Wednesday, 2 July 2025

கும்ப வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 076 (95)

Kumbha killed | Yuddha-Kanda-Sarga-076 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கம்பனன், பிரஜங்கன் ஆகியோரை அங்கதனும், சோணிதாக்ஷனை துவிவிதனும், யூபாக்ஷனை மைந்தனும், கும்பனை சுக்ரீவனும் கொன்றது...

Monkey king Sugreeva grabing the bow of rakshasa Kumbha

வீரஜனங்களுக்கு அழிவைத் தந்த அந்த கோரமான போர் நடந்து கொண்டிருந்த போது, போரில் உற்சாகம் கொண்ட அங்கதன், வீரம் மிக்க கம்பனனைத் தாக்கினான்.(1) அங்கதனை {அறைகூவி} அழைத்த அந்த கம்பனன், கதையைக் கொண்டு கோபத்துடன் வேகமாகத் தாக்கினான். கடுமையாகத் தாக்கப்பட்ட அவன் {அங்கதன்} கலக்கமடைந்தான்.(2) தேஜஸ்வியான அவன் {அங்கதன்}, நனவு மீண்டு, கிரி சிகரம் ஒன்றை வீசினான். அந்த அடியால் பீடிக்கப்பட்ட கம்பனன் புவியில் விழுந்தான்.(3) 

யுத்த காண்டம் 076ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்ஸப்ததிதம꞉ ஸர்க³꞉

Monkey king Sugreeva grabing the bow of rakshasa Kumbha

ப்ரவ்ருத்தே ஸங்குலே தஸ்மின்கோ⁴ரே வீரஜனக்ஷயே |
அங்க³த³꞉ கம்பனம் வீரமாஸஸாத³ ரணோத்ஸுக꞉ || 6-76-1

ஆஹூய ஸோ(அ)ங்க³த³ம் கோபாத்தாட³யாமாஸ வேகி³த꞉ |
க³த³யா கம்பன꞉ பூர்வம் ஸ சசால ப்⁴ருஷா²ஹத꞉ || 6-76-2

ஸ ஸஞ்ஜ்ஞாம் ப்ராப்ய தேஜஸ்வீ சிக்ஷேப ஷி²க²ரம் கி³ரே꞉ |
அர்தி³தஷ்²ச ப்ரஹாரேண கம்பன꞉ பதிதோ பு⁴வி || 6-76-3

ததஸ்து கம்பனம் த்³ருஷ்ட்வா ஷோ²ணிதாக்ஷோ ஹதம் ரணே |
ரதே²நாப்⁴யபதத் க்ஷிப்ரம் தத்ராங்க³த³மபீ⁴தவத் || 6-76-4

Wednesday, 25 June 2025

யுத்தம் மஹாரௌத்ரம் | யுத்த காண்டம் சர்க்கம் - 075 (71)

Terrific battle | Yuddha-Kanda-Sarga-075 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் அறிவுறுத்தலுக்கு இணங்க வானரர்களால் இலங்கை தீக்கிரையாக்கப்பட்டது. இராட்சசர்களுக்கும், வானரர்களுக்கும் இடையில் நடந்த பயங்கரமான போர்...

Monkey warriors with torches in their hand

அப்போது, மஹாதேஜஸ்வியும், வானரேஷ்வரனுமான சுக்ரீவன், வேண்டிக் கொள்ளும் வகையில் ஹனூமந்தனிடம் அர்த்தம் பொதிந்த இந்த சொற்களைக் கூறினான்:(1) "கும்பகர்ணன் கொல்லப்பட்டான். குமாரர்களும் கிட்டத்தட்ட அழிவடைந்தனர்[1]. இப்போது ராவணன் பதில் தாக்குதல் ஏதும் தொடுக்கமாட்டான்.(2) மஹாபலவான்களும், வேகம் நிறைந்தவர்களுமான பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்}, எவரெவர் இருக்கின்றனரோ, அந்தந்தப் பிலவகரிஷபர்கள் {தாவிச் செல்பவர்களில் காளைகள்}, உல்கங்களை {எரிகொள்ளிகளை} எடுத்துக் கொண்டு, லங்கைக்கு விரைந்து செல்லட்டும்.{3} ஹரிக்கு ஒப்பான ஹரயர்கள் {சிங்கத்திற்கு ஒப்பான குரங்குகள்} ராவணாலயத்தை விரைவாக எரிக்கட்டும்" {என்றான் சுக்ரீவன்}.(3,4அ)

யுத்த காண்டம் 075ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ பஞ்சஸப்ததிதம꞉ ஸர்க³꞉

Monkey warriors with torches in their hand

ததோ(அ)ப்³ரவீன்மஹாதேஜா꞉ ஸுக்³ரீவோ வானரேஷ்²வர꞉ |
அர்த்²யம் விஜ்ஞாபயம்ஷ்²சாபி ஹனூமந்தமித³ம் வச꞉ || 6-75-1

யதோ ஹத꞉ கும்ப⁴கர்ண꞉ குமாராஷ்²ச நிஷூதி³தா꞉ |
நேதா³னீமுபநிர்ஹாரம் ராவனோ தா³துமர்ஹதி || 6-75-2

யே யே மஹாப³லா꞉ ஸந்தி லக⁴வஷ்²ச ப்லவங்க³மா꞉ |
லங்காமபி⁴பதந்த்வாஷு² க்³ருஹ்யோல்கா꞉ ப்லவக³ர்ஷபா⁴꞉ || 6-75-3
ஹரயோ ஹரிஸங்காஷா²꞉ ப்ரத³க்³து⁴ம் ராவணாலயம் |

Friday, 20 June 2025

ஔஷதி பர்வதமும், கந்தவஹாத்மஜனும் | யுத்த காண்டம் சர்க்கம் - 074 (77)

Mountain of herbs and the son of the carrier of fragrance | Yuddha-Kanda-Sarga-074 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இமய மலைக்குச் சென்று, மூலிகைகளுடன் கூடிய மலைச்சிகரத்தை எடுத்து வந்த ஹனுமான்; மூலிகையின் மகிமையால் உணர்வு மீண்ட வானரர்களும், ராமலக்ஷ்மணர்களும்...

Hanuman and Vibheeshan speaking to Jambhavan

போர்க்களத்தில் அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்} விழுந்துகிடந்தபோது, ஹரியூதபர்களின் சைனியம் திகைத்திருந்தது. சுக்ரீவன், நீலன், அங்கதன், ஜாம்பவந்தன் ஆகியோரும் ஏது செய்வதெனக் கொஞ்சமும் அறியாதிருந்தனர்.(1) புத்திமான்களில் சிறந்தவனான விபீஷணன், அனைத்தையும் கண்டு விசனமடைந்தான். பிறகு, ஒப்பற்ற சொற்களால், சாகை மிருக ராஜ வீரர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பயம் வேண்டாம். மனச்சோர்வடைவதற்கான காலம் இதுவல்ல. ஸ்வயம்பூவின் {பிரம்மாவின்} வாக்கியத்தை மதிக்கும் வகையிலேயே ஆரியபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் இந்திரஜித்தின் அஸ்திரஜாலங்களால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். அதன்காரணமாக, சுதந்திரத்தை இழந்து உணர்விழந்துள்ளனர்.(3) அமோக {வீண்போகாத} வீரியம் கொண்ட பிரம்மம் என்ற இந்தப் பரமாஸ்திரம், ஸ்வயம்பூவால் அவனுக்கு {பிரம்மனால் இந்திரஜித்துக்கு} தத்தம் செய்யப்பட்டது. அதற்கு மதிப்பளிக்கவே ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் யுத்தத்தில் விழுந்தனர். இங்கே விஷாதகாலம் ஏது? {இது வருந்துவதற்கான காலமல்ல)" {என்றான் விபீஷணன்}.(4)

யுத்த காண்டம் 074ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ சது꞉ஸப்ததிதம꞉ ஸர்க³꞉

Hanuman carrying Oushadi parvata

தயோஸ்ததா³ ஸாதி³தயோ ரணாக்³ரே |
முமோஹ ஸைன்யம் ஹரியூத²பானாம் |
ஸுக்³ரீவநீலாங்க³த³ஜாம்ப³வந்தோ |
ந சாபி கிம் சித்ப்ரதிபேதி³ரே தே || 6-74-1

ததோ விஷண்ணம் ஸமவேக்ஷ்ய ஸைன்யம் |
விபீ⁴ஷணோ பு³த்³தி⁴மதாம் வரிஷ்ட²꞉ |
உவாச ஷா²கா²ம்ருக³ராஜவீரான் |
நாஷ்²வாஸயன்னப்ரதிமைர்வசோபி⁴꞉ || 6-74-2

Tuesday, 17 June 2025

பிரம்மாஸ்திர பந்தனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 073 (75)

Bound by Brahmastra | Yuddha-Kanda-Sarga-073 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை ஆறுதல்படுத்தி, வேள்வி செய்து, புலப்படா நிலை அடைந்த இந்திரஜித்; இராமலக்ஷ்மணர்களும், வானரப் படையும் இந்திரஜித்தின் தாக்குதலில் மயக்கமடைந்தது...

Indrajit

பிறகு, கொல்லப்படாமல் எஞ்சிய ராக்ஷச கணங்கள் {ராக்ஷசக்கூட்டத்தார்}, அங்கே துரிதமாகச் சென்று, தேவாந்தகன், திரிசிரன், அதிகாயன் உள்ளிட்ட ராக்ஷசபுங்கவர்கள் கொல்லப்பட்டதைச் சொன்னார்கள்.(1) அவர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட உடனேயே ராஜா {ராவணன்}, கண்ணீர் நிறைந்த கண்களுடன் மூர்ச்சித்தான். பிறகு, கோரமான புத்திர இழப்பையும், பிராதாக்களின் வதத்தையும் {தன்னுடன் பிறந்தோர் கொல்லப்பட்டதையும்} குறித்து நீண்ட நேரம் சிந்தித்தான்[1].(2)

[1] ஏற்கனவே அதிகாயனின் மரணத்தைக் கேட்டு, அழுது புலம்பிய ராவணன், இப்போது புதிதாக அச்செய்திகளைக் கேட்பது போல் இங்கே வருகிறது. 72ம் சர்க்கத்தில் உள்ள செய்தி, செம்பதிப்பில் இல்லாததற்கான காரணம் இதுவாகத் தான் இருக்கும்.

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை