Thursday, 31 July 2025

இந்திரஜித் விபீஷண சம்வாதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 087 (30)

The dialogue between Indrajit and Vibhishana | Yuddha-Kanda-Sarga-087 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித் வேள்வி செய்யும் இடத்திற்கு லக்ஷ்மணனை அழைத்துச் சென்று, அவனை அழிக்குமாறு கூறிய விபீஷணன்; இந்திரஜித்துக்கும், விபீஷணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...

Vibheeshana speaking to Indrajith

இவ்வாறு சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} சொல்லி மகிழ்ச்சியடைந்த அந்த விபீஷணன், தனுஷ்பாணியான அவனை {கையில் வில்லுடன் கூடிய லக்ஷ்மணனை} அழைத்துக் கொண்டு விரைந்து சென்றான்.(1) அங்கிருந்து சிறிது தூரம் சென்ற விபீஷணன், மஹத்தான வனத்திற்குள் பிரவேசித்து, அந்தக் கர்மத்தை {இந்திரஜித் செய்யும் ஹோமத்தை} லக்ஷ்மணனிடம் காட்டினான்.(2) 

யுத்த காண்டம் 087ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தாஷீ²ரிதம꞉ ஸர்க³꞉

Vibheeshana and Indrajith

ஏவமுக்த்வா து ஸௌமித்ரிம் ஜாதஹர்ஷோ விபீ⁴ஷண꞉ |
த⁴னுஷ்பாணினமாதா³ய த்வரமாணோ ஜகா³ம ஸ꞉ || 87-6-1

அவிதூ³ரம் ததோ க³த்வா ப்ரவிஷ்²ய ச மஹத்³வனம் |
த³ர்ஷ²யாமாஸ தத்கர்ம லக்ஷ்மணாய விபீ⁴ஷண꞉ || 87-6-2

ஹனுமானின் அறைகூவல் | யுத்த காண்டம் சர்க்கம் - 086 (35)

Hanuman's Challenge | Yuddha-Kanda-Sarga-086 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வேள்வியைத் தொடராமல் கைவிட்ட இந்திரஜித்; இந்திரஜித்தைப் போருக்கு அழைத்த ஹனுமான்; இந்திரஜித் தேரில் வருவதைக் கண்ட லக்ஷ்மணன்...

Hanuman and Indrajith

அந்த அவஸ்தையில் {அந்நிலையில்} அப்போது ராவணானுஜன் {ராவணனின் தம்பியான விபீஷணன்}, அர்த்த சாதகத்திற்கானதும், பிறருக்கு ஹிதமற்றதுமான {காரிய நிறைவேற்றத்திற்கானதும், பகைவருக்குக் கெடுதியை விளைவிப்பதுமான பின்வரும்} வாக்கியத்தை லக்ஷ்மணனிடம் கூறினான்:(1)"எந்த ராக்ஷச அனீகம் {படை}, இங்கே கரிய மேகத்தைப் போலக் காணப்படுகிறதோ, அது பாறைகளை ஆயுதமாகக் கொண்ட கபிக்களால் {குரங்குகளால்} சீக்கிரமே தாக்கப்படட்டும்.(2) இலக்ஷ்மணரே, இந்த மஹத்தான அனீகத்தை {படையைப்} பிளக்க யத்னம் செய்வீராக {முயற்சிப்பீராக}. இஃது உடைந்தால் ராக்ஷச சுதனும் {ராக்ஷசர் ராவணரின் மகனான இந்திரஜித்தும்} புலப்படுவான்.(3) அத்தகைய வகையில், எதுவரை கர்மம் {இந்திரஜித்தின் ஹோமம்} நிறைவேறாமல் இருக்குமோ, அதற்குள் பிறர் {பகைவர்} மீது இந்திர அசனிக்கு {இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு} நிகரான சரங்களை ஏவியபடியே நீர் உடனே விரைந்து செல்வீராக.(4) வீரரே, மாயையில் விருப்பமுள்ளவனும், அதர்மிகனும், குரூர கர்மங்களைச் செய்பவனும், சர்வலோகத்திற்கும் பயத்தை விளைவிக்கும் துராத்மாவுமான ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தைக்} கொல்வீராக" {என்றான் விபீஷணன்}.(5)

யுத்த காண்டம் 086ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்³ஷீ²திதம ஸர்க³꞉

Hanuman and Indrajith

அத² தஸ்யாமவஸ்தா²யாம் லக்ஷ்மணம் ராவணானுஜ꞉ |
பரேஷாமஹிதம் வாக்யமர்த²ஸாத⁴கமப்³ரவீத் || 6-86-1

யதே³தத்³ராக்ஷஸானீகம் மேக⁴ஷ்²யாமம் விளோக்யதே |
ஏததா³யோத்⁴யதாம் ஷீ²க்³ரம்ம் கபிபி⁴ஷ்²ச ஷி²லாயுதை⁴꞉ || 6-86-2

அஸ்யானீகஸ்ய மஹதோ பே⁴த³னே யதலக்ஷ்மண |
ராக்ஷஸேந்த்³ரஸுதோ(அ)ப்யத்ர பி⁴ன்னே த்³ருஷ்²யோ ப⁴விஷ்யதி || 6-86-3

ஸ த்வமிந்த்³ராஷ²னிப்ரக்²யை꞉ ஷ²ரைரவகிரன்பரான் |
அபி⁴த்³ரவாஷு² யாவத்³வை நைதத்கர்ம ஸமாப்யதே || 6-86-4

ஜஹி வீரது³ராத்மானம் மாயாபரமதா⁴ர்மிகம் |
ராவணிம் க்ரூரகர்மாணம் ஸர்வலோகப⁴யாவஹம் || 6-86-5

நிகும்பிலையை அடைதல் | யுத்த காண்டம் சர்க்கம் - 085 (36)

Arriving at Nihumbhila | Yuddha-Kanda-Sarga-085 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தைக் கொல்ல லக்ஷ்மணனை நிகும்பிலைக்கு அனுப்பிய ராமன்; அங்கதன், ஹனுமான், ஜாம்பவான் ஆகியோரும் லக்ஷ்மணனுடன் சென்றது...

Vibheeshana speaking to Rama in the presence of Lakshmana in Battlefront

சோகத்தில் மூழ்கியிருந்த ராகவன் {ராமன்}, அவனது அந்த வசனத்தைக் கேட்டும், அந்த ராக்ஷசன் {விபீஷணன்} சொன்னதென்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.(1) பிறகு, பரபுரஞ்ஜயனான {பகைவரின் நகரங்களை வெற்றி கொள்பவனான} ராமன், தைரியத்தை அடைந்து, கபிக்களின் {குரங்குகளின்} முன்னிலையில், அருகில் அமர்ந்திருந்த விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "நைர்ருதாதிபதே {தென்மேற்குத் திசையின் தலைவனுடைய வழித்தோன்றல்களான ராக்ஷசர்களின் தலைவா}, விபீஷணா, நீ எந்த வாக்கியத்தைச் சொன்னாயோ, அதை மீண்டும் கேட்க விரும்புகிறேன். நீ எதைச் சொல்ல வருகிறாயோ, அதை மீண்டும் கேட்க விரும்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(3)

யுத்த காண்டம் 085ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ பஞ்சாஷீ²திதம꞉ ஸர்க³꞉

Vibheeshana speaking to Rama in the presence of Lakshmana in Battlefront

தத்தஸ்ய வசனம் ஷ்²ருத்வா ராக⁴வ꞉ ஷோ²ககஷ்²மித꞉ |
நோபதா⁴ரயதே வ்யக்தம் யது³க்தம் தேன ரக்ஷஸா || 6-85-1

ததோ தை⁴ர்யமவஷ்டப்⁴ய ராம꞉ பரபுரஞ்ஜய꞉ |
விபீ⁴ஷணமுபாஸீனமுவாச கபிஸம்நிதௌ⁴ || 6-85-2

நைர்ருதாதி⁴பதே வாக்யம் யது³க்தம் தே விபீ⁴ஷண |
பூ⁴யஸ்தச்ச்²ரோதுமிச்சா²மி ப்³ரூஹி யத்தே விவக்ஷிதம் || 6-85-3

Tuesday, 29 July 2025

விபீஷணனின் வேண்டுகோள் | யுத்த காண்டம் சர்க்கம் - 084 (23)

The request of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-084 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மாயா சீதையைக் கொன்ற இந்திரஜித்தின் தந்திரத்தை ராமனிடம் சொன்ன விபீஷணன்; நிகும்பிலைக்குச் செல்லும்படி லக்ஷ்மணனை வற்புறுத்தியது...

Vibheeshana clarifies the Maya of Indrajith to Rama

பிராதாவிடம் {தன்னுடன் பிறந்த ராமனிடம்} அன்பு கொண்ட லக்ஷ்மணன் ராமனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது, விபீஷணன் குல்மங்களை {படைப்பிரிவுகளை} அவற்றுக்குரிய இடங்களில் விட்டு அங்கே வந்தான்.(1) நானாவித ஆயுதங்களைத் தரித்தவர்களும், கரிய அஞ்சன மைக் குவியல்களைப் போலத் தெரிந்தவர்களும், யூதபனுடன் கூடிய மாதங்கங்களை {தலைமை யானையைச் சூழ்ந்த யானைகளைப்} போன்றவர்களுமான நான்கு வீரர்களால் சூழப்பட்ட அவன் {விபீஷணன்},{2} சோகத்தில் மூழ்கியிருக்கும் மஹாத்மாவான ராகவனை {லக்ஷ்மணனை} அணுகி, வானரர்களும் கண்கள் நிறைந்த கண்ணீருடன் இருப்பதைக் கண்டான்.(2,3) லக்ஷ்மணனின் அங்கத்தில் சாய்ந்து, மயக்க நிலையில் கிடக்கும் இக்ஷ்வாகுகுலநந்தனனான மஹாத்மாவையும் {ராமனையும் விபீஷணன்} கண்டான்.(4) சோக சந்தாபத்தில் வெட்கமடைந்து ராமனைக் கண்ட அந்த விபீஷணன், தீனமடைந்தவனாக உள்ளார்ந்த துக்கத்துடன், "இஃது என்ன?" என்று கேட்டான்.(5)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை