Story told by Hanuman | Yuddha-Kanda-Sarga-126 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் நீண்ட பயணத்தையும், அவன் சந்தித்தவர்களையும் குறித்து விளக்கிச் சொன்ன ஹனுமான்...
{பரதன்}, "பல வருஷங்களாக மஹத்தான வனத்திற்குச் சென்றிருக்கும் என் நாதரின் பிரீதிகரமான கீர்த்தனத்தை {இனிமையான துதியை} இப்போது நான் கேட்கிறேன்.(1) "ஒரு நரன் ஜீவந்தனாக இருந்தால் {பிழைத்திருந்தால்}, நூறு வருஷங்களுக்குப் பிறகாவது ஆனந்தத்தை அடைவான்" என்ற இந்த லௌகிக கதை {உலகமொழி} எனக்கு கல்யாணமாக {மங்கலமாக} ஒலிக்கிறது {உண்மையாகத் தெரிகிறது}.(2) இராகவருக்கும், கபிக்களுக்கும் {குரங்குகளுக்கும்} இடையிலான சந்திப்பு எந்த தேசத்தில், ஏன் ஏற்பட்டது? கேட்கும் எனக்கு உள்ளபடி தெரிவிப்பாயாக[1]" {என்றான் பரதன்}.(3)

 



