Tuesday, 25 March 2025

வானரர்களின் அச்சம் | யுத்த காண்டம் சர்க்கம் - 066 (34)

The fear of Vanaras | Yuddha-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்; போர்க்களத்தில் இருந்து ஓடும் வானரர்களின் துணிவை மீட்ட அங்கதன்...

Kumbhkarna tormenting the vanaras

கிரிகூடத்திற்கு ஒப்பான மஹானும் {மலைச்சிகரத்திற்கு நிகராகப் பெருத்தவனும்}, மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், பிராகாரத்தை லங்கனம் செய்து {மதிற்சுவற்றைக் கடந்து} நகரத்திலிருந்து துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் சமுத்திரம் எதிரொலிக்கும் வகையிலும், இடிகளை வெல்வது {இடிப்பதைப்} போலும், பர்வதங்களை நடுங்கச் செய்யும்படியும் நாதம் செய்தான்.(2) மகவத்தாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, வருணனாலோ வதைக்கப்பட முடியாதவனும், பயங்கரக் கண்களைக் கொண்டவனுமான அவனைக் கண்டதும் வானரர்கள் ஓடிவிட்டனர்[1].(3)

யுத்த காண்டம் 066ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்ஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Kumbhkarna tormenting the vanaras

ஸ லங்கா⁴யித்வா ப்ராகாரம் கி³ரிகூடோபமோ மஹான் |
நிர்யயௌ நிக³ராத்தூத்ணம் கும்ப⁴கர்ணோ மஹாப³ல꞉ || 6-66-1

நநாத³ ச மஹாநாத³ம் ஸமுத்³ரமபி⁴நாத³யன் |
விஜயன்னிவ நிர்கா⁴தான்வித⁴மன்னிவ பர்வதான் || 6-66-2

தமவத்⁴யம் மக⁴வதா யமேன வருணேன ச |
ப்ரேக்ஷ்ய பீ⁴மாக்ஷமாயாந்தம் வானரா விப்ரது³த்³ருவு꞉ || 6-66-3

தாம்ஸ்து வித்³ரவதோ த்³ருஷ்ட்வா வாலிபுத்ரோ(அ)ங்க³தோ³(அ)ப்³ரவீத் |
ளம் நீலம் க³வாக்ஷம் ச குமுத³ம் ச மஹாப³லம் || 6-66-4

ஆத்மானமத்ர விஸ்ம்ருத்ய வீர்யாண்யபி⁴ஜனானி ச |
க்வ க³ச்ச²த ப⁴யத்ரஸ்தா꞉ ப்ராக்ருதா ஹரயோ யதா² || 6-66-5

Thursday, 20 March 2025

கும்பகர்ணன் புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் - 065 (57)

Kumbhakarna set out | Yuddha-Kanda-Sarga-065 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மஹோதரனின் திட்டங்களைக் கண்டித்து, தீய சகுனங்களைப் பொருட்படுத்தாமல் போருக்குப் புறப்பட்ட கும்பகர்ணன்; அவனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்...

Kumbhakarna Ravana Mahodhara from right to left

இவ்வாறு சொன்ன மஹோதரனை {அவ்வாறு சொல்லக்கூடாது என்று} கண்டித்த கும்பகர்ணன், தன்னுடன் பிறந்தவனும், ராக்ஷசசிரேஷ்டனுமான ராவணனிடம் {ராக்ஷசர்களில் சிறந்தவனுமான ராவணனிடம் பின்வருமாறு} பேசினான்:(1) “துராத்மாவான அந்த ராமனை வதம் செய்வதன் மூலம், கோரமான உமது பயத்தை இன்று போக்குவேன். வைரம் {பகைமை} இன்றி சுகமாக இருப்பீராக.(2) ஜலமற்ற மேகத்தைப் போல, சூரர்கள் வீணாக கர்ஜிப்பதில்லை. யுத்தத்தில் கர்மத்தை நிறைவேற்றும்போது என் கர்ஜனையைப் பார்ப்பீர்.(3) தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொள்வதில் சூரர்கள் ஈடுபடமாட்டார்கள்; அதைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். எதையும் காட்டிக் கொள்ளாமல் செய்வதற்கரிய கர்மத்தை அவர்கள் செய்வார்கள்.(4) 

யுத்த காண்டம் 065ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ பஞ்சஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Kumbhakarna Ravana Mahodhara from right to left

ஸ ததோ²க்தஸ்து நிர்ப⁴ர்த்ஸ்ய கும்ப⁴கர்ணோ மஹோத³ரம் |
அப்³ரவீத்³ராக்ஷஸஷ்²ரேஷ்ட²ம் ப்⁴ராதரம் ராவணம் தத꞉ || 6-65-1

ஸோ(அ)ஹம் தவ ப⁴யம் கோ⁴ரம் வதா⁴த்தஸ்ய து³ராத்மன꞉ |
ராமஸ்யாத்³ய ப்ரமார்ஜாமி நிர்வைரஸ்த்வம் ஸுகீ²ப⁴வ || 6-65-2

க³ர்ஜந்தி ந வ்ருதா² ஷூ²ர நிர்ஜலா இவ தோயதா³꞉ |
பஷ்²ய ஸம்பாத்³யமானம் து க³ர்ஜிதம் யுதி⁴ கர்மணா || 6-65-3

ந மர்ஷயதி சாத்மானம் ஸம்பா⁴வயதி நாத்மனா |
அத³ர்ஷ²யித்வா ஷூ²ராஸ்து கர்ம குர்வந்தி து³ஷ்கரம் || 6-65-4

விக்லவாநாமபு³த்³தீ⁴னாம் ராஞாம் பண்டி³தமானினாம் |
ஷ்²ருண்வதாமாதி³த இத³ம் த்வத்³விதா⁴னாம் மஹோத³ர || 6-65-5

Tuesday, 18 March 2025

மஹோதரன் | யுத்த காண்டம் சர்க்கம் - 064 (36)

Mahodhara | Yuddha-Kanda-Sarga-064 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரிடாமல் ராமனை வெல்வதற்கான ஓர் உத்தியை ராவணனிடம் சொன்ன மஹோதரன்...

Mahodhara Kumbhakarna Ravana

மஹோதரன்[1], அதிகாயனும், பாஹுசாலியும் {பேருடல் படைத்தவனும், பெருங்கரங்களைக் கொண்டவனும்}, பலம்வாய்ந்தவனுமான கும்பகர்ணன் சொன்ன அந்த வசனத்தைக் கேட்டு,  {பின்வருமாறு} சொன்னான்:(1) “கும்பகர்ணரே, நற்குலத்தில் பிறந்தும், சாதாரணத் தோற்றம் கொண்டவன் திமிருடன் பேசுவதைப் போலத் துடுக்காகப் பேசுகிறீர். எங்கும் செய்யப்படுவனவற்றை நீர் அறியவில்லை.(2) கும்பகர்ணரே, நியாயாநியாயங்களை ராஜர் அறியமாட்டாரா {நியாயங்களையும், அநியாயங்களையும் ராஜா ராவணர் அறியமாட்டாரா}? கேவலம் குழந்தைத்தனமான துடுக்குடன் பேச விரும்புகிறீர்[2].(3) தேசகாலங்களை {ஏற்ற இடம், நேரம் ஆகியவற்றை} அறிந்தவரான ராக்ஷசரிஷபர் {ராக்ஷசர்களில் காளை ராவணர்}, தன்னுடைய, பகைவருடைய விருத்தி {ஆதிக்கம்}, குறை, ஸ்தானங்களை {நிலை ஆகியவற்றைச் சரியாகப்} புரிந்து வைத்திருக்கிறார்.(4)

யுத்த காண்டம் 064ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ சது꞉ஷஷ்திதம꞉ ஸர்க³꞉

Mahodhara Kumbhakarna Ravana

தது³க்தமதிகாயஸ்ய ப³லினோ பா³ஹுஷா²லின꞉ |
கும்ப⁴கர்ணஸ்ய வசனம் ஷ்²ருத்வோவாச மஹோத³ர꞉ || 6-64-1

கும்ப⁴கர்ணகுலே ஜாதோ த்⁴ருஷ்ட꞉ ப்ராக்ருதத³ர்ஷ²ன꞉ |
அவலிப்தோ ந ஷ²க்னோஷி க்ருத்யம் ஸர்வத்ர வேதி³தும் || 6-64-2

ந ஹி ராஜா ந ஜானீதே கும்ப⁴கர்ண நயானயௌ |
த்வம் து கைஷோ²ரகாத்³த்⁴ருஷ்ட꞉ கேவலம் வக்துமிச்ச²ஸி || 6-64-3

ஸ்தா²னம் வ்ருத்³தி⁴ம் ச ஹானிம் ச தே³ஷ²காலவிபா⁴க³வித் |
ஆத்மனஷ்²ச பரேஷாம் ச பு³த்⁴யதே ராக்ஷஸர்ஷப⁴ || 6-64-4

யத்து ஷ²க்யம் ப³லவதா கர்தும் ப்ராக்ருதபு³த்³தி⁴னா |
அனுபாஸிதவ்ருத்³தே⁴ன க꞉ குர்யாத்தாத்³ருஷ²ம் பு³த⁴꞉ || 6-64-5

Friday, 7 March 2025

கும்பகர்ணனின் அன்பு | யுத்த காண்டம் சர்க்கம் - 063 (58)

The affection of Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-063 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய கும்பகர்ணன்; ராவணனின் கடுஞ்சொற்கள்; ராமனுடன் போரிடுவதாக உறுதியளித்த கும்பகர்ணன்...

Kumbhakarna

அந்த ராக்ஷசராஜனின் புலம்பலைக் கேட்டு உரக்கச் சிரித்த கும்பகர்ணன், இந்த வசனத்தை மொழிந்தான்:(1) “உமது ஹிதத்தை விரும்புகிறவர்களை அலட்சியம் செய்தீர். பூர்வத்தில் நடந்த மந்திரநிர்ணயத்தில் {ஆலோசனைக்கூட்டத்தில்} எந்த தோஷம் எங்களால் காணப்பட்டதோ, அதையே நீர் அடைந்திருக்கிறீர்.(2) எப்படி தீய கர்மங்களைச் செய்பவன் நரகங்களில் வீழ்வானோ, அப்படியே பாப கர்மத்தின் பலன் சீக்கிரமே உம்மை அடைந்திருக்கிறது.(3) மஹாராஜாவே, இந்தச் செயல்பாட்டைக் குறித்து நீர் பிரதமமாக சிந்திக்கவில்லை; கேவலம் வீரியத்தில் செருக்கு கொண்டதால் விளைவைக் குறித்துச் சிந்திக்கவில்லை.(4) ஐஷ்வரியத்தில் நிலைபெற்ற எவன் ஒருவன், பூர்வத்தில் செய்ய வேண்டிய காரியங்களைப் பின்னரும், பின்னர் செய்ய வேண்டிய காரியங்களை பூர்வத்திலும் செய்வானோ, அவன் நியாயாநியாங்களை {நியாய அநியாயங்களை} அறியமாட்டான்.(5) 

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை