Thursday, 23 October 2025

புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் – 122 (28)

Set to depart | Yuddha-Kanda-Sarga-122 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் ஆணையின் பேரில் வானரர்கள் அனைவருக்கும் வெகுமதியளித்த விபீஷணன்; அனைவருடன் சேர்ந்து ராமனும், லக்ஷ்மணனும், சீதையும் அயோத்திக்குப் புறப்படுதல்...

Pushpaga Vimana flying in the sky

விபீஷணன், "அந்தப் புஷ்பக விமானம், புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கிறது" என்று அருகில் நின்று கொண்டிருந்த ராமனிடம் சொன்னான்.(1) கைகள் கூப்பிய வினீதனான {பணிவுடன் கூடிய} அந்த ராக்ஷசேஷ்வரன் {விபீஷணன்}, "{இன்னும்} நான் செய்ய வேண்டியதென்ன?" என்று ராகவனிடம் அவசரமாகக் கூறினான்.(2) 

மஹாதேஜஸ்வியான ராமன், சிந்திந்துவிட்டு, அருகில் லக்ஷ்மணன் கேட்டுக் கொண்டிருக்கையில், சினேஹத்தை முன்னிட்டுக் கொண்டு இதைச் சொன்னான்:(3) "விபீஷணா, பெரும் யத்னங்களுடன் கூடிய கர்மங்களைச் செய்த இந்த வனேசரர்களை {காடுலாவிகளான குரங்குகளையும், கரடிகளையும்}, ரத்னங்களாலும், விதவிதமான அர்த்தங்களாலும் {பொருள்களாலும்} பூஜிப்பாயாக.(4) இராக்ஷசேஷ்வரா, புறமுதுகிடாமல், பிராண பயத்தைக் கைவிட்டு, மகிழ்ச்சியாகப் போரிட்ட இவர்களுடன் சேர்ந்தே {இவர்களின் துணையுடனேயே} உன்னால் லங்கை வெல்லப்பட்டது.(5) சர்வ வனௌகசர்களும் தங்கள் கர்மங்களை நிறைவேற்றி இருக்கின்றனர். இவர்களுக்கு தனத்தாலும், ரத்னங்களாலும் வெகுமதியளிப்பாயாக.(6) கிருதஜ்ஞதனான {செய்நன்றி மறக்காதவனான} உன்னால் எப்படிப்பட்ட ஆனந்த மனத்துடன் இவ்வாறு சம்மானிக்கப்படுவார்களோ {வெகுமதி அளிக்கப்படுகிறார்களோ}, அப்படிப்பட்ட நிறைவையே ஹரியூதபர்களும் அடைவார்கள்.(7) தியாகி, ஆதரிப்பவன், இரக்கமுள்ளவன், ஜிதேந்திரியன் {புலன்களை வென்றவன்} என்று {நினைத்து} உன்னிடம் அனைவரும் வருவார்கள். எனவே உனக்கு இதைச் சொல்கிறேன்.(8) நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா}, விரும்பத்தக்க குணங்கள் யாவும் இல்லாதவனும், போரில் அழிவை ஏற்படுத்தியவனுமான அந்த நிருபதியை {மன்னனை}, சேனை பெருங்கலக்கத்தில் விட்டுச் செல்லும்" {என்றான் ராமன்}.(9)

இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த சர்வ வானரர்களுக்கும் ரத்தினங்கள், அர்த்தங்கள் {செல்வங்கள்} ஆகியவற்றை விநியோகித்து அவர்களைப் பூஜித்தான்.(10) அப்போது, அந்த ஹரியூதபர்கள் ரத்தினங்கள், அர்த்தங்கள் ஆகியவற்றால் பூஜிக்கப்படுவதை ராமன் கண்டான். பிறகு அந்த உத்தம விமானத்தில் ஏறினான்.(11) தனுஷ்மானும், விக்ராந்தனுமான பிராதா லக்ஷ்மணனுடன் {வில்லேந்தியவனும், வல்லமையுள்ளவனும்,, உடன்பிறந்தவனுமான லக்ஷ்மணனுடன் விமானத்தில் ஏறி}, புகழ்பெற்றவளும், லஜ்ஜையுடன் {நாணத்துடன்} கூடியவளுமான வைதேஹியை அங்கத்தில் {தன் மடியில்} ஏற்றிக் கொண்டான்.(12)

சர்வ வானரர்களையும், விபீஷணனையும், மஹாவீரியனான சுக்ரீவனையும் பூஜித்த அந்தக் காகுத்ஸ்தன், விமானத்தில் இருந்தபடியே {பின்வருமாறு} கூறினான்:(13) "வானரரிஷபர்களே {வானரர்களில் காளைகளே}, இந்த மித்ரகாரியம் {நண்பனின் காரியம்} உங்களால் நிறைவேறியது. என்னால் அனுமதிக்கப்படும் நீங்கள் அனைவரும் யதேஷ்டமாக {தாங்கள் விரும்பிய இடங்களுக்குச்} செல்வீராக.(14) சுக்ரீவா, சினேகத்துடன் கூடிய நண்பனால் ஹிதமான எந்தக் காரியங்கள் செய்யப்பட வேண்டுமோ, அந்த சர்வமும் அதர்மத்தில் அச்சம் கொண்ட உன்னால் செய்யப்பட்டன.{15} நீ உன் சைனியம் சூழ உடனே கிஷ்கிந்தைக்குத் திரும்பிச் செல்வாயாக.(15,16அ) விபீஷணா, என்னால் தத்தம் செய்யப்பட்ட உன் ராஜ்ஜியமான லங்கையில் வசித்திருப்பாயாக. இந்திரன் உள்ளிட்ட திவௌகசர்களும் {தேவலோகவாசிகளாலும்} கூட உன்னைத் தாக்க வல்லவரல்லர்.(16ஆ,17அ) என் பிதாவின் ராஜதானியான {தலைநகரான} அயோத்யைக்கு நான் செல்கிறேன். நீங்கள் அனைவரும் விடைகொடுத்து, {நான் செல்ல} என்னை அனுமதிக்க விரும்புகிறேன்" {என்றான் ராமன்}.(17ஆ,18அ)

இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஹரீந்திரர்களும் {குரங்குத் தலைவர்களும்}, அதேபோல ஹரயர்களும் {குரங்குகளும்}, ராக்ஷசன் விபீஷணனும் என அனைவரும் தங்கள் கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வருமாறு} சொன்னார்கள்:(18ஆ,19அ) "அயோத்யைக்குச் செல்ல நாங்கள்  விரும்புகிறோம். எங்கள் அனைவரையும் உம்முடன் அழைத்துச் செல்வீராக. வனங்களிலும், உபவனங்களிலும் நாங்கள் மகிழ்ச்சியுடன் திரிவோம்.(19ஆ,20அ) நிருபசத்தமரே {மன்னர்களில் சிறந்தவரே}, உம்மை அபிஷேக அர்த்தராக {பட்டாபிஷேகம் செய்யப்பட்டவராகக்} கண்டு, கௌசல்யையை வணங்கிவிட்டு, விரைவில் எங்கள் கிருஹங்களுக்கு நாங்கள் திரும்புவோம்" {என்றனர்}.(20ஆ,21அ)

Rama welcoming Sugreeva into the Pushpaga Vimana

வானரர்களும், விபீஷணனும் இவ்வாறு சொன்னதும், தர்மாத்மாவான அந்த ராமன், வானரர்களிடமும், சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும் {பின்வருமாறு} கூறினான்:(21ஆ,22அ) "நட்புஜனங்களுடனும், உங்கள் அனைவருடனும் நான் {அயோத்தியா} புரீயை அடைந்தால், பிரீதியடைவேன். பிரியத்திலும் பிரியத்திற்குரியது {என்னால்} அடையப்படும்.(22ஆ,23அ) சுக்ரீவா, வானரர்கள் சஹிதனாக சீக்கிரம் விமானத்தில் ஏறுவாயாக. இராக்ஷசேந்திரா, விபீஷணா, அமைச்சர்களுடன் நீயும் ஏறுவாயாக" {என்றான் ராமன்}[1].(23ஆ,24அ)

[1] அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன்
தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மை
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு
இனிதின் ஏறுமின் விமானம் என்று இராகவன் இசைத்தான்

-  கம்பராமாயணம் 10107ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்

பொருள்: அப்படிப்பட்ட சேனையோடு {குரங்குப் படையோடு} அரசனை {சுக்ரீவனை}, அனிலன் தனையன் {வாயு மைந்தன் ஹனுமான்} முதலிய பெரும் படைத்தலைவர்களை, கட்டப்பட்ட நீண்ட வாரைக் கொண்ட கழல் அணிந்த இலங்கையர் மன்னனை {விபீஷணனை}, "இங்கு வந்து இனிமையாக விமானத்தில் ஏறி அமருங்கள்} என்று ராகவன் {ராமன்} சொன்னான்.

அப்போது, வானரர்கள் சகிதனான அந்த சுக்ரீவனும், அமைச்சர்களுடன் கூடிய விபீஷணனும் திவ்யமான புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} பெரும் மகிழ்ச்சியுடன் ஏறினார்கள்.(24ஆ,25அ) அவர்கள் அனைவரும் ஏறியபோது, கௌபேரனின் பரமாசனம் {குபேரனின் உயர்ந்த இருக்கையான அந்தப் புஷ்பக விமானம்}, ராகவனின் அனுமதியுடன் ஆகாயத்தில் எழுந்தது.(25ஆ,26அ) ஹம்சத்துடன் {அன்னப்பறவையுடன்} கூடியதும், ககனத்தில் {வானத்தில்} பிரகாசிப்பதுமான அந்த விமானத்தில், நிறைவான மகிழ்ச்சியுடன் கூடிய ராமன், குபேரனைப் போல ஒளிர்ந்தான்.(26ஆ,27அ) மஹாபலவான்களான வானரர்கள், ரிக்ஷர்கள், ராக்ஷசர்கள் அனைவரும் அந்த திவ்யமான இடத்தில் வசதியாகவும், சுகமாகவும் அமர்ந்தனர்.(27ஆ,28)

யுத்த காண்டம் சர்க்கம் – 122ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை