Tuesday 15 March 2022

இராமனின் குணங்கள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 001 (50) - (சுலோகங்களுடன்)

Virtues of Rama | Ayodhya-Kanda-Sarga-001 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் ஆலோசித்தது; பரதனும், சத்ருக்னனும் தாய்மாமனுடன் சென்றது; இராமனின் நற்குணங்கள்...

Dasharatha's counsel

 க³ச்ச²தா மாதுலகுலம் ப⁴ரதேந ததா³(அ)நக⁴꞉
ஷ²த்ருக்⁴நோ நித்யஷ²த்ருக்⁴நோ நீத꞉ ப்ரீதிபுரஸ்க்ருத꞉ || 2-1-1

பதப்பிரிப்பு: க³ச்ச²தா = போகும்போது; மாதுலகுலம் = தாய்மாமனின் குலம் {வீடு}; ப⁴ரதேந ததா³ = பரதன் அப்போது; (அ)நக⁴: பாவமற்றவன்; 
ஷ²த்ருக்⁴நோ = சத்ருக்னன்; நித்யஷ²த்ருக்⁴நோ: பகைவரை எப்போதும் அழிப்பவன்; நீத꞉ ப்ரீதிபுரஸ்க்ருத꞉ = அன்புடன்;  நீத꞉ ஏற்றுக் கொள்ளப்படான்.

மாற்றியமைத்தால்: ப⁴ரதேந = பரதன்; மாதுலகுலம் = தாய் மாமனின் குலத்திற்கு {வீட்டுக்குச்}; க³ச்ச²தா = செல்லும்போது; (அ)நக⁴: பாவமற்றவனும்; நித்யஷ²த்ருக்⁴நோ: பகைவரை எப்போதும் அழிப்பவனுமான; ஷ²த்ருக்⁴நோ = சத்ருக்னனை; ததா³ = அப்போது; ப்ரீதிபுரஸ்க்ருத꞉ = அன்புடன்; நீத꞉ அழைத்துச் சென்றான்.

பொருள்: பரதன், தன் மாதுலன் {தாய் மாமனான யுதாஜித்தின்} வீட்டுக்குச் சென்ற போது, பாவமற்றவனும், பகைவரை எப்போதும் அழிப்பவனுமான சத்ருக்னனை அன்போடு தன்னுடன் அழைத்துச் சென்றான்.(1) 


ஸ தத்ர ந்யவஸத்³ப்⁴ராத்ரா ஸஹ ஸத்காரஸத்க்ருத꞉ |
மாதுலேநாஷ்²வபதிநா புத்ரஸ்நேஹேந லாலித꞉ || 2-1-2

பதப்பிரிப்பு: ஸ தத்ர = அங்கே அவன்; ந்யவஸத்³; வசித்து வந்தபோது; ப்⁴ராத்ரா ஸஹ = சகோதரனுடன்; ஸத்காரஸத்க்ருத꞉ = விருந்தோம்பலுடன் நன்கு கவனிக்கப்பட்ட;
மாதுலேநா = தன் மாதுலன் (அ)ஷ்²வபதிநா = குதிரைப்படைத் தலைவனால்; புத்ரஸ்நேஹேந= புத்திரஸ்நேஹத்துடன்; லாலித꞉ பேணப்பட்டான்.

மாற்றியமைத்தால்: ஸ தத்ர = அங்கே அவன்; ப்⁴ராத்ரா ஸஹ = சகோதரனுடன்; ந்யவஸத்³; வசித்து வந்தபோது; (அ)ஷ்²வபதிநா = குதிரைப்படைத் தலைவனான; மாதுலேநா = தன் மாதுலனால்; புத்ரஸ்நேஹேந= புத்திரஸ்நேஹத்துடனும்; ஸத்காரஸத்க்ருத꞉ = விருந்தோம்பலுடன் நன்கு கவனிக்கப்பட்டு; லாலித꞉ பேணப்பட்டான்; 

பொருள்: அங்கே அவன் {பரதன்},  சகோதரனுடன் {சத்ருக்னனுடன்} வசித்து வந்தபோது, அஷ்வபதியான {குதிரைப் படைத் தலைவனான} தன் மாதுலனால் {தாய்மாமன் யுதாஜித்தால்}, புத்திரசினேகத்துடனும், நல்ல விருந்தோம்பலுடனும் நன்கு பேணப்பட்டான்.(2) 



தத்ராபி நிவஸந்தௌ தௌ தர்ப்யமாணௌ ச காமத꞉ |
ப்⁴ராதரௌ ஸ்மரதாம் வீரௌ வ்ருத்³த⁴ம் த³ஷ²ரத²ம் ந்ருபம் || 2-1-3

பதப்பிரிப்பு: தத்ராபி = அங்கே; நிவஸந்தௌ = வசித்திருந்தாலும்; தௌ; தர்ப்யமாணௌ ச = நிறைவுடன் இருந்தாலும்; காமத꞉ = விருப்பங்கள் அனைத்தும்
ப்⁴ராதரௌ = சகோதரர்கள் இருவரும்; ஸ்மரதாம் = நினைத்தனர்; வீரௌ = வீரர்கள் இருவரும்; வ்ருத்³த⁴ம் = முதிர்ந்தவனான த³ஷ²ரத²ம் = தசரத; ந்ருபம் = மன்னனை || 2-1-3

மாற்றியமைத்தால்: ப்⁴ராதரௌ = சகோதரர்கள் இருவரும்; வீரௌ = வீரர்கள் இருவரும்; காமத꞉ = விருப்பங்கள் அனைத்தும்; தர்ப்யமாணௌ ச = நிறைவேறியவர்களாக; தத்ராபி = அங்கே; நிவஸந்தௌ = வசித்திருந்தாலும்; வ்ருத்³த⁴ம் = முதிர்ந்தவனான; த³ஷ²ரத²ம் = தசரத; ந்ருபம் = மன்னனை; ஸ்மரதாம் = நினைத்தனர்;

பொருள்: சகோதரர்களான அந்த வீரர்கள் இருவரும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியவர்களாக அங்கே வசித்திருந்தாலும்,  முதிர்ந்தவனான தசரத நிருபனை {மன்னனை} நினைத்துக் கொண்டேயிருந்தனர்.(3) 



ராஜாபி தௌ மஹாதேஜா꞉ ஸஸ்மார ப்ரோஷிதௌ ஸுதௌ |
உபௌ⁴ ப⁴ரதஷ²த்ருக்⁴நௌ மஹேந்த்³ரவருணோபமௌ || 2-1-4

பதப்பிரிப்பு: ராஜாபி = மன்னன் {தசரதன்}; தௌ; மஹாதேஜா꞉ = மஹாதேஜஸ்வி; ஸஸ்மார = நினைத்தான்; ப்ரோஷிதௌ = நாட்டுக்கு வெளியே இருந்த; ஸுதௌ = மகன்கள் இருவரையும்
உபௌ⁴ ப⁴ரதஷ²த்ருக்⁴நௌ = பரதசத்ருக்னர்கள் இருவரையும்; மஹேந்த்³ரவருணோபமௌ = மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையான|| 2-1-4

மாற்றியமைத்தால்: மஹாதேஜா꞉ = மஹாதேஜஸ்வியான; ராஜாபி = மன்னனும் {தசரதனும்}; ப்ரோஷிதௌ = நாட்டுக்கு வெளியே இருந்தவர்களும்; மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையானவர்களும்; ஸுதௌ = மகன்களுமான; ப⁴ரதஷ²த்ருக்⁴நௌ = பரதசத்ருக்னர்கள் இருவரையும்; ஸஸ்மார = நினைத்தான்.

பொருள்: மஹாதேஜஸ்வியான அந்த ராஜனும் {தசரதனும்}, வெளிநாட்டில் {கேகய நாட்டில்} இருந்தவர்களும், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையானவர்களும், சுதர்களுமான {மகன்களுமான}  பரதசத்ருக்னர்கள் இருவரையும் நினைத்தவாறே இருந்தான்.(4). 



ஸர்வ ஏவ து தஸ்யேஷ்டாஷ்²சத்வார꞉ புருஷர்ஷபா⁴꞉ |
ஸ்வஷ²ரீராத்³விநிர்வ்ருத்தாஷ்²சத்வார இவ பா³ஹவ꞉ || 2-1-5

பதப்பிரிப்பு: ஸர்வ ஏவ து = அவர்கள் அனைவரும்; தஸ்யே = அவனது {தசரதனின்}; (இ)ஷ்டாஷ்²= அன்புக்குரிய; சத்வார꞉ = நான்கு; புருஷர்ஷபா⁴꞉ = புருஷரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்}
ஸ்வஷ²ரீராத்³வி = தன் உடலில் இருந்து; நிர்வ்ருத்தா ஷ்² = வெளிப்பட்ட; சத்வார இவ பா³ஹவ꞉ = நான்கு கைகளைப் போல || 2-1-5

மாற்றியமைத்தால்: சத்வார꞉ = நான்கு; புருஷர்ஷபா⁴꞉ = புருஷரிஷபர்களான; ஸர்வ ஏவ து = அவர்கள் அனைவரரையும்ம்; ஸ்வஷ²ரீராத்³வி = தன் உடலில் இருந்து; நிர்வ்ருத்தா ஷ்² = வெளிப்பட்ட; தஸ்யே = தனது {தசரதனின்}; சத்வார இவ பா³ஹவ꞉ = நான்கு கைகளைப் போல; (இ)ஷ்டாஷ்²= விரும்பினான்

பொருள்: அவன் {தசரதன்}, அந்தப் புருஷரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்} நால்வரையும், தன் சரீரத்தில் {உடலில்} இருந்து வெளிப்பட்ட நான்கு கைகளைப் போல விரும்பினான்.(5) 



தேஷாமபி மஹாதேஜா ராமோ ரதிகர꞉ பிது꞉ |
ஸ்வயம்பூ⁴ரிவ பூ⁴தாநாம் ப³பூ⁴வ கு³ணவத்தர꞉ || 2-1-6

பதப்பிரிப்பு: தேஷாமபி = அவர்களில்; மஹாதேஜா = மஹாதேஜஸ்வியான; ராமோ = ராமன்; ரதிகர꞉ = மகிழ்ச்சிக்கு; பிது꞉ = தந்தையின் 
ஸ்வயம்பூ⁴ரிவ = ஸ்வயம்பூவை போல; பூ⁴தாநாம் = பூதங்கள் அனைத்திலும்; ப³பூ⁴வ = பிறப்பிடமாகவும்; கு³ணவத்தர꞉ = குணத்திற்சிறந்தவனாகவும்.

மாற்றியமைத்தால்: தேஷாமபி = அவர்களில்; மஹாதேஜா = மஹாதேஜஸ்வி; கு³ணவத்தர꞉ = குணத்தில் சிறந்தவன்; ராமோ = ராமன்;  பூ⁴தாநாம் = பூதங்களில்; ஸ்வயம்பூ⁴ரிவ = ஸ்வயம்பூவை {பிரம்மனைப்} போல; பிது꞉ = தந்தையின்; ரதிகர꞉ = மகிழ்ச்சிக்கு; ப³பூ⁴வ = பிறப்பிடம்.

பொருள்: அவர்களில் மஹாதேஜஸ்வியும், குணத்திற் சிறந்தவனும், பூதங்களில் {உயிரினங்கள் அனைத்திலும்} ஸ்வயம்பூவை {பிரம்மனைப்} போன்றவனுமான ராமன் தந்தையின் மகிழ்ச்சிக்குப் பிறப்பிடமாகத் திகழ்ந்தான்.(6)



ஸ ஹி தே³வைருதீ³ர்ணஸ்ய ராவணஸ்ய வதா⁴ர்தி²பி⁴꞉ |
அர்தி²தோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு꞉ ஸநாதந꞉ || 2-1-7

பதப்பிரிப்பு: ஸ = அவன் {ராமன்}; ஹி = உண்மையில்; தே³வை = தேவர்களால்; ருதீ³ர்ணஸ்ய ராவணஸ்ய = ஆணவக்காரனான ராவணனை; வதா⁴ர்தி²பி⁴꞉ = வதம் செய்ய விரும்பிய
அர்தி²தோ = தூண்டப்பட்டு; மாநுஷே லோகே = மனுஷ லோகத்தில் ஜஜ்ஞே = பிறந்த விஷ்ணு꞉ ஸநாதந꞉ = சனாதனவிஷ்ணு. 

மாற்றியமைத்தால்: ஸ = அவன் {ராமன்}; ருதீ³ர்ணஸ்ய ராவணஸ்ய = ஆணவக்காரனான ராவணனை; வதா⁴ர்தி²பி⁴꞉ = வதம் செய்ய விரும்பிய; தே³வை = தேவர்களால்; அர்தி²தோ = தூண்டப்பட்டு; மாநுஷே லோகே = மனுஷ லோகத்தில் ஜஜ்ஞே = பிறந்த விஷ்ணு꞉ ஸநாதந꞉ = சனாதனவிஷ்ணு; ஹி = உண்மையில்.

பொருள்: அவன் {ராமன்}, ஆணவக்காரனான ராவணனை வதம் செய்ய விரும்பிய தேவர்களால் தூண்டப்பட்டு மனிதர்களின் உலகத்தில் பிறந்த சநாதன விஷ்ணுவல்லவா?(7) 



கௌஸல்யா ஷு²ஷு²பே⁴ தேந புத்ரேணாமிததேஜஸா |
யதா² வரேண தே³வாநாமதி³திர்வஜ்ரபாணிநா || 2-1-8

பதப்பிரிப்பு: கௌஸல்யா = கௌசல்யை; ஷு²ஷு²பே⁴ = ஒளிர்ந்தாள்; தேந புத்ரேண = அந்த மகனால்; (அ)மிததேஜஸா = வலிமைமிக்க;
யதா² = போல; வரேண தே³வாநாம் = தேவர்களிற் சிறந்த; அதி³திர் = அதிதி; வஜ்ரபாணிநா = வஜ்ரபாணியால்

மாற்றியமைத்தால்: தே³வாநாம் = தேவர்களிற் சிறந்த; வஜ்ரபாணிநா = வஜ்ரபாணியால்; அதி³திர் = அதிதி; யதா² = போல; கௌஸல்யா = கௌசல்யை; (அ)மிததேஜஸா = வலிமைமிக்க; தேந புத்ரேண = அந்த மகனால்; ஷு²ஷு²பே⁴ = ஒளிர்ந்தாள்.

பொருள்: தேவர்களிற்சிறந்த வஜ்ரபாணியால் {இந்திரனால் ஒளிர்ந்த} அதிதியைப் போலவே, கௌசல்யை வலிமைமிக்கவனான தன் மகனால் {ராமனால்} ஒளிர்ந்தாள்.(8)



ஸ ஹி ரூபோபபந்நஷ்²ச வீர்யவாநநஸூயக꞉ |
பூ⁴மாவநுபம꞉ ஸூநுர்கு³ணைர்த³ஷ²ரதோ²பம꞉ || 2-1-9

பதப்பிரிப்பு: ஸ = அவன் {ராமன்}; ஹி = உண்மையில்; ரூபோபபந்நஷ்²ச = அழகிய ரூபம் கொண்டவன்; வீர்யவாந = வீரியவான்; அநஸூயக꞉ = பொறாமையற்றவன்;
பூ⁴மௌ = பூமியில்; அநுபம꞉ = ஒப்பற்றவன்; ஸூநுர் = மகன்; கு³ணைர் = குணங்களால்; த³ஷ²ரதோ²பம꞉ = தசரதனக்கு ஒப்பானவன். 

மாற்றியமைத்தால்: ரூபோபபந்நஷ்²ச = அழகிய ரூபம் கொண்டவன்; வீர்யவாந = வீரியவான்; அநஸூயக꞉ = பொறாமையற்றவன்; ஸ = அவன் {ராமன்}; கு³ணைர் = குணங்களில்; த³ஷ²ரதோ²பம꞉ = தசரதனக்கு ஒப்பானவன்; ஹி = உண்மையில்;  பூ⁴மௌ = பூமியில்; அநுபம꞉ = ஒப்பற்றவன்; ஸூநுர் = மகன்.

பொருள்: அழகிய ரூபம் கொண்டவனும், வீரியவானும், பொறாமையற்றவனுமான அவன் {ராமன்}, குணத்தில் தசரதனைப் போன்றவனாகவும், உண்மையில் பூமியில் ஒப்பற்ற மகனாகவும் திகழ்ந்தான்.(9)



ஸ ச நித்யம் ப்ரஷா²ந்தாத்மா ம்ருது³பூர்வம் து பா⁴ஷதே |
உச்யமாநோ(அ)பி பருஷம் நோத்தரம் ப்ரதிபத்³யதே || 2-1-10

பதப்பிரிப்பு: ஸ = அவன் {ராமன்}; ச நித்யம் = எப்போதும்; ப்ரஷா²ந்தாத்மா = அமைதியான ஆன்மா {மனம்} கொண்டவன்; ம்ருது³பூர்வம் து = உண்மையில் மென்மையாக; பா⁴ஷதே = பேசுபவன்;
உச்யமாநோ(அ)பி : பிறரால் சொல்லப்படும்; பருஷம் = கொடுஞ்சொற்கள்; {அபி} = கூட; நோத்தரம் ப்ரதிபத்³யதே =  பதிலளிக்காதவன்.

மாற்றியமைத்தால்: ப்ரஷா²ந்தாத்மா = அமைதியான ஆன்மா {மனம்} கொண்டவன்; ம்ருது³பூர்வம் து = உண்மையில் மென்மையாக; ச நித்யம் = எப்போதும்; பா⁴ஷதே = பேசுபவன்; ஸ = அவன் {ராமன்}; உச்யமாநோ(அ)பி : பிறரால் சொல்லப்படும்; பருஷம் = கொடுஞ்சொற்கள்; {அபி} = கூட; நோத்தரம் ப்ரதிபத்³யதே =  பதிலளிக்காதவன்.

பொருள்: பிரசாந்தாத்மாவும் {அமைதியான மனம் கொண்டவனும்}, உண்மையில் எப்போதும் மென்மையாக {இனிமையாகப்} பேசுபவனுமான அவன் {ராமன்}, பிறரால் சொல்லப்படும் வன்சொற்களுக்குப் பதிலளிக்காதவனாகவும் {பதிலுக்குத் தானும் வன்சொற்கள் பேசாதவனாகவும்} இருந்தான்.(10)



கத²ஞ்சிது³பகாரேண க்ருதேநைகேந துஷ்யதி |
ந ஸ்மரத்யபகாராணாம் ஷ²தமப்யாத்மவத்தயா || 2-1-11

பதப்பிரிப்பு: கத²ஞ்சிது³= இருப்பினும்; (உ)பகாரேண = நல்ல காரியம்; க்ருதேநை = செய்த; கேந துஷ்யதி = மகிழ்ச்சியடைவான்
ந ஸ்மரத்ய = நினைக்க மாட்டான்; {அ}பகாராணாம் = கெட்ட காரியங்கள்; ஷ²தமப்இ = நூறாயினும்; ஆத்மவத்தயா = அவனுடைய நல்ல மனத்தால் || 2-1-11

மாற்றியமைத்தால்: ஆத்மவத்தயா = அவனுடைய நல்ல மனத்தால்; க்ருதேநை = செய்த; (உ)பகாரேண = நல்ல காரியம்; கேந துஷ்யதி = மகிழ்ச்சியடைவான்; {அ}பகாராணாம் = கெட்ட காரியங்கள்; ஷ²தமப்இ = நூறாயினும்; ந ஸ்மரத்ய = நினைக்க மாட்டான்.

பொருள்: அவனுடைய {ராமன்} நல்ல மனத்தால்,  {ஒருவன்} செய்த நல்ல காரியத்தில் மகிழ்ச்சியடைவானேயன்றி, கெட்ட காரியங்கள் நூறாயினும் {அவற்றை} நினைவில் கொள்ள மாட்டான்.(11)



ஷீ²லவ்ருத்³தை⁴ர்ஜ்ஞாநவ்ருத்³தை⁴ர்வயோவ்ருத்³தை⁴ஷ்²ச ஸஜ்ஜநை꞉ |
கத²யந்நாஸ்த வை நித்யமஸ்த்ரயோக்³யாந்தரேஷ்வபி || 2-1-12

பதப்பிரிப்பு: ஷீ²லவ்ருத்³தை⁴ர் = ஒழுக்கத்தில் முதியோரிடம்; ஜ்ஞாநவ்ருத்³தை⁴ர் = ஞானத்தில் முதியோரிடம்; வயோவ்ருத்³தை⁴ஷ்²ச = வயதில் முதியோரிடம்; ஸஜ்ஜநை꞉ =நல்லோரிடம்;
கத²யந்நாஸ்த வை = உரையாடுவான்; நித்யம் = எப்போதும்; அஸ்த்ரயோக்³யாந்தரேஷ்வபி  = அஸ்திர யோகம் {வில்வித்தை} பயிலும் இடைவேளைகளில்;

மாற்றியமைத்தால்: அஸ்த்ரயோக்³யாந்தரேஷ்வபி  = அஸ்திர யோகம் {வில்வித்தை} பயிலும் இடைவேளைகளில்; ஷீ²லவ்ருத்³தை⁴ர் = ஒழுக்கத்தில் முதியோரிடம்; ஜ்ஞாநவ்ருத்³தை⁴ர் = ஞானத்தில் முதியோரிடம்; வயோவ்ருத்³தை⁴ஷ்²ச = வயதில் முதியோரிடம்; ஸஜ்ஜநை꞉ =நல்லோரிடம்; கத²யந்நாஸ்த வை = உரையாடுவான்;

பொருள்: அஸ்திரயோகம் பயிலும்போது கிட்டும் இடைவேளைகளில், அவன் {ராமன்}, சீலத்தில் {ஒழுக்கத்தில்} பெரியோரிடமும், ஞானத்தில் பெரியோரிடமும், வயதில் பெரியோரிடமும், நல்லோரிடமும் உரையாடிக் கொண்டிருப்பான்.(12)



 பு³த்³தி⁴மாந்மது⁴ராபா⁴ஷீ பூர்வபா⁴ஷீ ப்ரியம்வத³꞉ |
வீர்யவாந்ந ச வீர்யேண மஹதா ஸ்வேந விஸ்மித꞉ || 2-1-13

பதப்பிரிப்பு: பு³த்³தி⁴மாந் = புத்திமான்; மது⁴ராபா⁴ஷீ  = இன்மொழி பேசுபவன்; பூர்வபா⁴ஷீ = உரையாடலைத் தொடங்குபவன்; ப்ரியம்வத³꞉ = அன்பு மொழி பேசுபவன்;
வீர்யவாந்ந ச = வீரியவான்; வீர்யேண = வீரத்தில்; மஹதா = பெரிதான; ஸ்வேந = தன்; விஸ்மித꞉ = அகங்காரமற்றவன்;

மாற்றியமைத்தால்: மேற்கண்டவாறே அமையும்

பொருள்: {இராமன்} புத்திமான்; மதுரபாஷை {இனிய மொழி} பேசுபவன்; உரையாடலைத் தொடங்குபவன்; அன்புமொழி பேசுபவன்; வீரியவான்; வீரமிக்கவனாக இருப்பினும் அகங்காரமற்றவன்.(13)



ந சாந்ருதகதோ² வித்³வான் வ்ருத்³தா⁴நாம் ப்ரதிபூஜக꞉ |
அநுரக்த꞉ ப்ரஜாபி⁴ஷ்²ச ப்ரஜாஷ்²சாப்யநுரஜ்யதே || 2-1-14

பதப்பிரிப்பு: ந ச = இல்லை; அந்ருதகத = பொய்ம்மை பேசுபவன்; வித்³வான் = கல்விமான்; வ்ருத்³தா⁴நாம் = பெரியோரை ப்ரதிபூஜக꞉ வழிபடத்தகுந்தவன், வணங்குபவன்;
அநுரக்த꞉ = விரும்பப்படுபவன்; ப்ரஜாபி⁴ஷ்²ச = பிரஜைகளால் / மக்களால்; ப்ரஜாஷ்²சாபி =மக்களையும்; அநுரஜ்யதே = விரும்புபவன்; 

மாற்றியமைத்தால்: அந்ருதகத = பொய்ம்மை பேசுபவன்; ந ச = இல்லை; வித்³வான் = கல்விமான்; வ்ருத்³தா⁴நாம் = பெரியோரை; ப்ரதிபூஜக꞉ வழிபடதகுந்தவனாக இருப்பினும் வணங்குபவன்; ப்ரஜாபி⁴ஷ்²ச = பிரஜைகளால் / மக்களால்; அநுரக்த꞉ = விரும்பப்படுபவன்;  ப்ரஜாஷ்²சாபி =மக்களையும்; அநுரஜ்யதே = விரும்புபவன்; 

பொருள்: {அவன்}, பொய்ம்மை பேசாதவன்; வித்வான் {கல்விமான்}; வழிபடத்தகுந்தவனாக இருப்பினும் பெரியோரை வணங்குபவன்; பிரஜைகளால் {மக்களால்} விரும்பப்படுபவன்; பிரஜைகளிடம் அன்பு கொண்டவன்.(14)



ஸாநுக்ரோஷோ² ஜிதக்ரோதோ⁴ ப்³ராஹ்மணப்ரதிபூஜக꞉ |
தீ³நாநுகம்பீ த⁴ர்மஜ்ஞோ நித்யம் ப்ரக்³ரஹவாஞ்ஷு²சி꞉ || 2-1-15

பதப்பிரிப்பு: ஸாநுக்ரோஷோ²= கருணையுள்ளவன்; ஜிதக்ரோதோ⁴ = கோபத்தை வென்றவன்; ப்³ராஹ்மணப்ரதிபூஜக꞉ = பிராணர்களை வழிபடுபவன், அவர்களால் வழிபடப்படுபவன்;
தீ³நாநுகம்பீ = தீனர்களிடம் இரக்கம் கொண்டவன்; த⁴ர்மஜ்ஞோ = தர்மத்தை அறிந்தவன்; நித்யம் ப்ரக்³ரஹவாஞ் = எப்போதும் தற்கட்டுப்பாட்டுடன் இருப்பவன்; ஷு²சி꞉ = தூய்மையானவன்;

மாற்றியமைத்தால்: மேற்கண்டவாறே அமையும்

பொருள்: கருணையுள்ளவன்; குரோதத்தை வென்றவன்; பிராமணர்களை வழிபடுபவன்; அவர்களால் வழிபடப்படுபவன்; தீனர்களிடம் {வலுவற்றவர்களிடம்} இரக்கம் கொண்டவன்; தர்மத்தை அறிந்தவன்; எப்போதும் தற்கட்டுப்பாட்டுடன் இருப்பவன்; {ஒழுக்கத்தில்} தூய்மையானவன்.(15)



குலோசிதமதி꞉ ஸ்வம் ப³ஹுமந்யதே |
மந்யதே பரயா கீர்த்யா மஹத்ஸ்வர்க³ப²லம் தத꞉ || 2-1-16

பதப்பிரிப்பு: குலோசிதமதி꞉ = குலத்திற்குத் தகுந்த மதி; க்ஷாத்ரம் த⁴ர்மம் = க்ஷத்திரிய தர்மத்திற்கு; ஸ்வம் = தன்;  ப³ஹுமந்யதே = உரிய மதிப்பளிப்பவன்; 
மந்யதே = நினைத்தான்; பரயா கீர்த்யா = பெரும்புகழையும்; மஹத் = பெரிய; ஸ்வர்க³ப²லம் தத꞉ = ஸ்வர்க்க பலத்தையும் 

மாற்றியமைத்தால்: ஸ்வம் = தன்;  குலோசிதமதி꞉ = குலத்திற்குத் தகுந்த மதி; க்ஷாத்ரம் த⁴ர்மம் = க்ஷத்திரிய தர்மத்திற்கு; ப³ஹுமந்யதே = உரிய மதிப்பளிப்பவன்; பரயா கீர்த்யா = பெரும்புகழையும்; மஹத் = பெரிய; ஸ்வர்க³ப²லம் தத꞉ = ஸ்வர்க்க பலத்தையும்; மந்யதே = நினைத்தான்;

பொருள்: தன் குலத்திற்குத் தகுந்த மதியைக் கொண்டவனும், க்ஷத்திரிய தர்மத்திற்கு உரிய மதிப்பளிப்பவனுமான அவன், இவற்றின் {மேற்கண்ட குணங்களின்} மூலம் பெருங்கீர்த்தியையும், மகத்தான ஸ்வர்க்கபலத்தையும் அடையலாம் என்று நினைத்தான் {நம்பினான்}.(16)



நாஷ்²ரேயஸி ரதோ வித்³வாந்ந விருத்³த⁴கதா²ருசி꞉ |
உத்தரோத்தரயுக்தீநாம் வக்தா வாசஸ்பதிர்யதா²|| 2-1-17

பதப்பிரிப்பு: ந = இல்லை; அஷ்²ரேயஸி = நன்மையற்றதில்; ரதோ = விருப்பம்; வித்³வாந் = அறிஞன்; ந விருத்³த⁴கதா²ருசி꞉ = தர்மத்திற்கு முரணான கதைகளில் சுவையற்றவன்;
உத்தரோத்தரயுக்தௌ = உத்திகளை வெளிப்படுத்துவதில்; வக்தா = தடையின்றி பேசுபவன்; வாசஸ்பதிர்யதா² = வாக்கின் தலைவனைப் போன்றவன்;

மாற்றியமைத்தால்: அஷ்²ரேயஸி = நன்மையற்றதில்; ரதோ = விருப்பம்; ந = இல்லை; வித்³வாந் = அறிஞன்; ந விருத்³த⁴கதா²ருசி꞉ = தர்மத்திற்கு முரணான கதைகளில் சுவையற்றவன்; வாசஸ்பதிர்யதா² = வாக்கின் தலைவனைப் போன்றவன்; உத்தரோத்தரயுக்தௌ = உத்திகளை வெளிப்படுத்துவதில்; வக்தா = தடையின்றி பேசுபவன்;

பொருள்: {அவன்} நன்மையற்ற செயல்பாடுகளில் விருப்பமில்லாதவன்; வித்வான் {அறிஞன்}; தர்மத்திற்கு முரணான கதைகளில் விருப்பமில்லாதவன்; வாசஸ்பதியை {பேச்சின் தலைவனைப்} போல உத்திகளை வெளிப்படுத்தும் வக்தன் {தடையின்றி பேசுபவன்}.(17)



அரோக³ஸ்தருணோ வாக்³மீ வபுஷ்மாந்தே³ஷ²காலவித் |
லோகே புருஷஸாரஜ்ஞஸ்ஸாது⁴ரேகோ விநிர்மித꞉ || 2-1-18

பதப்பிரிப்பு: அரோக³= பிணியற்றவன்; தருணோ = இளைஞன்; வாக்³மீ = நல்ல பேச்சாளன்;  வபுஷ்மாந் = நல்ல மேனியைக் கொண்டவன்; தே³ஷ²காலவித் = தேச காலம் {இடமும், நேரமும்} அறிந்தவன்;
லோகே =  உலகத்தில்;  புருஷஸாரஜ்ஞஸ் = மனிதர்களின் புத்தியைப் புரிந்து கொள்பவன்; ஸாது⁴ = மென்மையான மனிதன்; ஏகோ = ஒருவன் விநிர்மித꞉ = படைக்கப்பட்ட


மாற்றியமைத்தால்:  பிணியற்றவன்; தருணோ = இளைஞன்; வாக்³மீ = நல்ல பேச்சாளன்;  வபுஷ்மாந் = நல்ல மேனியைக் கொண்டவன்; தே³ஷ²காலவித் = தேச காலம் {இடமும், நேரமும்} அறிந்தவன்; புருஷஸாரஜ்ஞஸ் = மனிதர்களின் புத்தியைப் புரிந்து கொள்பவன்; லோகே =  உலகத்தில்; விநிர்மித꞉ = படைக்கப்பட்ட ; ஏகோ = ஒருவன்; ஸாது⁴ = மென்மையான மனிதன்;

பொருள்: அவன், பிணியற்ற இளைஞன்; நல்ல பேச்சாளன்; நல்ல மேனியைக் கொண்டவன்; தேச காலம் {இடமும், நேரமும்} அறிந்தவன்; மனிதர்களின் புத்தியைப் புரிந்து கொள்பவன்; இந்த உலகத்தில் படைக்கப்பட்ட சாது {மென்மையான நல்ல மனிதன்}.(18)



ஸ து ஷ்²ரேஷ்டை²ர்கு³ணைர்யுக்த꞉ ப்ரஜாநாம் பார்தி²வாத்மஜ꞉ |
ப³ஹிஷ்²சர இவ ப்ராணோ ப³பூ⁴வ கு³ணத꞉ ப்ரிய꞉ || 2-1-19

பதப்பிரிப்பு: ஸ = அவன்; ஷ்²ரேஷ்டை²ர் = சிறந்த; கு³ணைர் = குணங்களை; யுக்த꞉ = கொண்ட; ப்ரஜாநாம் = பிரஜைகளுக்கு; பார்தி²வாத்மஜ꞉ = மன்னனின் மகன்;
ப³ஹிஷ்²சர = வெளியே உலவும்; இவ ப்ராணோ = பிராணனைப் போல; ப³பூ⁴வ = இருந்தது; கு³ணத꞉ = குணங்களில்; ப்ரிய꞉ = அன்பு; 

மாற்றியமைத்தால்: பார்தி²வாத்மஜ꞉ = மன்னனின் மகன்; ஷ்²ரேஷ்டை²ர் = சிறந்த; கு³ணைர் = குணங்களை; யுக்த꞉ = கொண்ட; ஸ = அவன்; ப³ஹிஷ்²சர = வெளியே உலவும்; இவ ப்ராணோ = பிராணனைப் போல; ப³பூ⁴வ = இருந்தது; கு³ணத꞉ = குணங்களில்; ப்ரிய꞉ = அன்பு; 

பொருள்: பார்த்திவாத்மஜனும் {மன்னனின் மகனும்}, சிறந்த குணங்களைக் கொண்டவனுமான அவனை {ராமனை}, வெளியே உலவும் தங்கள் பிராணனை {உயிரைப்} போலக் கருதி பிரஜைகள் அன்பு செலுத்தினர்.(19)



ஸம்யக்³வித்³யாவ்ரதஸ்நாதோ யதா²வத்ஸாங்க³வேத³வித் |
இஷ்வஸ்த்ரே ச பிது꞉ ஷ்²ரேஷ்டோ² ப³பூ⁴வ ப⁴ரதாக்³ரஜ꞉ || 2-1-20

பதப்பிரிப்பு: ஸம்யக்³= உரிய; வித்³யாவ்ரதஸ்நாதோ = வித்தை விரத ஸ்நானம் முடித்து; யதா²வத் = பரிந்துரைக்கப்பட்ட; ஸாங்க³வேத³வித் = வேதங்களையும், வேதாங்கங்களையும் அறிந்தவன்;
இஷ்வஸ்த்ரே = வில்வித்தையில்; ச பிது꞉ = தன் பிதாவைவிட; ஷ்²ரேஷ்டோ² = சிறந்த; ப³பூ⁴வ = ஆனான்; ப⁴ரதாக்³ரஜ꞉ = பரதனின் அண்ணன்;

மாற்றியமைத்தால்: யதா²வத் = பரிந்துரைக்கப்பட்ட; ஸம்யக்³= உரிய; வித்³யாவ்ரதஸ்நாதோ = வித்தை விரத ஸ்நானம் முடித்து; ஸாங்க³வேத³வித் = வேதங்களையும், வேதாங்கங்களையும் அறிந்தவன்; ப⁴ரதாக்³ரஜ꞉ = பரதனின் அண்ணன்; இஷ்வஸ்த்ரே = வில்வித்தையில்; ச பிது꞉ = தன் பிதாவைவிட; ஷ்²ரேஷ்டோ² = சிறந்த; ப³பூ⁴வ = ஆனான்;

பொருள்: பரிந்துரைக்கப்பட்ட முறைக்கு உரிய வித்யாவிரத ஸ்நாநம் செய்தவனும் {கல்வி முடித்து உரிய முறையில் நீராடியவனும்}, வேத வேதாங்கங்களை அறிந்தவனுமான அந்த பரதாக்ரஜன் {பரதனின் அண்ணனான ராமன்}, அஸ்திரங்களில் தன் பிதாவை {தன் தந்தை தசரதனைக்} காட்டிலும் சிரேஷ்டனாக {சிறந்தவனாகத்} திகழ்ந்தான்.(20)



கல்யாணாபி⁴ஜந꞉ ஸாது⁴ரதீ³ந꞉ ஸத்யவாக்³ருஜு꞉ |
வ்ருத்³தை⁴ரபி⁴விநீதஷ்²ச த்³விஜைர்த⁴ர்மார்த²த³ர்ஷி²பி⁴꞉|| 2-1-21

பதப்பிரிப்பு: கல்யாணாபி⁴ஜந꞉ = நல்ல குலத்தில் பிறந்தவன்; ஸாது⁴ர் = மென்மையானவன் / நல்லவன்; அதீ³ந꞉ = தீனமற்றவன்; ஸத்யவாக்³= சத்திய வாக்கியம்: ருஜு꞉ = நேர்மையானவன்;
வ்ருத்³தை⁴ர் = பெரியோர்; அபி⁴விநீதஷ்²ச = உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட; த்³விஜைர் = துவிஜர்கள் / இருபிறப்பாளர்கள்; த⁴ர்மார்த²த³ர்ஷி²பி⁴꞉ = தர்ம்ம அர்த்தங்களை உணர்ந்தவர்கள்;

மாற்றியமைத்தால்: நல்ல குலத்தில் பிறந்தவன்; ஸாது⁴ர் = மென்மையானவன் / நல்லவன்; அதீ³ந꞉ = தீனமற்றவன்; ஸத்யவாக்³= சத்திய வாக்கியம்: ருஜு꞉ = நேர்மையானவன்; த⁴ர்மார்த²த³ர்ஷி²பி⁴꞉ = தர்ம்ம அர்த்தங்களை உணர்ந்தவர்கள்; வ்ருத்³தை⁴ர் = பெரியோர்; த்³விஜைர் = துவிஜர்கள் / இருபிறப்பாளர்களால்; அபி⁴விநீதஷ்²ச = உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டவன்;

பொருள்:  நல்ல குலத்தில் பிறந்தவனான அந்த சாது {மென்மையான ராமன்}, தீனமற்றவனாகவும் {வலிமைமிக்கவனாகவும்}, சத்தியவாக்கியம் சொல்லும் ஒளிவுமறைவற்ற நேர்மையாளனாகவும், தர்ம அர்த்தங்களை {அறம்பொருளை} உணர்ந்த முதிய துவிஜர்களால் {இரு பிறப்பாளர்களால்} முறையான பயிற்சி அளிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.(21)



த⁴ர்மகாமார்த²தத்த்வஜ்ஞ꞉ ஸ்ம்ருதிமாந்ப்ரதிபா⁴நவான் |
லௌகிகே ஸமயாசாரே க்ருதகல்போ விஷா²ரத³꞉ || 2-1-22

பதப்பிரிப்பு: த⁴ர்மகாமார்த²தத்த்வஜ்ஞ꞉ = தர்ம, காம, அர்த்தங்களினின் உண்மைப் பொருளை அறிந்தவன்; ஸ்ம்ருதிமாந் = நல்ல நினைவுத்திறன் கொண்டவன்; ப்ரதிபா⁴நவான் = அளவில்லா விவேகம் கொண்டவன்;
லௌகிகே = சமூகத்தில்; ஸமயாசாரே = சமயத்திற்குத் தகுந்த; க்ருதகல்போ : = காரியங்களை உண்டாக்கும்; விஷா²ரத³꞉ = திறன் கொண்டவன்;

மாற்றியமைத்தால்: த⁴ர்மகாமார்த²தத்த்வஜ்ஞ꞉ = தர்ம, காம, அர்த்தங்களினின் உண்மைப் பொருளை அறிந்தவன்; ஸ்ம்ருதிமாந் = நல்ல நினைவுத்திறன் கொண்டவன்; ப்ரதிபா⁴நவான் = அளவில்லா விவேகம் கொண்டவன்; லௌகிகே = சமூகத்தில்; ஸமயாசாரே = சமயத்திற்குத் தகுந்த; க்ருதகல்போ : = காரியங்களை உண்டாக்கும்; ஸமயாசாரே = சமயத்திற்குத் தகுந்த; க்ருதகல்போ : = காரியங்களை உண்டாக்கும்; விஷா²ரத³꞉ = திறன் கொண்டவன்;

பொருள்: தர்ம காம அர்த்தங்களின் {அறம், பொருள், இன்பங்களின்} உண்மையான வடிவை அறிந்தவனாகவும், ஸ்மிருதிமானாகவும் {நல்ல நினைவுத்திறன் கொண்டவனாகவும்}, அளவில்லா விவேகம் கொண்டவனாகவும், சமூகத்தில் சமயத்திற்குத் தகுந்த சடங்குகளை உண்டாக்குவதில் விசாரதனாகவும் {திறன் கொண்டவனாகவும், [பெரியோர் பயின்ற ஒழுக்க நெறிகளை நிலைநிறுத்துவதில் சமர்த்தனாகவும்] இருந்தான்}.(22)



நிப்⁴ருத꞉ ஸம்வ்ருதாகாரோ கு³ப்தமந்த்ர꞉ ஸஹாயவான் |
அமோக⁴க்ரோத⁴ஹர்ஷஷ்²ச த்யாக³ஸம்யமகாலவித் || 2-1-23

பதப்பிரிப்பு: நிப்⁴ருத꞉ = பணிவுள்ளவன்; ஸம்வ்ருதாகாரோ = அடக்கமானவன்; கு³ப்தமந்த்ர꞉ = தான் நினைப்பவற்றைத் தன்னுள் வைத்துக் கொள்பவன்; ஸஹாயவான் = பிறருக்கு உதவி செய்பவன்;
அமோக⁴க்ரோத⁴ஹர்ஷஷ்²ச = வீணாகாத கோபத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டவன்; த்யாக³ஸம்யமகாலவித் = கொடையளிக்கும் காலத்தை அறிந்தவன்;

மாற்றியமைத்தால்: அதே

பொருள்: {அவன்}, பணிவுள்ளவனாகவும், அடக்கமானவனாகவும், எண்ணங்களைத் தன்னுள் வைத்துக் கொள்பவனாகவும், சகாயவானாகவும் {பிறருக்கு உதவி செய்பவனாகவும்}, வீணாகாத {பயனுள்ள} கோபமும், மகிழ்ச்சியும் அடைபவனாகவும், கொடைக்கான {கொடுக்கவும், திறை வாங்கவும் உரிய} காலத்தை அறிந்தவனாகவும் இருந்தான்.(23)



த்³ருட⁴ப⁴க்தி꞉ ஸ்தி²ரப்ரஜ்ஞோ நாஸத்³க்³ராஹீ ந து³ர்வசா꞉ |
நிஸ்தந்த்³ரிரப்ரமத்தஷ்²ச ஸ்வதோ³ஷபரதோ³ஷவித் || 2-1-24

பதப்பிரிப்பு: த்³ருட⁴ப⁴க்தி꞉ = திட பக்தி கொண்டவன்; ஸ்தி²ரப்ரஜ்ஞோ = உறுதியான மனம் கொண்டவன்; அஸத்³க்³ராஹீ =பிடிவாதமற்றவன்; ந து³ர்வசா꞉ = துர்வசனம் பேசாதவன்;
நிஸ்தந்த்³ரி = சோம்பலற்றவன்; அப்ரமத்தஷ்²ச = விழிப்புடையவன்; ஸ்வதோ³ஷபரதோ³ஷவித் : பிறர் செய்யும் பிழைகளையும், தன் பிழைகளையும் அறிபவன்;

மாற்றியமைத்தால்: அதே

பொருள்: அவன் திடபக்தி கொண்டவனாகவும், உறுதியான மனம் கொண்டவனாகவும், பிடிவாதமற்றவனாகவும், துர்வசனம் பேசாதவனாகவும் {தீச்சொற்கள் சொல்லாதவனாகவும்}, சோம்பலற்றவனாகவும், விழிப்புடையவனாகவும், பிறர் செய்யும் பிழைகளை அறிவது போல் தன் பிழைகளை அறிபவனாகவும் இருந்தான்.(24)



ஷா²ஸ்த்ரஜ்ஞஷ்²ச க்ருதஜ்ஞஷ்²ச புருஷாந்தரகோவித³꞉ |
ய꞉ ப்ரக்³ரஹாநுக்³ரஹயோர்யதா²ந்யாயம் விசக்ஷண꞉ || 2-1-25

பதப்பிரிப்பு: ஷா²ஸ்த்ரஜ்ஞஷ்²ச = சாத்திரங்களை அறிந்தவன்; க்ருதஜ்ஞஷ்²ச = அவற்றின் நடைமுறையை அறிந்தவன்; புருஷாந்தரகோவித³꞉ = மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொண்டவன்;
ய꞉ ப்ரக்³ரஹாநுக்³ரஹயோர் = தண்டனையும் பாதுகாப்பும்; யதா²ந்யாயம் = நியாயப்படி; விசக்ஷண꞉ = பகுத்தாய்பவன்;

மாற்றியமைத்தால்: ஷா²ஸ்த்ரஜ்ஞஷ்²ச = சாத்திரங்களை அறிந்தவன்; க்ருதஜ்ஞஷ்²ச = அவற்றின் நடைமுறையை அறிந்தவன்; புருஷாந்தரகோவித³꞉ = மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொண்டவன்; யதா²ந்யாயம் = நியாயப்படி; யதா²ந்யாயம் = நியாயப்படி; விசக்ஷண꞉ = பகுத்தாய்பவன்;

பொருள்: அவன் சாஸ்திரமறிந்தவனாகவும், அவற்றின் நடைமுறை அறிந்தவனாகவும், மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொண்டவனாகவும், யாரைப் பாதுகாப்பது, யாரைத் தண்டிப்பது என்பதை நியாயப்படி பகுத்தாராய்பவனாகவும் இருந்தான்.(25)



ஸத்ஸங்க்³ரஹப்ரக்³ரஹணே  ஸ்தா²நவிந்நிக்³ரஹஸ்ய ச |
ஆயகர்மண்யுபாயஜ்ஞ꞉ ஸந்த்³ருஷ்டவ்யயகர்மவித் || 2-1-26

பதப்பிரிப்பு: ஸத்ஸங்க்³ரஹப்ரக்³ரஹணே =  நல்லோரை அடையாளம் கண்டு பாதுகாப்பவனாக; ஸ்தா²நவிந் = மக்களை அறிந்தவன்; நிக்³ரஹஸ்ய ச = கண்டிக்கத்தகுந்த;
ஆயகர்மண் = வருமானத்திற்கான வழிகளையும்; உபாயஜ்ஞ꞉ = அதன் வழிமுறைகளையும்; ஸந்த்³ருஷ்டவ்யயகர்மவித் = சாத்திரங்கள் குறிப்புடன் வகையில் செலவிடும் முறையையும் அறிந்தவன்;

மாற்றியமைத்தால்: அதே

பொருள்: நல்லோரை அடையாளம் கண்டு பாதுகாப்பவனாகவும், கண்டிக்கத் தகுந்தவர்களை அறிபவனாகவும், வருமானம் ஈட்டும் வழிகளையும், வழிமுறைகளையும் அறிந்தவனாகவும், சாத்திரம் குறிப்பிடும் வகையில் செலவிடும் முறையை அறிந்தவனாகவும் {தக்காரை அறிந்து கொடை அளிப்பவனாகவும்} இருந்தான்.(26)



ஷ்²ரைஷ்ட்²யம் ஷா²ஸ்த்ரஸமூஹேஷு ப்ராப்தோ வ்யாமிஷ்²ரகேஷு ச |
அர்த²த⁴ர்மௌ ச ஸங்க்³ருஹ்ய ஸுக²தந்த்ரோ ந சாலஸ꞉ || 2-1-27

பதப்பிரிப்பு: ஷ்²ரைஷ்ட்²யம் = பெரும் நிபுணத்துவம்; ஷா²ஸ்த்ரஸமூஹேஷு = சாஸ்திரங்கள் பலவற்றில்; ப்ராப்தோ = கொண்ட; வ்யாமிஷ்²ரகேஷு ச = அவற்றுக்குத் துணையானவற்றிலும்;
அர்த²த⁴ர்மௌ ச = அர்த்தமும், தர்மமும்;  ஸங்க்³ருஹ்ய = ஈட்டியபிறகு; ஸுக²தந்த்ரோ = சுகத்தில் விருப்பம்; ந சாலஸ꞉ = செயலற்றுக் கிடக்காதவன்; 

மாற்றியமைத்தால்: ஷா²ஸ்த்ரஸமூஹேஷு = சாஸ்திரங்கள் பலவற்றில்; வ்யாமிஷ்²ரகேஷு ச = அவற்றுக்குத் துணையானவற்றிலும்; ஷ்²ரைஷ்ட்²யம் = பெரும் நிபுணத்துவம்; ப்ராப்தோ = கொண்ட; அர்த²த⁴ர்மௌ ச = அர்த்தமும், தர்மமும்;  ஸங்க்³ருஹ்ய = ஈட்டியபிறகு; ஸுக²தந்த்ரோ = சுகத்தில் விருப்பம்; ந சாலஸ꞉ = செயலற்றுக் கிடக்காதவன்; 

பொருள்: சாஸ்திரங்களிலும், துணை சாஸ்திரங்களிலும் பெரும் நிபுணத்துவம் வாய்ந்தவனாகவும், பொருளும் {அர்த்தமும்}, அறமும் {தர்மமும்}  ஈட்டிய பிறகு சுகத்தில் விருப்பம் கொண்டவனாகவும், ஒருபோதும் செயலற்றுக் கிடக்காதவனாகவும் இருந்தான்.(27)



வைஹாரிகாணாம் ஷி²ல்பாநாம் விஜ்ஞாதார்த²விபா⁴க³வித் |
ஆரோஹே விநயே சைவ யுக்தோ வாரணவாஜிநாம் || 2-1-28

பதப்பிரிப்பு: வைஹாரிகாணாம் = கேளிக்கைகளுக்குப் பயன்படும்; ஷி²ல்பாநாம் = நுண்கலைகள்; விஜ்ஞாதார்த²விபா⁴க³வித் = செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் முறையை அறிந்தவன்;
ஆரோஹே = செலுத்துபவன்; விநயே சைவ = பழக்குவதிலும்; யுக்தோ = திறன்மிக்கவன்; வாரணவாஜிநாம் = யானைகளையும், குதிரைகளையும்;

மாற்றியமைத்தால்: விஜ்ஞாதார்த²விபா⁴க³வித் = செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் முறையை அறிந்தவன்; வைஹாரிகாணாம் = கேளிக்கைகளுக்குப் பயன்படும்; ஷி²ல்பாநாம் = நுண்கலைகள்; வாரணவாஜிநாம் = யானைகளையும், குதிரைகளையும்; ஆரோஹே = செலுத்துபவன்; விநயே சைவ = பழக்குவதிலும்; யுக்தோ = திறன்மிக்கவன்;

பொருள்: அவன் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பது எவ்வாறு என்பதையும், கேளிக்கைக்கான நுண்கலைகளையும் {இசைக்கருவிகள் இசைப்பது, ஓவியம் வரைவது முதலிய கலைகளை} நன்கறிந்தவனாகவும், வாரணம் {யானை}, வாஜிகளை {குதிரைகளைப்} பயிற்றுவித்துத் திறம்படச் செலுத்துபவனாகவும் இருந்தான்.(28)



த⁴நுர்வேத³விதா³ம் ஷ்²ரேஷ்டோ² லோகே(அ)திரத²ஸம்மத꞉ |
அபி⁴யாதா ப்ரஹர்தா ச ஸேநாநயவிஷா²ரத³꞉ || 2-1-29

பதப்பிரிப்பு: த⁴நுர்வேத³விதா³ம் = தனுர்வேதமறிந்தவர்களில்; ஷ்²ரேஷ்டோ² = சிறந்தவன்; லோகே = உலகத்தின்; (அ)திரத²ஸம்மத꞉ = வில்வித்தை அறிந்தவர்களால் பாராட்டப்படுபவன்;
அபி⁴யாதா= பகைவர்களை எதிர்ப்பவன்; ப்ரஹர்தா ச = அவர்களைக் கொல்பவன்; ஸேநாநயவிஷா²ரத³꞉ = சேனைகளை முறையாக வழிநடத்தும் திறன் கொண்டவன்;

மாற்றியமைத்தால்: அதே

பொருள்: தனுர்வேதமறிந்தவர்களில் சிரேஷ்டனாக {சிறந்தவனாக}, உலகத்தின் அதிரதர்களால் பாராட்டப்படுபவனாகவும், பகைவரை எதிர்த்துக் கொல்பவனாகவும், சேனைகளை முறையாக வழிநடத்தும் {அணிவகுப்பில்} திறன் கொண்டவனாகவும்  இருந்தான்.(29)



அப்ரத்⁴ருஷ்யஷ்²ச ஸங்க்³ராமே க்ருத்³தை⁴ரபி ஸுராஸுரை꞉ |
அநஸூயோ ஜிதக்ரோதோ⁴ ந த்³ருப்தோ ந ச மத்ஸரீ |
ந சாவமந்தா பூ⁴தாநாம் ந ச காலவஷா²நுக³꞉ || 2-1-30

பதப்பிரிப்பு: அப்ரத்⁴ருஷ்ய = வீழ்த்தப்பட முடியாதவன்; ஸங்க்³ராமே = போரில்; க்ருத்³தை⁴ரபி = கோபமடைந்த; ஸுராஸுரை꞉ = தேவர்கள், அசுரர்களாலும்
அநஸூயோ = பொறாமையற்றவன்; ஜிதக்ரோதோ⁴ = குரோதத்தை வென்றவன்; ந த்³ருப்தோ = ஆணவமற்றவன்; ந ச மத்ஸரீ = பகையற்றவன்;
ந சாவமந்தா = அவமதிக்காதவன்; பூ⁴தாநாம் = உயிரினங்களை; ந ச காலவஷா²நுக³꞉ = காலத்தின் வசப்படாதவன்; 

மாற்றியமைத்தால்: க்ருத்³தை⁴ரபி = கோபமடைந்த; ஸுராஸுரை꞉ = தேவர்கள், அசுரர்களாலும்; ஸங்க்³ராமே = போரில்; அப்ரத்⁴ருஷ்ய = வீழ்த்தப்பட முடியாதவன்; அநஸூயோ = பொறாமையற்றவன்; ஜிதக்ரோதோ⁴ = குரோதத்தை வென்றவன்; ந த்³ருப்தோ = ஆணவமற்றவன்; ந ச மத்ஸரீ = பகையற்றவன்; பூ⁴தாநாம் = உயிரினங்களை; ந சாவமந்தா = அவமதிக்காதவன்; ந ச காலவஷா²நுக³꞉ = காலத்தின் வசப்படாதவன்; 

பொருள்: அவன், கோபமடைந்த ஸுராஸுரர்களாலும் {தேவாசுரர்களாலும்} போரில் வீழ்த்தப்பட முடியாதவனாகவும், அநசூயனாகவும் {பொறாமையற்றவனாகவும்}, ஜிதக்ரோதனாகவும் {கோபத்தை வென்றவனாகவும்}, ஆணவமற்றவனாகவும், பகையற்றவனாகவும், எந்த உயிரினத்தையும் அவமதிக்காதவனாகவும், காலத்திற்கு வசப்படாதவனாகவும் இருந்தான்.(30)



ஏவம் ஷ்²ரேஷ்ட²கு³ணைர்யுக்த꞉ ப்ரஜாநாம் பார்தி²வாத்மஜ꞉ |
ஸம்மதஸ்த்ரிஷு லோகேஷு வஸுதா⁴யா꞉ க்ஷமாகு³ணை꞉ || 2-1-31
பு³த்³த்⁴யா ப்³ருஹஸ்பதேஸ்துல்யோ வீர்யேணாபி ஷ²சீபதே꞉ |

பதப்பிரிப்பு: ஏவம் ஷ்²ரேஷ்ட²கு³ணைர் = இந்த சிரேஷ்டகுணங்களை {சிறந்த குணங்களைக்} கொண்ட; யுக்த꞉ நல்லவன்; ப்ரஜாநாம்: பிரஜைகளுக்கு; பார்தி²வாத்மஜ꞉ = பார்த்திவாத்மஜன் {மன்னனின் மகன்}; 
ஸம்மதஸ் = ஏற்புடையவன்; த்ரிஷு லோகேஷு = மூவுலகங்களுக்கும்; வஸுதா⁴யா꞉ = வசுதைக்கும் {பூமிக்கும்};  க்ஷமாகு³ணை꞉ = பொறுமை குணத்தில்;
பு³த்³த்⁴யா = புத்தியில்; ப்³ருஹஸ்பதேஸ் = பிருஹஸ்பதிக்கும்; துல்யோ வீர்யேணாபி ² = துல்லியமான வீரத்தில்; சசீபதே꞉ = சசீபதிக்கும்

மாற்றியமைத்தால்: ஏவம் ஷ்²ரேஷ்ட²கு³ணைர் = இந்த சிரேஷ்டகுணங்களை {சிறந்த குணங்களைக்} கொண்ட; பார்தி²வாத்மஜ꞉ = பார்த்திவாத்மஜன் {மன்னனின் மகன்}; ப்ரஜாநாம்: பிரஜைகளுக்கு; யுக்த꞉ நல்லவன்; த்ரிஷு லோகேஷு = மூவுலகங்களுக்கும்; ஸம்மதஸ் = ஏற்புடையவன்; க்ஷமாகு³ணை꞉ = பொறுமை குணத்தில்; வஸுதா⁴யா꞉ = வசுதைக்கும் {பூமிக்கும்};  ³த்³த்⁴யா = புத்தியில்; ப்³ருஹஸ்பதேஸ் = பிருஹஸ்பதிக்கும்; துல்யோ வீர்யேணாபி ² = துல்லியமான வீரத்தில்; சசீபதே꞉ = சசீபதிக்கும்

பொருள்: இந்த சிரேஷ்டகுணங்களை {சிறந்த குணங்களைக்} கொண்ட அந்தப் பார்த்திவாத்மஜன் {மன்னனின் மகன்}, பிரஜைகளுக்கு {மக்களுக்கு} நல்லவனாகவும், மூவுலகங்களுக்கும் ஏற்புடையவனாகவும் இருந்தான். அவன், பொறுமை குணத்தில் வசுதைக்கும் {பூமிக்கும்}, புத்தியில் பிருஹஸ்பதிக்கும், துல்லியமான வீரியத்தில் சதிபதிக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பானவனாக இருந்தான்.(31,32அ)



ததா² ஸர்வப்ரஜாகாந்தை꞉ ப்ரீதிஸஞ்ஜநநை꞉ பிது꞉ || 2-1-32
கு³ணைர்விருருசே ராமோ தீ³ப்த꞉ ஸூர்ய இவாம்ஷு²பி⁴꞉ |

பதப்பிரிப்பு: ததா² = அதைப்போல; ஸர்வப்ரஜாகாந்தை꞉ = மக்கள் அனைவரின் விருப்பத்திற்குரிய; ப்ரீதிஸஞ்ஜநநை꞉ = மகிழ்ச்சியின் பிறப்பிடம்; பிது꞉ = பிதா; 
கு³ணைர் = குணங்களால்; விருருசே = ஒளிர்ந்து கொண்டிருந்தான்; ராமோ = ராமன்; தீ³ப்த꞉ = ஒளிரும்; ஸூர்ய இவ = சூரியனைப் போல; அம்ஷு²பி⁴꞉ = கதிர்களால்;

மாற்றியமைத்தால்: அம்ஷு²பி⁴꞉ = கதிர்களால்; தீ³ப்த꞉ = ஒளிரும்; ஸூர்ய இவ = சூரியனைப் போல; ஸர்வப்ரஜாகாந்தை꞉ = மக்கள் அனைவரின் விருப்பத்திற்குரிய; பிது꞉ = பிதா; ப்ரீதிஸஞ்ஜநநை꞉ = மகிழ்ச்சியின் பிறப்பிடம்; கு³ணைர் = குணங்களால்; ராமோ = ராமன்; விருருசே = ஒளிர்ந்து கொண்டிருந்தான்;

பொருள்: கதிர்களால் ஒளிரும் சூரியனைப் போலவே மக்கள் அனைவரின் விருப்பத்திற்குரியவையும், பிதாவின் {தந்தையான தசரதனின்} மகிழ்ச்சிக்குப் பிறப்பிடமாகத் திகழ்ந்தவையுமான குணங்களால் ராமன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32ஆ,33அ)



தமேவம் வ்ரத்தஸம்பந்நமப்ரத்⁴ருஷ்யபராக்ரமம் || 2-1-33
லோகபாலோபமம் நாத²மகாமயத மேதி³நீ |

பதப்பிரிப்பு: ஏவம் வ்ரத்தஸம்பந்நம் = விரதக் கட்டுப்பாடுள்ளவனாகவும், அப்ரத்⁴ருஷ்யபராக்ரமம் =வீழ்த்தப்பட முடியாத பராக்கிரமம் கொண்டவன்;
லோகபாலோபமம் = லோகபாலர்களுக்கு ஒப்பான; தம் = அவனே; நாத²ம் = நாதனாக; அகாமயத = விரும்பினாள்; மேதி³நீ = பூமாதேவி;

மாற்றியமைத்தால்: ஏவம் வ்ரத்தஸம்பந்நம் = விரதக் கட்டுப்பாடுள்ளவனாகவும், அப்ரத்⁴ருஷ்யபராக்ரமம் =வீழ்த்தப்பட முடியாத பராக்கிரமம் கொண்டவன்;
லோகபாலோபமம் = லோகபாலர்களுக்கு ஒப்பான; தம் = அவன்; நாத²ம் = நாதனாக; நாத²ம் = நாதனாக; அகாமயத = விரும்பினாள்; மேதி³நீ = பூமாதேவி; அகாமயத = விரும்பினாள்; 

பொருள்: விரதக் கட்டுப்பாடுள்ளவனாகவும், வீழ்த்தப்பட முடியாத பராக்கிரமம் கொண்டவனாகவும், லோகபாலர்களுக்கு ஒப்பானவனாகவும் இருந்த அவனே {ராமனே} தன் நாதனாக வேண்டுமென மேதினி {பூமாதேவி} விரும்பினாள்.(33ஆ,34அ)



ஏதைஸ்து ப³ஹுபி⁴ர்யுக்தம் கு³ணைரநுபமை꞉ ஸுதம் || 2-1-34
த்³ருஷ்ட்வா த³ஷ²ரதோ² ராஜா சக்ரே சிந்தாம் பரந்தப꞉ |

பதப்பிரிப்பு: ஏதைஸ்து = இந்த;  ப³ஹுபி⁴ர் = பலவற்றை; யுக்தம் = கண்டு; கு³ணைர்= குணங்கள்; அநுபமை꞉ = ஒப்பற்ற; ஸுதம் = மகனிடம்;
த்³ருஷ்ட்வா = கண்ட; த³ஷ²ரதோ²= தசரதன்; ராஜா = ராஜா; சக்ரே = வளர்த்தான்; சிந்தாம் = சிந்தனையை; பரந்தப꞉ = பகைவரை அழிப்பவன்; 

மாற்றியமைத்தால்: பரந்தப꞉ = பகைவரை அழிப்பவன்; ராஜா = ராஜா; த³ஷ²ரதோ²= தசரதன்; ஸுதம் = மகனிடம்; அநுபமை꞉ = ஒப்பற்ற; கு³ணைர்= குணங்கள்; ப³ஹுபி⁴ர் = பலவற்றை; யுக்தம் = கண்டு; சிந்தாம் = சிந்தனையை; சக்ரே = வளர்த்தான்;

பொருள்: பரந்தபனான {பகைவரை அழிப்பவனான} ராஜா {தசரதன்}, தன் மகனிடம் {ராமனிடம்} இவ்வாறான ஒப்பற்ற குணங்கள் பலவற்றையும் கண்டு சிந்திக்கத் தொடங்கினான்.(34ஆ,35அ)



அத² ராஜ்ஞோ ப³பூ⁴வைவம் வ்ருத்³த⁴ஸ்ய சிரஜீவிந꞉ || 2-1-35
ப்ரீதிரேஷா கத²ம் ராமோ ராஜா ஸ்யாந்மயி ஜீவதி |

பதப்பிரிப்பு: அத² = பின்னர்; ராஜ்ஞோ = ராஜா தசரதன்; ப³பூ⁴வைவம் = இவ்வாறு ஆனான்; வ்ருத்³த⁴ஸ்ய = முதிர்ந்தவன்; சிரஜீவிந꞉ = நீண்ட ஆயுள் கொண்டவன்;
ப்ரீதிரேஷா = இந்த மகிழ்ச்சி; கத²ம் =ஆவதை; ராமோ = ராமன்; ராஜா = ராஜாவாகும்; ஸ்யாந்மயி = எவ்வாறு; ஜீவதி = ஜீவித்திருக்கும்போதே;

மாற்றியமைத்தால்: அத² = பின்னர்; சிரஜீவிந꞉ = நீண்ட ஆயுள் கொண்டவன்; வ்ருத்³த⁴ஸ்ய = முதிர்ந்தவன்; ராஜ்ஞோ = ராஜா தசரதன்; ஜீவதி = ஜீவித்திருக்கும்போதே; ராமோ = ராமன்; ராஜா = ராஜாவாகும்; கத²ம் =ஆவதை; ப்ரீதிரேஷா = இந்த மகிழ்ச்சி; ஸ்யாந்மயி = எவ்வாறு {மகிழ்வேனா};

பொருள்: பிறகு, சிரஞ்சீவியும், முதிர்ந்தவனுமான அந்த ராஜா {தசரதன்}, "நான் ஜீவித்திருக்கும்போதே ராமன் ராஜனாகி இவ்வாறு மகிழ்வேனா?" {என்று நினைத்தான்}.(35ஆ,36அ)



ஏஷா ஹ்யஸ்ய பரா ப்ரீதிர்ஹ்ருதி³ ஸம்பரிவர்ததே 
கதா³ நாம ஸுதம் த்³ரக்ஷ்யாம்யபி⁴ஷிக்தமஹம் ப்ரியம் |

பதப்பிரிப்பு: ஏஷா = விருப்பம்; அஸ்ய = அவனது; பரா ப்ரீதிர் = பரம மகிழ்ச்சி; ஹ்ருதி³ = இதயத்தில்; ஸம்பரிவர்ததே = உண்மையில் எழுந்தது;
கதா³ நாம = எப்போது; ஸுதம் = மகன்; த்³ரக்ஷ்யாமி = காண்போம்; அபி⁴ஷிக்தம் = மகுடம் சூடும்; அஹம் ப்ரியம் = தன் அன்பு; 

மாற்றியமைத்தால்: தன் அன்பு; ஸுதம் = மகன்; அபி⁴ஷிக்தம் = மகுடம் சூடும்; கதா³ நாம = எப்போது; த்³ரக்ஷ்யாமி = காண்போம்; பரா ப்ரீதிர் = பரம மகிழ்ச்சி; ஏஷா = விருப்பம்; அஸ்ய = அவனது; ஹ்ருதி³ = இதயத்தில்; ஸம்பரிவர்ததே = உண்மையில் எழுந்தது;

பொருள்: தன் பிரிய சுதனின் அபிஷேகத்தை {அன்பு மகனின் பட்டாபிஷேகத்தை} எப்போது காண்போம் என்ற பரம மகிழ்ச்சியான விருப்பம் அவனது இதயத்தில் உண்மையில் எழுந்தது.(36ஆ,37அ)



வ்ருத்³தி⁴காமோ ஹி லோகஸ்ய ஸர்வபூ⁴தாநுகம்பந꞉ || 2-1-37
மத்த꞉ ப்ரியதரோ லோகே பர்ஜந்ய இவ வ்ருஷ்டிமான் |

பதப்பிரிப்பு: வ்ருத்³தி⁴காமோ = வளர்ச்சியை விரும்புபவன்; ஹி லோகஸ்ய = உண்மையில் உலகத்தின்; ஸர்வபூ⁴தாநுகம்பந꞉= வாழும் உயிரினங்கள் அனைத்திடம் அன்பு பாராட்டுபவன்;
மத்த꞉ = என்னைவிட; ப்ரியதரோ = விரும்பப்படுபவன்; லோகே = இவ்வுலகில்; பர்ஜந்ய இவ = பர்ஜன்யனைப் போல்; வ்ருஷ்டிமான் = மழையைக் கொண்ட;

மாற்றியமைத்தால்: லோகே = இவ்வுலகில்; மத்த꞉ = என்னைவிட; ப்ரியதரோ = விரும்பப்படுபவன்; வ்ருஷ்டிமான் = மழையைக் கொண்ட; பர்ஜந்ய இவ = பர்ஜன்யனைப் போல்; ஹி லோகஸ்ய = உண்மையில் உலகத்தின்; வ்ருத்³தி⁴காமோ = வளர்ச்சியை விரும்புபவன்; ஸர்வபூ⁴தாநுகம்பந꞉= வாழும் உயிரினங்கள் அனைத்திடம் அன்பு பாராட்டுபவன்;

பொருள்: இந்த உலகில் என்னைவிட அதிகம் விரும்பப்படுபனாகவும், மழையைக் கொண்ட பர்ஜன்யனைப் போல, உண்மையில் உலகத்தின் வளர்ச்சியை விரும்புகிறவனாகவும், வாழும் உயிரினங்கள் அனைத்திடம் அன்பு பாராட்டுபவனுமாகவும் இருக்கிறான்.(37ஆ,38அ)



யமஷ²க்ரஸமோ வீர்யே ப்³ருஹஸ்பதிஸமோ மதௌ || 2-1-38
மஹீத⁴ரஸமோ த்⁴ருத்யாம் மத்தஷ்²ச கு³ணவத்தர꞉ |

பதப்பிரிப்பு: யமஷ²க்ரஸமோ = யமனுக்கும், சக்ரனுக்கும் சமமானவன்; வீர்யே = வீரத்தில்; ப்³ருஹஸ்பதிஸமோ = பிருஹஸ்பதிக்கு இணையானவன்; மதௌ = மதியில்;
மஹீத⁴ரஸமோ = மலைக்கு இணையானவன்; த்⁴ருத்யாம் = துணிவில்; மத்தஷ்²ச = என்னிலும்; கு³ணவத்தர꞉ குணங்களில் மேலானவான்

மாற்றியமைத்தால்: வீர்யே = வீரத்தில்; யமஷ²க்ரஸமோ = யமனுக்கும், சக்ரனுக்கும் சமமானவன்; மதௌ = மதியில்; ப்³ருஹஸ்பதிஸமோ = பிருஹஸ்பதிக்கு இணையானவன்; த்⁴ருத்யாம் = துணிவில்; மஹீத⁴ரஸமோ = மலைக்கு இணையானவன்; கு³ணவத்தர꞉ குணங்களில் மேலானவான்; மத்தஷ்²ச = என்னிலும்;

பொருள்: வீரத்தில் யமனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இணையானவனாகவும், மதியில் {அறிவில்} பிருஹஸ்பதிக்கு இணையானவனும், துணிவில் மலைக்கு இணையானவனுமாக இருக்கிறான். குணங்களில் என்னிலும் மேலானவனாகவும் திகழ்கிறான்.(38ஆ,39அ)



மஹீமஹமிமாம் க்ருத்ஸ்நாமதி⁴திஷ்ட²ந்தமாத்மஜம் || 2-1-39
அநேந வயஸா த்³ருஷ்ட்வா யதா² ஸ்வர்க³மவாப்நுயாம் |

பதப்பிரிப்பு: மஹீ = பூமி; அஹம் = என்; இமாம் = இந்த; க்ருத்ஸ்நாம் = முழுவதும்; அதி⁴திஷ்ட²ந்தம் = ஆள்வதை; ஆத்மஜம் = மகன்; 
அநேந வயஸா = இந்த வயதில்; த்³ருஷ்ட்வா = கண்ட பிறகு; யதா² = எவ்வாறு; ஸ்வர்க³ம் = சுவர்க்கம்; அவாப்நுயாம் = அடைவேன்;

மாற்றியமைத்தால்: இமாம் = இந்த; மஹீ = பூமி; க்ருத்ஸ்நாம் = முழுவதும்; அஹம் = என்; ஆத்மஜம் = மகன்; அதி⁴திஷ்ட²ந்தம் = ஆள்வதை; அநேந வயஸா = இந்த வயதில்; த்³ருஷ்ட்வா = கண்ட பிறகு; யதா² = எவ்வாறு; ஸ்வர்க³ம் = சுவர்க்கம்; அவாப்நுயாம் = அடைவேன்;

பொருள்:  இந்த மஹீ {பூமி} முழுவதையும் என் மகன் ஆள்வதை இந்த வயதில் கண்டு சுவர்க்கத்தை அடைவேனா?" {என்றும் நினைத்தான்}.(39ஆ,40அ) 



இத்யேதைர்விவிதை⁴ஸ்தைஸ்தைரந்யபார்தி²வது³ர்லபை⁴꞉ || 2-1-40
ஷி²ஷ்டைரபரிமேயைஷ்²ச லோகே லோகோத்தரைர்கு³ணை꞉ |
தம் ஸமீக்ஷ்ய மஹாராஜோ யுக்தம் ஸமுதி³தை꞉ ஷு²பை⁴꞉ || 2-1-41
நிஷ்²சித்ய ஸசிவை꞉ ஸார்த⁴ம் யுவராஜமமந்யத |

பதப்பிரிப்பு: இதி = இவ்வாறு; ஏதைர் = இந்த; விவிதை⁴ஸ் = பல்வேறு; தைஸ்தைர் = அந்தந்த; அந்யபார்தி²வ = அந்நிய பார்த்திபர்களுக்கு; து³ர்லபை⁴꞉ = வாய்க்காத
ஷி²ஷ்டைர் = எஞ்சிய; அபரிமேயை = அளவிடப்பட முடியாத; அஷ்²ச லோகே = உலகில்; லோகோத்தரைர் = உலகில் சிறந்த; கு³ணை꞉ = குணங்களும்;
தம் = அவனிம் {ராமனிடம்}; ஸமீக்ஷ்ய = முழுமையாகக் கண்ட; மஹாராஜோ = மஹாராஜன் {தசரதன்}; யுக்தம் = கொண்ட; ஸமுதி³தை꞉ = திரண்ட;  ஷு²பை⁴꞉ = மங்கலமான; 
நிஷ்²சித்ய = நிச்சயித்து; ஸசிவை꞉ ஸார்த⁴ம் = ஆலோசகர்களுடன் கூடி; யுவராஜம் = யுவராஜனாக்க; அமந்யத = துணிந்தான்;

மாற்றியமைத்தால்: இத்யே = இவ்வாறே; மஹாராஜோ = மஹாராஜன் {தசரதன்}; தைஸ்தைர் = அந்தந்த; அந்யபார்தி²வ = அந்நிய பார்த்திபர்களுக்கு; து³ர்லபை⁴꞉ = வாய்க்காத; ஏதைர் = இந்த; விவிதை⁴ஸ் = பல்வேறு; லோகே = உலகில்; அபரிமேயை = அளவிடப்பட முடியாத; லோகோத்தரைர் = உலகில் எஞ்சிய; ஷு²பை⁴꞉ = மங்கலமான; கு³ணை꞉ = குணங்களும்; தம் = அவனிம் {ராமனிடம்}; ஸமுதி³தை꞉ = திரண்டிருப்பதை; ஸமீக்ஷ்ய = முழுமையாகக் கண்ட; நிஷ்²சித்ய = நிச்சயித்து; ஸசிவை꞉ ஸார்த⁴ம் = ஆலோசகர்களுடன் கூடி; யுவராஜம் = யுவராஜனாக; அமந்யத = துணிந்தான்;

பொருள்: இவ்வாறே அந்த மஹாராஜன் {தசரதன்}, அந்நிய பார்த்திபர்களுக்கு {வேறு மன்னர்களுக்கு} வாய்க்காத இந்தப் பல்வேறு குணங்களும், உலகிற் சிறந்தவர்களாலும் அளவிடப்பட முடியாத இன்னும் சிறந்த பல மங்கல குணங்களும் அவனிடம் திரண்டிருப்பதை முழுமையாகக் கண்டு நிச்சயித்து, ஆலோசகர்களுடன் கூடி யுவராஜனாக்கத் துணிந்தான்.(40ஆ,41,42அ)



தி³வ்யந்தரிக்ஷே பூ⁴மௌ ச கோ⁴ரமுத்பாதஜம் ப⁴யம் 
ஸஞ்சசக்ஷே(அ)த² மேதா⁴வீ ஷ²ரீரே சாத்மநோ ஜராம்

பதப்பிரிப்பு: தி³வி = {சுவர்க்கத்தில்}; அந்தரிக்ஷே = அந்தரத்தில் {வானத்தில்}; பூ⁴மௌ ச = பூமியில்; கோ⁴ரம் = கோரமான {பயங்கரமான}; உத்பாதஜம் = தீய சகுனங்கள்; ப⁴யம் = அஞ்சி
ஸஞ்சசக்ஷே = உணர்ந்து {கண்டு}; (அ)த² = அதன்பிறகு; மேதா⁴வீ = மேதாவி; ஷ²ரீரே = உடலில்; ஆத்மநோ = தன்; ஜராம் = முதுமை; 

மாற்றியமைத்தால்: (அ)த² = அதன்பிறகு; மேதா⁴வீ = மேதாவி; தி³வி = {சுவர்க்கத்தில்}; அந்தரிக்ஷே = அந்தரத்தில் {வானத்தில்}; பூ⁴மௌ ச = பூமியில்; உத்பாதஜம் = தீய சகுனங்கள்; ஆத்மநோ = தன்; ஷ²ரீரே = உடலில்; ஜராம் = முதுமை; கோ⁴ரம் = கோரமான {பயங்கரமான}; ப⁴யம் = அஞ்சி

பொருள்: அதன்பிறகு அந்த மேதாவி {தசரதன்}, சொர்க்கத்திலும், அந்தரத்திலும் {வானத்திலும்}, பூமியிலும் உண்டாகும் உத்பாதங்களையும் {தீய சகுனங்களையும்}, தன் சரீரம் அடையும் முதுமையையும் உணர்ந்து கோரமான பயத்தை அடைந்து {பேரச்சம் கொண்டு},(42ஆ,43அ)



பூர்ணசந்த்³ராநநஸ்யாத² ஷோ²காபநுத³மாத்மந꞉ || 2-1-43
லோகே ராமஸ்ய பு³பு³தே⁴ ஸம்ப்ரியத்வம் மஹாத்மந꞉ |

பதப்பிரிப்பு: பூர்ணசந்த்³ராநநஸ்ய =  = பூர்ண சந்திரனைப் போன்ற முகம்; அத² = மேலும்; ஷோ²காபநுத³ம் = சோகம் விலகும்; ஆத்மந꞉ = தன்;
லோகே = உலகத்தில்; ராமஸ்ய = ராமனால்; பு³பு³தே⁴ = அறிந்தான்; ஸம்ப்ரியத்வம் = விரும்பப்படுபவன்; மஹாத்மந꞉ = மஹாத்மா;

மாற்றியமைத்தால்: பூர்ணசந்த்³ராநநஸ்ய =  = பூர்ண சந்திரனைப் போன்ற முகம்; மஹாத்மந꞉ = மஹாத்மா; லோகே = உலகத்தில்; ஸம்ப்ரியத்வம் = விரும்பப்படுபவன்; ராமஸ்ய = ராமனால்; ஆத்மந꞉ = தன்; ஷோ²காபநுத³ம் = சோகம் விலகும்; பு³பு³தே⁴ = அறிந்தான்;

பொருள்: பூர்ணசந்திரனைப் போன்ற முகம் படைத்தவனும், மஹாத்மாவும், உலகத்தால் விரும்பப்படுபவனுமான ராமனால் தன் சோகம் விலகுமென அறிந்து,(43ஆ,44அ)



ஆத்மநஷ்²ச ப்ரஜாநாம் ச ஷ்²ரேயஸே ச ப்ரியேண ச || 2-1-44
ப்ராப்தகாலேந த⁴ர்மாத்மா ப⁴க்த்யா த்வரிதவான் ந்ருப꞉ |

பதப்பிரிப்பு: ஆத்மநஷ்²ச = தனக்கும்; ப்ரஜாநாம் ச = பிரஜைகளுக்கும்; ஷ்²ரேயஸே ச = நன்மையை; ப்ரியேண ச = விரும்பி; 
ப்ராப்தகாலேந = காலங்கனிந்ததென; த⁴ர்மாத்மா = தர்மாத்மா; ப⁴க்த்யா = கருதி; த்வரிதவான் = விரைந்து; ந்ருப꞉ = மன்னன்;

மாற்றியமைத்தால்: த⁴ர்மாத்மா = தர்மாத்மா; ந்ருப꞉ = மன்னன்; ஆத்மநஷ்²ச = தனக்கும்; ப்ரஜாநாம் ச = பிரஜைகளுக்கும்; ஷ்²ரேயஸே ச = நன்மையை; ப்ரியேண ச = விரும்பி; ப்ராப்தகாலேந = காலங்கனிந்ததென; ப⁴க்த்யா = கருதி; த்வரிதவான் = விரைந்து;

பொருள்: தர்மாத்மாவான அந்த நிருபன் {தசரதன்}, தனக்கும், பிரஜைகளுக்கும் நன்மையை விரும்பி, அதற்கான காலமும் கனிந்துவிட்டதைக் கருதி விரைந்து,(44ஆ,45அ)



நாநாநக³ரவாஸ்தவ்யான் ப்ருத²க்³ஜாநபதா³நபி || 2-1-45
ஸமாநிநாய மேதி³ந்யா꞉ ப்ரதா⁴நாந்ப்ருதி²வீபதீன் |

பதப்பிரிப்பு: நாநாநக³ரவாஸ்தவ்யான் = பல்வேறு நகரங்களில் வசிப்பவர்களுக்கும்; ப்ருத²க்³ = தனித்தனியாக; ஜாநபதா³நபி = ஜானபதங்களில் {கிராமங்களில்} வசிப்பவர்களுக்கும்;
ஸமாநிநாய = அழைப்பு விடுத்தான்; மேதி³ந்யா꞉ = நிலங்களின்; ப்ரதா⁴நாந் = பிரதான அதிகாரிகளுக்கும்; ப்ருதி²வீபதீன் = பூமியின் தலைவர்களுக்கும்; 

மாற்றியமைத்தால்: நாநாநக³ரவாஸ்தவ்யான் = பல்வேறு நகரங்களில் வசிப்பவர்களுக்கும்; ஜாநபதா³நபி = ஜானபதங்களில் {கிராமங்களில்} வசிப்பவர்களுக்கும்; மேதி³ந்யா꞉ = நிலங்களின்; ப்ரதா⁴நாந் = பிரதான அதிகாரிகளுக்கும்; ப்ருதி²வீபதீன் = பூமியின் தலைவர்களுக்கும்; ப்ருத²க்³ = தனித்தனியாக; ஸமாநிநாய = அழைப்பு விடுத்தான்;

பொருள்: பல்வேறு நகரங்களிலும், ஜானபதங்களிலும் {கிராமங்களிலும்} வசிப்பவர்களுக்கும், மேதினியில் பிரதானமானவர்களுக்கும், பிருத்வீபதிகளுக்கும் {பூமியின் தலைவர்களுக்கும்} தனித்தனியாக அழைப்பு விடுத்தான்.(45ஆ,46அ)



ந து கேகயராஜாநம் ஜநகம் வா நராதி⁴ப꞉ || 2-1-46
த்வரயா சாநயாமாஸ பஷ்²சாத்தௌ ஷ்²ரோஷ்யத꞉ ப்ரியம் |

பதப்பிரிப்பு: ந து = இல்லை; கேகயராஜாநம் = கேகய ராஜனையும்; ஜநகம் வா = ஜனகனையும்; நராதி⁴ப꞉ = மனிதர்களின் தலைவன்; 
த்வரயா = அவசரமடைந்த; ஆநயாமாஸ = அழைக்க; பஷ்²சாத் பிறகு; தௌ = இருவரும்; ஷ்²ரோஷ்யத꞉ = கேட்கட்டும்; ப்ரியம் = நல்லது

மாற்றியமைத்தால்: த்வரயா = அவசரமடைந்த; நராதி⁴ப꞉ = மனிதர்களின் தலைவன்; கேகயராஜாநம் = கேகய ராஜன்; ஜநகம் வா = ஜனகன்; தௌ = இருவரும்; ப்ரியம் = நல்லது; பஷ்²சாத் பிறகு ஷ்²ரோஷ்யத꞉ = கேட்கட்டும்; ஆநயாமாஸ = அழைக்க; ந து = இல்லை;

பொருள்: அவசரமடைந்த அந்த நராதிபன் {மனிதர்களின் தலைவன்}, கேகயராஜனும் {பரதனின் தாய்மாமனான யுதாஜித்தும்}, ஜனகனும் {வருவதற்குக் காலதாமதமாகும் என்பதால்} இந்த நல்ல செய்தியை பிறகு அறிந்து கொள்ளட்டும் என்று நினைத்து அவர்களை அழைக்காதிருந்தான்.(46ஆ,47அ)



தாந்வேஷ்²மநாநாப⁴ரணைர்யதா²ர்ஹம் ப்ரதிபூஜிதான் || 2-1-47
த³த³ர்ஷா²லங்க்ருதோ ராஜா ப்ரஜாபதிரிவ ப்ரஜா꞉ | 

பதப்பிரிப்பு: தாந் = அனைவருக்கும்; வேஷ்²மநாநாப⁴ரணைர் = வசிப்பிடங்களும், பல்வேறு ஆபரணங்களும் கொடுத்து; யதா²ர்ஹம் = தகுந்த; ப்ரதிபூஜிதான் = வந்தவர்களை மதிப்புடன் அழைத்து; 
த³த³ர்ஷா²= பார்த்துக் கொண்டான்; அலங்க்ருதோ = அலங்கரித்துக் கொண்டு; ராஜா = ராஜா; ப்ரஜாபதிர் = பிரஜாபதி போல்; இவ ப்ரஜா꞉ = பிரஜைகளை; 

மாற்றியமைத்தால்: ராஜா = ராஜா; ப்ரதிபூஜிதான் = அங்கு வந்தவர்களை மதிப்புடன் அழைத்து; தாந் = அனைவருக்கும்; யதா²ர்ஹம் = தகுந்த; வேஷ்²மநாநாப⁴ரணைர் = வசிப்பிடங்களும், பல்வேறு ஆபரணங்களும் கொடுத்து; அலங்க்ருதோ = அலங்கரித்துக் கொண்டு; இவ ப்ரஜா꞉ = பிரஜைகளை கவனிக்கும்; ப்ரஜாபதிர் = பிரஜாபதி போல்; த³த³ர்ஷா²= பார்த்துக் கொண்டான்;

பொருள்: அந்த ராஜா, அங்கு வந்தவர்களை மதிப்புடன் அழைத்து தகுந்த வசிப்பிடங்களையும், ஆபரணங்களையும் அளித்து, தன்னையும் அலங்கரித்துக் கொண்டு, பிரஜைகளை {பிள்ளைகளைக்} கவனிக்கும் பிரஜாபதி போல {பிரம்மனைப் போல} அவர்களைப் பார்த்துக் கொண்டான்.(47ஆ,48அ)



அதோ²பவிஷ்டே ந்ருபதௌ தஸ்மிந்பரப³லார்த³நே || 2-1-48
தத꞉ ப்ரவிவிஷு²꞉ ஷே²ஷா ராஜாநோ லோகஸம்மதா꞉ |

பதப்பிரிப்பு: அத²= அதன்பிறகு; உபவிஷ்டே = அமர்ந்த; ந்ருபதௌ = மன்னன்; தஸ்மிந் = அவ்விடத்தில்; பரப³லார்த³நே = பகைவரின் படையை அழிக்கும்;
தத꞉ = பிறகு; ப்ரவிவிஷு²꞉ = பிரவேசித்தனர்; ஷே²ஷா = எஞ்சிய; ராஜாநோ = ராஜர்கள்; லோகஸம்மதா꞉ = உலகத்தால் விரும்பப்படும்;

மாற்றியமைத்தால்: அத²= அதன்பிறகு; லோகஸம்மதா꞉ = உலகத்தால் விரும்பப்படும்;  ஷே²ஷா = எஞ்சிய; ராஜாநோ = ராஜர்கள்; பரப³லார்த³நே = பகைவரின் படையை அழிக்கும்; ந்ருபதௌ = மன்னன்; உபவிஷ்டே =அமர்ந்த; தத꞉ = பிறகு; தஸ்மிந் = அவ்விடத்தில்; ப்ரவிவிஷு²꞉ = பிரவேசித்தனர்;

பொருள்:  அதன் பிறகு, உலகத்தால் விரும்பப்படுபவர்களான எஞ்சிய ராஜர்கள், பகைவரின் படையை அழிப்பவனான அந்த நிருபதி {தசரத ராஜன்} அமர்ந்ததும் அவ்விடத்தில் பிரவேசித்தனர்.(48ஆ,49அ)



அத² ராஜவிதீர்ணேஷு விவிதே⁴ஷ்வாஸநேஷு ச || 2-1-49
ராஜாநமேவாபி⁴முகா² நிஷேது³ர்நியதா ந்ருபா꞉ |

பதப்பிரிப்பு: அத² = பிறகு; ராஜவிதீர்ணேஷு = ராஜனால் ஒதுக்கப்பட்ட; விவிதே⁴ஷ் = பல்வேறு; ஆஸநேஷு ச = ஆசனங்களில்
ராஜாநமேவ = ராஜனையே; அபி⁴முகா² = பார்த்தவாறு; நிஷேது³ர் = அமர்ந்தனர்; நியதா = விதிப்படி; ந்ருபா꞉ = மன்னர்கள்

மாற்றியமைத்தால்: அத² = பிறகு; ந்ருபா꞉ = மன்னர்கள்; ராஜவிதீர்ணேஷு = ராஜனால் ஒதுக்கப்பட்ட; விவிதே⁴ஷ் = பல்வேறு; ஆஸநேஷு ச = ஆசனங்களில்; ராஜாநமேவ = ராஜனையே; அபி⁴முகா² = பார்த்தவாறு; நியதா = விதிப்படி; நிஷேது³ர் = அமர்ந்தனர்;

பொருள்: பிறகு, அந்த நிருபர்கள், ராஜனால் ஒதுக்கப்பட்ட பல்வேறு ஆசனங்களில் அந்த ராஜனைப் பார்த்தவாறு விதிப்படி அமர்ந்தனர்.(49ஆ,50அ)



ஸ லப்³த⁴மாநைர்விநயாந்விதைர்ந்ருபை꞉ |
புராலயைர்ஜாநபதை³ஷ்²ச மாநவை꞉ |
உபோபவிஷ்டைர்ந்ருபதிர்வ்ருதோ ப³பௌ⁴ |
ஸஹஸ்ரசக்ஷுர்ப⁴க³வாநிவாமரை꞉ || 2-1-50

பதப்பிரிப்பு: லப்³த⁴மாநைர் = மதிக்கப்பட்டவர்கள்; விநயாந்விதைர் = எளிமையானவர்கள்; ந்ருபை꞉ = மன்னர்களால்;
புராலயைர் = நகரத்தார்; ஜாநபதை³= ஜானபதத்தார் {கிராமத்தார்}; ஷ்²ச மாநவை = குடிமக்கள்꞉ |
உபோபவிஷ்டைர் = நெருக்கமாக அமர்ந்திருந்தவர்கள்; ந்ருபதிர் = நிருபதி; வ்ருதோ = சூழப்பட்டு; ப³பௌ⁴ = ஒளிர்ந்தான்;
ஸஹஸ்ரசக்ஷுர் ப⁴க³வாநிவ = பகவான் ஸஹஸ்ரசக்ஷுவைப் போல; அமரை꞉ = அமரர்களால்;

மாற்றியமைத்தால்: லப்³த⁴மாநைர் = மதிக்கப்பட்டவர்கள்; விநயாந்விதைர் = எளிமையானவர்கள்; உபோபவிஷ்டைர் = நெருக்கமாக அமர்ந்திருந்தவர்கள்; ந்ருபை꞉ = மன்னர்களால்; புராலயைர் = நகரத்தாரால்; ஜாநபதை³= ஜானபதத்தாரால் {கிராமத்தாரால்}; மாநவை = குடிமக்களால்; வ்ருதோ = சூழப்பட்ட; ந்ருபதிர் = நிருபதி; அமரை꞉ = அமரர்களால் சூழப்பட்ட; ஸஹஸ்ரசக்ஷுர் ப⁴க³வாநிவ = பகவான் ஸஹஸ்ரசக்ஷுவைப் போல; ப³பௌ⁴ = ஒளிர்ந்தான்;

பொருள்: மதிக்கப்படுபவர்களும், எளிமையானவர்களும், நெருக்கமாக அமர்ந்தவர்களுமான அந்த நிருபர்களாலும், நகர மக்களாலும், ஜானபதர்களாலும் சூழப்பட்டிருந்த அந்த நிருபதி {தசரதன்}, அமரர்களால் சூழப்பட்ட பகவான் ஸஹஸ்ரசக்ஷுவை {ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(50ஆ,இ,ஈ,உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 001ல் உள்ள சுலோகங்கள் : 50

Previous | Sanskrit | TamilOnly | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை