Monday, 17 February 2025

பிரஹஸ்த வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 058 (61)

Prahasta killed | Yuddha-Kanda-Sarga-058 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தனின் ஆற்றல்; பிரஹஸ்தனுடன் போரிட்டு அவனைக் கொன்ற நீலன்...

Prahasta coming for war

அரிந்தமனான {பகைவரை அடக்குபவனான} ராமன், போருக்குரிய ஆவலுடன் புறப்பட்டு வந்த பிரஹஸ்தனைக் கண்டு, புன்னகையுடன் விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) “மஹத்தான பலம் {படை} சூழ மஹாவேகத்துடன் வரும் இந்த மஹாகாயன் {பேருடல் படைத்தவன்} யார்?{2} மஹாபாஹுவே, வீரியவந்தனான இந்த நிசாசரனை {இரவுலாவியைக்} குறித்து எனக்குச் சொல்வாயாக” {என்று கேட்டான் ராமன்}.(2,3அ)

யுத்த காண்டம் 058ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ அஷ்டபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

Prahasta coming for war

தத꞉ ப்ரஹஸ்தம் நிர்யாந்தம் த்³ருஷ்ட்வா ரணக்ருதோத்³யமம் |
உவாச பஸ்மிதம் ராமோ விபீ⁴ஷணமரிந்த³ம꞉ || 6-58-1

க ஏஷ ஸுமஹாகாயோ ப³லேன மஹதா வ்ருத꞉ |
ஆக³ச்ச²தி மஹாவேக³꞉ கிம்ரூபப³லபௌருஷ꞉ || 6-58-2
ஆசக்ஷ்வ மே மஹாபா³ஹோ வீர்யவந்தம் நிஷா²சரம் |

ராக⁴வஸ்ய வச꞉ ஷ்²ருத்வா ப்ரத்யுவாச விபீ⁴ஷண꞉ || 6-58-3
ஏஷ ஸேனாபதிஸ்தஸ்ய ப்ரஹஸ்தோ நாம ராக்ஸஸ꞉ |
லங்காயாம் ராக்ஷஸேந்த்³ரஸ்ய த்ரிபா⁴க³ப³லஸம்வ்ருத꞉ || 6-58-4
வீர்யவானஸ்த்ரவிச்சூ²ர꞉ ஸுப்ரக்²யாதபராக்ரம꞉ |

Tuesday, 11 February 2025

பிரஹஸ்தன் | யுத்த காண்டம் சர்க்கம் - 057 (46)

Prahasta | Yuddha-Kanda-Sarga-057 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் தலைமைத் தளபதியான பிரஹஸ்தனைப் போர்க்களத்திற்கு அனுப்பிய ராவணன்...

Ravana and Prahastha Speaking

அகம்பனன் வதம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட ராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, சற்றே தீன முகத்துடன் தன் அமைச்சர்களைப் பார்த்தான்.(1) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், ஒரு முஹூர்த்தம் சிந்தித்து, மந்திரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, முற்பகலில்,{2} சர்வ குல்மங்களையும் {படைகள் அனைத்தையும்} பார்வையிட்டபடியே லங்காம்புரீயைச் சுற்றி வந்தான்.(2,3அ) ஏராளமான குல்மங்களால் {படைகளால்} சூழப்பட்டிருந்த அந்த ராக்ஷசகணங்கள், பதாகைகள், துவஜங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட லங்கா நகரத்தைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதைக்  கண்டான்.(3ஆ,4அ) 

யுத்த காண்டம் 057ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

Ravana and Prahastha Speaking

அகம்பன வத⁴ம் ஷ்²ருத்வா க்ருத்³தோ⁴ வை ராக்ஷஸ ஈஷ்²வர꞉ |
கிஞ்சித்³ தீ³ன முக²ஷ்² ச அபி ஸசிவாம்ஸ் தான் உதை³க்ஷத || 6-57-1

ஸ து த்⁴யாத்வா முஹூர்தம் து மந்த்ரிபி⁴ஹ் ஸம்விசார்ய ச |
ததஸ்து ராவண꞉ பூர்வதி³வஸே ராக்ஷஸாதி⁴ப꞉ || 6-57-2
புரீம் பரியயௌ லன்காம் ஸர்வான் கு³ள்மான் அவேக்ஷிதும் |

தாம் ராக்ஷஸ க³ணைர் கு³ப்தாம் கு³ள்மைர் ப³ஹுபி⁴ர் ஆவ்ருதாம் || 6-57-3
த³த³ர்ஷ² நக³ரீம் லன்காம் பதாகா த்⁴வஜ மாலினீம் |

Sunday, 19 January 2025

அகம்பன வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 056 (39)

Akampana killed | Yuddha-Kanda-Sarga-056 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அகம்பனனுக்கும், ஹனுமானுக்கும் இடையில் நடந்த பெரும்போர்; அகம்பனனைக் கொன்ற ஹனுமான்...

Hanuman killing Akampana

அகம்பனன், யுத்தத்தில் வானரசத்தமர்களால் {வலிமைமிக்க வானரர்களால்} செய்யப்பட்ட அந்த மஹத்தான கர்மத்தைக் கண்டு, தீவிரமான கோபத்தால் பீடிக்கப்பட்டான்.(1) சத்ருக்களின் கர்மத்தைக் கண்டு, குரோதத்தில் மூர்ச்சித்த ரூபத்துடன், தன் பரம கார்முகத்தை {கோபத்தில் மெய்மறந்த வடிவத்துடன், தன் பெரும் வில்லை} அசைத்தபடி சாரதியிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(2) “சாரதியே, பலவான்களான இவர்கள், ரணத்தில் {வானரர்கள், போரில்} ஏராளமான ராக்ஷசர்களைக் கொல்வதெங்கேயோ, அங்கே ரதத்தைத் துரிதமாகச் செலுத்துவாயாக.(3) பலவான்களும், பயங்கரக் கோபம் கொண்டவர்களுமான இந்த வானரர்கள், மரங்கள், சைலங்கள் {மலைகள்}, ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டு, அதோ என் முன் நிற்கின்றனர்.(4) சமரில் சிலாகித்துக் கொள்ளும் {தற்புகழ்ச்சி செய்யும்} இவர்களைக் கொல்ல நான் இச்சிக்கிறேன். இவர்கள் சர்வ ராக்ஷச பலத்தையும் {படையையும்} சிதைப்பதாகத் தெரிகிறது” {என்றான் அகம்பனன்}.(5)

யுத்த காண்டம் 056ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்பஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

Hanuman killing Akampana
தத்³ த்³ருஷ்ட்வா ஸுமஹத் கர்ம க்ருதம் வானர ஸத்தமை꞉ |
க்ரோத⁴ம் ஆஹாரயாம் ஆஸ யுதி⁴ தீவ்ரம் அகம்பன꞉ || 6-56-1

க்ரோத⁴ மூர்சித ரூபஸ் து த்⁴னுவன் பரம கார்முகம் |
த்³ருஷ்ட்வா து கர்ம ஷ²த்ரூணாம் ஸாரதி²ம் வாக்யம் அப்³ரவீத் || 6-56-2

தத்ர ஏவ தாவத் த்வரிதம் ரத²ம் ப்ராபய ஸாரதே² |
ஏதே அத்ர ப³ஹவோ க்⁴னந்தி ஸுப³ஹூன் ராக்ஷஸான் ரணே || 6-56-3

ஏதே அத்ர ப³லவந்தோ ஹி பீ⁴ம காயாஷ்² ச வானரா꞉ |
த்³ரும ஷை²ல ப்ரஹரணாஸ் திஷ்ட²ந்தி ப்ரமுகே² மம || 6-56-4

ஏதான் நிஹந்தும் இச்சாமி ஸமர ஷ்²லாகி⁴னோ ஹ்ய் அஹம் |
ஏதை꞉ ப்ரமதி²தம் ஸர்வம் த்³ருஷ்²யதே ராக்ஷஸம் ப³லம் || 6-56-5

Wednesday, 1 January 2025

மீண்டும் அகம்பனன் | யுத்த காண்டம் சர்க்கம் - 055 (32)

Akampana again | Yuddha-Kanda-Sarga-055 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரிடச் செல்லுமாறு அகம்பனனிடம் சொன்ன ராவணன்; தீய சகுனங்களைக் கண்டும் கலங்காமல் போரிடச் சென்ற அகம்பனன்...

A war between Vanaras and Rakshasas

வஜ்ரதம்ஷ்ட்ரன் வாலிபுத்திரனால் {அங்கதனால்} கொல்லப்பட்டதைக் கேட்ட ராக்ஷசேஷ்வரன் ராவணன், {தன் அருகில்} கைகளைக் கூப்பி நின்றிருந்த பலாதியக்ஷனிடம் {படைத் தலைவனிடம்} இதைச் சொன்னான்:(1) “வெல்லப்பட முடியாத பீமவிக்கிரமர்களான ராக்ஷசர்கள், சர்வ சஸ்திர, அஸ்திர கோவிதரான அகம்பனரை[1] முன்னிட்டுக் கொண்டு சீக்கிரம் புறப்பட்டுச் செல்லட்டும்.(2) யுத்தத்தில் சாஸ்தரும், கோப்தரும், நேதாவுமான இந்த சத்தமர் {போரில் தண்டிப்பவரும், பாதுகாக்கிறவரும், தலைவரும், ஆளுமைகளில் சிறந்தவருமான இந்த அகம்பனர்}, நித்யம் எனக்கு நன்மையை விரும்புகிறவர்; நித்யம் சமரில் {போரில்} பிரியங் கொண்டவர்.(3) இவர் காகுத்ஸ்தர்கள் {ராமலக்ஷ்மணர்கள்}, மஹாபலம் பொருந்திய சுக்ரீவன் ஆகியோரை வென்று,  கோரமான வானரர்கள் பிறரையும் கொல்வார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை” {என்றான் ராவணன்}.(4)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை