Prahasta killed | Yuddha-Kanda-Sarga-058 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தனின் ஆற்றல்; பிரஹஸ்தனுடன் போரிட்டு அவனைக் கொன்ற நீலன்...
அரிந்தமனான {பகைவரை அடக்குபவனான} ராமன், போருக்குரிய ஆவலுடன் புறப்பட்டு வந்த பிரஹஸ்தனைக் கண்டு, புன்னகையுடன் விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) “மஹத்தான பலம் {படை} சூழ மஹாவேகத்துடன் வரும் இந்த மஹாகாயன் {பேருடல் படைத்தவன்} யார்?{2} மஹாபாஹுவே, வீரியவந்தனான இந்த நிசாசரனை {இரவுலாவியைக்} குறித்து எனக்குச் சொல்வாயாக” {என்று கேட்டான் ராமன்}.(2,3அ)