Saturday, 24 February 2024

ஸ்வப்னமோ? | சுந்தர காண்டம் சர்க்கம் - 32 (14)

Is it a dream? | Sundara-Kanda-Sarga-32 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கனவா, நிஜமா என்று அதிர்ந்த சீதை; ஹனுமான் பேசிய சொற்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று தேவர்களிடம் வேண்டியது...

Seetha shocked seeing Hanuman

அப்போது {சீதை}, சாகைகளின் அந்தரத்தில் {கிளைகளின் இடுக்கில்} மறைந்திருந்தவனும், வெள்ளை ஆடை உடுத்தியிருந்தவனும், மின்னல் கூட்டம் போல் பிங்கள {மஞ்சள்} வர்ணம் கொண்டவனுமான அவனை {ஹனுமானைக்} கண்டு அதிர்ந்தாள்.(1) முற்றும் மலர்ந்த அசோக மலர்த்திரள் போல் ஒளிர்ந்தவனும், புடம்போட்ட தங்கத்திற்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், பணிவுள்ளவனும், பிரியவாதியுமான கபியை {இன்சொல் பேசும் குரங்கான ஹனுமானை} அங்கே அவள் {சீதை} கண்டாள்.(2) 

பரம ஆச்சரியம் அடைந்த மைதிலி, {பின்வருமாறு} சிந்தித்தாள், “அஹோ, வானரத்தின் இந்த ரூபம் அணுகமுடியாததாகவும், பயங்கரமாகவும், காண்பதற்கரிதாகவும் இருக்கிறதே” {என்று சிந்தித்தாள்}.{3} 

இவ்வாறு நினைத்து, மீண்டும் அவள் கலக்கமடைந்தாள்.(3,4அ) பயத்தால் கலங்கிய சீதை, கருணைக்குரிய வகையில் {பின்வருமாறு} புலம்பினாள்,{4ஆ} ”ராமரே, ராமரே” என்றும், லக்ஷ்மணரே” என்றும் {புலம்பினாள்}. துக்கத்தால் பீடிக்கப்பட்ட பாமினியான {அழகிய பெண்ணான} சீதை, பலவாறாக மந்த ஸ்வரத்தில் {மெல்லிய குரலில்} மந்தமாக அழுது கொண்டிருந்தாள்.(4ஆ,5)

பணிவுடன் அணுகும் அந்த ஹரிசிரேஷ்டனை {குரங்குகளில் சிறந்த ஹனுமானைக்} கண்டவளும், பாமினியுமான அந்த மைதிலி, “இது ஸ்வப்னம் {கனவு}” என்று சிந்தையில் நினைத்தாள்.(6) அங்கேயும், இங்கேயும் நோக்கியவள், கோணலான வாயைக் கொண்டவனும், சாகைமிருகேந்திரன் {கிளைகளில் வாழும் விலங்குகளின் தலைவனான சுக்ரீவன்} சொன்னதைச் செய்பவனும், பிங்கர்களில் {குரங்குகளில்} முதன்மையானவனும், பெரிதும் மதிக்கத் தகுந்தவனும், புத்திமான்களில் சிறந்தவனுமான  ஹனுமானைக் கண்டாள்.(7) 

அவனைக் கண்டதும், உயிரில்லாதவளைப் போல நனவைப் பெரிதும் இழந்த அந்த சீதை, நீண்ட நேரத்திற்குப் பிறகு நனவுமீண்டு, கண்களை அகல விரித்து, மீண்டும் {பின்வருமாறு} சிந்தித்தாள்:(8) “இன்று, சாஸ்திரகணங்களால் {பல சாஸ்திரங்களால்} விலக்கப்பட்ட, விகாரமான சாகைமிருகம் என்னால் ஸ்வப்னத்தில் காணப்பட்டது {கிளையில் வாழும் விலங்கான குரங்கைக் கனவில் நான் கண்டேன்}. இலக்ஷ்மணருடன் கூடிய ராமருக்கும், என் பிதாவான ஜனகராஜருக்கும் ஸ்வஸ்தி {நலமுண்டாகட்டும்}.(9) சோகத்தாலும், துக்கத்தாலும் பீடிக்கப்பட்ட எனக்கு நித்திரையில்லை என்பதால் இது ஸ்வப்னமாகக்கூட {கனவாகக்கூட} இருக்காது. பூர்ண இந்துவுக்கு {சந்திரனுக்கு} ஒப்பான முகம் கொண்டவரை {ராமரைப்} பிரிந்த எனக்கு சுகமே கிடையாது.(10)

அவரை மட்டுமே புத்தியில் சிந்தித்து, “ராமரே, ராமரே” என்று சதா என் குரலில் சொல்லிக் கொண்டிருப்பதால், அந்தக் கதையையே காண்கிறேன்; அதன் அர்த்தத்தையே கேட்கிறேன்.(11) இன்று அவரைக் குறித்த எண்ணத்தால் பீடிக்கப்பட்டவளாக, சர்வபாவத்துடன் {முழுமனத்துடன்} சதா அவரையே சிந்தித்துக் கொண்டிருப்பதால், அவ்விதமாகவே {அவரைப்பற்றியே} நான் காண்கிறேன். அவ்விதமாகவே {அவரைப்பற்றியே} கேட்கிறேன்.(12) மனோரதம் {என் மனத்தில் இருக்கும் விருப்பம்} நிறைவேறும் என்று நினைக்கிறேன். அதேபோலவே, புத்தியிலும் தர்க்கம் செய்கிறேன். அதற்கு ரூபம் இருக்காதே. இது ரூபத்துடன் வெளிப்பட்டு என்னைக் குறித்துப் பேசுவதன் காரணமென்ன?(13) 

வஜ்ரியுடன் கூடிய வாசஸ்பதியையும், ஸ்வயம்புவையும், ஹுதாசனனையும் {இந்திரனுடன் கூடிய பிருஹஸ்பதியையும், பிரம்மனையும், அக்னியையும்} வணங்குகிறேன். இந்த வானரனால் என்முன்பு பேசப்பட்டவை எவையோ, அவை அப்படியே ஆகட்டும். வேறு வகையிலாகவேண்டாம்” {என்றாள் சீதை}.(14) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 32ல் உள்ள சுலோகங்கள்: 14


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை