Tuesday 25 June 2024

இராமனின் புலம்பல் | சுந்தர காண்டம் சர்க்கம் - 66 (15)

The lamentation of Rama | Sundara-Kanda-Sarga-66 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அடையாளமாகத் தரப்பட்ட சூடாமணியைக் கண்டு பரிதாபகரமாக அழுது புலம்பிய ராமன்...

Rama's lament to Hanuman

ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், லக்ஷ்மணனுடன் கூடிய தசரதாத்மஜன் {ராமன்}, அந்த மணியைத் தன் ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு அழுதான்.(1) அந்தச் சிறந்த மணியைக் கண்டு சோகத்தில் ஆழ்ந்த ராகவன், கண்ணீர் நிறைந்த நேத்திரங்களுடன் {கண்களுடன்}, சுக்ரீவனிடம் இதைச் சொன்னான்:(2) "கன்றிடம் சினேகமுள்ள பசு, கன்றைக் கண்டதும் எப்படியோ, அப்படியே மணிரத்னத்தைக் கண்டதும் என் ஹிருதயம் உருகுகிறது.(3) 

என் மாமனார் வைதேஹிக்கு தத்தம் செய்த இந்த மணிரத்னம், வதூகாலத்தில் {அவள் மணமகளான காலத்தில் / எங்கள் திருமணத்தின் போது} தலையில் முடிந்ததும், அதிகம் சோபித்தது.(4) ஜலத்தில் பிறந்ததும், நல்ல ஜனங்களால் பூஜிக்கப்படுவதுமான இந்த மணி, யஜ்ஞத்தில் பரம மகிழ்சியடைந்த, மதிமிக்க சக்ரனால் {இந்திரனால் ஜனகருக்கு} தத்தம் செய்யப்பட்டது. (5) சௌம்யா {மென்மையானவனே, சுக்ரீவா}, என் தாதா, விபுவான வைதேஹர் {என் தந்தையான தசரதர், விதேஹ மன்னர் ஜனகர்} ஆகியோரின் தரிசனம் எப்படியோ, அப்படியே இந்தச் சிறந்த மணியையும் {மணியைக் கண்டதையும்} நான் கருதுகிறேன் {இந்த மணியைக் காண்பதை, என் தந்தையையும், என் மாமனாரையும் கண்டதைப் போலக் கருதுகிறேன்}.(6)

என் பிரியையின் {என் காதல் மனைவி சீதையின்} தலையில் இந்த மணி சோபித்துக் கொண்டிருந்தது. இதை இப்போது கண்டதும், அவளையே அடைந்துவிட்டதைப் போலச் சிந்திக்கிறேன் {எண்ணுகிறேன்}.(7) சௌம்யா {மென்மையானவனே, ஹனுமானே}, வைதேஹியான சீதை, தாகமுள்ளவனுக்கு நீரைப் போல வாக்கியமெனும் நீரால் {என்னை} நனைப்பவளாகி என்ன சொன்னாள்? அதை மீண்டும் மீண்டும் சொல்வாயாக.(8) சௌமித்ரே {சுமித்ரையின் மகனே, லக்ஷ்மணா}, வைதேஹியை விட்டுப் பிரிந்ததும், நீரில் பிறந்ததுமான இந்த மணியைப் பார்ப்பதைவிட அதிக துக்கம் வேறென்ன இருக்க முடியும்?(9)

சௌம்யா {மென்மையானவனே, ஹனுமானே}, ஒரு மாசம் வைதேஹி இருப்பாளென்றால் சிரஞ்சீவியாகிறாள். அந்தக் கருவிழியாள் இல்லாமல் க்ஷணமும் ஜீவித்திருக்க முடியாது.(10) எங்கே என் பிரியை காணப்பட்டாளோ அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} என்னையும் அழைத்துச் செல்வாயாக. செய்தியை அறிந்த பிறகு, க்ஷணமும் தாமதிக்க முடியாது.(11) அழகிய இடையுடையவளும், பயந்தவளுமான என் சதீ {என் மனைவி சீதை}, சதா பயத்தைத் தரும் கோரர்களான ராக்ஷசர்களின் மத்தியில் எப்படி இருக்கிறாளோ?(12)

இருள்விலக்கினாலும், மேகங்களால் மறைக்கப்படும் சரத்கால {இலையுதிர்காலச்} சந்திரனைப் போலத் தற்போது ராக்ஷசர்களால் சூழப்பட்டிருக்கும் அவளது வதனம் ஒளிராது.(13) ஹனுமானே, சீதை என்ன சொன்னாள்? இப்போது உண்மையை எனக்குச் சொல். மருந்தால் ஆதுரன் {நோயாளி ஜீவித்திருப்பது} எப்படியோ, அப்படியே இதனால் {நீ சொல்வதைக் கொண்டு} நான் ஜீவித்திருப்பேன்.(14) மதுரமானவளும் {இனிமையானவளும்}, மதுரமான சொற்களைச் சொல்பவளும் {தேன்மொழியாளும்}, அழகிய இடையைக் கொண்டவளும், என்னைவிட்டுப் பிரிந்தவளுமான என் பாமினி {என் அழகிய மனைவி சீதை} என்ன சொன்னாள் என்பதை எனக்குச் சொல்வாயாக.(15)

சுந்தர காண்டம் சர்க்கம் – 66ல் உள்ள சுலோகங்கள்: 15


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை