Messenger not to be killed - Vibhishana said | Sundara-Kanda-Sarga-52 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தூதனை வதம் செய்வது தகாது என்று ராவணனுக்கு அறிவுரை கூறிய விபீஷணன்...
மஹாத்மாவான அந்த வானரனின் அந்த வசனத்தைக் கேட்டு, குரோதத்தில் மூர்ச்சித்த {கோபத்தில் தன்னை மறந்த} ராவணன், ஹனுமானை வதம் செய்ய ஆணையிட்டான்.(1) துராத்மாவான ராவணன், அவனை வதம் செய்ய உத்தரவிட்டபோது, தூதனைக் கொல்வதை விபீஷணன் ஏற்கவில்லை.(2) காரியங்களின் விதங்களில் உறுதியுடன் இருப்பவனான அவன் {விபீஷணன்}, அந்த ரக்ஷோதிபதி {ராவணன்} குரோதமடைந்திருப்பதையும், எழுந்திருக்கும் அந்தக் காரியத்தையும் அறிந்து, செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்துச் சிந்தித்தான்.(3)