Friday, 10 October 2025

கரடியின் கீதம் | யுத்த காண்டம் சர்க்கம் – 113 (54)

A song of a bear | Yuddha-Kanda-Sarga-113 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் வெற்றிச் செய்தியை சீதையிடம் சொன்ன ஹனுமான்; செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த சீதை; கரடி பாடிய கீதம்...

Hanuman speaking to Sita

இவ்வாறு ஆணையிடப்பட்ட மாருதாத்மஜன் {வாயு மைந்தன்} ஹனுமான், நிசாசரர்களால் {இரவுலாவிகளான ராக்ஷசர்களால்} பூஜீக்கப்படும் லங்காம்புரீக்குள் பிரவேசித்தான்.(1) அவன் லங்காம்புரீக்குள் பிரவேசித்து, விபீஷணனைப் பின்தொடர்ந்தான். அப்போது அந்த ஹனுமான் விருக்ஷவாடிகைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டான்.{2} சீதைக்குத் தெரிந்தவனான அந்த ஹரி {குரங்கான ஹனுமான்} எது நியாயமோ அந்த வதிப்படியே உள்ளே பிரவேசித்தான். சசி {சந்திரன்} இல்லாமல் {நீராடாமல்} களையிழந்த ரோகிணியைப் போலிருந்தவளைக் கண்டான்.{3} அவள், ராக்ஷசிகள் சூழ விருக்ஷமூலத்தில் {மரத்தடியில்} ஆனந்தமற்றவளாக இருந்தாள். அவன் அமைதியாக அவளை அணுகி, பணிவுடன் வணங்கி நின்றான்.(2-4)

யுத்த காண்டம் 113ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்ரயோத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Hanuman speaking to Sita

இதி ப்ரதிஸமாதி³ஷ்டோ ஹனூமான்மாருதாத்மஜ꞉ |
ப்ரவிவேஷ² புரீம் லங்காம் பூஜ்யமானோ நிஷா²சரை꞉ ||6-113-1

ப்ரவிஷ்²ய ச புரீம் லங்காமனுங்ஞ்ப்ய விபீ⁴ஷணம் |
ததஸ்தேநாப்⁴யனுஜ்ஞாதோ ஹனூமான் வ்ருக்ஷவாடிகாம் ||6-113-2
ஸம்ப்ரவிஷ்²ய யதா²ந்யாயம் ஸீதாயா விதி³தோ ஹரி꞉ |
த³த³ர்ஷ² ஷ²ஷி²னா ஹீனாம் ஸாதங்காமிவ ரோஹிணீம் ||6-113-3
வ்ருக்ஷமூலே நிரானந்தா³ம் ராக்ஷஸீபி⁴꞉ பரீவ்ருதாம் |
நிப்⁴ருத꞉ ப்ரணத꞉ ப்ரஹ்வ꞉ ஸோம்அபி⁴க³ம்யாபி⁴வாத்³ய ச ||6-113-4

மீண்டும் விபீஷணப் பட்டாபிஷேகம் | யுத்த காண்டம் சர்க்கம் – 112 (27)

Vibheeshana's coronation yet again | Yuddha-Kanda-Sarga-112 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேவலோகம் திரும்பிய மாதலி; இலங்கையின் மன்னனாக நிறுவப்பட்ட விபீஷணன்; ஹனுமான் மூலம் சீதைக்கு செய்தி அனுப்பிய ராமன்...

Lakshmana consecrating Vibheeshana

அதே வேளையில் ராவண வதத்தைக் கண்ட அந்த தேவ, கந்தர்வ, தானவர்கள், சுப கதைகளைக் கதைத்துக் கொண்டே {மங்கல பேச்சுக்களைத் தங்களுக்குள் பேசிக் கொண்டே} தங்கள் தங்கள் விமானங்களில் சென்றனர்.(1) இராவணனின் வதத்தையும், ராகவனின் பராக்கிரமத்தையும், வானரர்களின் நல்ல யுத்தத்தையும், சுக்ரீவனின் மந்திரத்தையும் {ஆலோசனைகளையும்},{2} சௌமித்ரியான லக்ஷ்மணனின் பற்றையும், வீரியத்தையும், சீதையின் பதிவிரதாத்வத்தையும் {பதிவிரதா தன்மையையும்}, ஹனூமதனின் பராக்கிரமத்தையும்{3} மகிழ்ச்சியுடனும், பெரும் மதிப்புடனும் பேசிக் கொண்டே வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்றனர்.(2-4அ) 

யுத்த காண்டம் 112ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³வாத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Lakshmana consecrating Vibheeshana

தே ராவணவத⁴ம் த்³ருஷ்ட்வா தே³வக³ந்த⁴ர்வதா³னவா꞉ |
ஜக்³மு꞉ ஸ்வை꞉ ஸ்வை ர்விமானைஸ்தே கத²யந்த꞉ ஷு²பா⁴꞉ கதா²꞉ || 6-112-1

ராவணஸ்ய வத⁴ம் கோ⁴ரம் ராக⁴வஸ்ய பராக்ரமம் |
ஸுயுத்³த⁴ம் வானராணாம் ச ஸுக்³ரீவஸ்ய ச மந்த்ரிதம் || 6-112-2
அனுராக³ம் ச வீர்யம் ச ஸௌமித்ரே ர்லக்ஷ்மணஸ்ய ச |
பதிவ்ரதாத்வம் ஸீதாயா ஹனூமதி பராக்ரமம் || 6-112-3
கத²யந்தோ மஹாபா⁴கா³ ஜக்³முர்ஹ்ருஷ்ட யதா²க³தம் |

ராக⁴வஸ்து ரத²ம் தி³வ்யமிந்த்³ரத³த்தம் ஷி²கி²ப்ரப⁴ம் || 6-112-4
அனுஜ்ஞாய மஹாபா³ஹுர்மாதலிம் ப்ரத்யபூஜயத் |

ராக⁴வேணாப்⁴யனுஜ்ஞாதோ மாதலி꞉ ஷ²க்ரஸாரதி²꞉ || 6-112-5
தி³வ்யம் தம் தத²மாஸ்தா²ய தி³வமேவோத்பபாத ஹ |

தஸ்மிம்ஸ்து தி³வமாருடே⁴ ஸரதே² ரதி²னாம் வர꞉ || 6-112-6
ராக⁴வ꞉ பரமப்ரீத꞉ ஸுக்³ரீவம் பரிஷஸ்வஜே |

பர்ஷ்வஜ்ய ச ஸுக்³ரீவம் லக்ஷ்மணேநாபி⁴வாதி³த꞉ || 6-112-7
பூஜ்யமானோ ஹரிக³ணைராஜகா³ம ப³லாலயம் |

அதோ²வாச ஸ காகுத்ஸ்த²꞉ ஸமீபபரிவர்தினம் || 6-112-8
ஸௌமித்ரிம் ஸத்த்வஸம்பன்னம் லக்ஷ்மணம் ஷு²ப⁴லக்ஷணம் |

விபீ⁴ஷணமிமம் ஸௌம்ய லங்காயாமபி⁴ஷேசய || 6-112-9
அனுரக்தம் ச ப⁴க்தம் ச ததா² பூர்வோபகாரிணம் |

ஏஷ மே பரம꞉ காமோ யதி³மம் ராவணானுஜம் || 6-112-10
லங்காயாம் ஸௌம்ய பஷ்²யேயமபி⁴ஷிக்தம் விபீ⁴ஷணம் |

ஏவமுக்தஸ்து ஸௌமித்ரீ ராக⁴வேண மஹாத்மனா || 6-112-11
ததே²த்யுக்த்வா ஸுஸம்ஹ்ருஷ்ட꞉ ஸௌவர்ணம் க⁴டமாத³தே³ |

தம் க⁴டம் வானரேந்த்³ராணாம் ஹஸ்தே த³த்த்வா மனோஜவான் || 6-112-12
வ்யாதி³தே³ஷ² மஹாஸத்த்வ꞉ ஸமுத்³ரஸலிலம் ததா³ |

அதிஷீ²க்⁴ரம் ததோ க³த்வா வானராஸ்தே மனோஜவா꞉ || 6-112-13
ஆக³தாஸ்து ஜலம் க்³ருஹ்ய ஸமுத்³ராத்³வானரோத்தமா꞉ |

ததஸ்த்வேகம் க⁴டம் க்³ருஹ்ய ஸம்ஸ்தா²ப்ய பரமாஸனே || 6-112-14
க⁴டேன தேன ஸௌமித்ரிரப்⁴யஷிஞ்சத்³விபீ⁴ஷணம் |
லங்காயாம் ரக்ஷஸாம் மத்⁴யே ராஜானம் ராமஷா²ஸனாத் || 6-112-15
விதி⁴னா மந்த்ரத்³ருஷ்டேன ஸுஹ்ருத்³க³ணஸமாவ்ருத꞉ |

அப்⁴யஷிஞ்சம்ஸ்ததா³ ஸர்வே ராக்ஷஸா வானராஸ்ததா² || 6-112-16
ப்ரஹர்ஷமதுலம் க³த்வா துஷ்டுவூ ராமமேவ ஹ |

தஸ்யாமாத்யா ஜஹ்ருஷிரே ப⁴க்தா யே சாஸ்ய ராக்ஷஸா꞉ || 6-112-17
த்³ருஷ்ட்வாபி⁴ஷ்க்தம் லங்காயாம் ராக்ஷஸேந்த்³ரம் விபீ⁴ஷணம் |

ராக⁴வ꞉ ப்ரமாம் ப்ரீதிம் ஜகா³ம ஸஹலக்ஷ்மண꞉ || 6-112-18
ஸ தத்³ராஜ்யம் மஹத்ப்ராப்ய ராமத³த்தம் விபீ⁴ஷண꞉ |

ப்ரக்ருதீ꞉ ஸாந்த்யயித்வா ச ததோ ராமமுபாக³மத் || 6-112-19
த³த்⁴யக்ஷதான் மோத³காம்ஷ்²ச லாஜா꞉ ஸுமனஸஸ்ததா² |
ஆஜஹ்ருரத² ஸந்துஷ்டா꞉ பௌராஸ்தஸ்மை நிஷா²சரா꞉ || 6-112-20

ஸ தான் க்³ருஹீத்வா து³ர்த⁴ர்ஷோ ராக⁴வாய ந்யவேத³யத் || 6-112-21
மாங்க³ல்யம் மங்க³ளம் ஸர்வம் லக்ஷ்மணாய ச வீர்யவான் |

க்ருதகார்யம் ஸம்ருத்³தா⁴ர்த²ம் த்³ருஷ்ட்வா ராமோ விபீ⁴ஷணம் || 6-112-22
ப்ரதிஜக்³ராஹ தத்ஸர்வம் தஸ்யைவ ப்ரியகாம்யயா |

ததஹ் ஷை²லோபமம் வீரம் ப்ராஞ்ஜலிம் ப்ரணதம் ஸ்தி²தம் || 6-112-23
உவாசேத³ம் வசோ ராமோ ஹனூமந்தம் ப்லவங்க³மம் |

அனுஜ்ஃஜ்னாப்ய மஹாராஜமிமம் ஸௌம்ய விபீ⁴ஷணம் || 6-112-24
ப்ரவிஷ்²ய நக³ரீம் லங்காம் கௌஷ²லம் ப்³ரூஹிமைதி²லீம் |

வைதே³ஹ்யை மாம் குஷ²லினம் ஸுக்³ரீவம் ச ஸலக்ஷ்மணம் || 6-112-25
அசக்ஷ்வ வத³தாம் ஷ்²ரேஷ்ட² ராவணம் ச ஹதம் ரணே |

ப்ரியமேதது³தா³ஹ்ருத்ய வைதே³ஹ்யஸ்த்வம் ஹரீஷ்²வர || 6-112-26
ப்ரதிக்³ருஹ்ய ச ஸந்தே³ஷ²முபாவர்திதுமர்ஹஸி | 6-112-27

இத்யார்ஷே ஶ்ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³வாத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Akshara Mukha: 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Thursday, 9 October 2025

மந்தோதரியின் புலம்பலும், இறுதிச் சடங்கும் | யுத்த காண்டம் சர்க்கம் – 111 (128)

Lament of Mandodari and the funeral rite | Yuddha-Kanda-Sarga-111 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணன் இறப்புக்காக அழுது புலம்பிய மந்தோதரி; இராமனின் வேண்டுகோளுக்கிணங்க ராவணனுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்த விபீஷணன்...

The lament of Mandodari

இராக்ஷசயோசிதைகளான {ராக்ஷச மகளிரான} அவர்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தபோது, பிரியையான ஜேஷ்டபத்னி தீனமாகப் பர்த்தாவை உற்று நோக்கினாள் {ராவணனின் அன்புக்குரிய மூத்த மனைவி மண்டோதரி பரிதாபத்திற்குரியவளாகத் தன் கணவனைப் பார்த்தாள்}.(1) மந்தோதரி, சிந்தனைக்கப்பாற்பட்ட கர்மங்களைச் செய்பவனான ராமனால் கொல்லப்பட்ட தன் பதியான தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளைக் கொண்ட தன் கணவன் ராவணனைக்} கண்டு, அங்கே கிருபைக்குரிய வகையில் {பின்வருமாறு} பரிதபித்தாள்[1]:(2) "மஹோபாஹோ, வைஷ்ரவணானுஜரே {குபேரனின் தம்பியே}, புரந்தரனும் கூட குரோதம் கொண்ட உமது முன்னால் நிற்க நிச்சயம் அஞ்சுவானே.(3) உமது உத்வேகத்தால் {உம்மிடம் கொண்ட அச்சத்தால்} மஹான்களான ரிஷிகளும், புகழ்பெற்ற கந்தர்வர்களும், சாரணர்களும் திசைகளெங்கும் ஓடினார்களே.(4) 

யுத்த காண்டம் 111ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகாத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

The lament of Mandodari

தாஸாம் விளபமானானாம் ததா² ராக்ஷஸயோஷிதாம் |
ஜ்யேஷ்டா² பத்னீ ப்ரியா தீ³னா ப⁴ர்தாரம் ஸமுதை³க்ஷத || 6-111-1

த³ஷ²க்³ரீவன் ஹதம் த்³ருஷ்ட்வா ராமேணாசிந்த்யகர்மணா |
பதிம் மந்தோ³த³ரீ தத்ர க்ருபணா பர்யதே³வயத் || 6-111-2

நனு நாம மஹாபா³ஹோ தவ வைஷ்²ரவணானுஜ |
க்ருத்³த⁴ஸ்ய ப்ரமுகே² ஸ்தா²துன் த்ரஸ்யத்யபி புரந்த³ர꞉ || 6-111-3

ருஷயஷ்²ச மஹீதே³வா க³ந்த⁴ர்வாஷ்²ச யஷ²ஸ்வின꞉ |
நனு நாம தவோத்³வேகா³ச்சாரணாஷ்²ச தி³ஷோ² க³தா꞉ || 6-111-4

ஸ த்வம் மானுஷமாத்ரேண ராமேண யுதி⁴ நிர்ஜித꞉ |
ந வ்யபத்ரபஸே ராஜன் கிமித³ம் ராக்ஷஸர்ஷப⁴ || 6-111-5

Monday, 6 October 2025

இராவணன் மனைவியரின் புலம்பல் | யுத்த காண்டம் சர்க்கம் – 110 (26)

Lament of the wives of Ravana | Yuddha-Kanda-Sarga-110 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் சடலத்தைக் கண்டு அழுது புலம்பிய அவனது மனைவியர்...

The lament of Ravana's wives

மஹாத்மாவான ராகவனால் ராவணன் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசிகள் சோகத்தால் வேதனையடைந்து அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்தனர்[1].(1) அடிக்கடி அவர்கள் தடுக்கப்பட்டும், பூமியின் புழுதியில் புரண்டு, கேசம் அவிழ்ந்து, கன்றிழந்த பசுக்களைப் போல சோகத்தில் தவித்தனர்.(2) உத்தர துவாரத்தில் {வடக்கு வாயிலில்} ராக்ஷசர்களுடன் வெளிப்பட்டு, கோரமான போர்க்களத்திற்குள் பிரவேசித்து கொல்லப்பட்ட தங்கள் பதியை {கணவனை} அழுது கொண்டே தேடினர்.{3} "ஆரியபுத்திரரே", "ஹா, நாதரே" என்று புலம்பிக் கொண்டு, சோணிதச் சேற்றுடன் கூடியதும், கபந்தங்களால் நிறைந்ததுமான மஹீயெங்கும் {தலையற்ற உடல்களால் நிறைந்ததுமான பூமியெங்கும்} அவர்கள் திரிந்தனர்.(3,4) கண்ணீர் நிறைந்த கண்களுடன், பர்த்தாவை {கணவனைக்} குறித்த சோகத்தில் மூழ்கிய அவர்கள், யூதபன் {கூட்டத்தலைவன்} கொல்லப்பட்ட கரேணுக்களை {பெண் யாணைகளைப்} போல உரக்கக் கதறினர்.(5) 

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை