Sunday, 8 June 2025

இராவணனின் புத்திர விசனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 072 (18)

Ravana's sorrow for his son | Yuddha-Kanda-Sarga-072 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டு சோகத்தில் மூழ்கிய ராவணன், லங்கையின் பாதுகாப்பு குறித்த கவலையில், ராட்சசர்களை கவனமாக இருக்குமாறு கட்டளையிட்டது...

Ravana in a sorrow

மஹாத்மாவான லக்ஷ்மணன்[1] அதிகாயனைக் கொன்றதைக் கேட்ட பதற்றத்தினால் ராஜா {ராவணன்} இந்த வசனத்தைக் கூறினான்:(1) "பொறுத்துக் கொள்ள முடியாதவரும் {கோபக்காரரும்}, தன்வியுமான {வில்லுடன் கூடியவருமான} தூம்ராக்ஷர், சஸ்திரங்களில் நிபுணர்களான அகம்பனர், பிரஹஸ்தர், அதேபோல கும்பகர்ணன்{2} ஆகிய இவர்கள் மஹாபலவான்கள்; யுத்தத்தை விரும்பும் வீர ராக்ஷசர்கள்; பரசைனியங்களை {பகைவரின் படைகளை} வெல்பவர்கள்; பகைவர்களால் ஒருபோதும் வெல்லப்படாதவர்கள்.{3} களைப்பின்றி ஏராளமான கர்மங்களைச் செய்யும் வீரனான ராமன், பேருடல் படைத்தவர்களும், நானாவித அஸ்திரங்களில் விசாரதர்களுமான {அந்த} ராக்ஷசர்களையுங்கூட கொன்றுவிட்டான்.{4} மஹாத்மாக்களும், சூரர்களுமான வேறு பலரையும் அழித்துவிட்டான்.{2-5அ) 

[1] செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இந்த சர்க்கம் கிடையாது.

பலத்திற்காகவும், வீரியத்திற்காவும் புகழ்பெற்ற என் புத்திரன் இந்திரஜித், {தனக்கு} வரமாக தத்தம் செய்யப்பட்ட கோரமான சரங்களால் பிராதாக்கள் {உடன்பிறந்தோரான ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் பந்தனம் செய்தான் {கட்டிப்போட்டான்}.(5ஆ,6அ) மஹாபலவான்களான சர்வ ஸுராஸுரர்களுக்கும் {தேவர்கள், அசுரர்கள் அனைவருக்கும்} எது சாத்தியமில்லாததோ,{6ஆ} யக்ஷ, கந்தர்வ, பன்னகர்களுக்கும் {எது} கோரமானதோ, அந்த பந்தனத்திலிருந்து விடுபடுவது, பிரபாவத்தாலோ? மாயையாலோ? மோஹத்தாலோ {மந்திர வஞ்சனையாலோ}? நான் அறியமாட்டேன்.{7} அந்தச் சர பந்தனத்திலிருந்து பிராதாக்களான {உடன்பிறந்தோரான} ராமலக்ஷ்மணர்கள் இருவரும் விடுபட்டனர்.(6ஆ-8அ) 

இராக்ஷசப் போர்வீரர்களில் எந்த சூரர்கள், என் சாசனத்தின் {ஆணையின்} பேரில் யுத்தத்திற்குப் புறப்பட்டுச் சென்றனரோ, அவர்கள் அனைவரும் மஹாபலவான்களான வானரர்களால் கொல்லப்பட்டனர்.(8ஆ,9அ) இன்றைய யுத்தத்தில், லக்ஷ்மணனுடன் கூடிய ராமனையும், படைகளுடன் கூடிய சுக்ரீவ, விபீஷணர்களையும் நாசமடையச் செய்யக் கூடிய எந்த வீரனையும் நான் பார்க்கவில்லை.(9ஆ,10அ) அஹோ! எவனுடைய விக்ரமத்தால் ராக்ஷசர்கள் கொல்லப்பட்டனரோ, அந்த ராமன் பலவானே. அவனது அஸ்திர பலமும் மஹத்துவம் வாய்ந்ததே.(10ஆ,11அ) 

இந்தப் புரீயும் {இந்த லங்கை நகரமும்}, சீதை இருக்கும் அசோகவனிகையும் அனைத்துப் பக்கங்களிலும் குல்மங்களால் {படைப்பிரிவுகளால்} விழிப்புடன் ரக்ஷிக்கப்படுகின்றன.(11ஆ,12அ) எங்கெங்கே குல்மங்கள் {படைப்பிரிவுகள்} எப்போதும் இருக்கின்றனவோ, அந்தந்த இடங்களில் ஏற்படும் {எந்த} வெளியேற்றத்தையோ, பிரவேசத்தையோ மீண்டும், மீண்டும் நாம் அறிய வேண்டும்.(12ஆ,13அ) நிசாசரர்களே {இரவுலாவிகளான ராக்ஷசர்களே}, அவரவர் படைகளால் எங்கும் சூழப்பட்டவர்களாகவே இருந்து, அந்த வானரர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பீராக[2].(13ஆ,14அ) பிரதியுஷையிலோ {விடியற்காலையிலோ}, அர்த்தராத்திரியிலோ, பிரதோஷத்திலோ {மாலையிலோ}, எங்கும், எப்போதும்,{14ஆ} எவ்வழியிலேனும் வானரர்களிடம் அலட்சியம் காட்டலாகாது. செயல்பாடின்றி நின்று கொண்டிருந்தாலும், சதா முன்னேறிக் கொண்டிருந்தாலும் பலம் {அந்த வானரப்படை} கண்காணிக்கப்பட வேண்டும்" {என்றான் ராவணன்}.(14ஆ,15)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸீதையைக் காக்கும் அசோகவனிகையில் எவனையாயினும், எவ்விதத்திலும் எமக்குத் தெரியாமல் உள்ளே விடக்கூடாது; வெளியிலும் போக விடலாகாது. மற்றும் எங்கெங்கு ஸேனை இருக்கிறதோ, ஆங்காங்கு முழுவதும், அவரவர்குள்ள ஸேனைகளால் சூழப்பட்டுக் கண்ணோக்க முற்று அடிக்கடி திரிந்து கொண்டிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

அப்போது, மஹாபலவான்களான அந்த ராக்ஷசர்கள் அனைவரும், லங்காதிபனின் {ராவணனின்} அந்த வசனத்தைக் கேட்டு, அதன்படியே {அந்தக் கட்டளையின்படியே} அனைத்தையும் செய்தனர்.(16) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், அவர்கள் {ராக்ஷசர்கள்} அனைவரையும் அறிவுறுத்திவிட்டு, துயரமென்னும் முள் துளைத்த தீனனாகத் தன் ஆலயத்திற்குள் {தன் வீட்டிற்குள்} பிரவேசித்தான்.(17) மஹாபலவானும், நிசாசரர்களின் அதிபனுமான அவன் {ராவணன்}, கோபத்தீ மூண்டவனாக, அந்த புத்திர வியசனத்தை {சோகத்தைச்} சிந்தித்தபடியே, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.(18)

யுத்த காண்டம் சர்க்கம் – 072ல் உள்ள சுலோகங்கள்: 18

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை