The dialogue between Indrajit and Vibhishana | Yuddha-Kanda-Sarga-087 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரஜித் வேள்வி செய்யும் இடத்திற்கு லக்ஷ்மணனை அழைத்துச் சென்று, அவனை அழிக்குமாறு கூறிய விபீஷணன்; இந்திரஜித்துக்கும், விபீஷணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
இவ்வாறு சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} சொல்லி மகிழ்ச்சியடைந்த அந்த விபீஷணன், தனுஷ்பாணியான அவனை {கையில் வில்லுடன் கூடிய லக்ஷ்மணனை} அழைத்துக் கொண்டு விரைந்து சென்றான்.(1) அங்கிருந்து சிறிது தூரம் சென்ற விபீஷணன், மஹத்தான வனத்திற்குள் பிரவேசித்து, அந்தக் கர்மத்தை {இந்திரஜித் செய்யும் ஹோமத்தை} லக்ஷ்மணனிடம் காட்டினான்.(2)