத்தால் சஹாயம் கிட்டாது {துன்புறுவதால் எந்தப் பயனும் இல்லை}.(30) தேவா, யாருக்குப் பயந்து ராமனைக் குறித்து இந்த சாரதியிடம் நீர் விசாரிக்காமலிருக்கிறீரோ, அந்தக் கைகேயி இங்கே இல்லை. அச்சமின்றி பேசுவீராக" {என்றாள் கௌசல்யை}.(31)

[3] இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும்
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரைதபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி
விரமமாதவனைக் கண்டான் வீரன் வந்தனனோ என்றான்.

- கம்பராமாயணம் 1896ம் பாடல்

பொருள்:  {காடு சென்ற} தேர் வந்து சேர்ந்தது என்று அங்குள்ள அனைவரும் சொன்னதும், "வரதன் {ராமன்} வந்து விட்டான்" என்று கருதிய {தசரத} மன்னனும் மயக்கம் தீர்ந்தான். குற்றமற்ற தாமரை மலர் போன்ற கண்கள் பொருக்கென விழித்து நோக்கி, விரதம் நோற்ற சிறந்தவனிடம் "வீரன் {ராமன்} வந்தனனோ?" என்று கேட்டான்.

சோகத்தாலும், ஏக்கத்தாலும் கண்ணீர் பெருக மஹாராஜனிடம் இவ்வாறு பேசிய அந்தக் கௌசல்யை வேகமாகத் தரையில் விழுந்தாள்.(32) இவ்வாறு அழுது கொண்டே புவியில் விழும் கௌசலையையும், அவளது பதியையும் கண்டு சர்வ ஸ்திரீகளும் உரக்கக் கதறி அழுதனர்.(33) அந்தப்புரத்தில் எழும் ஒலியைக் கேட்டு முதியவர்களும், இளைஞர்களும், ஸ்திரீகளும் என மனிதர்கள் அனைவரும் சுற்றிலும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அந்த நகரம் மீண்டும் கலக்கமடைந்தது.(34)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 057ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

அயோத்யா காண்டம் 057ம் ஸர்கம்

வால்மீகிராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ ஸப்தபஞ்சஷ²꞉ ஸர்க³꞉


Kaushalya Dasharatha Sumitra Sumantra

கத²யித்வா ஸுது³ஹ்க² ஆர்த꞉ ஸுமந்த்ரேண சிரம் ஸஹ |
ராமே த³க்ஷிண கூலஸ்தே² ஜகா³ம ஸ்வ க்³ருஹம் கு³ஹ꞉ || 2-57-1

ப⁴ரத்³வாஜாபி⁴க³மநம் ப்ரயாகே³ ச ஸஹாஸநம் |
ஆகி³ரேர்க³மநம் தேஷாம் தத்ரஸ்தை²ரபி⁴லக்ஷிதம் || 2-57-2

அநுஜ்ஞாத꞉ ஸுமந்த்ர꞉ அத² யோஜயித்வா ஹய உத்தமான் |
அயோத்⁴யாம் ஏவ நக³ரீம் ப்ரயயௌ கா³ட⁴ து³ர்மநா꞉ || 2-57-3

ஸ வநாநி ஸுக³ந்தீ⁴நி ஸரித꞉ ச ஸராம்ஸி ச |
பஷ்²யந்ன் அதியயௌ ஷீ²க்⁴ரம் க்³ராமாணி நக³ராணி ச || 2-57-4

தத꞉ ஸாய அஹ்ந ஸமயே த்ருதீயே அஹநி ஸாரதி²꞉ |
அயோத்⁴யாம் ஸமநுப்ராப்ய நிராநந்தா³ம் த³த³ர்ஷ² ஹ || 2-57-5

ஸ ஷூ²ந்யாம் இவ நிஹ்ஷ²ப்³தா³ம் த்³ருஷ்ட்வா பரம து³ர்மநா꞉ |
ஸுமந்த்ர꞉ சிந்தயாம் ஆஸ ஷோ²க வேக³ ஸமாஹத꞉ || 2-57-6

கச்சின் ந ஸக³ஜா ஸாஷ்²வா ஸஜநா ஸஜந அதி⁴பா |
ராம ஸம்தாப து³ஹ்கே²ந த³க்³தா⁴ ஷோ²க அக்³நிநா புரீ || 2-57-7

இதி சிந்தா பர꞉ ஸூத꞉ வாஜிபி⁴꞉ ஷ்²ரீக்⁴ரபாதிபி⁴꞉ |
நக³ரத்³வாரமாஸாத்³ய த்வரித꞉ ப்ரவிவேஷ² ஹ || 2-57-8

ஸுமந்த்ரம் அபி⁴யாந்தம் தம் ஷ²தஷோ² அத² ஸஹஸ்ரஷ²꞉ |
க்வ ராமைதி ப்ருச்சந்த꞉ ஸூதம் அப்⁴யத்³ரவன் நரா꞉ || 2-57-9

தேஷாம் ஷ²ஷ²ம்ஸ க³ங்கா³யாம் அஹம் ஆப்ருச்ச்ய ராக⁴வம் |
அநுஜ்ஞாத꞉ நிவ்ருத்த꞉ அஸ்மி தா⁴ர்மிகேண மஹாத்மநா || 2-57-10

தே தீர்ணாஇதி விஜ்ஞாய பா³ஷ்ப பூர்ண முகா² ஜநா꞉ |
அஹோ தி⁴க்³ இதி நிஷ்²ஷ்²வஸ்ய ஹா ராம இதி ச சுக்ருஷு²꞉ || 2-57-11

ஷு²ஷ்²ராவ ச வச꞉ தேஷாம் ப்³ருந்த³ம் ப்³ருந்த³ம் ச திஷ்ட²தாம் |
ஹதா꞉ ஸ்ம க²லு யே ந இஹ பஷ்²யாமைதி ராக⁴வம் || 2-57-12

தா³ந யஜ்ஞ விவாஹேஷு ஸமாஜேஷு மஹத்ஸு ச |
ந த்³ரக்ஷ்யாம꞉ புநர் ஜாது தா⁴ர்மிகம் ராமம் அந்தரா || 2-57-13

கிம் ஸமர்த²ம் ஜநஸ்ய அஸ்ய கிம் ப்ரியம் கிம் ஸுக² ஆவஹம் |
இதி ராமேண நக³ரம் பித்ருவத் பரிபாலிதம் || 2-57-14

வாத அயந க³தாநாம் ச ஸ்த்ரீணாம் அந்வந்தர ஆபணம் |
ராம ஷோ²க அபி⁴தப்தாநாம் ஷு²ஷ்²ராவ பரிதே³வநம் || 2-57-15

ஸ ராஜ மார்க³ மத்⁴யேந ஸுமந்த்ர꞉ பிஹித ஆநந꞉ |
யத்ர ராஜா த³ஷ²ரத²꞉ தத் ஏவ உபயயௌ க்³ருஹம் || 2-57-16

ஸோ அவதீர்ய ரதா²த் ஷீ²க்⁴ரம் ராஜ வேஷ்²ம ப்ரவிஷ்²ய ச |
கக்ஷ்யா꞉ ஸப்த அபி⁴சக்ராம மஹா ஜந ஸமாகுலா꞉ || 2-57-17

ஹர்ம்யைர்விமாநை꞉ ப்ராஸாதை³ரவேக்ஷ்யாத² ஸமாக³தம் |
ஹாஹாகாரக்ருதா நார்யோ ராமத³ர்ஷ²நகர்ஷி²தா꞉ || 2-57-18

ஆயதைர்விமலைர்நேத்ரைரஷ்²ருவேக³பரிப்லுதை꞉ |
அந்யோந்யமபி⁴வீக்ஷந்தே(அ)வ்யக்தமார்ததரா꞉ ஸ்த்ரீய꞉ || 2-57-19

தத꞉ த³ஷ²ரத² ஸ்த்ரீணாம் ப்ராஸாதே³ப்⁴ய꞉ தத꞉ தத꞉ |
ராம ஷோ²க அபி⁴தப்தாநாம் மந்த³ம் ஷு²ஷ்²ராவ ஜல்பிதம் || 2-57-20

ஸஹ ராமேண நிர்யாத꞉ விநா ராமம் இஹ ஆக³த꞉ |
ஸூத꞉ கிம் நாம கௌஸல்யாம் ஷோ²சந்தீம் ப்ரதி வக்ஷ்யதி || 2-57-21

யதா² ச மந்யே து³ர்ஜீவம் ஏவம் ந ஸுகரம் த்⁴ருவம் |
ஆச்சித்³ய புத்ரே நிர்யாதே கௌஸல்யா யத்ர ஜீவதி || 2-57-22

ஸத்ய ரூபம் து தத் வாக்யம் ராஜ்ஞ꞉ ஸ்த்ரீணாம் நிஷா²மயன் |
ப்ரதீ³ப்தம் இவ ஷோ²கேந விவேஷ² ஸஹஸா க்³ருஹம் || 2-57-23

ஸ ப்ரவிஷ்²ய அஷ்டமீம் கக்ஷ்யாம் ராஜாநம் தீ³நம் ஆதுலம் |
புத்ர ஷோ²க பரிம்லாநம் அபஷ்²யத் பாண்டு³ரே க்³ருஹே || 2-57-24

அபி⁴க³ம்ய தம் ஆஸீநம் நர இந்த்³ரம் அபி⁴வாத்³ய ச |
ஸுமந்த்ர꞉ ராம வசநம் யதா² உக்தம் ப்ரத்யவேத³யத் || 2-57-25

ஸ தூஷ்ணீம் ஏவ தத் ஷ்²ருத்வா ராஜா விப்⁴ராந்த சேதந꞉ |
மூர்சித꞉ ந்யபதத் பூ⁴மௌ ராம ஷோ²க அபி⁴பீடி³த꞉ || 2-57-26

தத꞉ அந்த꞉ புரம் ஆவித்³த⁴ம் மூர்சிதே ப்ருதி²வீ பதௌ |
உத்³த்⁴ருத்ய பா³ஹூ சுக்ரோஷ² ந்ருபதௌ பதிதே க்ஷிதௌ || 2-57-27

ஸுமித்ரயா து ஸஹிதா கௌஸல்யா பதிதம் பதிம் |
உத்தா²பயாம் ஆஸ ததா³ வசநம் ச இத³ம் அப்³ரவீத் || 2-57-28

இமம் தஸ்ய மஹா பா⁴க³ தூ³தம் து³ஷ்கர காரிண꞉ |
வந வாஸாத் அநுப்ராப்தம் கஸ்மான் ந ப்ரதிபா⁴ஷஸே || 2-57-29

அத்³ய இமம் அநயம் க்ருத்வா வ்யபத்ரபஸி ராக⁴வ |
உத்திஷ்ட² ஸுக்ருதம் தே அஸ்து ஷோ²கே ந ஸ்யாத் ஸஹாயதா || 2-57-30

தே³வ யஸ்யா ப⁴யாத் ராமம் ந அநுப்ருச்சஸி ஸாரதி²ம் |
ந இஹ திஷ்ட²தி கைகேயீ விஷ்²ரப்³த⁴ம் ப்ரதிபா⁴ஷ்யதாம் || 2-57-31

ஸா ததா² உக்த்வா மஹா ராஜம் கௌஸல்யா ஷோ²க லாலஸா |
த⁴ரண்யாம் நிபபாத ஆஷு² பா³ஷ்ப விப்லுத பா⁴ஷிணீ || 2-57-32

ஏவம் விலபதீம் த்³ருஷ்ட்வா கௌஸல்யாம் பதிதாம் பு⁴வி |
பதிம் ச அவேக்ஷ்ய தா꞉ ஸர்வா꞉ ஸுஸ்வரம் ருருது³꞉ ஸ்த்ரிய꞉ || 2-57-33

தத꞉ தம் அந்த꞉ புர நாத³ம் உத்தி²தம் |
ஸமீக்ஷ்ய வ்ருத்³தா⁴꞉ தருணா꞉ ச மாநவா꞉ |
ஸ்த்ரிய꞉ ச ஸர்வா ருருது³꞉ ஸமந்தத꞉ |
புரம் ததா³ ஆஸீத் புநர் ஏவ ஸம்குலம் || 2-57-34

இத்யார்ஷே ஷ்²ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே அயோத்⁴யாகாண்டே³ ஸப்தபஞ்சஷ²꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை