Saturday 15 June 2024

ஜாம்பவானின் தீர்மானம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 60 (6)

Resolution of Jambavan | Sundara-Kanda-Sarga-60 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் சொன்னதைப் பின்பற்றுவதே சிறந்தது என்று அறிவுறுத்திய ஜாம்பவான்...

Angada and Jambavan conversing

அவனது {ஹனுமான் சொன்ன} அந்த வசனத்தைக் கேட்ட வாலிமகன் {அங்கதன், பின்வருமாறு} பேசினான், "வானரர்களே, தேவியைக் கண்டபிறகும் அவள் இல்லாமல் மஹாத்மாவான ராகவரின் சமீபத்திற்கு நாம் செல்வது முறையல்ல[1].(1,2அ) 

[1] இந்த சர்க்கம் ஒவ்வொரு பதிப்பிலும் ஒவ்வொரு வகையில் இருக்கிறது. ஆங்கிலத்தில் தேசிராஜுஹனுமந்தராவ், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்புகளிலும், தமிழில் நரசிம்மாசாரியர் பதிப்பிலும் இங்கு காணும் வகையிலேயே 6 சுலோகங்களைக் கொண்ட சர்க்கமாகவே இருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில் 12 சுலோகங்கள் கொண்ட சர்க்கமாகவும், பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளில் இந்த அத்தியாயம் இன்னும் நெடியதாகவும் இருக்கிறது. முன் சென்ற சர்க்கத்தில் வானரர்களின் பெருமையை ஹனுமான் சொல்வதை அங்கதன் வழிமொழிவதாகவே அந்த அதிக சுலோகங்கள் நீள்கின்றன. எனவே அவை இங்கே சேர்க்கப்படவில்லை.

புகழ்பெற்ற விக்கிரமர்களான நீங்கள், "தேவி காணப்பட்டாலும், கொண்டுவரப்படவில்லை" என்று அங்கே அறிவிப்பது முறையல்லவென நான் பார்க்கிறேன்.(2ஆ,3அ) ஹரிசத்தமர்களே, அமரர்கள், தைத்தியர்கள் ஆகியோரின் உலகங்களிலும் பராக்கிரமத்திலும், தாவிச் செல்வதிலும் நமக்குத் துல்லியமானவர்கள் எவருமில்லை.(3ஆ,4அ)  இவ்வாறு ஹனூமதரால் அந்த ராக்ஷசர்களிலுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜானகியை அழைத்துவந்த பிறகே செல்வோம். இதில் செய்யக்கூடியது வேறு என்ன?" {என்றான் அங்கதன்}.(4ஆ,5அ)

ஹரிசத்தமனான ஜாம்பவான், அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, பரமபிரீதியடைந்து, இவ்வாறான சங்கல்பத்துடன் கூடிய அவனிடம் {அங்கதனிடம், பின்வரும்} அர்த்தம் பொதிந்த வாக்கியத்தைச் சொன்னான்:(5ஆ,6அ) "இராஜபுத்திரா {அங்கதா}, நீ எப்படிப் பார்க்கிறாயோ, {அப்படிப்பட்ட} இந்த மதி {ஆலோசனையை நிறைவேற்றுவது} நம்மால் இயலாததல்ல. ஆனால், ராமனின் மதி எப்படி இருக்குமோ அப்படியே நீ காரிய சித்தியைப் பார்க்க வேண்டும்" {என்றான் ஜாம்பவான்}.(6ஆ,இ,ஈ,உ)

சுந்தர காண்டம் சர்க்கம் – 60ல் உள்ள சுலோகங்கள்: 6


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை