Friday 16 September 2022

அராஜக ஜனபதம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 067 (38)

A territory without a king | Ayodhya-Kanda-Sarga-067 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அரசற்ற நிலையிலிருக்க நாட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பல்வேறு தீமைகளைச் சொன்ன அமைச்சர்கள். அயோத்தியில் ராஜனின் வாரிசை நியமிக்கும்படி வசிஷ்டரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டது...

Ministers speak to Vasishtha

ஆனந்தமற்று அழுது கொண்டிருந்ததும், கண்ணீர் கம்மிய தொண்டைகளுடன் கூடிய மக்களால் நெருக்கப்பட்டதுமான அயோத்தியில் அந்த நீண்ட இரவு மெல்லக் கடந்து சென்றது.(1) அந்த இரவும் கடந்து, ஆதித்தியன் உதிக்கும் நேரத்தில், ராஜகர்த்தாரர்களான {ராஜனை அரியணையில் அமர்த்தக்கூடியவர்களான} துவிஜர்கள் ஒன்று கூடி சபைக்குச் சென்றனர்.(2) 

மார்க்கண்டேயர், மௌத்கல்யர், வாமதேவர், காசியபர், காத்யயனர், கௌதமர், பெரும்புகழ் பெற்ற ஜாபாலி ஆகியோரும்,(3) அந்த துவிஜர்களும், அமார்த்தியர்களும் {அமைச்சர்களும்}, சிறந்த ராஜபுரோகிதரான வசிஷ்டரை நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பி ஒவ்வொருவராக இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(4) "இந்தப் பார்த்திபன் புத்திரசோகத்தால் பஞ்சத்வத்தை அடைந்த {மரணத்தை அடைந்த} அளவில் நமக்கு சதவருஷங்களுக்கு {நூறு வருடங்களுக்குச்} சமமான இந்த இரவு துக்கத்துடனே கழிந்தது.(5) மஹாராஜா ஸ்வர்க்கத்தை அடைந்துவிட்டார். இராமனும் அரண்யம் சென்றுவிட்டான். தேஜஸ்வியான லக்ஷ்மணனும் ராமனுடன் சென்றுவிட்டான்.(6) பரந்தபர்களான {பகைவரை அழிப்பவர்களான} பரதசத்ருக்னர்கள் இருவரும், கைகேயத்தின் ராஜகிருஹபுரியில், தங்கள் மாதாமஹரின் {தாய்வழி பாட்டனின்} ரம்மியமான வீட்டில் வசிக்கின்றனர்.(7) இங்கே நம் ராஷ்டிரத்தில், இக்ஷ்வாகுக்களில் எவரையேனும் இன்றே விதிப்படி ராஜாவாக்க வேண்டும். அராஜகம் {ராஜனற்ற நிலை} நிச்சயம் நாசத்தையே விளைவிக்கும்.(8) 

அராஜக ஜனபதத்தில் {அரசனில்லாத நாட்டில்} மின்னல்களை மாலைகளாகக் கொண்ட மேகங்கள், பேரொலியுடன் திவ்யமான நீரை மஹீயில் {பூமியில்} மழையாகப் பொழியாது.(9) அராஜக ஜனபதத்தில், கைப்பிடியளவு விதையும் விதைக்கப்படாது. அராஜகத்தில், பிதாவின் வசத்தில் புத்திரனோ, பாரியையோ {மகனோ, மனைவியோ} இருக்க மாட்டார்கள்.(10) அராஜகத்தில் தனம் நாஸ்தியாகும் {இல்லாமல் போகும்}, அராஜகத்தில் பாரியை நாஸ்தியாவாள், இன்னும் அதிக தீங்குகளை விளைவிக்கும் அராஜகத்தில் சத்தியம் எங்கே இருக்க முடியும்?(11) அராஜக ஜனபதத்தில், நரர்கள் மகிழ்ச்சி தரும் சபைகளையோ, ரம்மியமான உத்தியானங்களையோ {தோட்டங்களையோ}, புண்ணியகிருஹங்களையோ {கோவில்களையோ} அமைக்க மாட்டார்கள்.(12) அராஜக ஜனபதத்தில் யஜ்ஞசீலர்களும் {யாகங்களைச் செய்யும் நல்லவர்களும்}, தன்னடக்கமுள்ள பிராமணர்களும், கடும் விரதங்களைக் கடைப்பிடிக்கும் துவிஜர்களும் {இருபிறப்பாளர்களும்} சத்ராணங்களை {சோம வேள்விகளை} நடத்த மாட்டார்கள்.(13) அராஜக ஜனபதத்தில், செல்வங்கொழித்த பிராமணர்கள் கூட, மஹாயஜ்ஞங்களில் யஜ்வனர்களுக்கு {வேள்வியை நடத்துபவர்களுக்கு} ஆப்த தக்ஷிணைகளை {தாராளமான கொடைகளைக்} கொடுக்க மாட்டார்கள்.(14) 

அராஜக ஜனபதத்தில், நடர்களும், நர்த்தகர்களும் {நடிகர்களும், நடனக் கலைஞர்களும்} நிறைந்த உத்சவங்களும், ராஷ்டிரத்தை மேன்மையுறச் செய்யும் சமாஜங்களும் {கூட்டங்களும்} நடைபெறாது.(15) அராஜக ஜனபதத்தில், வியவஹாரிகள் {வழக்காடுபவர்கள்} தங்கள் வழக்குகளில் தீர்வுகளைப் பெற மாட்டார்கள், கதாசீலர்கள் தங்கள் கதைகளால் கதாபிரியர்களுக்கு நிறைவை ஏற்படுத்தமாட்டார்கள்.(16) அராஜக ஜனபதத்தில், ஹேமபூஷிதைகளான குமாரிகள் {தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கன்னிப்பெண்கள்} ஒன்றுகூடி விளையாடுவதற்கு சாயங்காலத்தில் உத்யானங்களுக்கு {தோட்டங்களுக்குச்} செல்ல மாட்டார்கள்.(17) அராஜக ஜனபதத்தில், காமம் நிறைந்த நரர்கள், நாரீகளுடன் சேர்ந்து சீக்கிரமாகச் செல்லும் வாஹனங்களில் ஏறி அரண்யங்களுக்குச் செல்லமாட்டார்கள்.(18) அராஜக ஜனபதத்தில், கிருஷியாலும் {பயிரிடுவதாலும்}, கோரக்ஷணத்தாலும் {பசுவைப் பாதுகாப்பதாலும்} ஜீவிக்கும் தனவந்தர்கள், வாயில்களைத் திறந்து வைத்துக் கொண்டு பாதுகாப்பாக உறங்கமுடியாது.(19) 

அராஜக ஜனபதத்தில், கழுத்தைச் சுற்றி மணிகளால் அலங்கரிக்கப்பட்டு, தந்தங்களுடன் கூடிய அறுபது வயது குஞ்சரங்கள் {யானைகள்} ராஜமார்க்கங்களில் திரியாது.(20) அராஜக ஜனபதத்தில், அஸ்திரப் பயன்பாட்டு உபாசனையில் {பயிற்சியில்} சரங்களை ஏவும் வில்லாளிகளின் உள்ளங்கைகள் நாணிழுக்கும் இடைவிடாத கோஷங்கள் கேட்காது.(21) அராஜக ஜனபதத்தில், பல்வேறு வாணிபப் பொருள்களுடன் தூரமான இடங்களுக்குச் செல்லும் வணிஜர்கள் {வணிகர்கள்},  க்ஷேமமாக {பாதுகாப்பாகப்} பாதையில் செல்ல முடியாது.(22) அராஜக ஜனபதத்தில், புலனடக்கத்துடன் தனியாக சஞ்சரித்து, தன் ஆத்மாவை தியானித்து, சாயங்காலம் நேரும் இடத்தையே வசிப்பிடமாக்கிக் கொள்ளும் முனி எவரும் சஞ்சரிக்கமாட்டார்.(23) அராஜக ஜனபதத்தில் யோகக்ஷேமம் நேராது {ஆதாயமும், பாதுகாப்பும் இருக்காது}, அராஜகத்தில் சேனைகள் சத்ருக்களைப் போரில் வெல்லாது.(24) 

அராஜக ஜனபதத்தில், நரர்கள் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டும், மகிழ்ச்சியுடனும் பரமவாஜிகளிலும் {சிறந்த குதிரைகளிலும்}, ரதங்களிலும் வேகமாகச் செல்லமாட்டார்கள்.(25) அராஜக ஜனபதத்தில் சாஸ்திர விசாரதர்களான {நிபுணர்களான} நரர்கள், விவாதிப்பதற்காக வனங்களிலும், உபவனங்களிலும் ஒன்று சேர்ந்து அமர முடியாது.(26) அராஜக ஜனபதத்தில், நியமத்துடன் கூடிய ஜனங்கள், தேவர்களை வழிபடுவதற்கான மாலைகளையும், மோதகங்களையும், தக்ஷிணைகளையும் ஏற்பாடு செய்யமாட்டார்கள்.(27) அராஜக ஜனபதத்தில், ராஜபுத்திரர்கள் சந்தனம் அகில் பூசியவர்களாக, வசந்த கால மரங்களைப் போல ஒளிரமாட்டார்கள்.(28) நீரில்லா நதிகளைப் போலவும், புல்வெளியில்லா வனத்தைப் போலவும், கோபாலனில்லா காவங்களை {பசுக்களைப்} போலவும் அராஜக ராஷ்டிரம் இருக்கும்.(29)

துவஜம் ரதத்திற்கு அடையாளம், தூமம் விபாவசுவுக்கு {புகை நெருப்புக்கு} அடையாளம், நம்மைப் போன்றோருக்கு துவஜத்தைப் போன்ற அந்த ராஜா இங்கிருந்து தேவத்வத்தை அடைந்துவிட்டான்.(30) அராஜக ஜனபதத்தில், எவருக்கும் சொந்த உடைமைகள் ஏதும் கிடையாது. மத்ஸ்யங்களை {மீன்களைப்} போல நரர்களும் எப்போதும் ஒருவரையொருவர் உண்பார்கள்.(31) மரியாதைகளின் எல்லைகளை அலட்சியப்படுத்தும் எந்த நாஸ்திகர்கள் ராஜதண்டனையால் பீடிக்கப்படுவார்களோ அவர்கள் இனி அச்சம் விலகியவர்களாக தங்கள் ஸ்வபாவத்தை வெளிப்படுத்துவார்கள்.(32) 

எவ்வாறு திருஷ்டியானது {கண்பார்வையானது, நல்வழியையும், தீய வழியையும் காட்டி} எப்போதும் சரீரத்தை சீராக இயங்கச் செய்கிறதோ அவ்வாறு நரேந்திரனே ராஷ்டிரத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைக்கச் செய்வான்.(33) இராஜாவே, சத்தியமும், தர்மமும் ஆவான். குலத்தில் அவனே உன்னத குலம். இராஜாவே மாதாவும், பிதாவும் ஆவான். இராஜாவே மக்களுக்கு ஹிதம் செய்வான்.(34) எனவே, மஹத்தான நடத்தை கொண்ட நரேந்திரன், {தண்டிக்கும்} யமனையும், {தனங்கொடுக்கும்} வைஷ்ரவணனையும் {குபேரனையும்}, {ஆட்சி செய்யும்} சக்ரனையும் {இந்திரனையும்}, {நன்னடத்தை போதிக்கும்} மஹாபலங் கொண்ட வருணனையும் விஞ்சி நிற்கிறான்.(35)

அஹோ, உலகத்தில் நன்மை தீமைகளைப் பகுத்துப் பார்ப்பதற்கு ராஜனில்லாவிட்டால் இவ்வுலகம் இருளாக இருக்கும், எதுவும் தெளிவாகப் புலப்படாது.(36) மஹாராஜா ஜீவித்திருக்கும்போது நாங்கள் அனைவரும் கரையைத் தாண்டாத சாகரத்தைப் போல உமது சொற்களை மீறி நடந்ததில்லை.(37) சிறந்த துவிஜரே, {இருபிறப்பாளரே, வசிஷ்டரே}, நிருபன் இல்லாத ராஜ்ஜியம் அரண்யமாகும் சூழலைக் கருத்தில் கொண்டு பெருந்தன்மையுள்ள இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த குமாரனை இங்கே ராஜாவாக நீரே அபிஷேகம் செய்வீராக" {என்றனர்}.(38)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 067ல் உள்ள சுலோகங்கள் : 38

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை