Thursday 22 February 2024

நன்னிமித்தங்கள் | சுந்தர காண்டம் சர்க்கம் - 29 (8)

Good omens | Sundara-Kanda-Sarga-29 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நற்சகுனங்களை உணர்ந்த சீதை உற்சாகமடைந்தது...

Seetha who was crying became relaxed on seeing good omens

அத்தகைய சூழ்நிலையில் வருத்தத்துடன் இருந்தவளும், நிந்திக்கத்தகாதவளும், மகிழ்ச்சியற்றவளும், மனவேதனையில் இருந்தவளுமான சுபமானவளுக்கு {சீதைக்கு}, வளங்கொழிக்கும் நரனுக்கு உபஜீவனர்களை {செல்வந்தனுக்கு அருளப்படும் உதவியாளர்களைப்} போல, சுபமான நிமித்தங்கள் அருளப்பட்டன.(1) 

நல்ல கேசமுள்ள அவளுடைய வளைந்த சுப இமைகளால் சூழப்பட்டதும், கரியதும், விசாலமானதும், ஓரத்தில் வெண்மையானதுமான வாமநயனம் {இடது கண்},  மீனால் அசைக்கப்படும் செந்தாமரையைப் போலத் துடித்தது.(2) 

அழகாகத் திரண்டு, உருண்டு, பருத்ததும், சிறந்த காரகிலும், சந்தனமும் பூசத்தகுந்ததும், ஒப்பற்ற பிரியனால் {ராமனால்} நீண்டகாலம் தலையணையாகக் கொள்ளப்பட்டதுமான வாமபுஜம் {இடது கை} வேகமாகத் துடித்தது.(3) 

சேர்ந்திருந்த தொடைகள் இரண்டில், நன்மை பிறப்பதைக் குறிப்பிடுவதும், பருத்ததும், கஜேந்திரனின் ஹஸ்தத்திற்கு {யானையின் துதிக்கைக்கு} ஒப்பானதுமான அவளது {இடது} தொடை, மீண்டும் மீண்டும் துடித்து ராமன் முன்னே இருப்பதை {வரப்போவதைச்} சொன்னது.(4)

மாசற்ற கண்களுடனும், அழகான அங்கங்களுடனும், மல்லிகை மொட்டுகளுக்கு ஒப்பான பற்களுடனும் நின்று கொண்டிருந்தவள் {சீதை} தரித்திருந்ததும், சற்றே புழுதி படிந்ததும், ஹேமத்திற்கு {பொன்னிற்கு} இணையான வர்ணத்துடன் கூடியதுமான சுப வஸ்திரம் சற்றே நழுவியது.(5)

நல்லது சித்திக்கும் என்பதை முன்பே விளக்கும் இந்த நிமித்தங்களாலும், இன்னும் சிலவற்றாலும் ஸுப்ரு {நல்ல புருவங்களைக் கொண்டவளான சீதை}, வாதத்தாலும் {காற்றாலும்}, வெயிலாலும் வாடியுலர்ந்த பீஜமானது {விதையானது}, மழையினால் எப்படியோ, அப்படிப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.(6)

பிம்பப் பழத்தை {கோவைக்கனியைப்} போன்ற உதடுகளையும், அழகிய கண்களையும், வளைந்த இமைகளுடன் கூடிய புருவங்களையும், அழகிய வெண்பற்களையும் கொண்டவளின் {சீதையின்} முகம், ராகுவின் முகத்தில் {வாயில்} இருந்து விடுபட்ட சந்திரனைப் போல மீண்டும் ஒளிர்ந்தது.(7)

சோகத்திலிருந்து விடுபட்டு, மனக்கலக்கம் நீங்கி, ஜுவரம் சாந்தமடைந்து, மகிழ்ச்சியால் தூண்டப்பட்ட நனவைக் கொண்ட அந்த ஆரியையின் {சீதையின்} வதனம், சுக்லபக்ஷத்தில் {வளர்பிறையில்} தோன்றும் சீதாம்சுனனுடன் {சந்திரனுடன்} கூடிய ராத்திரியைப் போல சோபித்தது.(8) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 29ல் உள்ள சுலோகங்கள்: 8


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை