Sunday, 13 April 2025

மயங்கி விழுந்த ராவணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 068 (24)

Ravana faints | Yuddha-Kanda-Sarga-068 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் கும்பகர்ணனைக் கொன்றானென்பதைக் கேட்டு மயங்கி விழுந்த ராவணன்; நனவு மீண்டதும், விபீஷணனின் ஆலோசனைகளைக் கேட்காததற்காக வருந்தியது...

Ravana crying

கும்பகர்ணன், மஹாத்மாவான ராகவனால் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசர்கள், ராக்ஷசேந்திரனான ராவணனிடம் {பின்வருமாறு} அறிவித்தனர்:(1) “இராஜரே, காலனுக்கு ஒப்பாக வானர சேனையை விரட்டி, வானரர்களை பக்ஷித்தவர் {கும்பகர்ணர்}, காலனின் கர்மத்தை எதிர்கொண்டார் {யமனின் செயல்பாட்டால் உண்டாகும் மரணத்தை அடைந்தார்}.(2) ஒரு முஹூர்த்தத்திற்கு தன் பிரபாவத்தைக் காட்டிவிட்டு, ராமனின் தேஜஸ்ஸில் அவர் சாந்தமடைந்தார். அவரது காயம் {உடல்} சமுத்திரத்திற்குள் பாதி பிரவேசித்த நிலையில் பயங்கரமாகத் தெரிந்தது.{3} நாசியும், காதுகளும் துண்டிக்கப்பட்டு, உதிரம் சொட்டச் சொட்ட பர்வதத்திற்கு ஒப்பான சரீரத்துடன் லங்கையின் துவாரத்தை {வாயிலை} அடைத்துக் கொண்டார்.{4} உமது பிராதாவான {உம்முடன் பிறந்தவரான} கும்பகர்ணர், காகுத்ஸ்தனின் சரத்தால் பீடிக்கப்பட்டுக் காட்டுத் தீயால் எரிக்கப்படும் மரத்தைப் போலச் சிதைந்து விகாரமான லகண்டபூதமானார் {கழுத்தும், தாடையும் அடங்கிய சதைக் குவியலானார்” என்றனர்}.(3-5)

யுத்த காண்டம் 068ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ அஷ்டஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Ravana crying

கும்ப⁴கர்ணம் ஹதம் த்³ருஷ்ட்வா ராக⁴வேண மஹாத்மனா |
ராக்ஷஸா ராக்ஷஸ இந்த்³ராய ராவணாய ந்யவேத³யன் || 6-68-1

ராஜன் ஸ காலஸங்காஷ²꞉ ஸம்யுக்த꞉ காலகர்மணா |
வித்³ராவ்ய வானரீம் ஸேனாம் ப⁴க்ஷயித்வா ச வானரான் || 6-68-2

ப்ரதிபித்வா முஹூர்தம் து ப்ரஷா²ந்தோ ராமதேஜஸா |
காயேனார்த⁴ப்ரவிஷ்டேன ஸமுத்³ரம் பீ⁴மத³ர்ஷ²னம் || 6-68-3
நிக்ருத்தனாஸாகர்ணேன விக்ஷரத்³ருதி⁴ரேண ச|
ருத்³த்⁴வா த்³வாரம் ஷ²ரீரேண லங்காயா꞉ பர்வதோபம꞉ || 6-68-4
கும்ப⁴கர்ணஸ்தவ ப்⁴ராதா காகுத்த்²ஸஷ²ரபீடி³த꞉ |
லக³ண்ட³பூ⁴தோ விக்ருதோ தா³வத³க்³த⁴ இவ த்³ரும꞉ || 6-68-5

Tuesday, 8 April 2025

கும்பகர்ண வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 067 (179)

Kumbhakarna killed | Yuddha-Kanda-Sarga-067 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனுடன் துவிவிதன், ஹனுமான், அங்கதன், சுக்ரீவன், லக்ஷ்மணன் ஆகியோர் போரிட்டது; கடும் மோதலில் ராமனால் கொல்லப்பட்ட கும்பகர்ணன்...

Kumbhakarna fighting a fierce battle

அங்கதனின் சொற்களைக் கேட்டுத் திரும்பி வந்த அந்த சர்வ மஹாகாயர்களும் {பேருடல்களைக் கொண்ட அனைவரும்} நைஷ்டிக புத்தியை {நம்பிக்கையுடன் கூடிய மனத்தை} அடைந்து போரிடக் காத்திருந்தனர்.(1) பலவானான அங்கதனின் வாக்கியத்தைக் கேட்டு நம்பிக்கையடைந்தவர்களும், வீரியம் நினைவூட்டப்பட்டவர்களும், போரில் விக்ரமர்களுமான அந்த வானரர்கள்,{2} ஜீவிதத்தைத் தியாகம் செய்யத் துணிந்து, மரணத்தை நிச்சயித்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டனர்.(2,3) மஹாகாயம் {பேருடல்} படைத்த வானரர்கள், விருக்ஷங்களையும், மஹத்தான மலையுச்சிகளையும் பெயர்த்துக் கொண்டு, துரிதமாக ஓடிச் சென்று கும்பகர்ணனைத் தாக்கினர்.(4)

யுத்த காண்டம் 067ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Kumbhakarna fighting a fierce battle

தே நிவ்ருத்தா மஹாகாயா꞉ ஷ்²ருத்வாங்க³த³வசஸ்ததா³ |
நைஷ்டி²கீம் பு³த்³தி⁴மாஸ்தா²ய ஸர்வே ஸம்க்³ராமகாங்க்ஷிண꞉ || 6-66-1

ஸமுதீ³ரிதவீர்யாஸ்தே ஸமாரோபிதவிக்ரமா꞉ |
பர்யவஸ்தா²பிதா வாக்யைரங்க³தே³ன ப³கூதஸா || 6-67-2
ப்ரயாதாஷ்²ச க³தா ஹர்ஷம் மரணே க்ருதநிஷ்²சயா꞉ |
சக்ரு꞉ ஸுதுமுலம் யுத்³த⁴ம் வானராஸ்த்யக்தஜீவிதா꞉ || 6-67-3

அத² வ்ருக்ஷான் மஹாகாயா꞉ ஸானூனி ஸுமஹாந்தி ச |
வானராஸ்தூர்ணமுத்³யம்ய கும்ப⁴கர்ணமபி⁴த்³ரவன் || 6-67-4

கும்ப⁴கர்ண꞉ ஸம்க்ருத்³தோ⁴ க³தா³முத்³யம்ய வீர்யவான் |
த⁴ர்ஷயன் ஸ மஹாகாய꞉ ஸமந்தாத்³வ்யக்ஷிபத்³ரிபூன் || 6-67-5

Tuesday, 25 March 2025

வானரர்களின் அச்சம் | யுத்த காண்டம் சர்க்கம் - 066 (34)

The fear of Vanaras | Yuddha-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்; போர்க்களத்தில் இருந்து ஓடும் வானரர்களின் துணிவை மீட்ட அங்கதன்...

Kumbhkarna tormenting the vanaras

கிரிகூடத்திற்கு ஒப்பான மஹானும் {மலைச்சிகரத்திற்கு நிகராகப் பெருத்தவனும்}, மஹாபலவானுமான அந்தக் கும்பகர்ணன், பிராகாரத்தை லங்கனம் செய்து {மதிற்சுவற்றைக் கடந்து} நகரத்திலிருந்து துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் சமுத்திரம் எதிரொலிக்கும் வகையிலும், இடிகளை வெல்வது {இடிப்பதைப்} போலும், பர்வதங்களை நடுங்கச் செய்யும்படியும் நாதம் செய்தான்.(2) மகவத்தாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, வருணனாலோ வதைக்கப்பட முடியாதவனும், பயங்கரக் கண்களைக் கொண்டவனுமான அவனைக் கண்டதும் வானரர்கள் ஓடிவிட்டனர்[1].(3)

யுத்த காண்டம் 066ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்ஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Kumbhkarna tormenting the vanaras

ஸ லங்கா⁴யித்வா ப்ராகாரம் கி³ரிகூடோபமோ மஹான் |
நிர்யயௌ நிக³ராத்தூத்ணம் கும்ப⁴கர்ணோ மஹாப³ல꞉ || 6-66-1

நநாத³ ச மஹாநாத³ம் ஸமுத்³ரமபி⁴நாத³யன் |
விஜயன்னிவ நிர்கா⁴தான்வித⁴மன்னிவ பர்வதான் || 6-66-2

தமவத்⁴யம் மக⁴வதா யமேன வருணேன ச |
ப்ரேக்ஷ்ய பீ⁴மாக்ஷமாயாந்தம் வானரா விப்ரது³த்³ருவு꞉ || 6-66-3

தாம்ஸ்து வித்³ரவதோ த்³ருஷ்ட்வா வாலிபுத்ரோ(அ)ங்க³தோ³(அ)ப்³ரவீத் |
ளம் நீலம் க³வாக்ஷம் ச குமுத³ம் ச மஹாப³லம் || 6-66-4

ஆத்மானமத்ர விஸ்ம்ருத்ய வீர்யாண்யபி⁴ஜனானி ச |
க்வ க³ச்ச²த ப⁴யத்ரஸ்தா꞉ ப்ராக்ருதா ஹரயோ யதா² || 6-66-5

Thursday, 20 March 2025

கும்பகர்ணன் புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் - 065 (57)

Kumbhakarna set out | Yuddha-Kanda-Sarga-065 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மஹோதரனின் திட்டங்களைக் கண்டித்து, தீய சகுனங்களைப் பொருட்படுத்தாமல் போருக்குப் புறப்பட்ட கும்பகர்ணன்; அவனைக் கண்டு அஞ்சிய வானரர்கள்...

Kumbhakarna Ravana Mahodhara from right to left

இவ்வாறு சொன்ன மஹோதரனை {அவ்வாறு சொல்லக்கூடாது என்று} கண்டித்த கும்பகர்ணன், தன்னுடன் பிறந்தவனும், ராக்ஷசசிரேஷ்டனுமான ராவணனிடம் {ராக்ஷசர்களில் சிறந்தவனுமான ராவணனிடம் பின்வருமாறு} பேசினான்:(1) “துராத்மாவான அந்த ராமனை வதம் செய்வதன் மூலம், கோரமான உமது பயத்தை இன்று போக்குவேன். வைரம் {பகைமை} இன்றி சுகமாக இருப்பீராக.(2) ஜலமற்ற மேகத்தைப் போல, சூரர்கள் வீணாக கர்ஜிப்பதில்லை. யுத்தத்தில் கர்மத்தை நிறைவேற்றும்போது என் கர்ஜனையைப் பார்ப்பீர்.(3) தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொள்வதில் சூரர்கள் ஈடுபடமாட்டார்கள்; அதைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். எதையும் காட்டிக் கொள்ளாமல் செய்வதற்கரிய கர்மத்தை அவர்கள் செய்வார்கள்.(4) 

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை