Ravana's sorrow for his son | Yuddha-Kanda-Sarga-072 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டு சோகத்தில் மூழ்கிய ராவணன், லங்கையின் பாதுகாப்பு குறித்த கவலையில், ராட்சசர்களை கவனமாக இருக்குமாறு கட்டளையிட்டது...
மஹாத்மாவான லக்ஷ்மணன்[1] அதிகாயனைக் கொன்றதைக் கேட்ட பதற்றத்தினால் ராஜா {ராவணன்} இந்த வசனத்தைக் கூறினான்:(1) "பொறுத்துக் கொள்ள முடியாதவரும் {கோபக்காரரும்}, தன்வியுமான {வில்லுடன் கூடியவருமான} தூம்ராக்ஷர், சஸ்திரங்களில் நிபுணர்களான அகம்பனர், பிரஹஸ்தர், அதேபோல கும்பகர்ணன்{2} ஆகிய இவர்கள் மஹாபலவான்கள்; யுத்தத்தை விரும்பும் வீர ராக்ஷசர்கள்; பரசைனியங்களை {பகைவரின் படைகளை} வெல்பவர்கள்; பகைவர்களால் ஒருபோதும் வெல்லப்படாதவர்கள்.{3} களைப்பின்றி ஏராளமான கர்மங்களைச் செய்யும் வீரனான ராமன், பேருடல் படைத்தவர்களும், நானாவித அஸ்திரங்களில் விசாரதர்களுமான {அந்த} ராக்ஷசர்களையுங்கூட கொன்றுவிட்டான்.{4} மஹாத்மாக்களும், சூரர்களுமான வேறு பலரையும் அழித்துவிட்டான்.{2-5அ)