Thursday, 15 May 2025

நராந்தக வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 069 (96)

Narantaka killed | Yuddha-Kanda-Sarga-069 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் மகன்களான திரிசிரன், தேவாந்தகன், நராந்தகன், அதிகாயன் செய்த போர். பாதுகாக்க அனுப்பப்பட்ட மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்; நராந்தகனைக் கொன்ற அங்கதன்...

Trishira, Devantaka, Narantaka Atikaya join the fight

இவ்வாறு சோகத்தில் மூழ்கிப் புலம்பும் துராத்மாவான ராவணனின் வாக்கியங்களைக் கேட்ட திரிசிரன் {திரிசிரஸ்[1], பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "மஹாவீரியரான எங்கள் மத்தியம தாதா {நடுத்தந்தை / சிறிய தந்தையான கும்பகர்ணர்} இவ்வாறே கொல்லப்பட்டார். ஆனால், ராஜரே, சத்புருஷர்கள் {நன்மக்கள்}, உம்மைப் போல் புலம்புவதில்லை.(2) பிரபோ, நீர் திரிபுவனங்களையும் வெல்லத்தகுந்தவர். அத்தகைய நீர் பிராகிருதர்களை {சாதாரணர்களைப்} போல ஏன் புலம்புகிறீர்?(3) பிரம்மாவால் தத்தம் செய்யப்பட்ட சக்தி {வேலாயுதம்} உம்மிடம் இருக்கிறது. கவசமும், சாயகமும் {கணையும்}, தனுவும் {வில்லும்}, மேகத்திற்கு சமமான ஸ்வனத்தை எழுப்பக்கூடியதும், ஆயிரம் கழுதைகள் பூட்டப்பட்டதுமான ரதமும் இருக்கின்றன.(4) ஒருகாலத்தில் சஸ்திரங்களேதுமில்லாமலேயே தேவதானவர்களை நீர் அழித்திருக்கிறீர். அத்தகைய நீர், சர்வாயுத சம்பன்னராக, ராமனைக் அடக்கத்தகுந்தவராகவே இருக்கிறீர்.(5) மஹாராஜாவே, விருப்பம்போல் இருப்பீராக. நான் புறப்படுகிறேன். பன்னகங்களை {பாம்புகளை அழிக்கும்} கருடன் போல, ரணத்தில் உமது சத்ருக்களைக் களையப் போகிறேன்.(6) தேவராஜனால் சம்பரனும், விஷ்ணுவால் நரகனும்[2] எப்படியோ, அப்படியே இன்று யுத்தத்தில் ராமன் என்னால் தாக்கப்பட்டு வீழ்வான்" {என்றான் திரிசிரன்}.(7)

யுத்த காண்டம் 069ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகோனஸப்ததிதம꞉ ஸர்க³꞉

Trishira, Devantaka, Narantaka Atikaya join the fight

ஏவம் விளபமானஸ்ய ராவணஸ்ய து³ராத்மன꞉ |
ஷ்²ருத்வா ஷோ²க அபி⁴தப்தஸ்ய த்ரிஷி²ரா வாக்யம் அப்³ரவீத் || 6-69-1

ஏவம் ஏவ மஹா வீர்யோ ஹதோ நஸ் தாத மத்⁴யம꞉ |
ந து ஸத் புருஷா ராஜன் விளபந்தி யதா² ப⁴வான் || 6-69-2

நூனம் த்ரிபு⁴வனஸ்ய அபி பர்யாப்தஸ் த்வம் அஸி ப்ரபோ⁴|
ஸ கஸ்மாத் ப்ராக்ருத;இவ ஷோ²கஸ்ய ஆத்மானம் ஈத்³ருஷ²ம் || 6-69-3

ப்³ரஹ்ம த³த்தா அஸ்தி தே ஷ²க்தி꞉ கவச꞉ ஸாயகோ த⁴னு꞉|
ஸஹஸ்ர க²ர ஸம்யுக்தோ ரதோ² மேக⁴ ஸம ஸ்வன꞉ || 6-69-4

த்வயா அஸக்ருத்³ விஷ²ஸ்தேண விஷ²ஸ்தா தே³வ தா³னவா꞉|
ஸ ஸர்வ ஆயுத⁴ ஸம்பன்னோ ராக⁴வம் ஷா²ஸ்தும் அர்ஹஸி || 6-69-5

Sunday, 13 April 2025

மயங்கி விழுந்த ராவணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 068 (24)

Ravana faints | Yuddha-Kanda-Sarga-068 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் கும்பகர்ணனைக் கொன்றானென்பதைக் கேட்டு மயங்கி விழுந்த ராவணன்; நனவு மீண்டதும், விபீஷணனின் ஆலோசனைகளைக் கேட்காததற்காக வருந்தியது...

Ravana crying

கும்பகர்ணன், மஹாத்மாவான ராகவனால் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசர்கள், ராக்ஷசேந்திரனான ராவணனிடம் {பின்வருமாறு} அறிவித்தனர்:(1) “இராஜரே, காலனுக்கு ஒப்பாக வானர சேனையை விரட்டி, வானரர்களை பக்ஷித்தவர் {கும்பகர்ணர்}, காலனின் கர்மத்தை எதிர்கொண்டார் {யமனின் செயல்பாட்டால் உண்டாகும் மரணத்தை அடைந்தார்}.(2) ஒரு முஹூர்த்தத்திற்கு தன் பிரபாவத்தைக் காட்டிவிட்டு, ராமனின் தேஜஸ்ஸில் அவர் சாந்தமடைந்தார். அவரது காயம் {உடல்} சமுத்திரத்திற்குள் பாதி பிரவேசித்த நிலையில் பயங்கரமாகத் தெரிந்தது.{3} நாசியும், காதுகளும் துண்டிக்கப்பட்டு, உதிரம் சொட்டச் சொட்ட பர்வதத்திற்கு ஒப்பான சரீரத்துடன் லங்கையின் துவாரத்தை {வாயிலை} அடைத்துக் கொண்டார்.{4} உமது பிராதாவான {உம்முடன் பிறந்தவரான} கும்பகர்ணர், காகுத்ஸ்தனின் சரத்தால் பீடிக்கப்பட்டுக் காட்டுத் தீயால் எரிக்கப்படும் மரத்தைப் போலச் சிதைந்து விகாரமான லகண்டபூதமானார் {கழுத்தும், தாடையும் அடங்கிய சதைக் குவியலானார்” என்றனர்}.(3-5)

யுத்த காண்டம் 068ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ அஷ்டஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Ravana crying

கும்ப⁴கர்ணம் ஹதம் த்³ருஷ்ட்வா ராக⁴வேண மஹாத்மனா |
ராக்ஷஸா ராக்ஷஸ இந்த்³ராய ராவணாய ந்யவேத³யன் || 6-68-1

ராஜன் ஸ காலஸங்காஷ²꞉ ஸம்யுக்த꞉ காலகர்மணா |
வித்³ராவ்ய வானரீம் ஸேனாம் ப⁴க்ஷயித்வா ச வானரான் || 6-68-2

ப்ரதிபித்வா முஹூர்தம் து ப்ரஷா²ந்தோ ராமதேஜஸா |
காயேனார்த⁴ப்ரவிஷ்டேன ஸமுத்³ரம் பீ⁴மத³ர்ஷ²னம் || 6-68-3
நிக்ருத்தனாஸாகர்ணேன விக்ஷரத்³ருதி⁴ரேண ச|
ருத்³த்⁴வா த்³வாரம் ஷ²ரீரேண லங்காயா꞉ பர்வதோபம꞉ || 6-68-4
கும்ப⁴கர்ணஸ்தவ ப்⁴ராதா காகுத்த்²ஸஷ²ரபீடி³த꞉ |
லக³ண்ட³பூ⁴தோ விக்ருதோ தா³வத³க்³த⁴ இவ த்³ரும꞉ || 6-68-5

Tuesday, 8 April 2025

கும்பகர்ண வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 067 (179)

Kumbhakarna killed | Yuddha-Kanda-Sarga-067 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனுடன் துவிவிதன், ஹனுமான், அங்கதன், சுக்ரீவன், லக்ஷ்மணன் ஆகியோர் போரிட்டது; கடும் மோதலில் ராமனால் கொல்லப்பட்ட கும்பகர்ணன்...

Kumbhakarna fighting a fierce battle

அங்கதனின் சொற்களைக் கேட்டுத் திரும்பி வந்த அந்த சர்வ மஹாகாயர்களும் {பேருடல்களைக் கொண்ட அனைவரும்} நைஷ்டிக புத்தியை {நம்பிக்கையுடன் கூடிய மனத்தை} அடைந்து போரிடக் காத்திருந்தனர்.(1) பலவானான அங்கதனின் வாக்கியத்தைக் கேட்டு நம்பிக்கையடைந்தவர்களும், வீரியம் நினைவூட்டப்பட்டவர்களும், போரில் விக்ரமர்களுமான அந்த வானரர்கள்,{2} ஜீவிதத்தைத் தியாகம் செய்யத் துணிந்து, மரணத்தை நிச்சயித்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டனர்.(2,3) மஹாகாயம் {பேருடல்} படைத்த வானரர்கள், விருக்ஷங்களையும், மஹத்தான மலையுச்சிகளையும் பெயர்த்துக் கொண்டு, துரிதமாக ஓடிச் சென்று கும்பகர்ணனைத் தாக்கினர்.(4)

யுத்த காண்டம் 067ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Kumbhakarna fighting a fierce battle

தே நிவ்ருத்தா மஹாகாயா꞉ ஷ்²ருத்வாங்க³த³வசஸ்ததா³ |
நைஷ்டி²கீம் பு³த்³தி⁴மாஸ்தா²ய ஸர்வே ஸம்க்³ராமகாங்க்ஷிண꞉ || 6-66-1

ஸமுதீ³ரிதவீர்யாஸ்தே ஸமாரோபிதவிக்ரமா꞉ |
பர்யவஸ்தா²பிதா வாக்யைரங்க³தே³ன ப³கூதஸா || 6-67-2
ப்ரயாதாஷ்²ச க³தா ஹர்ஷம் மரணே க்ருதநிஷ்²சயா꞉ |
சக்ரு꞉ ஸுதுமுலம் யுத்³த⁴ம் வானராஸ்த்யக்தஜீவிதா꞉ || 6-67-3

அத² வ்ருக்ஷான் மஹாகாயா꞉ ஸானூனி ஸுமஹாந்தி ச |
வானராஸ்தூர்ணமுத்³யம்ய கும்ப⁴கர்ணமபி⁴த்³ரவன் || 6-67-4

கும்ப⁴கர்ண꞉ ஸம்க்ருத்³தோ⁴ க³தா³முத்³யம்ய வீர்யவான் |
த⁴ர்ஷயன் ஸ மஹாகாய꞉ ஸமந்தாத்³வ்யக்ஷிபத்³ரிபூன் || 6-67-5

Tuesday, 25 March 2025

வானரர்களின் அச்சம் | யுத்த காண்டம் சர்க்கம் - 066 (34)

The fear of Vanaras | Yuddha-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்; போர்க்களத்தில் இருந்து ஓடும் வானரர்களின் துணிவை மீட்ட அங்கதன்...

Kumbhkarna tormenting the vanaras

கிரிகூடத்திற்கு ஒப்பான மஹானும் {மலைச்சிகரத்திற்கு நிகராகப் பெருத்தவனும்}, மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், பிராகாரத்தை லங்கனம் செய்து {மதிற்சுவற்றைக் கடந்து} நகரத்திலிருந்து துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் சமுத்திரம் எதிரொலிக்கும் வகையிலும், இடிகளை வெல்வது {இடிப்பதைப்} போலும், பர்வதங்களை நடுங்கச் செய்யும்படியும் நாதம் செய்தான்.(2) மகவத்தாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, வருணனாலோ வதைக்கப்பட முடியாதவனும், பயங்கரக் கண்களைக் கொண்டவனுமான அவனைக் கண்டதும் வானரர்கள் ஓடிவிட்டனர்[1].(3)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை