Friday 9 February 2024

கதலி | சுந்தர காண்டம் சர்க்கம் - 19 (23)

Plantain | Sundara-Kanda-Sarga-19 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனைக் கண்டு நடுங்கிய சீதை...

Ravana nearing Seetha in Ashoka garden

அதே காலத்தில், ராஜபுத்திரியும், நிந்தனைக்குத் தகாதவளும், ரூப, யௌவனம் {அழகும், இளமையும்} நிறைந்தவளும், உத்தம பூஷணங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான வைதேஹியின் அழகிய அங்கங்கள், காற்றில் {நடுங்கும்} கதலியை {வாழைமரத்தைப்} போல, ராக்ஷசாதிபதியான ராவணனைக் கண்ட போது நடுங்கின.(1,2) வரவர்ணினியும், விசாலாக்ஷியும் {சிறந்த நிறம்படைத்தவளும், நீள்விழிகளைக் கொண்டவளும்}, தொடைகளால், உதரத்தையும் {வயிற்றையும்}, மார்பகங்களையும் மறைத்தபடியே அங்கே அமர்ந்து, அழுது கொண்டிருப்பவளும்,(3) ஆர்ணவத்தில் {கடலில்} மூழ்கும் நாவத்தை {ஓடத்தைப்} போல, துக்கத்தால் பீடிக்கப்பட்ட தீன நிலையில், ராக்ஷசி கணங்களால் ரக்ஷிக்கப்படுபவளுமான வைதேஹியை தசக்ரீவன் {பத்துக் கழுத்துடைய ராவணன்}  கண்டான்.(4) 

முறிந்து, பூமியில் விழுந்து கிடக்கும் வனஸ்பதியின் சாகையை {மரத்தின் கிளையைப்} போலிருப்பவளும்,  கடும் விரதத்துடன் மறைக்கப்படாத தரணியில் {விரிப்புகளேதும் இல்லாத வெறுந்தரையில்} அமர்ந்திருப்பவளும்,(5) புழுதியை ஆபரணமாகக் கொண்ட அழகிய அங்கங்களைக் கொண்டவளும், அலங்காரத்திற்குத் தகுந்தவளாக இருந்தும், அலங்காரமற்றவளும், புழுதியால் மறைக்கப்பட்ட மிருணாலியை {தாமரைத் தண்டைப்} போல ஒளிர்ந்தும் ஒளிராதவளும்,(6) சங்கல்ப ஹயம் பூட்டப்பட்ட மனோரதத்தில் {எண்ணங்களென்னும் குதிரைகள் பூட்டப்பட்ட மனமென்னும் தேரில் சென்று}, விதிதாத்மனும் {எல்லாமறிந்த மதியுடையவனும்}, ராஜசிம்ஹமனுமான ராமனின் சமீபத்தை அடைகிறவளைப் போலிருப்பவளும்,(7) மெலிந்தவளும், அழுது கொண்டிருப்பவளும், சோக எண்ணங்களை தியானித்துத் தனியாக இருப்பவளும், துக்கத்தின் அந்தத்தை {எல்லையைக்} காணாதவளும், ராமனைப் பின்தொடர்பவளும், இனிமையானவளும்,(8) அவஸ்தையில் அகப்பட்டு துடிக்கும் பன்னகேந்திரவதுவை {பாம்புகளின் அரசனுடைய மனைவியைப்} போன்றவளும், தூமகேது என்றழைக்கப்படும் கிரஹத்தால் துன்புறுத்தப்படும் ரோஹிணியை {கேதுவின் புகையால் பீடிக்கப்படும் ரோஹிண நட்சத்திரத்தைப்} போன்றவளும்,(9) தார்மீகமான, ஆசாரம் நிறைந்த, நன்னடத்தையும், சீலமும் கொண்ட குலத்தில் பிறந்து, மீண்டும் சம்ஸ்காரத்தை அடைந்தும் {நல்ல குலத்தில் திருமணம் செய்து கொண்டும்} துஷ்ட குலத்தில் பிறந்தவளைப் போலிருப்பவளும்,(10) போலி அபவாதத்தால் வீழ்ந்துவிட்ட கீர்த்தியைப் போலிருப்பளும், மனத்தால் கற்றதைப் பயன்படுத்தாமல்  விட்ட வித்தையை {பயிற்சியின்மையால் அழிந்த கல்வியைப்} போலிருப்பவளும்,(11) மஹாகீர்த்தி சன்னமானதை {பெரும்புகழ் குன்றியதைப்} போலிருப்பவளும், அவமதிக்கப்பட்ட சிராத்தத்தை {நம்பிக்கையைப்} போலிருப்பவளும், தேய்ந்து போன அறிவை {ஞானத்தைப்} போலிருப்பவளும், தடைபட்ட ஆசையைப் போலிருப்பவளும்,(12) மறுக்கப்பட்ட ஆணையைப் போலிருப்பவளும், அழிக்கப்பட்ட வாழ்விடத்தைப் போன்றிருப்பவளும், தீப்பற்றியெரியும் திசையைப் போன்றிருப்பவளும், காலப்போக்கில் பறிபோன பூஜையைப் போலிருப்பவளும்,(13) அழிந்து போன பத்மினியை {தாமரைப் பொய்கையைப்} போலிருப்பவளும், சூரர்கள் கொல்லப்பட்ட சம்முவை {சேனையைப்} போலிருப்பவளும், இருளால் அழிவுண்ட பிரபையை {ஒளியைப்} போலிருப்பவளும், வறண்டு போன ஆபகத்தை {நதியைப்} போலிருப்பவளும்,(14) தூய்மையாக்கப்பட்ட வேதியை {வேள்விப் பீடத்தைப்} போலிருப்பவளும், அணைந்து போன அக்னி சிகையை {நெருப்பின் தழலைப்} போலிருப்பவளும், ராகு கிரஹத்தால் விழுங்கப்பட்ட சந்திரமண்டலத்துடன் கூடிய பௌர்ணமி நிசியை {இரவைப்} போலிருப்பவளும்,(15) ஹஸ்தியின் ஹஸ்தங்களால் {யானைகளின் துதிக்கைகளால்} கலக்கப்பட்டுப் பிடுங்கி எறியப்பட்ட இலைகளையும், கமலங்களையும் {தாமரை மலர்களையும்} உடைய பத்மினியை {தாமரைப் பொய்கையைப்} போலிருப்பவளும்,(16) பதிசோகத்தால் {கணவனான கடலை அடையாத சோகத்தால்} பீடிக்கப்பட்டும், பாயச் செய்யப்படும் வறண்ட நதியைப் போலிருப்பவளும், நல்ல தூய்மையான நீராட்டைப் பெறாத, கிருஷ்ணபக்ஷத்து நிசியை {தேய்பிறை இரவைப்} போலிருப்பவளும்,(17) சுகுமாரியும் {மென்மையானவளும்}, சுஜாதங்கியும் {அழகிய அங்கங்களைக் கொண்டவளும்}, ரத்தின கர்ப்பகிருஹத்தில் {ரத்தினங்களால் இழைக்கப்பட்ட மாளிகையில்} வசிக்கத்தகுந்தவளும், உஷ்ணத்தால் தபிக்கப்படுவதும் {வெப்பத்தால் வாடிக் கொண்டிருப்பதும்}, சற்றுமுன்பே பிடுங்கப்பட்டதுமான மிருணாலியை {தாமரைத் தண்டைப்} போலிருப்பவளும்,(18) யூதபனிடமிருந்து {மந்தைத் தலைவனிடமிருந்து} பிரித்துக் கைப்பற்றி ஸ்தம்பத்தில் கட்டப்பட்டும், துக்கத்தால் பீடிக்கப்பட்டும், பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் கஜராஜன் வதுவை {யானையரசின் மனைவியைப்} போலிருப்பவளும்,(19) நீண்ட ஒற்றைப் பின்னலோடு யத்தனமில்லாமல் சோபிப்பவளும் {ஒப்பனை செய்யப்படாமலேயே ஒளிர்பவளும்}, மழைக்கால முடிவில், நீலமாகும் வனராஜ்ஜியத்துடன் கூடிய மஹீயை {மழைக்கால முடிவில் கருகும் சோலையுடன் கூடிய நிலத்தைப்} போலிருப்பவளும்,(20) உபவாசத்தாலும் {உண்ணாநோன்பினாலும்}, சோகத்தாலும், தியானத்தாலும், பயத்தாலும், மிகவும் நொந்து, அல்ப ஆகாரத்தைக் கொண்டு {சிறிதளவே உணவை உட்கொண்டு} மெலிந்த  தபோதனையும் {தபத்தையே செல்வமாகக் கொண்டவளும்},(21) இரகுமுக்கியனிடம் தசக்ரீவன் {பத்துக் கழுத்தைக் கொண்ட ராவணன், ராமனிடம்} தோற்பதை விரும்பும் எண்ணத்தால் கைகளைக் கூப்பி {பிரார்த்தித்துக் கொண்டிருப்பவளும்}, துக்கத்தால் பீடிக்கப்பட்ட தேவதையைப் போலிருப்பவளும்,(22) அழகான இமைகளுடன், சிவந்து, நீண்டு, விரிந்து, வெளுத்த கண்களுடையவளும், அழுது கொண்டிருப்பவளும், சுற்றி மிரண்டு பார்த்துக் கொண்டிருப்பவளும், ராமனையே பின்பற்ற விரதம் கொண்டவளும், நிந்தனைக்கு இடமில்லாதவளும், அனைத்துப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தவளுமான அவளை {சீதையைக்} கொல்லப்போவதாக மிரட்டி ராவணன் ஆசையைத் தூண்டினான்.(23) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 19ல் உள்ள சுலோகங்கள்: 23


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை