Saturday, 20 September 2025

இலக்ஷ்மணனின் வீழ்ச்சி | யுத்த காண்டம் சர்க்கம் – 100 (63)

The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கூரிய வேல் ஆயுதத்தால் லக்ஷ்மணனைத் தாக்கிய ராவணன்; ராமனும், ராவணனும் போரைத் தொடர்ந்தது; ராவணன் பயந்தோடியது...

Hanuman Rama and Lakshmana fighting against Ravana

இராக்ஷசாதிபனான ராவணன், அந்த அஸ்திரம் முறியடிக்கப்பட்டதால் குரோதமடைந்து, குரோதத்தை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து ஒரு அஸ்திரத்தை எடுத்தான்.(1) பேரொளியுடன் கூடிய ராவணன், ரௌத்திரமானதும், பயங்கரமானதும், மயனால் வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த மற்றொரு அஸ்திரத்தை ராகவன் மீது ஏவத் தொடங்கினான்.(2) பிறகு, கார்முகத்திலிருந்து {வில்லிலிருந்து} ஒளிமயமானவையும், வஜ்ரத்திற்கு நிகரானவையுமான சூலங்களும், கதைகளும், முசலங்களும் எங்கும் வெளிப்பட்டன.(3) விதவிதமான கூரிய முத்கரங்களும், கூடபாசங்களும், ஒளிரும் அசனிகளும் {இடிகளும்} யுகக்ஷயத்தில் வாதத்தைப் போல வெளிப்பட்டன {யுக முடிவில் தோன்றும் வாயுவைப் போல அந்த வில்லில் இருந்து வெளிப்பட்டன}.(4) பேரொளி கொண்டவனும், மிகச் சிறந்த உத்தம அஸ்திரங்களை அறிந்தவனுமான ஸ்ரீமான் ராகவன், கந்தர்வர்களின் பரமாஸ்திரத்தைக் கொண்டு அந்த அஸ்திரத்தை வீழ்த்தினான்.(5) 

யுத்த காண்டம் 100ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷ²ததம꞉ ஸர்க³꞉

Hanuman Rama and Lakshmana fighting against Ravana

தஸ்மின்ப்ரதிஹதேஅஸ்த்ரே து ராவணோ ராக்ஷஸாதி⁴ப꞉ |
க்ரோத⁴ன் ச த்³விகு³ணம் சக்ரே க்ரோதா⁴ச்சாஸ்த்ரமனந்தரம் || 6-100-1

மயேன விஹிதன் ரௌத்³ரமன்யத³ஸ்த்ரம் மஹாத்³யுதி꞉ |
உத்ஸ்ரஷ்டுன் ராவணோ கோ⁴ரம் ராக⁴வாய ப்ரசக்ரமே || 6-100-2

தத꞉ ஷூ²லானி நிஷ்²சேருர்க³தா³ஷ்²ச முஸலானி ச |
கார்முகாத்³தீ³ப்யமானானி வஜ்ரஸாராணி ஸர்வஷ²꞉ || 6-100-3

முத்³க³ர꞉ கூடபாஷா²ஷ்²ச தீ³ப்தாஷ்²சாஷ²னயஸ்ததா² |
நிஷ்பேதுர்விவிதா⁴ஸ்தீக்ஷ்ணா வாதா இவ யுக³க்ஷயே || 6-100-4

தத³ஸ்த்ரன் ராக⁴வ꞉ ஶ்ரீமானுத்தமாஸ்த்ரவிதா³ம் வர꞉ |
ஜகா⁴ன பரமாஸ்த்ரேண க³ந்த⁴ர்வேண மஹாத்³யுதி꞉ || 6-100-5

Tuesday, 16 September 2025

இராமராவண மோதல் | யுத்த காண்டம் சர்க்கம் – 099 (51)

Fight between Rama and Ravana | Yuddha-Kanda-Sarga-099 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மிகச்சிறந்த விற்கள், பெரும் வலிமைமிக்க ஆயுதங்களுடன் கூடிய ராம ராவணர்கள் தங்களுக்குள் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்...

Ravana urging his charioteer to drive his chariot

இராக்ஷசர்களான மஹோதர, மஹாபார்ஷ்வர்கள் கொல்லப்பட்டதையும், மஹாபலவானான அந்த வீரன் விரூபாக்ஷன் கொல்லப்பட்டதையும் கண்டு,{1} பெருங்குரோதமடைந்த ராவணன், சூதனை {தேரோட்டியைத்} தூண்டிவிட்டு, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1,2) "அமாத்யர்கள் {அமைச்சர்கள்} கொல்லப்பட்டதாலும், நகரம் முற்றுகையிடப்பட்டதாலும் உண்டான துக்கத்தை ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கொல்வதன் மூலம் போக்குவேன்" {என்று தேரோட்டியிடம் சொல்லி, தேரை எடுக்கும்படி அவனைத் தூண்டிவிட்டு, ராக்ஷசப் போர்வீரர்கள் பிறரிடம்},(3) "எந்த ராம விருக்ஷத்தில் சீதா புஷ்ப பலனை {ராமன் என்ற மரத்தின் கனியான சீதை என்ற மலரை நான்} அடைவேனோ, அதில் உள்ள சாகைகளான {ராமனெனும் அந்த மரத்தின் கிளைகளான} சுக்ரீவன், ஜாம்பவான், குமுதன் ஆகியோரை ரணத்தில் வெட்டுவீராக,{4} துவிவிதன், மைந்தன் ஆகியோரையும், அங்கதன், கந்தமாதனன், ஹனுமான் ஆகியோரையும், சர்வ ஹரியூதபர்களையும் {குரங்குக் குழுத் தலைவர்கள் அனைவரையும்} அவ்வாறே செய்வீராக" {என்றான் ராவணன்}.(4,5)

யுத்த காண்டம் 099ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகோனஷ²ததம꞉ ஸர்க³꞉

Ravana urging his charioteer to drive his chariot

மஹோத³ரமஹாபார்ஷ்²வௌ ஹதௌ த்³ருஷ்ட்வா து ராக்ஷஸௌ |
தஸ்மிம்ஷ்²ச நிஹதே வீரே விரூபாக்ஷே மஹாப³லே || 6-99-1
ஆவிவேஷ² மஹான்க்ரோதோ⁴ ராவணன் து மஹாம்ருதே⁴ |
ஸூதன் ஸஞ்சோத³யாமாஸ வாக்யன் சேத³முவாச ஹ || 6-99-2

நிஹதாநாமமாத்யானான் ருத்³த⁴ஸ்ய நக³ரஸ்ய ச |
து³꞉க²மேஷோஅபனேஷ்யாமி ஹத்வா தௌ ராமலக்ஷ்மணௌ || 6-99-3

ராமவ்ருக்ஷன் ரணே ஹன்மி ஸீதாபுஷ்பப²லப்ரத³ம் |
ப்ரஷா²கா² யஸ்ய ஸுக்³ரீவோ ஜாம்ப³வான்குமுதோ³ ள꞉ || 6-99-4
திவிதஶ் சைவ மைந்தஶ்ச அங்கதோ கந்தமாதந꞉
ஹநுமாம்ஶ்ச ஸுஷேணவ்ச ஸர்வே ச ஹரியூதபா꞉ || 6-99-5

Friday, 12 September 2025

மஹாபார்ஷ்வ வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 098 (26)

Mahaparshva killed | Yuddha-Kanda-Sarga-098 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மஹாபார்ஷ்வனைத் தாக்கிய அங்கதனும், ஜாம்பவானும்; மஹாபார்ஷ்வனின் குதிரைகளைக் கொன்று, ரதத்தை பங்கம் செய்த ஜாம்பவான்; அங்கதனின் முஷ்டியால் கொல்லப்பட்ட மஹாபார்ஷ்வன்...

Angada fights with Mahaparshva

மஹாபலவானான மஹாபார்ஷ்வன்[1], சுக்ரீவனால் மஹோதரன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, குரோதத்தில் கண்கள் சிவந்து, அங்கதனின் சம்முவை {படையைத்} தன் பயங்கரக் கணைகளால் கலங்கடித்தான்.(1,2அ) காம்பிலிருந்து பழங்களை {வீழ்த்தும்} அநிலனை {காற்றைப்} போல அவன் {மஹாபார்ஷ்வன்}, சர்வ வானர முக்கியர்களின் உத்தம அங்கங்களை காயங்களிலிருந்து வீழ்த்தினான் {தலைகளை அவர்களின் உடல்களிலிருந்து வீழ்த்தினான்}.(2ஆ,3அ) பிறகு விரைவாக அந்த ராக்ஷசன், தன் கணைகளைக் கொண்டு சில வானரர்களின் கைகளைத் துண்டித்தான், மேலும் சிலரின் பக்கவாட்டுகளை வெட்டினான்.(3ஆ,4அ) மஹாபார்ஷ்வனின் பாணவேகத்தால் வேதனையடைந்த அந்த சர்வ வானரர்களும், வேதனையை எதிர்கொள்ள முடியாமல் நனவிழந்தவர்கள் ஆனார்கள்.(4ஆ,5அ)

யுத்த காண்டம் 098ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ அஷ்டனவதிதம꞉ ஸர்க³꞉

Angada fights with Mahaparshva

மஹோத³ரே து நிஹதே மஹாபார்ஷ்²வோ மஹாப³ல꞉ |
ஸுக்³ரீவேண ஸமீக்ஷ்யாத² க்ரோதா⁴த்ஸம்ரக்தலோசன꞉ ||6-98-1
அங்க³த³ஸ்ய சமூம் பீ⁴மான் க்ஷோப⁴யாமாஸ ஸாயகை꞉ |

ஸ வானராணாம் முக்²யாநாமுத்தமாங்கா³னி ஸர்வஷ²꞉ ||6-98-2
பாதயாமாஸ காயேப்⁴ய꞉ ப²லன் வ்ருந்தாதி³வானில꞉ |

கேஷான் சிதி³ஷுபி⁴ர்பா³ஹூன்ஸ்கந்தா⁴ம்ஷ்²சிசே²த³ ராக்ஷஸ꞉ ||6-98-3
வானராணான் ஸுஸங்க்ருத்³த⁴꞉ பார்ஷ்²வன் கேஷாம் வ்யதா³ரயத் |

தேஅர்தி³தா பா³ணவர்ஷேண மஹாபார்ஷ்²வேன வானரா꞉ ||6-98-4
விஷாத³விமுகா²꞉ ஸர்வே ப³பூ⁴வுர்க³தசேதஸ꞉ |

நிரீக்ஷ்ய ப³லமுத்³விக்³னமங்க³தோ³ ராக்ஷஸார்தி³தம் ||6-98-5
வேக³ன் சக்ரே மஹாபா³ஹு꞉ ஸமுத்³ர இவ பர்வணி |

Saturday, 6 September 2025

மஹோதர வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 097 (38)

Mahodara killed | Yuddha-Kanda-Sarga-097 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனுக்கும், மஹோதரனுக்கும் இடையிலான போர்; மஹோதரனைக் கொன்ற சுக்ரீவன்...

Fight between Sugreeva and Mahodara

பெரும்போரில் அன்யோன்யம் கொன்று வந்த பலங்கள் {படைகள்}, பெருங்கோடையில் சரஸ்களை {பொய்கைகளைப்} போலப் பெரிதும் {அளவில்} குறைந்தன.(1) இராக்ஷசாதிபன் ராவணன், தன் பலம் {படை} அழிந்ததாலும், விரூபாக்ஷனின் வதத்தாலும் இரட்டிப்புக் கோபம் கொண்டான்.(2) யுத்தத்தில் வலீமுகர்களால் {குரங்குகளால்} வதைக்கப்பட்டுக் குறைந்து போன தன் பலத்தை {படையின் அளவைக்} கண்டும், தைவவிபர்யயத்தை {தெய்வம் எதிராகச் செயல்படுவதை / விதி தலைகீழாக மாறுவதைக்} கண்டும் அவன் வேதனை அடைந்தான்.(3)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை