The fear of Vanaras | Yuddha-Kanda-Sarga-066 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்; போர்க்களத்தில் இருந்து ஓடும் வானரர்களின் துணிவை மீட்ட அங்கதன்...
கிரிகூடத்திற்கு ஒப்பான மஹானும் {மலைச்சிகரத்திற்கு நிகராகப் பெருத்தவனும்}, மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், பிராகாரத்தை லங்கனம் செய்து {மதிற்சுவற்றைக் கடந்து} நகரத்திலிருந்து துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் சமுத்திரம் எதிரொலிக்கும் வகையிலும், இடிகளை வெல்வது {இடிப்பதைப்} போலும், பர்வதங்களை நடுங்கச் செய்யும்படியும் நாதம் செய்தான்.(2) மகவத்தாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, வருணனாலோ வதைக்கப்பட முடியாதவனும், பயங்கரக் கண்களைக் கொண்டவனுமான அவனைக் கண்டதும் வானரர்கள் ஓடிவிட்டனர்[1].(3)