Monday 30 October 2023

வெள்ளி மலை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 49 (22)

Silver Mountain | Kishkindha-Kanda-Sarga-49 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வெள்ளிமலையில் சீதையை தேடத் துருப்புகளை ஊக்குவித்த அங்கதன்...

Angada consulting with monkeys, in siver mountain
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உருவாக்கப்பட்டப் படங்களின் தொகுப்பு

பின்னர், மிகக் களைத்தவனும், பெரும் ஞானம் கொண்டவனுமான அங்கதன், சர்வ வானரர்களுக்கும் ஆறுதல் கூறும் வகையில், மெதுவாக இந்த வாசகங்களைச் சொன்னான்:(1) “வனங்கள், கிரிகள், நதிகள், துர்கங்கள் {கடப்பதற்கரிய இடங்கள்}, கஹனங்களிலும் {ஆழமான பகுதிகளிலும்}, தரீகள் {மலைப்பிளவுகள் / பிலங்கள்}, குகைகள் ஆகியவற்றின் எல்லை வரை நாம் தேடினோம்.{2} நாம் அனைவரும் சேர்ந்து ஆங்காங்கே தேடியும், ஜானகியைக் காணமுடியவில்லை. அதேபோல, சீதையை அபகரித்துத் தீச்செயல்புரிந்த ராக்ஷசனையும் {ராவணனையும்} காணமுடியவில்லை.(2,3) நமக்கு மஹாகாலம் {நீண்ட காலம்} கடந்துவிட்டது. சுக்ரீவரோ, உக்கிர சாசனர் {கொடுந்தண்டனைகளை விதிக்கக்கூடியவர்}. எனவே, நீங்கள் அனைவரும் சேர்ந்து எங்கும் தேடுவீராக.(4) 

எதிர்வரும் சோம்பல், சோகம், நித்திரை ஆகியவற்றைக் கைவிட்டு, ஜனகாத்மஜையான சீதையைக் காணும் வரையில் தேடுவீராக.(5) அநிர்வேதமும் {இரக்கமற்ற கவனமும் / விழிப்புணர்வும்}, தாக்ஷ்யமும் {புத்திக்கூர்மையும்}, வெல்ல முடியாத மனசும், காரிய சித்திக்கான {காரியம் நிறைவேறுவதற்கான} காரணங்களெனச் சொல்லப்படுகின்றன என்பதனாலேயே இதை நான் சொல்கிறேன்.(6) வன ஓகஸர்களே {காட்டில் வசிப்பவர்களான குரங்குகளே}, இப்போதுங்கூட கடப்பதற்கரிய இந்த வனத்தில் தேடுவீராக. கேதத்தை {துக்கத்தை / இளைப்பைக்} கைவிடுவீராக. மீண்டும் இந்த வனம் முழுவதும் தேடுவீராக.(7) செயல்படுபவன், அந்தக் கர்மத்தின் {செயலின்} பலனை அவசியம் காண்பான். மறுபுறம், நிர்வேதத்தை அடைந்து {கவனத்தை இழந்து, கண்களை} மூடிக் கொள்வது நமக்குப் பொறுத்துக் கொள்ளத் தக்கதல்ல.(8) வானரர்களே, ராஜா சுக்ரீவர் குரோதரும் {கோபக்காரரும்}, கடுமையாக தண்டிப்பவருமாவார். அவருக்கும், மஹாத்மாவான ராமருக்கும் {நாம்} சதா பயப்பட வேண்டும்.(9) வானரர்களே, உங்கள் ஹிதத்தின் அர்த்தத்திற்காகவே {நலனுக்காகவே} இதைச் சொல்கிறேன். நீங்கள் விரும்பினால் செயல்படுவீராக. அல்லது, எது நம் அனைவராலும் பொறுத்துக் கொள்ளக்கூடியதோ, அதைச் சொல்வீராக” {என்றான் அங்கதன்}.(10)

அங்கதனின் சொற்களைக் கேட்ட கந்தமாதனன், தாகம், சிரமம் ஆகியவற்றுடன், தெளிவற்ற சொற்களில் {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(11) “அங்கதன் உங்களிடம் சொன்ன வாக்கியங்கள் நமக்குத் தகுந்தவை; ஹிதமானவை {நன்மை தருபவை}; அனுகூலமானவை. அவன் சொன்னவாறே செயல்படுவோம்.(12) சைலங்கள், குகைகள் ஆகியவற்றிலும், அதே போல பாறைப்பகுதிகளிலும், சூனியமான கானகங்களிலும், கிரிபிரஸ்ரவணங்களிலும் {மலையருவிகளிலும்} மீண்டும் தேடுவோம்.(13) நாம் அனைவரும் சேர்ந்து, மஹாத்மாவான சுக்ரீவர் குறிப்பிட்ட கிரி துர்கங்கள் அனைத்திலும் தேடுவோம்” {என்றான் கந்தமாதனன்}.(14)

அப்போது, மீண்டும் எழுந்த மஹாபலமிக்க வானரர்கள், விந்தியத்தின் காடுகளால் நிறைந்த தக்ஷிண {தெற்குத்} திசையில் தேடினர்.(15) அந்த வானரர்கள், கூதிர் கால மேகத்திற்கு ஒப்பானதும், சிருங்கவந்தமும் {சிகரங்கள் நிறைந்ததும்}, தரீவந்தமுமான {மலைப்பிளவுகள் / பிலங்கள் நிறைந்ததுமான} ஸ்ரீமத் ரஜத பர்வதத்தில் {வெள்ளி மலையில்} ஏறினர்.{16} சீதையைக் காண விரும்பிய அந்த ஹரிவரர்கள் {குரங்குகளில் சிறந்தவர்கள்}, அங்கே இருந்த ரம்மியமான லோத்ர வனத்திலும் {வெள்ளொலுத்தி காட்டிலும்}, சப்தபர்ண வனங்களிலும் {ஏழிலைப்பாலைக் காடுகளிலும் / வாழைத் தோப்புகளிலும்} தேடினர்.(16,17) விபுல விக்ரமர்களான அவர்கள் {பேராற்றல் வாய்ந்த அந்த வானரர்கள்}, அதன் {வெள்ளி மலையின்} உச்சியில் ஏறியும், ராமனின் பிரிய மஹிஷியான வைதேஹியை {விருப்பத்திற்குரிய பட்டத்துராணியான சீதையைக்} காணாமல் களைப்படைந்தனர்.(18) இவ்வாறு தேடிக் கொண்டிருந்த அந்த ஹரயர்கள் {குரங்குகள்}, அந்த சைலத்தில் {மலையில்} இருந்த பல்வேறு குகைகளையும் கண்டு, முழுமையாகத் தேடிய பிறகும், விழிப்புடனேயே இறங்கினர்.(19)

பிறகு, பூமிக்கு இறங்கியதும், களைப்படைந்து, மனம் நொந்தவர்களாக அங்கேயே ஒரு முஹூர்த்தம் தாமதித்து, ஒரு விருக்ஷத்தின் அடியில் {ஒரு மரத்தடியில்} தஞ்சம் புகுந்தனர்.(20) ஒரு முஹூர்த்தம் இளைப்பாறிவிட்டு, கிஞ்சித்தும் களைப்பற்றவர்களாகி, மீண்டும் இவ்வாறே முழுமையாக தக்ஷிண {தெற்குத்} திசையில் தேடப் புறப்பட்டனர்.(21) ஹனுமன் உள்ளிட்ட பிரமுகர்களும், பிலவகரிஷபர்களுமான அவர்கள் {தாவிச் செல்லும் குரங்குகளிற் சிறந்தவர்களுமான அந்த வானரர்கள்}, விந்தியத்தையே தொடக்கமாகக் கொண்டு, புறப்பட்டுச் சென்று, எங்கும் {சீதையைத்} தேடிக் கொண்டே இருந்தனர்.(22)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 49ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை