Thursday 4 April 2024

மந்திரி குமாரர்கள் வதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 45 (17)

Sons of ministers killed | Sundara-Kanda-Sarga-45 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் அமைச்சர்களுடைய ஏழு மகன்களைக் கொன்ற ஹனுமான்...

Hanuman fighting with ministers sons of Ravanas

பிறகு, ஏழு தழல்களைக் கொண்டவனின் {அக்னியின்} ஒளியுடன் கூடியவர்களும், ராக்ஷசேந்திரனின் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின்} ஆணையின் பேரில் அனுப்பப்பட்டவர்களும், மந்திரிமார் மகன்களுமான அந்த எழுவரும் {ஏழு பேரும்}, அந்த பவனத்தில் இருந்து வெளியே வந்தனர்.{1} மஹாபலவான்களும், பெரும்படையால் சூழப்பட்டவர்களும், தனுக்களை {விற்களைத்} தரித்தவர்களும், அஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்களும், அஸ்திரவித்தையை அறிந்தவர்களில் சிரேஷ்டர்களுமான {சிறந்தவர்களுமான} அவர்கள், பரஸ்பரம் ஜயம்பெறும் விருப்பத்துடன் கூடியவர்களாக,{2} ஹேமஜால {பொன்வலை} கவசத்துடனும், துவஜங்களுடனும், பதாகைகளுடனும் கூடியவையும், மின்னல்களுடன் கூடிய அம்புதங்களை {மேகங்களைப்} போன்ற ஒலி கொண்டவையும், வாஜிகள் பூட்டப்பட்டவையுமான மஹாரதங்களில்,{3} அமித விக்ரமத்துடன் {அளவில்லா ஆற்றலுடன்} கூடியவர்களாக, தப்தகாஞ்சனத்தாலானவையும் {புடம்போட்ட பொன்னாலானவையும்}, சித்திரமானவையுமான சாபங்களை {விற்களை},  கூதிர் கால மேகத்திற்கு ஒப்பான ஒலியுடன் வளைத்தபடியே பேராரவாரம் செய்தனர்.(1-4) 

கிங்கரர்கள் கொல்லப்பட்டதை அறிய வந்த அவர்களின் ஜனனிகள் {அந்த மந்திரிமார் மகன்களின் தாய்மார்கள்}, தங்கள் பந்துக்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து சோகத்தில் மூழ்கினர்.(5) தப்த காஞ்சனத்தாலான பூஷணங்களுடன் கூடிய அவர்கள் {புடம்போட்ட பொன்னாலான ஆபரணங்களுடன் கூடிய அந்த மந்திரி குமாரர்கள்}, பரஸ்பரம் மோதிக் கொள்ளும் விருப்பத்துடன் தோரணத்தில் {நுழைவாயிலில்} இருக்கும் ஹனூமந்தனைத் தாக்கினர்.(6) மேகங்களைப் போல் தெரிந்த அந்த நைருத ரிஷபர்கள் {ராக்ஷசர்களில் சிறந்தவர்கள்}, இடிபோன்று கர்ஜிக்கும் ரதங்களில் சென்று, மழைமேகங்களுக்கு ஒப்பான பாண மழையை உண்டாக்கியபடியே எங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(7) அப்போது அந்தச் சர மழையால் மறைக்கப்பட்ட ஹனுமான், மழையில் நனைந்த சைலராஜனை {மழையில் மறைந்த மாமலையைப்} போலத் தெரிந்தான்.(8) 

விமலமான அம்பரத்தில் {தெளிந்த வானில்}, வேகமான கதியுடன் திரிந்து கொண்டிருந்த கபியானவன் {குரங்கான ஹனுமான்}, அந்த வீரர்களின் ரத வேகத்தையும், சரங்களையும் வஞ்சித்தான் {வீணாகச் செய்தான்}.(9) தனுசுகளைத் தரித்திருந்த அவர்கள் ஒவ்வொருவருடனும் வானில் விளையாடிய அந்த வீரன், மேகங்களில் உள்ள வானவில்லுடன் கூடிய {வானவில்லுடன் விளையாடும்} பிரபு மாருதனை {வாயு தேவனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(10) கோரமான நாதம் செய்து, அந்த மஹாசம்முவை {பெரும்படையை} அச்சுறுத்திய அந்த வீரியவான் {ஹனுமான்}, அந்த ராக்ஷசர்களை நோக்கி வேகமாக விரைந்து சென்றான்.(11) 

அந்தப் பரந்தபன் {பகைவரை அழிப்பவனான ஹனுமான்}, சிலரை உள்ளங்கைகளாலும், சிலரை பாதங்களாலும், சிலரை முஷ்டிகளாலும், வேறு சிலரைத் தன் நகங்களால் கிழித்தும் தாக்கினான்.(12) சிலரை மார்பினாலும், வேறு சிலரைத் தன் தொடைகளாலும் நசுக்கினான். சிலரோ அவனது நாதத்தினாலேயே {கர்ஜனையாலேயே} அங்கேயே புவியில் விழுந்தனர்.(13) அவர்கள் சாவதையும், பூமியில் விழுவதையும் கண்ட அந்த சைனியத்தினர் அனைவரும், பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் பத்து திசைகளிலும் பறந்தோடினர்.(14)

நாகங்கள் {யானைகள்} விகாரமாகப் பிளிறின; வாஜிகள் {குதிரைகள்}, புவியில் விழுந்தன. உட்புறங்கள், துவஜங்கள், குடைகள் ஆகியன பங்கமடைந்த {முறிந்த} ரதங்களால் பூமியும் நிறைந்திருந்தது.(15) உதிரம் வழிந்தோடும் ஓடைகள் பாதையில் காணப்பட்டபோது, விதவிதமான விகார ஸ்வரங்கள் லங்கையில் எதிரொலித்தன.(16) வீரனும், மஹாபலவானும், சண்ட பராக்கிரமனுமான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, பேருடல் படைத்த அந்த ராக்ஷசர்களையும், யுத்தத்தில் விருப்பமுள்ள வேறு ராக்ஷசர்களையும் கொன்று, அந்தத் தோரணத்தையே மீண்டும் அடைந்தான்.(17)

சுந்தர காண்டம் சர்க்கம் – 45ல் உள்ள சுலோகங்கள்: 17


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை