Friday, 31 October 2025

ஹனுமான் சொன்ன விருத்தாந்தம் | யுத்த காண்டம் சர்க்கம் – 126 (55)

Story told by Hanuman | Yuddha-Kanda-Sarga-126 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் நீண்ட பயணத்தையும், அவன் சந்தித்தவர்களையும் குறித்து விளக்கிச் சொன்ன ஹனுமான்...

Lord Hanuman speaking to Bharata

{பரதன்}, "பல வருஷங்களாக மஹத்தான வனத்திற்குச் சென்றிருக்கும் என் நாதரின் பிரீதிகரமான கீர்த்தனத்தை {இனிமையான துதியை} இப்போது நான் கேட்கிறேன்.(1) "ஒரு நரன் ஜீவந்தனாக இருந்தால் {பிழைத்திருந்தால்}, நூறு வருஷங்களுக்குப் பிறகாவது ஆனந்தத்தை அடைவான்" என்ற இந்த லௌகிக கதை {உலகமொழி} எனக்கு கல்யாணமாக {மங்கலமாக} ஒலிக்கிறது {உண்மையாகத் தெரிகிறது}.(2) இராகவருக்கும், கபிக்களுக்கும் {குரங்குகளுக்கும்} இடையிலான சந்திப்பு எந்த தேசத்தில், ஏன் ஏற்பட்டது? கேட்கும் எனக்கு உள்ளபடி தெரிவிப்பாயாக[1]" {என்றான் பரதன்}.(3)

யுத்த காண்டம் 126ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்³விம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Lord Hanuman speaking to Bharata

ப³ஹூனி நாம வர்ஷாணி க³தஸ்ய ஸுமஹத்³வனம் |
ஷ்²ருணோம்யஹம் ப்ரீதிகரம் மம நாத²ஸ்ய கீர்தனம் || 6-126-1

கல்யாணீ ப³த கா³தே²யம் லௌகிகீ ப்ரதிபா⁴தி மே |
ஏதி ஜீவந்தமானந்தோ³ நரம் வர்ஷஷ²தாத³பி || 6-126-2

ராக⁴வஸ்ய ஹரீணாம் ச கத²மாஸீத்ஸமாக³ம꞉ |
கஸ்மிந்தே³ஷே² கிமாஷ்²ரித்ய தத்த்வமாக்²யாஹி ப்ருச்ச²த꞉ || 6-126-3

Wednesday, 29 October 2025

நந்திகிராமம் | யுத்த காண்டம் சர்க்கம் – 125 (46)

Nandigrama | Yuddha-Kanda-Sarga-125 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனால் அனுப்பப்பட்ட ஹனுமான், ராமனின் வரவை குஹனிடமும், பரதனிடமும் அறிவிப்பது...

Hanuman Bharata and Shatrugna

பிறகு, துரிதவிக்ரமனும், பிரியத்தை விரும்புகிறவனுமான ராகவ ராமன், அயோத்தியை நினைத்து பிரியமானதைக் குறித்துச் சிந்தித்தான்.(1) மதிமிக்கவனும், தேஜஸ்வியுமான அவன் இவ்வாறு சிந்தித்துவிட்டு, வானரர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தி, பிலவங்கமனான ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பிலவகசத்தமா {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனே}, சீக்கிரம் துரித கதியில் அயோத்திக்குச் சென்று, நிருபதிமந்திரத்தில் {அரசமாளிகையில்} உள்ள ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிவாயாக.(3) 

யுத்த காண்டம் 125ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ பஞ்சவிம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Hanuman Bharata and Shatrugna

அயோத்⁴யாம் து ஸமாலோக்ய சிந்தயாமாஸ ராக⁴வ꞉ |
ப்ரியகாம꞉ ப்ரியம் ராமஸ்ததஸ்த்வரிதவிக்ரம꞉ || 6-125-1

சிந்தயித்வா ததோ த்³ருஷ்டிம் வானரேஷு ந்யபாதயத் |
உவாச தீ⁴மாம்ஸ்தேஜஸ்வீ ஹனூமந்தம் ப்லவங்க³மம் || 6-125-2

அயோத்⁴யாம் த்வரிதோ க³ச்ச² க்ஷிப்ரம் த்வம் ப்லவகோ³த்தம |
ஜானீஹி கச்சித்குஷ²லீ ஜனோ ந்ருபதிமந்தி³ரே || 6-125-3

Monday, 27 October 2025

பரத்வாஜரின் வரம் | யுத்த காண்டம் சர்க்கம் – 124 (23)

The boon given by Bharadwaja | Yuddha-Kanda-Sarga-124 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இறங்கி, தன் தாய்மார், பரதன் ஆகியோரின் நலனை அவரிடம் இருந்து அறிந்து கொண்ட ராமன்...

Rama meeting sage Bharadwaja

நியதனான லக்ஷ்மணாக்ரஜன் {பணிவுள்ளவனும், லக்ஷ்மணனின் அண்ணனுமான ராமன்}, பதிநான்கு வருஷங்கள் பூரணமான பஞ்சமியில் {மாதத்தின்} ஐந்தாம் நாளில்[1] பரத்வாஜாஷ்ரமத்தை அடைந்து முனிவரை {பரத்வாஜரை} வணங்கினான்.(1) தபோதனரான அந்த பரத்வாஜரை வணங்கிய அவன் {ராமன், பின்வருமாறு} விசாரித்தான், "பகவானே, புரம் அன்னமயமான சுபிக்ஷத்துடன் {அயோத்தி நகரம் அபரிமிதமான உணவுடனும், பிணியில் இருந்து விடுபட்டதாகவும்} இருப்பது குறித்துக் கேள்விப்பட்டீரா?{2} அந்த பரதன் யுக்தமாக இருக்கிறான் {ஏற்ற பொறுப்புக்குப் பொருத்தமாக நடந்து கொள்கிறான்} என்றும், என் மாதாக்கள் ஜீவித்திருக்கின்றனர் என்றும் நம்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(2,3அ) 

யுத்த காண்டம் 124ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ சதுர்விம்ஷ²த்யதி⁴க ஷ²ததம꞉ ஸர்க³꞉

Rama meeting sage Bharadwaja

பூர்ணே சதுர்த³ஷே² வர்ஷே பஞ்சம்யாம் லக்ஷ்மணாக்³ரஜ꞉ |
ப⁴ரத்³வாஜாஷ்²ரமம் ப்ராப்ய வவந்தே³ நியதோ முனிம் || 6-124-1

ஸோ(அ)ப்ருச்ச²த³பி⁴வாத்³யைனம் ப⁴ரத்³வாஜம் தபோத⁴னம் |
ஷ்²ருணோஷி கச்சித்³ப⁴க³வன் ஸுபி⁴க்ஷாநாமயம் புரே || 6-124-2
கச்சித்ஸ யுக்தோ ப⁴ரதோ ஜீவந்த்யபி ச மாதர꞉ |

Friday, 24 October 2025

கிஷ்கிந்தையில் நின்றது | யுத்த காண்டம் சர்க்கம் – 123 (57)

Halt at Kishkindha | Yuddha-Kanda-Sarga-123 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தாங்கள் தங்கியிருந்த இடங்களையும், போர்க்களத்தையும், நளசேதுவையுமென அயோத்தி வரை அனைத்து இடங்களையும் புஷ்பக விமானத்தில் இருந்து சீதைக்குச் சுட்டிக் காட்டிய ராமன்...

Sugreeva summoning Tara

இராமனின் அனுமதியுடன், ஹம்சங்களுடன் கூடிய அந்த உத்தம விமானம், காற்றால் ஏவப்படும் மஹாமேகத்தைப் போல ஆகாசத்தில் எழுந்தது.(1) அப்போது, ரகுனந்தனனான ராமன், அனைத்துப் பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தியபடியே, சசியைப் போன்ற முகத்தைக் கொண்ட மைதிலியான சீதையிடம் {பின்வருமாறு} கூறினான்:(2) "வைதேஹி, கைலாச சிகரத்தின் வடிவிலான திரிகூட சிகரத்தில் விஷ்வகர்மனால் நிர்மிதம் செய்யப்பட்டு நிலைத்திருக்கும் லங்கையைப் பார்ப்பாயாக.(3) சீதே, மாமிசம், சோணிதத்தால் சேறாகியிருப்பதும், ஹரீக்கள், ராக்ஷசர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியதுமான இந்த மஹத்தான போர்க்களத்தைப் பார்.(4) விசாலாக்ஷி {நீள்விழியாளே}, வர தத்தம் பெற்றவனும், பிரமாதியும் {மக்களைத் துன்புறுத்தியவனும்}, உனக்காக என்னால் கொல்லப்பட்டவனுமான ராக்ஷசேஷ்வரன் ராவணன் {சாம்பலாகி} இங்கே கிடக்கிறான்[1].(5)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை