Sunday, 8 June 2025

இராவணனின் புத்திர விசனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 072 (18)

Ravana's sorrow for his son | Yuddha-Kanda-Sarga-072 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டு சோகத்தில் மூழ்கிய ராவணன், லங்கையின் பாதுகாப்பு குறித்த கவலையில், ராட்சசர்களை கவனமாக இருக்குமாறு கட்டளையிட்டது...

Ravana in a sorrow

மஹாத்மாவான லக்ஷ்மணன்[1] அதிகாயனைக் கொன்றதைக் கேட்ட பதற்றத்தினால் ராஜா {ராவணன்} இந்த வசனத்தைக் கூறினான்:(1) "பொறுத்துக் கொள்ள முடியாதவரும் {கோபக்காரரும்}, தன்வியுமான {வில்லுடன் கூடியவருமான} தூம்ராக்ஷர், சஸ்திரங்களில் நிபுணர்களான அகம்பனர், பிரஹஸ்தர், அதேபோல கும்பகர்ணன்{2} ஆகிய இவர்கள் மஹாபலவான்கள்; யுத்தத்தை விரும்பும் வீர ராக்ஷசர்கள்; பரசைனியங்களை {பகைவரின் படைகளை} வெல்பவர்கள்; பகைவர்களால் ஒருபோதும் வெல்லப்படாதவர்கள்.{3} களைப்பின்றி ஏராளமான கர்மங்களைச் செய்யும் வீரனான ராமன், பேருடல் படைத்தவர்களும், நானாவித அஸ்திரங்களில் விசாரதர்களுமான {அந்த} ராக்ஷசர்களையுங்கூட கொன்றுவிட்டான்.{4} மஹாத்மாக்களும், சூரர்களுமான வேறு பலரையும் அழித்துவிட்டான்.{2-5அ) 

யுத்த காண்டம் 072ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³விபப்ததிதம꞉ ஸர்க³꞉

Ravana in a sorrow

அதிகாயம் ஹதம் ஷ்²ருத்வா லக்ஷ்மணேன மஹாத்மனா |
உத்³வேக³மக³மத்³ராஜா வசனம் சேத³மப்³ரவீத் || 6-72-1

தூ⁴ம்ராக்ஷ꞉ பரமாமர்ஷீ ஸர்வஷ²ஸ்த்ரப்⁴ருதாம் வர꞉ |
அகம்பன꞉ ப்ரஹஸ்தஷ்²ச கும்ப⁴கர்ணஸ்த்ததை²வ ச || 6-72-2
ஏதே மஹாப³லா வீரா ராக்ஷஸா யுத்³த⁴காஙிக்ஷண꞉ |
ஜேதார꞉ பரஸைன்யானாம் பரைர்நித்யாபராஜிதா꞉ || 6-72-3
ஸஸைந்யாஸ்தே ஹதா வீரா ராமேணாக்லிஷ்டகர்மணா |
ராக்ஷஸா꞉ ஸுமஹாகாயா நாநாஷ²ஸ்த்ரவிஷா²ரதா³꞉ || 6-72-4
அன்யே ச ப³ஹவ꞉ ஷூ²ரா மஹாத்மானோ நிபாதிதா꞉ |

Tuesday, 27 May 2025

அதிகாயனின் வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 071 (116)

Atikaya killed | Yuddha-Kanda-Sarga-071 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் தோற்றம் கண்டு பயந்த வானரர்கள்; ராமனை நோக்கிச் சென்று தற்புகழ்ச்சி செய்த அதிகாயன்; பயங்கர யுத்தம் செய்து அதிகாயனைக் கொன்ற லக்ஷ்மணன்...

Atikaya Rama Vibheeshana, digital art made by copilot inspired by a Chandamama image

உரோமஹர்ஷணம் கொள்ளும் {மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும்} வகையில் தன் பலம் {படை} கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டும், சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான பராக்கிரமத்தைக் கொண்ட தன் பிராதாக்கள் {தன்னுடன் பிறந்தோர்} கொல்லப்படுவதைக் கண்டும்,{1} தன் பித்ருவ்யர்களும் {சிற்றப்பன்மாரும்}, ராக்ஷசரிஷப பிராதாக்களுமான {ராக்ஷசர்களில் உடன்பிறந்த காளைகளுமான} யுத்தோன்மத்தனும், மத்தனும் {மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்} போரில் வீழ்ந்ததைக் கண்டும்,{2} மஹாதேஜஸ்வியும், பிரம்மனால் வரங்கள் தத்தம் செய்யப்பட்டவனும், அத்ரிக்கு {மலைக்கு} ஒப்பானவனும், போரில் தேவதானவர்களின் செருக்கை அழிப்பவனுமான அதிகாயன் கோபமடைந்தான்.(1-3) சக்ராரியான அவன் {இந்திரனின் பகைவனான அதிகாயன்}, ஆயிரம் பாஸ்கரர்களின் {சூரியர்களின்} சங்கமத்தைப் போல் ஒளிரும் ஒரு ரதத்தில் ஏறி, வானரர்களை நோக்கி விரைந்தான்.(4) கிரீடியும் {கிரீடம் தரித்தவனும்}, தூய குண்டலங்களை அணிந்தவனுமான அவன் {அதிகாயன்}, சாபத்தை {வில்லை} வளைத்து, தன் நாமத்தை {பெயரை} உரக்க அறிவித்தபடியே மஹாஸ்வனத்துடன் நாதம் செய்தான்.(5) அவன், அந்த சிம்மநாதத்தாலும், உரக்க அறிவிக்கும் தன் பெயராலும், பயங்கரமான  நாணொலியாலும் பயத்தை விளைவித்தபடியே வானரர்களை அச்சுறுத்தினான்.(6)

யுத்த காண்டம் 071ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகஸப்ததிதம꞉ ஸர்க³꞉

Atikaya Rama Vibheeshana, digital art made by copilot inspired by a Chandamama image

ஸ்வப³லம் வ்யதி²தம் த்³ருஷ்ட்வா துமுலம் லோமஹர்ஷணம் |
ப்⁴ராத்ரூம்ஷ்²ச நிஹதாந்த்³ருஷ்ட்வா ஷ²க்ரதுல்யபராக்ரமான் || 6-71-1
பித்ருவ்யௌ சாபி ஸந்த்³ருஷ்²ய ஸமரே ஸம்நிஷூதி³தௌ |
யுத்³தோ⁴ன்மத்தம் ச மத்தம் ச ப்⁴ராதரௌ ராக்ஷஸர்ஷபௌ⁴ || 6-71-2
சுகோப ச மஹாதேஜா ப்³ரஹ்மத³த்தவரோ யுதி⁴ |
அதிகாயோ(அ)த்³ரிஸங்காஷோ² தே³வதா³னவத³ர்பஹா || 6-71-3

ஸ பா⁴ஸ்கரஸஹஸ்ரஸ்ய ஸங்கா⁴தமிவ பா⁴ஸ்வரம் |
ரத²மாஸ்தா²ய ஷ²க்ராரிரபி⁴து³த்³ராவ வானரான் || 6-71-4

ஸ விஸ்பா²ர்ய ததா³ சாபம் கிரீடீ ம்ருஷ்டகுண்ட³ல꞉ |
நாம ஸம்ஷ்²ராவயாமாஸ நநாத³ ச மஹாஸ்வனம் || 6-71-5

Monday, 19 May 2025

வந்தவரில் எஞ்சியோரின் நிலை | யுத்த காண்டம் சர்க்கம் - 070 (67)

The situation of the rest who came | Yuddha-Kanda-Sarga-070 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனைத் தவிர்த்து, தேவாந்தகன், மஹோதரன், திரிசிரன், மஹாபார்ஷ்வன் ஆகியோர் ஹனுமான், நீலன், ரிஷபன் ஆகியோரால் கொல்லப்படுவது...

Rishabha's final blow to Mahaparshva

A digital art made by CopilotAI, inspired by a Chandamama Image

நராந்தகன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், நைர்ருதரிஷபர்களுமான {ராக்ஷசர்களில் காளைகளுமான} தேவாந்தகன், திரிமூர்த்தன் {திரிசிரஸ்},  பௌலஸ்தியன் {புலஸ்தியர் வழி வந்தவனான} மஹோதரன் ஆகியோர் அழுது கூச்சலிட்டனர்.(1) மஹோதரன், மேகத்திற்கு ஒப்பான வாரணேந்திரத்தில் {தலைமை யானையின் மீது} ஏறிச் சென்று, மஹாவீரியனான வாலிபுத்திரனை {அங்கதனை} வேகமாகத் தாக்கினான்.(2) பிறகு, பலவானான தேவாந்தகன், பிராதாவுக்கான விசனத்துடன் {உடன் பிறந்தவனுக்கான வேதனையுடன்}, ஒளிரும் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டு, அங்கதனை நோக்கி விரைந்தான்.(3) பிறகு, வீரனான திரிசிரன், ஆதித்யனுக்கு ஒப்பானதும், பரம வாஜிகள் {மிகச் சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதுமான ரதத்தில் ஏறிச் சென்று வாலிபுத்திரனை {அங்கதனை} எதிர்த்தான்.(4)

யுத்த காண்டம் 070ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்ததிதம꞉ ஸர்க³꞉

Rishabha's final blow to Mahaparshva
A digital art made by CopilotAI, inspired by a Chandamama Image

நராந்தகம் ஹதம் த்³ருஷ்ட்வா சுக்ருஷு²ர் நைர்ருதர்ஷபா⁴꞉.
தே³வாந்தக꞉ த்ரிமூர்தா⁴ ச பௌலஸ்த்ய꞉ ச மஹோத³ர꞉.. 6-70-01

ஆரூடோ⁴ மேக⁴ ஸம்காஷ²ம் வாரண இந்த்³ரம் மஹா உத³ர꞉ |
வாலி புத்ரம் மஹா வீர்யம் அபி⁴து³த்³ராவ வீர்யவான் || 6-70-02

ப்⁴ராத்ரு வ்யஸன ஸம்தப்தஸ் ததா³ தே³வ அந்தகோ ப³லீ |
ஆதா³ய பரிக⁴ம் தீ³ப்தம் அன்க³த³ம் ஸமபி⁴த்³ரவத் || 6-70-03

ரத²ம் ஆதி³த்ய ஸம்காஷ²ம் யுக்தம் பரம வாஜிபி⁴꞉ |
ஆஸ்தா²ய த்ரிஷி²ரா வீரோ வாலி புத்ரம் அத² அப்⁴யயாத் || 6-70-04

ஸ த்ரிபி⁴ர் தே³வ த³ர்பக்⁴னைர் நைர்ருத இந்த்³ரைர் அபி⁴த்³ருத꞉ |
வ்ருக்ஷம் உத்பாடயாம் ஆஸ மஹா விடபம் அன்க³த³꞉ || 6-70-05

Thursday, 15 May 2025

நராந்தக வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 069 (96)

Narantaka killed | Yuddha-Kanda-Sarga-069 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் மகன்களான திரிசிரன், தேவாந்தகன், நராந்தகன், அதிகாயன் செய்த போர். பாதுகாக்க அனுப்பப்பட்ட மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்; நராந்தகனைக் கொன்ற அங்கதன்...

Trishira, Devantaka, Narantaka Atikaya join the fight


A digital art made by CopilotAI, inspired by a Chandamama Image from December 1976

இவ்வாறு சோகத்தில் மூழ்கிப் புலம்பும் துராத்மாவான ராவணனின் வாக்கியங்களைக் கேட்ட திரிசிரன் {திரிசிரஸ்[1], பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "மஹாவீரியரான எங்கள் மத்தியம தாதா {நடுத்தந்தை / சிறிய தந்தையான கும்பகர்ணர்} இவ்வாறே கொல்லப்பட்டார். ஆனால், ராஜரே, சத்புருஷர்கள் {நன்மக்கள்}, உம்மைப் போல் புலம்புவதில்லை.(2) பிரபோ, நீர் திரிபுவனங்களையும் வெல்லத்தகுந்தவர். அத்தகைய நீர் பிராகிருதர்களை {சாதாரணர்களைப்} போல ஏன் புலம்புகிறீர்?(3) பிரம்மாவால் தத்தம் செய்யப்பட்ட சக்தி {வேலாயுதம்} உம்மிடம் இருக்கிறது. கவசமும், சாயகமும் {கணையும்}, தனுவும் {வில்லும்}, மேகத்திற்கு சமமான ஸ்வனத்தை எழுப்பக்கூடியதும், ஆயிரம் கழுதைகள் பூட்டப்பட்டதுமான ரதமும் இருக்கின்றன.(4) ஒருகாலத்தில் சஸ்திரங்களேதுமில்லாமலேயே தேவதானவர்களை நீர் அழித்திருக்கிறீர். அத்தகைய நீர், சர்வாயுத சம்பன்னராக, ராமனை அடக்கத்தகுந்தவராகவே இருக்கிறீர்.(5) மஹாராஜாவே, விருப்பம்போல் இருப்பீராக. நான் புறப்படுகிறேன். பன்னகங்களை {பாம்புகளை அழிக்கும்} கருடன் போல, ரணத்தில் உமது சத்ருக்களைக் களையப் போகிறேன்.(6) தேவராஜனால் சம்பரனும், விஷ்ணுவால் நரகனும்[2] எப்படியோ, அப்படியே இன்று யுத்தத்தில் ராமன் என்னால் தாக்கப்பட்டு வீழ்வான்" {என்றான் திரிசிரன்}.(7)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை